கே.டி.ராகவன் ஒரு போதும் தண்டிப்படவும் போவதில்லை. பாதிக்கப்படவும் போவதில்லை.

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

கே.டி.ராகவன் ஒரு போதும் தண்டிப்படவும் போவதில்லை. பாதிக்கப்படவும் போவதில்லை.

Subbiahpatturajan


#cinartamilan #ktraghavan

களங்கம் துடைத்து காப்பாற்றப்படுகிறார் கே.டி.ராகவன்!


கே.டி.ராகவன் பாலியல் வீடியோ விவகாரத்தில் பாஜக தலைமை மிக ஜரூராக களம் இறங்கி அவரது களங்கத்தை போக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. சம்பந்தப்பட்ட வீடியோ அழிக்கப்பட்டுவிட்டது. அகில இந்திய அளவில் அவரை காப்பாற்ற நிர்மலா சீதாராமன், பி.எல்.சந்தோஷ், பியூஸ்கோயல் தீவிர அக்கறை காட்டி வருகின்றனர். மதன் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது..!

ராகவன் விவகாரம் குறித்து போடப்பட்ட கமிட்டியின் தலைவி மலர்கொடி பேசியதில் இருந்தே இந்த விசாரணை குழுவே ராகவனை சிக்கலில் இருந்து காப்பாற்றி, புனிதப்படுத்தத்தான் என நாம் புரிந்து கொள்ளலாம்!

மலர்கொடி பேசியுள்ளதை கவனியுங்கள்;

இந்த வீடியோவில் இருக்கும் பெண் குறித்து விசாரித்து வருகிறோம். அவரின் அடையாளம் தெரிந்துவிட்டது. அவர் எப்படி ராகவனுடன் பேசினார், ஏன் பேசினார், அவர் பாஜகவின் உறுப்பினரா..? என்பதை வர கூடிய நாட்களில் விசாரிக்க உள்ளோம். ‘ராகவனை திட்டமிட்டு சிக்க வைக்க வேண்டும் என்று ஏதாவது சதி வேலை செய்யப்பட்டதா.?’ என்று விசாரிப்போம். ‘இதற்காக திட்டமிட்டு அந்த பெண் பயன்படுத்தப்பட்டாரா..?’ என்பது குறித்தும் விசாரிப்போம்.’’ என்று மலர்க்கொடி தெரிவித்துள்ளார்.

அதாவது, அவர்கள் கண்ணோட்டத்தில் ‘பாதிக்கப்பட்டு இருப்பது பெண்ணல்ல, ராகவனே!’

நன்றாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! இந்த கே.டி.ராகவன் ஒரு போதும் தண்டிப்படவும் போவதில்லை. பாதிக்கப்படவும் போவதில்லை. ”ஊர் உலகம் கேவலமாக பேசும். ஆகவே, ஒரு ராஜீனாமா கடிதம் தாங்க..! உங்களை சுத்தசுயம்பிரகாசமானவர் என நிரூபித்துவிட்டு பின்னால் உள்ள வந்துக்கிடலாம்” என்று தான் சொல்லப்பட்டிருக்கும்.

இன்றைய தினம் மதன் வெளியிட்ட மற்றொரு ஆடியோ அந்த கட்சித் தலைமைக்கு எப்படிப்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர், அவர்களின் யோக்கியதை என்னவென்று தெரிகிறது!

கே.டி.ராகவன் செய்திருப்பது பெரும் குற்றம் என்பதை அண்ணாமலை அந்த உரையாடலில் வெளிப்படுத்திய போதும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு அதிகாரம் தனக்கு இல்லை என்பதையும் கூறத் தவறவில்லை. “நீங்க கொஞ்சம் பாதுகாப்பாக இருங்க. அவர்கள் ஈவு இரக்கமின்றி இருப்பார்கள். ரொம்ப எக்ஸ்போஸ் ஆகிவிடாதீர்கள்.’’ என்று அண்ணாமலை கூறுவதில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்துள்ளது.

பெண்களுக்கு நியாயம் வேண்டும். எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அதனால் இந்த வீடியோவை கண்டிப்பாக வெளியிடுங்கள். நீங்களும் பத்திரமாக இருங்கள்.’’

“நான் ஒரு வாய்ப்பை உங்களுக்கு உருவாக்கித் தருகிறேன். பெரும்பாலும் டெல்லியில் ஏற்பாடு செய்து தருகிறேன். நீங்கள் இதை (வீடியோவை) அங்கே காட்டவேண்டும். முக்கியமானவர்களிடம் இதைக் காட்ட வேண்டும். இதுபோன்ற மிக மோசமான நபர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதை புரிய வைப்போம்”

இவையெல்லாம் அண்ணாமலை யூடியுபர் மதனிடம் பேசியவை! இதன் மூலம் மாநில கட்சித் தலைவராக இருந்தாலும் தன்னால் ராகவன் மீது  நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்ற நிலையில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ வேண்டும். பாதிப்புக்கு உள்ளாக்கி வரும் அதிகாரத்தில் உள்ளவர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற உணர்வை அவர் வெளிப்படுத்தியதாகத் தான் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், இத்துடன் நில்லாமல் மிக அதிகமாகவே லூஸ்டாக் செய்கிறார் அண்ணாமலை! அதில், ”ஆறுமாதம் பொறுத்திருங்கள்’’ என்கிறார். பிறகு, ”வெளியிடுவதாக இருந்தால் வெளியிட்டுக் கொள்ளுங்கள்” என்கிறார்!

‘’இந்த வீடியோக்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினால், மதன் ரவிச்சந்திரன் என்ற பிராண்ட் நிற்கும். ஆனால், 15 மிகப் பெரிய எதிரிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்..’’ என்கிறார்.

என்ன பேசுகிறோம் எனத் தெரிந்து தான் பேசினாரா..என்று ஆச்சரியப்படும் அளவுக்கு தொடர்ந்து பேசுகிறார்!

இவற்றில் இருந்து நமக்கு ஒன்று மட்டும் தெளிவாகிறது! முட்டாள்களையும், ஆட்டுவித்தால் ஆடுபவர்களையும் தான் பாஜக தலைவராக நியமிக்கிறது. உண்மையான திறமைசாலியோ, விழிப்புணர்வு உள்ளவனோ பாஜகவில் தலைவராக வர முடியாது!

எல்.முருகன் என்ற தலித்தை அவர்கள் தலைவராக்கலாம். அண்ணாமலை என்ற பிராமணரல்லாதவரை தலைவராக்கலாம். ஆனால், கட்சியின் உண்மையான தலைவராக கே.டி.ராகவன் போன்றவர்களே இருப்பார்கள் என்பது தான் எழுதப்படாத விதியாகும்.

இந்த நெருக்கடிகள் தந்த மன அழுத்தங்களே அண்ணாமலை மதனிடம் பேசிவற்றில் அவரை அறியாமல் வெளிப்பட்டுள்ளது! ‘தன்னை பொம்மையாக்கி, ராகவனை கொண்டு ஆட்டுவிக்கிறார்களே அவர்களுக்கெல்லாம் தெரியட்டும் ராகவனின் யோக்கியதை என்னவென்பது..?’ என்று கூட அண்ணாமலை நினைத்திருக்க வாய்ப்புண்டு!

மோடிக்கும்,அமித்ஷாவிற்கும் இணையான பவர் உள்ளவர் சந்தோஷ்! இவர் ஆர்.எஸ்.எஸில் இருந்து கட்சிக்கு வந்துள்ளவர். அரசு பதவிகளை தவிர்த்துவிட்டு அரசாங்க பதவிகளில் உள்ளவர்களை வழி நடத்துபவர். அவர் ஒரு பிராமணர். அவரை மீறி அமித்ஷாவோ,மோடியோ கூட செயல்பட முடியாது! அந்த பிராமணரின் பரிபூரண ஆசி பெற்றவர் தான் ராகவன்! மேலும் நிர்மலா சீதாராமனின் பேரன்பினை பெற்றவர். ‘ஒரு பிராமணத் தலைவர் என்ன தவறு செய்தாலும் பெரிதாக பாதிப்புக்கு ஆளாகமாட்டார்’ என்பது தான் பாஜகவில் எழுதப்படாத நியதியாகும்.

முன்னாளில் டாக்டர் கிருபாகரன் என்ற தலித் தலைவர் பாஜகவின் தமிழகத் தலைவராக இருந்தார். அவர் சுதந்திரமாக செயல்பட முடியாத வகையில் அன்றைய தினம் ஒவ்வொரு நகர்விலும் இல.கணேசன் செக் வைத்தார். பதவி காலத்தில் அவர் அடைந்த அவமானங்கள் கடைசியில் அவர் திமுகவில் சேருமளவிற்கு கொண்டு சென்றது.

பாஜகவின் அகில இந்திய மகளிர் அமைப்பின் தலைவி வானதி சீனிவாசன் ஏன் பெண்களுக்கு ஆதரவாக வெளிப்படாமல் மெளனம் காக்கிறார்! அவர் இதையெல்லாம் கடந்து தான் இன்று இந்த நிலைக்கு வந்திருப்பார்! ராகவன் விஷயத்தில் வானதி ஏதாவது பெண்களுக்கு ஆதரவாக பேசினால், அவர் எதிர்காலமே தொலைந்துவிடும் என அவருக்கு தெரியும் தானே! அப்புறம் கட்சிக்குள்ளேயே, ராகவனின் ஆதரவாளர்கள் ”உன் யோக்கியதை தெரியாதா..வானதி..?’’ எனப் பேச வருவான்..? எதற்கு வம்பு..?

ஆக, இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன!

# பாஜகவில் பெண்கள் கண்ணியமாகவும், கெளரவமாகவும் இயங்கி முன்னேறி வர இயலாது!

#  பிராமணர்கள் எவ்வளவு பெரிய குற்றம் செய்தாலும் தண்டிக்கப்படமாட்டார்கள்.

கே.டி.ராகவனை போல வேறு எவனாவது இப்படி அம்பலப்பட்டு இருந்தால் இந்த நேரம் சல்லடையாகி இருக்கக் கூடும். ஏன்..? திமுகவில் ஒரு மாவட்ட தலைவர் இப்படி சிக்கி இருந்தால் கூட பாஜககாரன் அதை சும்மாவிட மாட்டான்!

பங்காரு லட்சுமணன் என்ற பாஜகவின் அகில இந்திய தலைவராக இருந்தார் பங்காரு லஷ்மணன் என்ற தலித் தலைவர். அவர் லஞ்சம் வாங்கும் விஷுவல் ஒன்று வெளியான போது, அவர் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டு காணாமல் போனார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண்கள் அல்லது ஏற்கனவே கே.டி.ராகவனால் பாதிக்கப்பட்ட பெண்களில் யாரேனும் நேரடியாக வெளி வந்து புகார் கொடுக்காத நிலை தொடருமானால்..ராகவன் ஒரு சிறிதும் பாதிப்பில்லாமல் – சங்கராச்சாரி கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கே போய் வந்தாலும் அதே பீடத்தில் அதே மரியாதையுடன் உட்கார்ந்தது போல –  ராகவனும் மீண்டு வருவார்.

ஆகவே, பாதிக்கப்பட்ட பெண்கள் மதன் ரவிச்சந்திரனை மட்டும் நம்பி இராமல் தமிழக மகளிர் ஆணையத்தில் புகார் தர முன்வர வேண்டும். அல்லது தமிழக மகளிர் ஆணையமே இந்த வழக்கை தானாக முன் வந்து விசாரித்தால், அந்த பெண்கள் முன்வர தயாராக இருப்பார்கள்! அந்த பெண்கள் துணிந்திடாத பட்சத்தில் மதனின் சதி திட்டத்திற்கு துணை போனதாக அவர்களே தண்டிக்கபடவும் வாய்ப்புள்ளது!

தற்போதைய நிலையில் தமிழக அரசு பாஜகவுக்கு எதிராக செல்லாது என்பது தான் உண்மை! பல  விவகாரங்களில் பத்திரிகையாளர் மதன் ஏற்கனவே திமுகவிற்கு எதிராக மிக வன்மமாக செயல்பட்டவர். அவதூறு பிரச்சாரங்கள் செய்தவர். அவர் தற்போது பாஜக தலைமையால் கைவிடப்பட்ட நிலையில் திமுக அரசு மதனை தூக்கவும், தண்டிக்கவும் வாய்ப்புள்ளது.

இதோ இன்று கலைஞர் செய்திகளில் வெளியான பதிவு அப்படியே கீழே தரப்படுகிறது;

”தமிழ்நாட்டில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்களை வெளியிடுவதிலும், பார்வையாளர்களை தவறான பாதை நோக்கி வழி நடத்துவதிலும் சில மோசடியாளர்களை களம் இறக்கியுள்ளது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல். அப்படி களம் இறக்கப்பட்டவர் வரிசையில் மதன் ரவிச்சந்திரனும் ஒருவர்.

அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளது. பல சேனலில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி துரத்தியடிக்கப்பட்ட மதன் ரவிச்சந்திரன் யூடியூப் சேனலைத் தொடங்கி அதன் மூலம் பா.ஜ.கவை எதிர்க்கும் தலைவர் பற்றி சர்ச்சைக் கருத்தை பேசி வந்துள்ளார். அதில், அவர் வீடியோ வெளியிடுவதன் நோக்கமே தமிழ்நாட்டில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைப் பற்றி பொய் தகவலை தருவதற்காகதான் என்று கூறப்படுகிறது.

அந்தவகையில், கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம், அவதூறு கருத்துக்களை பதிவிட்டுவந்த மதன் ரவிச்சந்திரன் மீது தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அதுதொடர்பான வழக்கு விரைவில் விசாரிக்கப்பட்டலாம் என கூறப்படுகிறது.”

ஆக, உதயநிதி ஸ்டாலின் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் மதனை கைது செய்ய பாஜக, திமுகவிற்கு சிக்னல் தந்துவிட்டது என்றே தோன்றுகிறது.

எனவே, நாம் மீண்டும் வலியுறுத்துவதெல்லாம் கே.டி.ராகவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளி வந்து புகார் சொல்லாவிட்டால், களங்கங்கள் களையப்பட்டு அவர் புனிதமானவராக்கப்பட்டு விடுவார் என்பதே யதார்த்த நிலையாகும்!

திரு .சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்

கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

கால் எழும்பு முறிவு ஏற்பட்டவர்கள் ஒருவருடத்தில் இறப்பது ஏன்...?!

Subbiahpatturajan கால் எழும்பு முறிவு ஏற்பட்டவர்கள் ஒருவருடத்தில் இறப்பது ஏன்...?! நடையும் ஆரோக்கியமான வாழ்வும்* 1. நாம்  குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம்.  2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம்.  3. டை அடியுங்கள் (முடி இருந்தால் 😂). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள்.  கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை  4. சுறுசுறுப்பாக இருங்கள். வாக்கிங்  போங்கள்.  5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். (அது தான் உண்மை).  6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். Never, ever allow the bioclock set your ending.  7. மனதுக்கு பிடித்த மாதிரி வாழுங்கள். அதுவே உங்களை மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வைக்கும். 8. தியானம் ஆசனம் மூச்சிபயிற்சி சூர்ய நமஸ்காரம் கண் பயிற்சி ஆரோக்கியமான உணவு - இதை கடைபிடித்தால் போதும். உங்கள் வாழ்க்கை அழகுதான். 9. உங்கள் எண்ணங்களை நேர்மறை ஆக்குங்கள்.மகிழ்ச்சியாக இருங்கள்.  10. மற்றவர்களுக்கு ஏதேனும் ...

அதிகாரம் ஆபத்தானதாக சென்று கொண்டிருப்பது தான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்சனையாக இருக்கிறது

Subbiahpatturajan அதிகாரம் ஆபத்தானதாக சென்று கொண்டிருப்பது தான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்சனையாக இருக்கிறது.... கிராம பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?  கோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி?.... அதை தடுக்க என்ன செய்யலாம்?..... 🤔 இந்தியாவின் ஆணிவேராக கிராமங்களும், கிராம பஞ்சாயத்துகளும் கருதப்படுகிறது. கிராமங்களுக்கு அரசியல் அதிகாரமளித்தல் என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்று.  அந்த அதிகாரம் ஆபத்தானதாக சென்று கொண்டிருப்பது தான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்சனையாக கருதப்படுகிறது.  தாசில்தார் கடமை தவறினால் தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக உள்ளாட்சித்தேர்தல் வேலைகள் வெளியாகி வருகிறது.  இந்திய பிரதமர் ஆனது போல சிலர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் புகைப்படத்தை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஆரவாரம் செய்வதை காணமுடிகின்றது.  ஏன் அவர்களுக்கு இந்த வெற்றி இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை பொதுமக்களும், வாக்காளார்களும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.  ஒரு சாதாரண கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வருவதால் சம்பந்தப்பட்ட நபருக்கு எ...

Behave with civility in public ...நாகரிகம் கருதி பொதுவெளியில் சற்று இங்கீதத்தோடு நடந்துகொள்ளுங்கள்.

Subbiahpatturajan நடத்தையில்தெளிவுவேண்டும் ஏது நாகரிகம்... ஏது அநாகரிகம் நீங்களே முடிவு செய்யுங்கள்... ★ முழுவதும் படித்துவிட்டு, விடுபட்ட முக்கியமான விடயங்களை கமெண்ட் பண்ணுங்க...!! ★ 1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீங்க ..(பண்ணவும் நினைக்காதீங்க) 2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேட்காதீர்கள் ... 3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ... 4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேக்காதீர்கள் .. 5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் .. குறிப்பாக பொது இடம்,சிக்னல் 6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ... அவர்கள் போனைக் கேட்காதீர்கள...

LPG திருடன் LPG thief...For attention

Subbiahpatturajan #LPGthief...Forattention   #LPGthiefForattention . இல்லதரசிகள் சிலிண்டர் வாங்கும் போது அவசியம் பார்க்க வேண்டிய விஷயங்கள்.. LPG சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்க்கு... சமீப காலமாகவே இந்தியாவில் இந்த நூதன திருட்டு நடைப்பெறுகிறது., வட இந்தியாவில் தொடர்ந்து  தற்போழுது தமிழகததிலும் இந்த திருட்டு அரங்கேறி உள்ளது... சிலிண்டர் மூலம் இன்னோரு சிலிண்டர்களுக்கு கேஸ் ஏத்தும் காணோலியை காண்க.. #LPGthief...Forattention  அது மட்டும் அல்லாமல் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள் உதவியுடன், மான்ய விலை சிலிண்டர்களை திடுட்டுத்தனமாக பயன்படுத்துகின்றனர். வீடுகளுக்கு உடனடியாக சிலிண்டர்களை சப்ளை செய்யாமல் காலம் தாழ்த்தி, கடைகளுக்கு கொடுத்து, பின் இரண்டொரு நாள் கழித்து, அதை சப்ளை செய்கின்றனர்.. கேஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படுவது, பகலில் தான். பெரும்பாலும், பெண்களே வீட்டில் இருப்பதால், எடையை சரிபார்ப்பது என்பது இயலாத காரியம். இதை பயன்படுத்தி, காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள் முறைகேடில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது இல்லதரசிகள் சிலிண்டர் வாங்கும் போது அவசியம் பார்க்க வேண்ட...

முக்கியமான விஷயம் நிலம் அல்லது வீடு வாங்குபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.

சுப்பையாபட்டுராஜன் ஒரு வேளை. பழைய பட்டா காரணமாகவே பலர் சிக்கலை சந்திக்கிறாரக்ள் பல்வேறு காரணங்களால் குடும்ப ரீதியாக பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துக்கு முறையான உட்பிரிவு பட்டா வாங்காமல் இருக்கும். ஒரு வேளை, ஒரு வேளை. ஒரு வேளை, ஒரு வேளை, இல்லை. சிக்கல் வரும் அவ்வாறு குறிப்பிட்ட வீடு அல்லது மனை வாங்கப்பட்டிருந்தாலும், பட்டா வி‌ஷயத்தில் எவ்விதமான கால தாமதமும் கூடாது. காரணம், சொத்தை விற்பனை செய்தவர் ஒருவேளை இறந்துவிடும் பட்சத்தில் அவர் பெயரில் உள்ள பழைய பட்டாவை புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றுவது சிரமமானதாகி விடும். அதன் பிறகு, இறந்தவரது வாரிசுகள் இருப்பின் அவர்களது உதவி தேவைப்படும் நிலையில், பெயர் மாற்றம் செய்வது சிக்கலான வி‌ஷயமாகி விடும். ஆகவே பாகப்பரிவினை மூலம் கிடைத்த ஒரு சொத்துக்கு உரிய உட்பிரிவு பட்டா இருக்கும் நிலையில், அந்த சொத்தை வாங்கும் முடிவை எடுக்கலாம். அப்போது தான் சொத்தை கிரயப்பத்திரம் செய்த பிறகு, பட்டாவை புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றம் செய்வது சுலபமாகி விடும். பட்டா அவசியம் ஏன் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நிலம் அல்லது வீடு வாங்குபவர்கள் கட்டாயம் செய்...

This is the story of Tamil Nadu Tamils ​​...தமிழ்நாடுவாழ் தமிழர்களின் கதியும் இதே கதிதான்...

Subbiahpatturajan தமிழ்நாடுவாழ் தமிழர்களின் கதியும் இதே கதிதான்... தமிழர்கள் உலகில் எங்கு குடியேறினாலும் அங்கு தமிழ்ச்சங்கம் எனும் அமைப்பைத் உருவாக்கி நடத்தி வந்துகொண்டுள்ளனர் தமிழர்நாட்டு எல்லைக்கப்பால் தமிழ்ச் சங்கங்கள் உலகெங்கிலும் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது தமிழ்சங்கம் எங்கு உருவானாலும் அதில் தமிழ்பேசும் தமிழ்நாட்டில் குடியேறி பின் இடம்பெயர்ந்த தமிழரல்லாத தெலுங்கு,  துளு கன்னட மக்களையும் அவர்கள் தமிழ் பேசுவதால் தமிழனாக நினைத்து உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்கின்றனர் !  இந்த தமிழ்ச் சங்கத்தின்  ஆளுமையை (மேனேஜிங் பவர்) கைப்பற்ற ஆரிய திராவிடர்கள் பின்தொடர்வது மட்டுமல்லாது தமிழர்களிடையே சாதிவேற்றுமை உணர்வுகளைப் பயன்படுத்தி  சங்க நிர்வாகத்தைக் கைப்பற்றி விடுகிறார்கள் .  உண்மைத் தமிழ் இனக்குழுக்கள் இன்றுவரை ஏமாந்தவர்களாகவே இருக்கிறார்கள் இனிவரும் காலங்களில் புதிதாக ஆரமிக்கப்படும் தமிழ்சங்கங்களில் பாரம்பரிய தமிழர் இனக் குழுக்களைத்தவிர வேற்றின தமிழ்பேசுவோரை உருப்பினராக்காமல் இருத்தலே நலம் தரும் தமிழன் கஷ்டப்பட்டு உருவாக்கும் தமிழ்ச் சங்கத்தை காக்கா நரியிடம் வடை...

“ஒரு விஷயத்தை சொல்றேன் யாருகிட்டேயும் சொல்லாதீங்க...

Subbiahpatturajan “ஒரு விஷயத்தை சொல்றேன்  யாருகிட்டேயும் சொல்லாதீங்க... நேர்மை பழகு... “எப்போதும் உண்மையைப் பேசுபவர்கள் பேசிய எதையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை” நூற்றாண்டுக்கு முன்னால் சாம் ரேபன் சொன்ன வார்த்தையின் அடத்தி அதிகமானது. எது முக்கியமானதோ அதைப்பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. அந்த முக்கியமான பட்டியலிலுள்ள அதி முக்கியமான விஷயம் இந்த நேர்மை.... நாம் பொருளாதாரம், இலட்சியம், புகழ் எனும் விஷயங்களுக்காய் அன்றாடம் ஓடுகிறோம். ஆனால் நேர்மையைக் குறித்துப் பேசுவதற்கு மறந்து போய்விடுகிறோம்.... அதிகபட்சம் நமது குழந்தைகள் நேர்மையை அறிவது ஆரம்பப்பாடசாலை புத்தகங்களில் மட்டுமே என்று கூடச் சொல்லலாம். சின்ன வயதில் குழந்தைகளுக்கு நேர்மையையும், உண்மையையும் பற்றிப் பேசிவிட்டு நாமே அதை நிறைவேற்றாமல் இருக்கிறோம். அப்போது நமது அறிவுரைகளும் குழந்தைகளின் மனதுக்குள் சென்று தங்குவதில்லை. நாட்டில் இன்று நேர்மைக்குப் பஞ்சம். நேர்மை இயல்பாகவே மனிதர்களிடம் இருக்க வேண்டியது. ஆனால் இன்றைய உலகில் நேர்மையாளர்கள் அருகி வரும் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் தான் தவற விட்ட ...

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்...