Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
தெரியாது.! தெரியாது..!! தெரியாது...!!!
கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது,
மிக பெரிய போர் வீரன்
இராஜேந்திர சோழன் தெரியாது,
கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது,
தமிழ்நாடு என்று பெயர் வைப்பதக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது,
கப்பலோட்டிய தமிழன் வஉசி என்ற தமிழனை தெரியாது,
ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய சுந்தரலிங்கத்தை தெரியாது
வீர மறத்தி வேலு நாச்சியாரை தெரியாது
தன் குலதெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய
மருதுபாண்டிய சகோதரர்களை தெரியாது
முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் குயிலியை தெரியாது
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது
ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாது
ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சியை தெரியாது
முதல் சுதந்திர போராட்ட வீரன் அனந்த பத்மநாபன் தெரியாது
கொடிகாத்த குமரனை தெரியாது
இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. !
இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன.
இவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரிய விடாமல் வைத்து,
எதுவுமே செய்யாமல் இருப்பது 🍷மது மாது சூது என இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கையை சிரழித்து தனக்கான தலைவனை தேர்ந்தேடுப்பதிலும் முறைகேடுகள் செய்து ஓட்டுக்கு பணம் கொடுத்தால் போதும்...என்னை அல்ல என் நிலம் என் உரிமைகள் என்று அத்தனையையும்
ஒரு அரசியல்வாதியின் காலடியில் மண்டியிட்டு கிடக்கும் கூட்டமா நாம் இப்படி வாழ்ந்து மறைந்த வீர மறவர் இனத்தில் பிறந்தோமா என்று சந்தேகமாக இருக்கிறது... இப்பேர்பட்ட வீர மற்றவர்களைப் பற்றி இன்றைய
தலைமுறையிடம் கேட்டால் இவர்களிடம் இருந்து வரும் ஒரே வார்த்தை தெரியாது...!!!
கருத்துகள்