இதுதான் இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது.சங்கடப்படாதீர்கள், மனம் உடைந்து போகாதீர்கள்,

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

இதுதான் இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது.சங்கடப்படாதீர்கள், மனம் உடைந்து போகாதீர்கள்,

Subbiahpatturajan

இதுதான் இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது.

This is the reality of life today.
இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த
ஒரு துறவியிடம்
நியூயார்க் பத்திரிக்கையாளர் ஒருவா்
பேட்டி எடுப்பதாக இருந்தது.
திட்டமிட்டபடி பத்திரிக்கை நிருபர்
பேட்டியை ஆரம்பித்தார்.
*நிருபர்* :
ஐயா உங்களுடைய முந்தய சொற்பொழிவில் "தொடர்பு" மற்றும் "இணைப்பு" என்பது பற்றி பேசினீர்கள், அது உண்மையிலேயே மிகவும் குழப்பமாக இருந்தது.
சற்று விளக்கி சொல்ல முடியுமா? என்றார்.
துறவி
புன்முறுவலோடு
நிருபர் கேட்ட கேள்வியிலிருந்து
விஷயத்தை  திசைதிருப்புகின்ற விதமாக,
அந்த நிருபரிடம் கேள்வி கேட்டார்?,
நீங்கள் நியூயார்கில்தான் வசிக்கிறீர்களா?
*நிருபர்* : ஆம்.
*துறவி* : வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?
இந்த துறவி 
என் சொந்த வாழ்வைப் பற்றியும்,
தேவையற்ற கேள்விகளையும் கேட்டு
தன்னுடைய கேள்விக்கு பதில் தருவதை
தவிர்க்க முயற்சிக்கிறார், என்று நிரூபா் நினைத்தார்,
இருந்தாலும் துறவியின் கேள்விக்கு
"என் தாயார் இறந்து விட்டார்,
தந்தையார் இருக்கிறார்,
மூன்று சகோதரா்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கிறார்,
அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று பதிலளித்தார்
துறவி,..
முகத்திலே புன்னகையுடன்,
நீங்கள் உங்கள் தந்தையுடன் பேசுகிறீா்களா? என்று மீண்டும் கேட்டார்
இப்போது நி்ரூபா்
சற்று எரிச்சலடைந்து விட்டார்.
*துறவி* :
கடைசியாக எப்போது அவரிடம் பேசினீா்கள்?
*நிரூபர்* :
எரிச்சலை அடக்கிக்கொண்டு,
"ஒரு மாதத்திற்கு முன்பு இருக்கலாம்" என்றார்.
*துறவி* :
உங்களுடைய சகோதர சகோதரிகளை
அடிக்கடி சந்திப்பதுண்டா? 
குடும்பமாக சந்தித்தது கடைசியாக எப்போது?
என்றார்.
இப்போது அந்த நிரூபரின் நெற்றியில்
வியர்வை தெரிந்தது.
இதைப் பார்த்தால்
துறவிதான்
நிரூபரை பேட்டி காண்பது போல இருந்தது.
நீண்ட பெருமூச்சுடன்
நிரூபர் சொன்னார்,
"இரண்டு வருடங்களுக்கு முன்
கிருஸ்துமஸ் சமயத்தில் சந்தித்தோம்" என்று.
*துறவி* :
எல்லோரும் சேர்ந்து
எத்தனை நாட்கள் இருந்தீர்கள்?
புருவத்தின் மீது வடிந்த
வியர்வையை துடைத்தவாறே நிரூபர்
"மூன்று நாள்" என்றார்.
*துறவி* :
உங்களுடைய அப்பாவின் அருகில் அமர்ந்து, அவரோடு  எவ்வளவு நேரம் கழித்தீர்கள்?
இப்போது நிரூபர்
பதட்டத்துடனும் சங்கடத்துடனும்
ஒரு  காகிதத்தில் ஏதோ கிறுக்க ஆரம்பித்தார்.....
*துறவி* :
எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து
காலை உணவு, மதிய உணவு அல்லது
இரவு உணவை சாப்பிட்டீர்களா?
அம்மா இறந்த பிறகு
நாட்களை எப்படி கழிக்கிறீர்கள்
என்று அப்பாவிடம் கேட்டீர்களா?
இப்போது நிரூபரின் கண்களில் இருந்து
கண்ணீர் துளிகள் கீழே விழத் தொடங்கியது.
துறவி அந்த நிருபரின்
கைகளை பற்றியவாறு கூறினார்....
"சங்கடப்படாதீர்கள்,
மனம் உடைந்து போகாதீர்கள்,
கவலையும் கொள்ளாதீர்கள்.
தெரியாமல் உங்கள் மனதை
நான் புண்படுத்தி இருந்தால்
என்னை மன்னியுங்கள்.
ஆனால் இதுதான்
நீங்கள்
"தொடர்பு மற்றும் இணைப்பு" பற்றி
கேட்ட கேள்விக்கான பதில்.

நீங்கள் உங்களுடைய
அப்பாவுடன் தொடர்பில் இருக்கிறீர்கள்.
ஆனால் அவரோடு நீங்கள் பேசும்
இணைப்பில் இல்லை.

நீங்கள் அவரோடு
இணைக்கப்படவில்லை.

*இணைப்பு என்பது
இதயத்துக்கும் இதயத்துக்கும்
இடையே இருப்பது.......*

ஒன்றாய் அமர்ந்து, உணவை பகிர்ந்து,
ஒருவர்மீது ஒருவர் அக்கரை கொண்டு, தொட்டுக்கொண்டு, கைகுலுக்கி,
கண்களை நேருக்கு நேர் பார்த்து,
ஒன்றாய் சேர்ந்து ,
நேரத்தை செலவிடுவதுதான்....... இணைப்பு

कनेक्शन है
दिल और दिल को
बीच होना......*
एक साथ बैठकर खाना बाँटना,
एक-एक करके देखभाल करना, छूना, हाथ मिलाना,
सीधे आँखों में देखना,
साथ में,
समय बिताना है...... लिंक
நீங்கள்,
உங்கள் சகோதர சகோதரிகளுடன் தொடர்பில்(contact) இருக்கிறீர்கள்
ஆனால் நீங்கள் யாரும் பேசும்
இணைப்பில் இல்லை என்றார்.
,
आप अपने भाइयों और बहनों के संपर्क में हैं
पर तुम में से कोई नहीं बोलेगा
संबंध में नहीं कहा।

இப்போது நிரூபர்
கண்களை துடைத்துக் கொண்டு,
"எனக்கு அருமையான மற்றும்
மறக்க முடியாத பாடத்தை சொல்லித் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா" என்றார்.....
இதுதான்
இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது.
வீட்டில் ஆகட்டும் அல்லது சமுதாயத்தில் ஆகட்டும் ஒவ்வொருவரும்
நிறைய தொடர்பை வைத்திருக்கின்றனர்.
ஆனால் இணைப்பில் இருப்பதில்லை. எல்லோருமே அவரவர் சொந்த உலகில்
மிகவும் பரபரப்பாக இருக்கின்றனர்......

நாம் இதுபோல வெறும்
"தொடா்பை" பராமரிக்காமல், 
"இணைப்பில்" வாழ்வோமாக. 
நம்முடைய
அன்புக்கு உரிய அனைவரோடும் அக்கரையோடும்,
அன்பை பகிா்ந்து கொள்வதற்காக
நேரத்தை செலவழித்தும் வாழ்வோமாக.....

அந்தத் துறவி வேறு யாருமல்ல,
ஸ்வாமி *விவேகானந்தா்* ஆவார்.

கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

தமிழ்நாட்டின் "காலா காந்தி"

காலத்தின் பயணம் *காமராஜர் பற்றி 100 அற்புதமான அரிய தகவல்கள்..!!* *1. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர்ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில்வைத்திருந்தார்.* *2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.* *3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.* *4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்றமாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்சொல்லி இருக்கிறார்*.. *5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்.* *6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும்.* *7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாகசொல்லி ஆச்சரியப்படுத்துவார்.* *8. காமராஜர்...

முடிந்தவரை நேர்மையாக வாழப்பழகிக் கொள்ளுங்கள்....!?

முடிந்தவரை நேர்மையாக வாழ பழகிக் கொள்ளுங்கள்....!? நேர்மை பழகு “எப்போதும் உண்மையைப் பேசுபவர்கள் பேசிய எதையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை” நூற்றாண்டுக்கு முன்னால் சாம் ரேபன் சொன்ன வார்த்தையின் அடத்தி அதிகமானது. எது முக்கியமானதோ அதைப்பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. அந்த முக்கியமான பட்டியலிலுள்ள அதி முக்கியமான விஷயம் இந்த நேர்மை. நாம் பொருளாதாரம், இலட்சியம், புகழ் எனும் விஷயங்களுக்காய் நெட்டோட்டம் ஓடுகிறோம். ஆனால் நேர்மையைக் குறித்துப் பேசுவதற்கு மறந்து போய்விடுகிறோம். அதிகபட்சம் நமது குழந்தைகள் நேர்மையை அறிவது ஆரம்பப்பாடசாலை புத்தகங்களில் மட்டுமே என்று கூடச் சொல்லலாம். சின்ன வயதில் குழந்தைகளுக்கு நேர்மையையும், உண்மையையும் பற்றிப் பேசிவிட்டு நாமே அதை நிறைவேற்றாமல் இருக்கிறோம். அப்போது நமது அறிவுரைகளும் குழந்தைகளின் மனதுக்குள் சென்று தங்குவதில்லை. நாட்டில் இன்று நேர்மைக்குப் பஞ்சம். நேர்மை இயல்பாகவே மனிதர்களிடம் இருக்க வேண்டியது. ஆனால் இன்றைய உலகில் நேர்மையாளர்கள் அருகி வரும் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் தான் தவற விட்ட பையைத் திருப்பித் தரும் ஆட்டோக்காரர்...

Try this to live fully in New Year 2025...

Subbiahpatturajan  புது வருடம் 2021ல் *நமது வருமானம் குறைவாக இருந்தாலும்*,நிறைவாக வாழ பழகலாமே !இதை செய்து பாருங்கள். நமது உடல் ஆரோக்கியத்திற்கு  மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.   உதாரணமாக-- 1.  ரெடிமேடாக விற்கும் நெல்லிக்காய் வத்தல். (தினமும்ஒன்று) 2.  விஷம் கலந்துள்ள சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் / நாட்டு சர்க்கரை. 3.  பிரிட்ஜில் வைக்காத பொருள்கள். 4.  ஒரு கேரட்டுடனும் , (அல்லது) சிறிது தேங்காயுடனும் ஒரு பேரீச்சம் பழத்தை சிறுக சிறுக கடித்து ஒன்றாக சுவைப்பது. (இது --- கண்ணுக்கும், இரத்தம் அதிக மாவதற்கும், அறிவிற்கும், ஞாபக சக்திக்கும்  நல்லது.) 5.     80 சதம் கெமிக்கல்கள் உள்ள பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது. 6.   தண்ணீராகவே இருந்தாலும் நாட்டு பாலை வாங்க முயற்சிக்கலாமே. 7.   முடிந்தவரை பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பை மட்டுமே பயன்படுத்தலாமே. 8.   சாதத்தை வடித்து சாப்பிடலாமே. 9.   வடித்த கஞ்சியை பழய சாதம் தயாரிக்க பயன்படுத்தலாமே. 10.   இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கும் பாத்திரத்தை...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* கோரானா கேள்வி பதில்கள்

Subbiahpatturajan *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* 1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?*  இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.  2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?*  இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந...

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

Subbiahpatturajan தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕 பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர். மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது அரசு . அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. ஆனால் இலங்கை அரசு இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை. 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கடத்திச் சென்றனர். புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்...

சொந்த வீடு கட்டுபவர்களுக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 50 டிப்ஸ்கள்.....!!

Subbiahpatturajan சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!! 1. பத்திரப்படுத்தி வச்சுக்கோங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும். தண்ணீர் : 3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம். 4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது. 5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம் அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ...

கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை...

Subbiahpatturajan கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை... ஒரு பெண் போட்டோ பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கறுப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள். இப்படிதான் ஒருநாள். ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் சொல்ல இவன் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறான். இரவு 1மணி போல அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது. வலி தாங்க முடியாமல் அய்யோ!!! அம்மா!!! என்று கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட கதறுகிறாள். உடனே தன் வீட்டாருக்கும் கணவனின் நன்பருக்கும் Phone செய்கிறாள். கணவன் துடிப்பதை தாங்கிகொள்ள முடியாதவள். தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி போல் புலம்பிக்கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி வருகிறாள் இவளை பார்த்த கணவன் பயந்து போய் திரு திருவென முழிக்கிறான். பாவம் எத்தனை நாள் வைத்த பாசமோ!!! கணவன...

உங்கள் வாழ்வில் காலத்தின் பயணம் எப்படி இருக்க வேண்டும்.?

Subbiahpatturajan காலத்தின் பயணம் எப்படி இருக்க வேண்டும். தினமும் அவசியம்  1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும். 2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும். 3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும் 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள். ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள். 4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும், சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும். வந்தால் கட்டுக்குள் இருக்கும். 5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள். கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும். உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ணுங்கள். 6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிட...