Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் வேலூர் நாகம்மை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.
அந்தப் பள்ளியில் சமீபத்தில் நடந்த தன்னம்பிக்கை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பழைய மாணவியான வாணி ஜெயராமை அழைத்திருந்தார்கள்.
சத்துவாச்சாரி லைன்ஸ் கிளப் பிரமுகர்மான மணிமேகலை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்
வாணி ஜெயராம் அவர்கள் சொன்ன தகவல் சில...
இந்தப் பள்ளியில் நான் நான்காம் வகுப்பு வரை 1949 முதல் 1953 வரை படித்தேன். என்னுடைய உண்மையான பெயர் கலைவாணி அதிலும் நான் தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். அதன் பிறகு என்னுடைய அம்மா எங்களுக்கு சங்கீதம் கற்றுக் கொடுப்பதற்காக சென்னைக்கு அழைத்து சென்று விட்டார் அங்கு சென்று இன்னும் சில குருமார்களிடம் நான் சங்கீதம் கற்றுக் கொண்டேன் .
நான் வேலூரில் படித்தது ரொம்ப சின்ன வயதில் என்பதால் தோழிகள் பெயர் சரியாக ஞாபகம் இல்லை.
மேரி பொன்னையா, வதனா என்று இரண்டு டீச்சர் பெயர் மட்டும் ஞாபகம் இருக்கிறது என்றவர்...
கல்லூரி நாட்களில்
சென்னையில் தன்னுடன் படித்த சில விஐபி தோழர்களை பற்றியும் குறிப்பிட்டுள்ளார் நான் ராணி மேரி கல்லூரியில் பிஏ படிக்கும்போது பேச்சுப்போட்டிகள் கலந்து கொண்டு பரிசு வாங்கினேன் அப்போது என்னுடன் பேச்சு போட்டியில் கலந்து கொண்ட துரைமுருகன், சாத்தையா என்று அழைக்கப்படும் தமிழ் குடிமகன் ஆகிய இரண்டு பேரும் பின்னாளில் மந்திரி ஆனார்கள் மற்றொருவர்
ஜீ .விஸ்வநாதன் தான் உலகப் புகழ்பெற்ற விஐடி யுனிவர்சிட்டியின் நிறுவனர் மற்றும் துணைவேந்தர் இவர்கள் இப்போதும் கூட என்னிடம் அடிக்கடி பேசுவார்கள். துரைமுருகன்
தொலைபேசியில் பேசும்போது மேடம் கலைவாணி என்றுதான் கூப்பிடுவார். இதுபோல ஆங்கில பேச்சுப் போட்டிக்கு வந்த போது நண்பரானவர் முன்னாள் மத்திய அமைச்சர் பா .சிதம்பரம் என்று தன்னுடைய ஃபிளாஷ்பேக்கை மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்தியில் பாடிய அனுபவம்
இந்தியில் குட்டி படத்துக்காக முதன் முதலில் பாடிய போலோரே பப்பி பாடலுக்காக வாங்கிய முதல் விருதை பற்றி சொன்னவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பிடித்த மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடலை பாடி காட்டவும் மறக்கவில்லை.
நன்றி .குமுதம் இதழில் இருந்து நான் படித்த சுவாரஸ்யமான தகவல்.
கருத்துகள்