கோரோனாவிற்கு நாமும் நமக்கு கோரானாவும் கற்றுக் கொடுத்த பாடங்கள்...!!!

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

கோரோனாவிற்கு நாமும் நமக்கு கோரானாவும் கற்றுக் கொடுத்த பாடங்கள்...!!!

Subbiahpatturajan



கோரோனாவிற்கு நாமும் நமக்கு கோரானாவும் கற்றுக் கொடுத்த பாடங்கள்...!!!

எப்படி இருந்தாலும் என்னவாக இருந்தாலும், ஏதோ ஒரு வழியில் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்தது.

 கிடைத்ததை சாப்பிட்டுக்கொண்டும், பிடித்த இடத்திற்கு போய்க் கொண்டும், தெரிந்தவர்களிடம் பேசிக்கொண்டும், சாதாரணமாகவே இருந்தாலும் வாழ்க்கையின் வண்ணம் அங்குமிங்குமாய் சிதறிக் கிடந்தது.

 சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக இல்லை என்றாலும் சோகங்களே வந்து புரட்டிப் போட்டாலும் வாழ்க்கையின் அழகு வழி மாறிவிடவில்லை.

உயிருக்கும் உணர்வுக்கும் ஒரு பங்கமும் வந்து விடவில்லை.

கடினங்கள் ஆகவே இருந்தாலும், கண்ணீராக இருந்தாலும், ஆனந்தமாகவே இருந்தாலும், ஆர்ப்பாட்டம் ஆகவே இருந்தாலும், அவஸ்தையாக கூட இருந்தாலும்  பகிர்ந்து கொள்ளவும் பங்களிக்கவும் உறவுகளும் நேசங்களும் ஒட்டிக் கொண்டும் உறவாடிக் கொண்டும் இருந்தன.


எல்லாம் தானாக அதுவாய் நகர்ந்திட, எங்கோ யாரோ ஏதோ ஒரு வைரஸ் பூமியில் உலாவுவதாக பேசிட, நமக்கென்ன என்று நாமும் இருந்திட, ஒரு நாள் நம் வீட்டிலும் அந்த இருமல் சத்தமும், உடற் சூடும் விபரீதமாக  மாறின. எவ்வாறு சுனாமி வந்து போன பிறகு தான் சுனாமி என்றால் என்ன என்று புரிந்து கொண்டோமோ அதுபோல் பலவித வார்த்தைகளின் அர்த்தம் கொரோனாவிற்கு பிறகு மனதின் ஆழத்தில் அடி சேர்ந்தது.


சாதாரண இருமல் என்று கசாயம் கொடுத்த காலம் போய், இருமல் தேச குற்றம் எனும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டது.


முன்பெல்லாம் எங்கோ ஒரு தேசம் ஏதோ ஒரு வைரஸால் பாதித்துவிட  பெரிதாய் ஒன்றும் நான் பேசிக் கொண்டதே இல்லை. ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகமும் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்துக்கொண்டு யார் தான் இங்கு நலமாக இருக்கிறார்கள் என்று, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்கின்றனர்.
நாடுகள் எல்லாம் ஏதாவது செய்து எப்படியாவது செய்து தப்பித்து விடலாம் என்று இருக்க, கடைசி ஒரு மனிதனிடமிருந்து கூட கொரோனா வெளியேறினால்தான் இந்த பூமி பாதுகாப்பாக இருக்கும் என்ற ஒரு நிலையை நாம் உணர்ந்துகொள்ள நமக்கு நாட்கள் தேவைப்பட்டன.

இன்று  அது வருடங்களாக மாறிவிட்டன சிதறிப்போன குடும்பங்கள், மறைந்து போன நண்பர்கள், காணாமல் போன உறவுகள், கசக்கப்பட்ட சமூகத்தினுடைய என்ன நடக்கிறது என்று தேடிப்பார்த்தால் வாழ்க்கையின் அழகு ஒரு ஓரத்தில் விம்மி அழுது கொண்டிருந்தது.

 காரணம் எது  என்று சொல்லத் தெரியவில்லை ஆனால் கொரோனா மட்டுமே காரணம் அல்ல என்று புரிந்தது. தோள் கொடுக்க முடியவில்லை, கைபிடித்து ஆறுதல் கூற முடியவில்லை, கண்ணீர் துடைக்க கரம் கொடுக்க முடியவில்லை, உயிர் பிரியும் வேளை அருகில் இருந்து ஆறுதல் சொல்ல முடியவில்லை, மூச்சுக்காற்றின் கடைசி வெப்பம் தணியும் வேளையில் ஒட்டி உறவாடிய உயிரோடு கடைசி நொடியை பகிர்ந்து கொள்ள இயலவில்லை.

கொரோனா நோயாக மட்டும் இருந்திருந்தால் மருந்தின் மூலம் சரி செய்து இருக்கலாம். ஆனால் அது மனிததிற்கும்  மனிதர்களுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்தியது. ஏனெனில் இவ்வேளையில் காப்பாற்றுவது என்பது கரம் கொடுக்காமல் இருப்பதுதான் என்று சொல்லப்பட்டது. இடைவெளியால் இடம் மாறிப் போனோம் இன்று.


வேதனையின் வடிவம் இவ்வாறுதான் இருக்குமோ என்று ஒவ்வொரு குடும்பமும் உணர்ந்து கொண்டது.ஒருபுறம் கொரோனா உயிர்களை பலி வாங்க, பசியும் தன் பங்கினை ஆற்ற தொடங்கியது. இதுவரை இவ்வாறான எந்த ஒரு அனுபவத்தையும் கொண்டிராத நாம் என்ன செய்வது என்று தெளிந்து எழுவதற்குள் பல பக்கத்து வீடுகள் காணாமல் போயிருந்தன. பல உறவுகள் மக்கிப் போயிருந்தன. 


நாம் இருந்தும் இருக்க இயலவில்லையே என்ற குற்ற  உணர்ச்சியில் தன் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ள, தன்னை தனிமைப்படுத்தி தன் குடும்பத்தை தனிமைப்படுத்தி வாழ்வை நடத்துவதைத் தவிர வேறொன்றையும் செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டது சமூகம். இவ்வாறு கூட நம்மால் வாழ முடியுமா என்ற கேள்விக்கு நாமே பதில் சொல்லிக் கொண்டோம். 

வருடங்கள் இப்படி ஓடிப்போகும் என ஒருவரும் நினைக்கவில்லை. முகக் கவசம் ஆடையின் வடிவமாக மாறும் என எவரும் உணர்ந்திடவில்லை. கை கழுவுவது கட்டுப்பாடாக மாறும் என நாம் என்றும் யோசித்ததே இல்லை. இருந்தும் நாம் நம்மை பழகிக் கொண்டோம்.

இதுதான் மனித இனம் ஒவ்வொரு அழிவிற்கு  பின்னாலும் தன்னைத்தானே நியாயப்படுத்தி, நிம்மதி அடையச் செய்து இவ்வுலகில் வாழ்ந்திட காரணம். மனித இனம் பூமியில் வாழ தேவையான தகவமைப்பு  பெற்றுள்ளதா என்றால், இல்லை என்று கூறலாம். ஆனால் ஒவ்வொரு முறை ஒரு அழிவு ஏற்படும் போதும் தப்பித்துக் கொள்ளும் முறையை நாம் கற்று  இருந்தோம். ஒவ்வொரு தவறுகளுக்கு பின்னாலும் காயங்களோடு முன்னேறுவது எப்படி என்று நாம் நமக்கு சொல்லிக் கொண்டிருந்தோம். எது வந்து தடுத்தாலும் எப்படி தடுத்தாலும், வழியை கண்டு பிடிப்பதில் நாம் சிறந்தவர்களாக இருந்தோம், இருக்கிறோம். 


கொரோனா நமக்கு எவ்வளவோ பாடங்களை கற்று கொடுத்திட,  நாமும் கொரோனாவிற்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்தோம், மனித இனம் தன்னைத் தானே வழுப்படுத்திக் கொள்ளும் மற்றும்  வளப்படுத்திக் கொள்ளும் என்று. காயங்கள் பெரிதுதான், வடுக்களும் வலிமையானது தான், சோகங்கள் சுமக்க முடியாதவை தான், விட்டுப் போன உயிர்கள் திரும்பப் பெற முடியாதவை தான், ஆனால் வரைய வண்ணங்கள் இன்றும் நம்மிடம் உள்ளன.

என்னவாக இருந்தாலும் எப்படியாக இருந்தாலும் மீண்டும் எழுவதும் மீண்டு எழுவதும் மனித இனம் மறையாததற்கு காரணம். மனிதத்தோடு வாழ்வதற்கு காரணம். எனவே என்ன நடந்தாலும் நாம் யாரென்று கொரோனா கற்றுக் கொண்டு போகட்டும்.

பகிர்ந்தளிப்பது பங்களிப்பது நம் இரத்தத்தில் ஊறிப்போன உணர்வுகள். சில காலம் இடைவெளி இருக்கலாம் ஆனால் அதுவே நிரந்தரமல்ல. தோள் கொடுக்கவும் கரம் கொடுக்கவும் நாம் ஒருபோதும் தவறியதில்லை. சில அடி இடைவெளி நம்மைப் பிரித்துவிடப் போவதுமில்லை. காத்திருப்போம் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள.

ஒவ்வொரு தவறுகளுக்கும் பின்னாலும் காயங்களோடு... முன்னேறுவது எப்படி என்று நாம் கற்றுக் கொண்டே இருக்கிறோம்...

கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

கால் எழும்பு முறிவு ஏற்பட்டவர்கள் ஒருவருடத்தில் இறப்பது ஏன்...?!

Subbiahpatturajan கால் எழும்பு முறிவு ஏற்பட்டவர்கள் ஒருவருடத்தில் இறப்பது ஏன்...?! நடையும் ஆரோக்கியமான வாழ்வும்* 1. நாம்  குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம்.  2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம்.  3. டை அடியுங்கள் (முடி இருந்தால் 😂). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள்.  கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை  4. சுறுசுறுப்பாக இருங்கள். வாக்கிங்  போங்கள்.  5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். (அது தான் உண்மை).  6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். Never, ever allow the bioclock set your ending.  7. மனதுக்கு பிடித்த மாதிரி வாழுங்கள். அதுவே உங்களை மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வைக்கும். 8. தியானம் ஆசனம் மூச்சிபயிற்சி சூர்ய நமஸ்காரம் கண் பயிற்சி ஆரோக்கியமான உணவு - இதை கடைபிடித்தால் போதும். உங்கள் வாழ்க்கை அழகுதான். 9. உங்கள் எண்ணங்களை நேர்மறை ஆக்குங்கள்.மகிழ்ச்சியாக இருங்கள்.  10. மற்றவர்களுக்கு ஏதேனும் ...

அதிகாரம் ஆபத்தானதாக சென்று கொண்டிருப்பது தான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்சனையாக இருக்கிறது

Subbiahpatturajan அதிகாரம் ஆபத்தானதாக சென்று கொண்டிருப்பது தான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்சனையாக இருக்கிறது.... கிராம பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?  கோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி?.... அதை தடுக்க என்ன செய்யலாம்?..... 🤔 இந்தியாவின் ஆணிவேராக கிராமங்களும், கிராம பஞ்சாயத்துகளும் கருதப்படுகிறது. கிராமங்களுக்கு அரசியல் அதிகாரமளித்தல் என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்று.  அந்த அதிகாரம் ஆபத்தானதாக சென்று கொண்டிருப்பது தான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்சனையாக கருதப்படுகிறது.  தாசில்தார் கடமை தவறினால் தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக உள்ளாட்சித்தேர்தல் வேலைகள் வெளியாகி வருகிறது.  இந்திய பிரதமர் ஆனது போல சிலர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் புகைப்படத்தை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஆரவாரம் செய்வதை காணமுடிகின்றது.  ஏன் அவர்களுக்கு இந்த வெற்றி இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை பொதுமக்களும், வாக்காளார்களும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.  ஒரு சாதாரண கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வருவதால் சம்பந்தப்பட்ட நபருக்கு எ...

Behave with civility in public ...நாகரிகம் கருதி பொதுவெளியில் சற்று இங்கீதத்தோடு நடந்துகொள்ளுங்கள்.

Subbiahpatturajan நடத்தையில்தெளிவுவேண்டும் ஏது நாகரிகம்... ஏது அநாகரிகம் நீங்களே முடிவு செய்யுங்கள்... ★ முழுவதும் படித்துவிட்டு, விடுபட்ட முக்கியமான விடயங்களை கமெண்ட் பண்ணுங்க...!! ★ 1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீங்க ..(பண்ணவும் நினைக்காதீங்க) 2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேட்காதீர்கள் ... 3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ... 4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேக்காதீர்கள் .. 5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் .. குறிப்பாக பொது இடம்,சிக்னல் 6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ... அவர்கள் போனைக் கேட்காதீர்கள...

LPG திருடன் LPG thief...For attention

Subbiahpatturajan #LPGthief...Forattention   #LPGthiefForattention . இல்லதரசிகள் சிலிண்டர் வாங்கும் போது அவசியம் பார்க்க வேண்டிய விஷயங்கள்.. LPG சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்க்கு... சமீப காலமாகவே இந்தியாவில் இந்த நூதன திருட்டு நடைப்பெறுகிறது., வட இந்தியாவில் தொடர்ந்து  தற்போழுது தமிழகததிலும் இந்த திருட்டு அரங்கேறி உள்ளது... சிலிண்டர் மூலம் இன்னோரு சிலிண்டர்களுக்கு கேஸ் ஏத்தும் காணோலியை காண்க.. #LPGthief...Forattention  அது மட்டும் அல்லாமல் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள் உதவியுடன், மான்ய விலை சிலிண்டர்களை திடுட்டுத்தனமாக பயன்படுத்துகின்றனர். வீடுகளுக்கு உடனடியாக சிலிண்டர்களை சப்ளை செய்யாமல் காலம் தாழ்த்தி, கடைகளுக்கு கொடுத்து, பின் இரண்டொரு நாள் கழித்து, அதை சப்ளை செய்கின்றனர்.. கேஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படுவது, பகலில் தான். பெரும்பாலும், பெண்களே வீட்டில் இருப்பதால், எடையை சரிபார்ப்பது என்பது இயலாத காரியம். இதை பயன்படுத்தி, காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள் முறைகேடில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது இல்லதரசிகள் சிலிண்டர் வாங்கும் போது அவசியம் பார்க்க வேண்ட...

முக்கியமான விஷயம் நிலம் அல்லது வீடு வாங்குபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.

சுப்பையாபட்டுராஜன் ஒரு வேளை. பழைய பட்டா காரணமாகவே பலர் சிக்கலை சந்திக்கிறாரக்ள் பல்வேறு காரணங்களால் குடும்ப ரீதியாக பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துக்கு முறையான உட்பிரிவு பட்டா வாங்காமல் இருக்கும். ஒரு வேளை, ஒரு வேளை. ஒரு வேளை, ஒரு வேளை, இல்லை. சிக்கல் வரும் அவ்வாறு குறிப்பிட்ட வீடு அல்லது மனை வாங்கப்பட்டிருந்தாலும், பட்டா வி‌ஷயத்தில் எவ்விதமான கால தாமதமும் கூடாது. காரணம், சொத்தை விற்பனை செய்தவர் ஒருவேளை இறந்துவிடும் பட்சத்தில் அவர் பெயரில் உள்ள பழைய பட்டாவை புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றுவது சிரமமானதாகி விடும். அதன் பிறகு, இறந்தவரது வாரிசுகள் இருப்பின் அவர்களது உதவி தேவைப்படும் நிலையில், பெயர் மாற்றம் செய்வது சிக்கலான வி‌ஷயமாகி விடும். ஆகவே பாகப்பரிவினை மூலம் கிடைத்த ஒரு சொத்துக்கு உரிய உட்பிரிவு பட்டா இருக்கும் நிலையில், அந்த சொத்தை வாங்கும் முடிவை எடுக்கலாம். அப்போது தான் சொத்தை கிரயப்பத்திரம் செய்த பிறகு, பட்டாவை புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றம் செய்வது சுலபமாகி விடும். பட்டா அவசியம் ஏன் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நிலம் அல்லது வீடு வாங்குபவர்கள் கட்டாயம் செய்...

This is the story of Tamil Nadu Tamils ​​...தமிழ்நாடுவாழ் தமிழர்களின் கதியும் இதே கதிதான்...

Subbiahpatturajan தமிழ்நாடுவாழ் தமிழர்களின் கதியும் இதே கதிதான்... தமிழர்கள் உலகில் எங்கு குடியேறினாலும் அங்கு தமிழ்ச்சங்கம் எனும் அமைப்பைத் உருவாக்கி நடத்தி வந்துகொண்டுள்ளனர் தமிழர்நாட்டு எல்லைக்கப்பால் தமிழ்ச் சங்கங்கள் உலகெங்கிலும் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது தமிழ்சங்கம் எங்கு உருவானாலும் அதில் தமிழ்பேசும் தமிழ்நாட்டில் குடியேறி பின் இடம்பெயர்ந்த தமிழரல்லாத தெலுங்கு,  துளு கன்னட மக்களையும் அவர்கள் தமிழ் பேசுவதால் தமிழனாக நினைத்து உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்கின்றனர் !  இந்த தமிழ்ச் சங்கத்தின்  ஆளுமையை (மேனேஜிங் பவர்) கைப்பற்ற ஆரிய திராவிடர்கள் பின்தொடர்வது மட்டுமல்லாது தமிழர்களிடையே சாதிவேற்றுமை உணர்வுகளைப் பயன்படுத்தி  சங்க நிர்வாகத்தைக் கைப்பற்றி விடுகிறார்கள் .  உண்மைத் தமிழ் இனக்குழுக்கள் இன்றுவரை ஏமாந்தவர்களாகவே இருக்கிறார்கள் இனிவரும் காலங்களில் புதிதாக ஆரமிக்கப்படும் தமிழ்சங்கங்களில் பாரம்பரிய தமிழர் இனக் குழுக்களைத்தவிர வேற்றின தமிழ்பேசுவோரை உருப்பினராக்காமல் இருத்தலே நலம் தரும் தமிழன் கஷ்டப்பட்டு உருவாக்கும் தமிழ்ச் சங்கத்தை காக்கா நரியிடம் வடை...

“ஒரு விஷயத்தை சொல்றேன் யாருகிட்டேயும் சொல்லாதீங்க...

Subbiahpatturajan “ஒரு விஷயத்தை சொல்றேன்  யாருகிட்டேயும் சொல்லாதீங்க... நேர்மை பழகு... “எப்போதும் உண்மையைப் பேசுபவர்கள் பேசிய எதையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை” நூற்றாண்டுக்கு முன்னால் சாம் ரேபன் சொன்ன வார்த்தையின் அடத்தி அதிகமானது. எது முக்கியமானதோ அதைப்பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. அந்த முக்கியமான பட்டியலிலுள்ள அதி முக்கியமான விஷயம் இந்த நேர்மை.... நாம் பொருளாதாரம், இலட்சியம், புகழ் எனும் விஷயங்களுக்காய் அன்றாடம் ஓடுகிறோம். ஆனால் நேர்மையைக் குறித்துப் பேசுவதற்கு மறந்து போய்விடுகிறோம்.... அதிகபட்சம் நமது குழந்தைகள் நேர்மையை அறிவது ஆரம்பப்பாடசாலை புத்தகங்களில் மட்டுமே என்று கூடச் சொல்லலாம். சின்ன வயதில் குழந்தைகளுக்கு நேர்மையையும், உண்மையையும் பற்றிப் பேசிவிட்டு நாமே அதை நிறைவேற்றாமல் இருக்கிறோம். அப்போது நமது அறிவுரைகளும் குழந்தைகளின் மனதுக்குள் சென்று தங்குவதில்லை. நாட்டில் இன்று நேர்மைக்குப் பஞ்சம். நேர்மை இயல்பாகவே மனிதர்களிடம் இருக்க வேண்டியது. ஆனால் இன்றைய உலகில் நேர்மையாளர்கள் அருகி வரும் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் தான் தவற விட்ட ...

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்...