திருமணம் ஆன கணவன் மனைவிக்கு நினைவில் வைக்க வேண்டிய விஷயங்கள்..!!

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

திருமணம் ஆன கணவன் மனைவிக்கு நினைவில் வைக்க வேண்டிய விஷயங்கள்..!!

Subbiahpatturajan
கணவன் மனைவி புரிதலுடன் வாழ
திருமணம் ஆன கணவன் மனைவிக்கு நினைவில் வைக்க வேண்டிய விஷயங்கள்..!!

திருமணம் ஆன கணவன் மனைவிகளுக்கு நினைவில் வைக்க  வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்று

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி அன்பும் பரிசும் தாம்பத்யத்துக்கு உறுதி ஆம் இன்று காதலிலும் திருமண பந்தத்திலும் தொடக்கத்தில் இருக்கும் அன்பும் பரிசு பரிமாற்றமும் நாளாக நாளாக குறைந்து மறைந்து இல்லாமலே போய்விடுகிறது அங்கு தான் தம்பதிகளுக்குள் பிரிவும் தொடங்கி விடுகிறது

தாம்பத்யம் என்று சொன்னவுடன் பலருக்கு அச்சமும் அருவறுப்பும் முகத்தில் பிரதிபலிக்கும் அது தேவையே இல்லை தாம்பத்யம் என்பது எளிமையான அன்புப் பகிர்தல் என்று எல்லா ஆண்களும் பெண்களும் புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம் 

இரண்டு அறை கொண்ட வீட்டில் கூட்டு குடும்பமாக நான்கு தம்பதிகள் வாழ்ந்த காலத்தில் கூட அன்யோன்யமாக இருந்த கணவன் மனைவி உறவு இப்போது தனி குடும்பமாக மூன்று தனி தனி அறைகள் உள்ள வீட்டில் வாழும் போது விலகி போயிருக்கிறது என்றால் இவர்கள் தாம்பத்யம் சிறக்கவில்லை என்றே அர்த்தம்

திருமணம் என்ற பந்தத்தில் உரிமை கிடைத்த ஒரே காரணத்தினாலே உடல் உரிமை பெற்று கணவன் மனைவி இணைந்திருப்பது மட்டுமே தாம்பத்யம் அல்ல பாரதி பாடி சென்றது போல் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்று அகமும் புறமும் மகிழ்ந்து இன்புற்றிருக்கும் வாழ்க்கையே சிறந்த தாம்பத்யம் அது fastfoodஉலக மனிதர்களாகிய நம்மில் 100 க்கு 90 சதவீதம் பேருக்கு வாய்ப்பதில்லை என்பது கசப்பான உண்மை

ஆனால் இந்த நிலை மாறி இனிமையான குடும்ப உறவுகளுக்குள் கூடி வாழ மகிழ்ந்து களிகூற தாம்பத்யம் சிறக்க உடலும் மனமும் தெளிவாக தெம்பாக அரும் ரகசியங்கள் நம் பாரம்பரிய ஆன்மீகத்திலும் மருத்துவத்திலும் குவிந்து இருக்கிறது அவற்றில் சிலவற்றை இந்த கட்டுரையில் பார்ப்போம்
தாம்பத்திய உறவு சிறக்க உணவு மற்றும் உணர்வு ரீதியாக பின்பற்ற வேண்டிய சின்ன சின்ன விஷயங்கள்

எப்போதுமே வீடும் அறைகளும் முழு சுத்தமாய் நறுமணம் கமழும் நிலையில் இருக்கவேண்டும்

வீட்டினுள் இனிமையான இசை நிரம்பியிருக்க சீரியல் போன்ற தொல்லைக்காட்சி நிகழ்ச்சிகள் காணாது தவிர்த்திருக்க வேண்டும்
தினமும் ஒரு வேளையாவது மனது ஒருமைப்பாட்டுடன் பூஜை செய்ய வேண்டும்
 எம்மதமாயினும் அந்தந்த மத வழிபாடுகள் முறையாக தினமும்  செய்து விளக்கு என்பது எல்லா மதத்திலும் பொது தானே தினம் தினம் ஆமணக்கு எண்ணையில் விளக்கு ஏற்றி வழிபட்டால் அந்த வீட்டு தம்பதிகளுக்குள் தாம்பத்தியம் சிறக்கும்

கீரைகள் முருங்கை கீரை முருங்கக்காய் அதிக அளவில் உணவில் எடுத்துக் கொள்ளலாம் உலர் திராட்சைக் பேரிச்சை பழங்கள் அடிக்கடி உணவில் சேர்த்து வரும் தம்பதிகளுக்கு உடல் பலம் பெரும் நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்னைகள் சரியாகும்
 வாழைப்பூ  முருங்கைப்பூ துவரம்பருப்பு சேர்த்துக் கூட்டு வைத்து நெய் சேர்த்துச் சாதத்துடன் 21 நாள்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் ஏற்பட்டு தாம்பத்யம் சிறக்க உதவும்.
 ஆண்கள் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து கொண்டால் அது இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது,இரத்த அளவு அதிகமாகி ஓட்டம் பெருகுகிறது.இது நீண்ட நேர  ஆணுறுப்பின் எழுச்சிக்கு காரணமாகிறது சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் வெள்ளை வெங்காயங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் இதனால் அதிக நேரம் உடலுறவில் ஈடுபடலாம்.

 கிராம்பு உடல் உஷ்ணத்தை அதிகரிக்கிறது உடல் உறுப்புகளுக்கு தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரித்து ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையை பெற உதவுகிறது

விந்து ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது கொண்ட கொண்டை[வேர் ] கடலை திருமணமான ஒவ்வொரு ஆணும் மாலை நேரங்களில்  சுண்டல் சாப்பிட மறக்காதீர்கள்

தயிர் சாதம் சாப்பிடுவது தாம்பத்ய உறவில் வெகுவாக நன்மை பயக்கும்.தயிரில் ஜிங்க் என்கிற துத்தநாக சத்து அதிகம் உள்ளது அசைவ உணவுகளில் உள்ள அதே அளவு துத்தநாக சத்து தயிரிலும் கிடைக்கும் தயிர் புளிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

முந்திரிபருப்பிலும் ஜிங்க் அதிக அளவில் உள்ளது. ஜிங்க் சத்தின் அளவிற்கும் தாம்பத்தியத்தில் ஆண்களின் ஆணுறுப்பு விறைப்புத்தன்மைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது

கத்திரிக்காய் ஆண்பெண் இருவருக்குமே தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் ஈடுபடும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கிறது
இரவு உணவுக்கு பிறகு சிறிது வெற்றிலை போடுவது கூட தாம்பத்திய உறவில் பலன் தரும்
தம்பதியர் அடிப்படையில் சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் உடல் எடையைக் கூட்டும் உணவுகளை எப்போதும் தவிர்த்தே இருக்க வேண்டும்

 ஜீரணக் குறைபாடுகள் உண்டாக்கும் உணவுகள் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வீதியோர உணவுகள் எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்துவிடவேண்டும் இதனால் உடலில் வரும் தொந்தரவுகள் தாம்பத்ய வாழ்க்கைக்கு பெரிதும் சிரமம் தரும்

 தினமும் உண்டு வரலாம் இதில் உள்ள புரதம் டெஸ்டோஸ்டீரோன் உற்பத்தியை அதிகரிக்க செய்து ஆண்களுக்கு மன இறுக்கம் மன அழுத்தம் போன்ற தொந்தரவுகள் வராமல் தடுக்கிறது

வாழைப்பழத்தை வைத்து மில்க் ஷேக் தயாரித்து தினமும் குடித்து வந்தால் அது உடல் நலத்திற்கு மிகவும் பயன் தரும் அதோடு தாம்தய உறவின் போது தம்பதிகளுக்கு உடல் சக்தியையும் அதிகம் கொடுக்கும்

உடல் ரீதியான தெம்பிற்கு மேற்சொன்னவற்றை பின்பற்றலாம் ஆனால் உண்மையான தாம்பத்யம் என்னவென்று உணர நேற்றையும் இன்றையும் அலசி நாளை பற்றிய ஒரு முடிவெடுத்து வாழ்வில் அமுல்படுத்த வேண்டியருக்கிறது.அது தான் தாம்பத்திய வாழ்வு சிறக்க உண்மையான நிலையான ரகசியம்.

ஒரு முப்பது வருடம் முன்பு வரை தா‌ம்ப‌த்ய‌ம் எ‌ன்பது குழ‌ந்தை‌ பெ‌ற்று‌க் கொ‌ள்வத‌ற்கான ஒரே காரணத்திற்காகவே பலருக்கும் இரு‌ந்தது. ஆனா‌ல் இந்த காலத்தில் பதின் பருவத்திலேயே தா‌ம்ப‌த்‌திய‌ம் ப‌ற்‌றி அதிகம் பேசும் அளவுக்கு ஊடக வெளிச்சம் அதிகம் ஆகிவிட்டது.

இ‌‌ன்றைய தலைமுறையில் அநேக ஆண்களும் பெண்களும் தா‌ம்ப‌த்‌ய‌ம் என்பது தெரிந்துகொள்ள வேண்டிய வயதிற்கு முன்னரே அதை தேடி அ‌த‌ன் ‌மேல் ஒரு ஆ‌ர்வ‌த்தை உருவாக்கி கொள்ள தொடங்கிவிட்டார்கள். அந்த அளவுக்கதிகமான ஆ‌ர்வமு‌ம், அதனை வெ‌ளி‌ப்படு‌த்துவத‌ற்கான சூழல் அமையாத நிலையும் தான் பலரை தவறான பாதைக்குள் அழைத்து செல்கிறது.

தா‌ம்ப‌த்ய‌ம் எ‌ன்பது அ‌ன்‌பி‌ன் ப‌ரிமா‌ற்ற‌ம் என்று எல்லோரும் உணர தொடங்கி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, தட்டி கொடுத்து,ஊக்கப்படுத்தி,உற்சாகப்படுத்தி, குறைகளை மறந்து,நிறைகளை வியந்து பாராட்டி சிரிப்பும் மகிழ்வுமாய் உரையாடி உலகம் மறந்து கரையும் போது தான் அது உண்மையான அர்த்தம் பெறுகிறது. ‌‌

ஆணாக இருப்பினும்  பெண்ணாக இருப்பினும் அழகு என்பது புறத்தில் இல்லை அகத்தில் உள்ளது என்பதை தெளிவாக புரிய வைக்க வேண்டும். இதனால் பெண்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனை ஏற்றுக்கொள்ளும் ஆண்கள் தான் வீட்டின் அதிபதியாக இருக்கின்றனர்இல்லையென்றால் நிலைமை தலைகீழ் தான்.. தாம்பத்திய நேரத்தை தவிர்த்து கிடைக்கும் சமயத்தில் சின்ன சின்ன கொஞ்சல்கள் அதிகம் பெண்களால் எதிர்பார்க்கபடுகிறது.

பெண்களை ஆச்சரியமூட்டும் வகையில் சமயலறையில் இருக்கும் போது பதுங்கி சென்று கட்டியணைத்து முத்தம் கொடுப்பதுஉதவியாக இருப்பது உனக்காக நான் இருக்கிறேன் என்று கதையளப்பது., அவ்வப்போது அன்பான முத்தத்துடன் ஐ லவ் யூ சொல்லுவது போன்ற செயல்களை செய்வது என்று பல சின்ன விஷயமும் தம்பதிகளுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தும். இதனை செய்ய தவறினால் சில கசப்பான விஷயம் நடைபெறும்.

இன்றுள்ள பெரும்பாலான ஆண்கள் தாம்பத்தியத்தில் அவசர புத்தியை காண்பித்துவிட்டு., கட்டில் போரை கால்மணி நேரத்தில் முடித்துவிட்டு., இரவு முழுவதும் குறட்டை விட்டு தூங்குவதை வழக்கமாக வைக்க துவங்கியுள்ளனர். பெண்களை பொறுத்த வரையில் இன்பத்திற்கான உணர்ச்சி தூண்டப்படுதல் நேரம் எடுத்தாலும்., தூண்டப்பட்டு விட்டால் ஆழ்ந்து அனுபவிக்கவே அதிகளவில் விரும்புவார்கள். அவர்களின் மனநிலையை செயல்பட்டால் தாம்பத்திய வாழ்க்கையும் இல்லற வாழ்க்கையும் சிறப்பாக அமையும்

எந்த ஒரு விசயத்திற்கும் துணையை காதலுடன் அணுகினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். காமத்திற்கு காதலின் வெளிப்பாடு அதிகம் இருக்கவேண்டும். சின்னச்சின்ன பரிசுகள், தொடுகைகள் என அன்றைய உறவிற்கான தேவையை அன்பால் வெளிப்படுத்த வேண்டும். துணையின் தேவையை உணர்ந்து உங்களின் பதிலை அன்பால் வெளிப்படுத்துங்கள்.
தூய அன்பும் காதலும் தாம்பத்ய உறவின் உச்சக்கட்டத்திற்கு அவசியம். 

உடல் ரீதியான சேர்க்கைக்கு முன்னதாகவே மனரீதியாக இணைந்து வெளிப்படுத்தும் அன்பும் உணர்வுகளின் மூலம் மட்டுமே மடை திறந்த வெள்ளம் போல உச்சக்கட்ட உணர்வை அடைய முடியும்.

காதலோ காமமோ ஒருவருக்கொருவர் தேவைகளை வெளிப்படுத்த தயங்கக் கூடாது. துணை கொஞ்சம் கூச்ச சுபாவத்தோடு இருந்தால் என்ன வேண்டும் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் எங்கு தொட்டால் என்னமாதிரியான உணர்வு ஏற்படுகிறது என்பதை நீங்களும் உங்களின் துணைக்கு தெரிவிக்கலாம்உங்கள் துணையிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்

காதலின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தொடுகை முக்கியம் தொடத் தொடத்தான் உறவு மலரும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தொடங்குவதை விட மென்மையான ஸ்பரிசம் சின்னச் சின்னச் விளையாட்டு என தொடங்கலாம் அதில் சிலிர்க்கும் துணையின் மூலம் உறவை தொடர்வதில் தடையேதும் இருக்காது.

காமம் உணர்வுப்பூர்வமான விளையாட்டு. இதில் அவசரத்திற்கு இடமில்லை. 

ரிலாக்ஸ்சாக வெளிப்படுத்தினால் மட்டுமே கூடுதல் சுகமும், உச்சக்கட்ட உணர்வும் கிடைக்கும். டென்சனோ, அவசரமோ காட்டினால் மகிழ்ச்சிக்கு பதிலாக அவதிதான் கிடைக்கும்.

காதலோ, காமமோ உங்கள் தேவையை துணைக்கு எப்படி புரியவைக்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. எனவே காதோடு மெதுவாக பேசி உங்களின் தேவையை உணர்த்துங்கள்கணவனோ, மனைவியோ உங்களின் தேவையை யார் வேண்டுமானலும் உணர்த்தலாம்.

எந்த ஒரு வேலைக்குமே சக்தி ரொம்ப முக்கியம். அதுவும் இது வாழ்க்கை விளையாட்டு. இதில் எப்படி, எங்கே சக்தியை வெளிப்படுத்தவேண்டும் என்று தெரிந்து கொள்ளவேண்டும். துணைக்கு வலிக்காமல், காயப்படுத்தாமல், விவேகமான முறையில் சக்தியை வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றிதான்.

தம்பதியர் ஒருவருக்கொருவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும்.

ஆகவே திருமணம் ஆன கணவன் மனைவிகளுக்கு நினைவில் வைக்க  வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்று தான் உனக்காய் உன்னோடே உன் சுக துக்கம் பகிர்ந்து உன்னுடன் எந்தநொடியும் பிரியாமல் வாழ்வேன் என்று மனதிற்குள் உறுதி கொண்டு வாழ தொடங்கினால் எந்நாளும் தாம்பத்யம் சிறக்கும் பொன்னாலே

 மிகினும் குறையினும் நோய்செய்யும்
அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம் 

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
அட போப்பா இதல்லாம் இந்த காலத்தில் ஒத்து வராது இது ஏட்டளவில் படிக்க நல்ல இருக்கும்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

Subbiahpatturajan தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕 பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர். மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது அரசு . அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. ஆனால் இலங்கை அரசு இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை. 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கடத்திச் சென்றனர். புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்...

வந்த ரயில் திருட்டு ரயில் இல்லை... வந்தவன் தான் திருடன் யார் அவன்...?

Subbiahpatturajan மறந்து போவது மக்களின் இயல்பு அடிக்கடி அதை நினைவு படுத்துவது  நமது கடமையும் கூட.!! 1968களில் #கருணாநிதி வாழ்வில்  நடந்த உண்மை சம்பவம்... இன்றைய தலைமுறையினரில் பெரும்பான்மையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யார் இந்த கருணாநிதி. ? ? அப்போது முதன் முறையாக முதல்வர் பதவியில் கருணாநிதி அமர்ந்த நேரம்... பல தலைமுறைக்கும் தான்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்த நேரம் அது. அதே காலகட்டத்தில் தான்  ‘#ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும்  வெளி வந்து கொண்டிருந்தது!  அதன் ஆசிரியர் வேறு யாருமல்ல..  கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த "என்.கே.டி. #சுப்பிரமணியம்" என்பவர் தான். அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில், (ஜனவரி5, 1968) சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.  மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. யார் இந்த கருணாநிதி?என்ற ஒரு  பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார். அந்த செய்தி முதல்வ...

Try this to live fully in New Year 2025...

Subbiahpatturajan  புது வருடம் 2021ல் *நமது வருமானம் குறைவாக இருந்தாலும்*,நிறைவாக வாழ பழகலாமே !இதை செய்து பாருங்கள். நமது உடல் ஆரோக்கியத்திற்கு  மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.   உதாரணமாக-- 1.  ரெடிமேடாக விற்கும் நெல்லிக்காய் வத்தல். (தினமும்ஒன்று) 2.  விஷம் கலந்துள்ள சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் / நாட்டு சர்க்கரை. 3.  பிரிட்ஜில் வைக்காத பொருள்கள். 4.  ஒரு கேரட்டுடனும் , (அல்லது) சிறிது தேங்காயுடனும் ஒரு பேரீச்சம் பழத்தை சிறுக சிறுக கடித்து ஒன்றாக சுவைப்பது. (இது --- கண்ணுக்கும், இரத்தம் அதிக மாவதற்கும், அறிவிற்கும், ஞாபக சக்திக்கும்  நல்லது.) 5.     80 சதம் கெமிக்கல்கள் உள்ள பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது. 6.   தண்ணீராகவே இருந்தாலும் நாட்டு பாலை வாங்க முயற்சிக்கலாமே. 7.   முடிந்தவரை பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பை மட்டுமே பயன்படுத்தலாமே. 8.   சாதத்தை வடித்து சாப்பிடலாமே. 9.   வடித்த கஞ்சியை பழய சாதம் தயாரிக்க பயன்படுத்தலாமே. 10.   இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கும் பாத்திரத்தை...

வெட்டுக் கிளியை கட்டுப்படுத்த உழவர்களின் சிறந்த நண்பன் இந்த ரெட்டைவால் குருவி

Subbiahpatturajan வெட்டுக்கிளிக்கும் கரிச்சான் குருவிக்கும் இருக்கும் தொடர்பு பத்தி பார்ப்போம்!! வெட்டுக்கிளி பற்றி பேசும் போது இவனை பற்றி பேசாமல் இருக்க முடியாது... ஆமாம் இவனின் பிரதான உணவே வெட்டுக்கிளி தான்...  இவர்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 பூச்சிகளை வேட்டையாடி உண்பவர்கள்.   ஒரு நாளைக்கு எவ்வளவு பூச்சிகளை உண்ணுகிறார்கள் என நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  வயிறு நிறம்பியபிறகு சாப்பிடும் பூச்சிகளை ஒன்றிரண்டாக அரைத்து வெளியில் கக்கிவிடுகிறார்கள். அப்படி கக்கிய பூச்சிகள் மண்ணிற்கு சிறந்த உரமாக செயல்படுகிறது. இவனை போன்றவர்களின் எண்ணிக்கை குறைய குறைய வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கும்... அவன் தான் கரிச்சான் குருவி... இவனுக்கு மாட்டுக்காரன், ரெட்டைவால் குருவி, வால் நீண்ட கருங்குருவி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு. கரிச்சான் குருவிகள் கிராமப்புறங்களில்  ஆடு மாடுகளை மேய்க்க ஓட்டிச் செல்லும் போது அவற்றின் மீது உட்கார்ந்து சவாரி செய்யும். அப்போது ஆடு மாடுகளின் கால்கள் செடிகளில் உட்கார்ந்து இருக்கும் வெட்டுக்கிளி, வண்ணாத்திப் பூச்சி இவற்றைக் ...

இந்திய ராணுவ பணியான அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது நவம்பர் 15

Subbiahpatturajan வேலூர் மாவட்டத்தில் இந்திய ராணுவ பணியான அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது  இந்திய ராணுவத்தில் அக்னிவீர் உள்ளிட்ட பணிகளுக்கான  ஆட்சேர்ப்பு முகாம் வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைகளின் விபரங்கள் :   அக்னி வீரர் (ஆண்); அக்னி வீரர் (பெண் ராணுவ காவலர்); சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர்/ கால்நடை செவிலியர் உதவியாளர்;  இளநிலை சேவை அதிகாரி (மத போதகர்) உள்ளிட்ட பணிகளுக்கு இந்த ஆட்சேர்க்கை முகாம் நடத்தப்படுகிறது. முகாம் நடைபெறும் நாள் : நவம்பர் 15ம் தேதி முதல் 29ம் தேதி வரை முகாம் நடைபெறும். தமிழகம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு ஆவணங்கள் கட்டாயம் எடுத்துவரவேண்டும்:   www.joinindianarmy.nic.in  என்ற இணையதளத்தில் வேலூர் ஆட்சேர்ப்பு  முகாம் குறித்த அறிவிப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், குறிப்பிடப்பட்டு...