Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
ஒரு தேசிய இனத்தை முற்றிலுமாக அழிப்பது எப்படி...?
ரொம்ப ஈஸி..!
ஒரு தேசிய இனத்துக்கு 4 அடையாளங்கள் இருக்கும்.
முதலாவது #நிலம்
அந்த இனத்தவர்கள் குடியிருக்கும் நிலப்பகுதியில் அந்நிய குடியேற்றங்களை ஊக்குவிக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய குடியேற்றங்களைப் போல. திபேத்தில், சீன அரசு, சீனர்களைக் குவித்து திபேத் மக்களை சொந்த மண்ணில் சிறுபான்மையினராக ஆக்கியதைப்போல ஆக்க வேண்டும்.
இன்னும் எடுத்துக்காட்டு வேண்டுபவர்கள் இலங்கையைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்.
அடுத்த அடையாளம் #மொழி
அந்த மொழியைக் காலி பண்ண வேண்டும். "உன் நீஷபாஷை தோன்றியதே என்மொழியில் இருந்துதான். உன் மொழிக்கு இலக்கணம் வகுத்ததே நான்தான். எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தது நான்தான்" என்றெல்லாம் சொல்வது மிகவும் உத்தமம்.
‘திபேத்திய மொழியை வைத்து ஒரு ஆணியும் புடுங்க முடியாது. புத்தரை மட்டும் கும்பிடலாம்’ என்று சீனர்கள் கூறியது போல கூறி, அந்த தேசிய இனத்தின் மொழியைச் சிதைக்க முயல வேண்டும்.
மூன்றாவதாக, #பண்பாடு
இந்தப் பண்பாடும், கலைகளும் இருக்கும் வரைக்கும் ஒரு தேசிய இனம், போர்க்கொடியைத் தூக்கிக் கொண்டே தான் இருக்கும். அதனால் கலாச்சாரம், பண்பாடுகளை காலியாக்க வேண்டும். "நீ ஒரு தனியினமே அல்ல. நம்ம இனம்" என்று கூறி அடுத்துக் கெடுக்க வேண்டும். ‘திருதராஷ்டிர ஆலிங்கனம்’ செய்ய வேண்டும்.
துருக்கியில் வாழும் குர்து இன மக்களை துருக்கி அரசு ஒரு தனியினமாக ஏற்பதேயில்லை, "அட...! நீங்க மலைநாட்டு துருக்கியர்கள்ப்பா" என்று கூறுவது துருக்கியின் வழக்கம்.
இதுபோன்ற சூப்பர் ஃபார்முலாக்களைக் கடைபிடிக்க வேண்டும். இறுக்கி அணைச்சு இல்லாமல் ஆக்க வேண்டும்.
நான்காவதாக #பொருளாதாரம்
மண் சார்ந்து வாழும் இனத்தின் வளங்களைச் சுரண்டி சூறையாடி, வேளாண்மைத் தொழில் செய்பவர்களை, தென்ஆப்பிரிக்க ஸ்டைலில், சுரங்கத் தொழிலாளர்களாகவே கூலித் தொழிலாளர்களாகவோ மாற்ற வேண்டும்.
சோமாலியா போல, வேளாண் தொழிலை வேரோடு அறுத்து, விளிம்பு நிலைக்குத் தள்ளி, அவர்களை போராளிகளாகவோ, கடற்கொள்ளையர்களாகவோ மாற்ற வேண்டும்.
அப்புறம் ரொம்ப சுலபம்... பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களை எளிதாக அழித்தொழித்து விடலாம்.
அவ்வளவு தான், matter over..!
சிந்திக்க சிந்திக்க
கருத்துகள்