Subbiahpatturajan India-Pakistan War 2025: Operation Sindoor and the Escalating Crisis Background Tensions between India and Pakistan, long-standing rivals and nuclear-armed neighbors, have erupted into the most severe conflict in over two decades. The immediate trigger was a deadly attack in April 2025 on Indian tourists in Kashmir, which India blamed on Pakistan-based militant groups-a claim Islamabad denies. Operation Sindoor: The Strikes Begin In the early hours of May 7, 2025, India launched "Operation Sindoor," a series of coordinated missile and air strikes targeting nine sites in Pakistan and Pakistan-administered Kashmir. Indian officials described these as "terrorist infrastructure" linked to Lashkar-e-Taiba and Jaish-e-Mohammed. The operation lasted about 25 minutes and involved advanced fighter jets such as the Rafale, equipped with precision-guided munitions. Pakistan’s Response and Civilian Impact Pakistan condemned the strikes as unprovoked aggression...
Subbiahpatturajan
*👊மனமே பிரச்சினை👊*
தனியாக *வேட்டையாடுவதை விருப்பமாக கொண்ட அரசன் ஒருவன்* வழிதவறி காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான்.
*காட்டில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருப்பதை கண்டு* அன்று இரவுப்பொழுதை அங்கேயே கழிக்கலாம் என்று முனிவரிடம் தங்க அனுமதி கேட்டான்..
முனிவரும் தாராளமாக *தங்கி* கொள்ளுங்கள் என கூறினார்..
முனிவரும், அரசரும் அந்த சிறிய குடிலில் *தூங்க* ஆரம்பித்தனர்.
இரவு முழுவதும் *முப்பது அல்லது நாற்பது நாய்கள்* அந்த குடிலை சுற்றி *குரைத்துக்* கொண்டே இருந்தன.
அரசரால் *தூங்கவே*
முடியவில்லை.
அவர், அன்று காலை முழுவதும் வேட்டையாடி *களைத்து* இருந்தார்..
மறுநாளும் அலைச்சல்
இருக்கிறது.
அதை நினைக்க நினைக்க *அரசருக்குக் கோபம் அதிகமானது*.
நாய்களோ *வெறித்தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக்* கெடுத்தன.
ஆனால், இத்தனைக்கும் மத்தியில் முனிவர் நிம்மதியாக *உறங்கிக்* கொண்டிருந்தார்.
அவரை எழுப்பிய அரசர்,
''என்ன மனிதர் நீங்கள்...
இவ்வளவு *சத்தத்துக்கு* மத்தியில் உங்களால் எப்படி *உறங்க* முடிகிறது...???'' என்று புலம்பினார்.
முனிவரோ, தனது வழக்கமான *நிதானத்துடன்* கூறினார்:
''அந்த நாய்கள், உங்களுக்கு *ஆதரவாகவோ அல்லது எதிராகவோ* இங்கு கூடவில்லை;
கோஷமிடவில்லை
அந்த நாய்களுக்கு
இங்கு ஒரு *அரசர்* தங்கி இருப்பது *தெரியாது.*
அவைகள் படிப்பதில்லை.
அவற்றுக்கு *அறிவும்* கிடையாது.
அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த *சம்பந்தமும்* இல்லை.
அவை, தங்களுக்கே உரிய *குரைக்கும் வேலையைப்* பார்க்கின்றன.
நீங்கள், *தூங்குகிற வேலையைப்* பாருங்கள்...!!!'' என்றார்.
''நாய்கள் இப்படி ஓயாமல் *குரைத்தால்*, நான் எப்படி *தூங்க* முடியும்...???'' என்றார் அரசர்.
உடனே முனிவர், ''நீங்கள், அவை குரைப்பதை *எதிர்த்துப்* போராடுகிறீர்கள்.
அப்படிப் *போராடாதீர்கள்*
.
பிரச்னை *குரைப்பொலி*
அல்ல, உங்கள் *எதிர்ப்பு*
உணர்வு.
நீங்கள், *சத்தத்துக்கு எதிராக* இருக்கிறீர்கள்; இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால் தான் தூங்க முடியும் என்று *ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள்*. நாய்கள் உங்களது நிபந்தனையைக் *கவனிக்கப் போவது* இல்லை.
நீங்களும் உங்கள் நிபந்தனையை *விலக்கப் போவது* இல்லை.
ஆனால், *நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும்.* நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்.
நாய்களின் குரைப்பை *ஏற்றுக் கொள்ளுங்கள்*. இந்த இரவிலும் எவ்வளவு *சக்தியுடன்* அவை குரைக்கின்றன பார்த்தீர்களா....???
*ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால்,* குரைப்புச் சத்தமும் ஒருவகை *மந்திரம்தான்*...!!!'' என்றார் முனிவர்.
*'உதவாக்கரை யோசனை' என்று மனதுக்குள் பழித்தபடி தூங்க* போனார் அரசர்.
ஆனால் காலையில், மிகுந்த *மகிழ்ச்சியுடன்* எழுந்து முனிவரைச் சந்தித்தார் *அரசர்*...!!!
''ஆச்சரியம்தான்....!!! எனது *எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு*, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன்.
ஆழ்ந்து *ரசிக்கவும்* தொடங்கினேன். அப்படியே *உறங்கிப்* போனேன்'' என்றார் அரசர்.
முனிவர் *நமக்குச்* சொல்கிறார்:
"இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். *உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால்*, உன் கவனத்தை *உள்முகமாகத்* திருப்பு.
எரிச்சலுக்கான காரணம் *நீயாகத்தான்* இருப்பாய்.
உனது *எதிர்பார்ப்பு* அல்லது *ஆசை* வேறாக இருந்திருக்கும்;
அல்லது ஏதோ ஒரு *நிபந்தனையை* உனக்குள் நீ விதித்திருப்பாய்.
அதுதான் உனது *எரிச்சலுக்குக்* காரணம்..
*உலகத்தை* நமக்கேற்ப *நிர்ப்பந்தப்படுத்த முடியாது..*
அதை எதிர்த்துப் *போராடும்போது* நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.
*யாரையும் நம்மால் திருத்த முடியாது ஆனால் அவர்களோடு வாழ்வதற்கு நாம் மாற்றிக்கொண்டால் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் அழகுதான்.*
🤝🤝🤝🤝🤝🤝🤝
*வாழ்க நிபந்தனையற்று*
🌹🌹🌹🌹🌹🌹🌹
*வளர்க எதிர்ப்பு உணர்வின்றி*
*🙏🙏*
கருத்துகள்