Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
மனிதர்களில் பலவிதம் இருக்கிறார்கள் ஆனால் இதில் சில பேர் சில வித்தியாசமான பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். அவற்றுள் சில தேவையில்லாத பழக்கவழக்கங்களை நாம் மாற்றிக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
1. முகத்திற்கு பக்கத்தில் போய் பேசுவது...
சிலபேர் நம்மைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று zoom face விளம்பர தோணியில் முந்திக் கொண்டு பேசுவது சிலருடைய உடம்பை அடிக்கடி மேலும் கீழும் பார்த்துக் கொண்டே பேசும் பழக்கம் இருந்தால் உங்களை நீங்கள் திருத்திக் கொள்ளலாம்.
2. தொட்டுத் தொட்டு பேசுவது...
நாம் அவர்களுடன் உரையாடும் போதோ இல்லையென்றால் அவர்களுக்கு அறிவுரை கூறும் போது அவர்களை தொட்டு தொட்டு பேசும் பழக்கம் தோள் மீது கை வைத்து பேசும் பழக்கம் இந்த பழக்கம் எல்லோருக்கும் பிடிக்குமா என்று தெரியாது ஆனால் நாம் நம்மை மாற்றிக் கொள்ளலாம்.
3. அடிக்கடி கை கட்டிக்கொண்டு நிற்கும் பழக்கம்...
நாம் எப்பொழுது பார்த்தாலும் சில நேரங்களில் பேருந்து நிலையங்களில் ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் நேரம் கடந்து கொண்டிருந்தால் அடிக்கடி கை கட்டிக்கொண்டு நிற்கும் பழக்கம் சில பேருக்கு உண்டு இது போன்ற பழக்கங்களால் அப்படி நீங்கள் நிற்கும் பொழுது சிலர் நினைக்கலாம் . உங்களுக்கு அனுபவம் குறைவுதான் எனும் பிம்பத்தை உருவாக்கும் மற்றவர்களுடன் உங்களுக்கு பேசும் வாய்ப்பு குறைவாகவே கிடைக்கும். இந்தப் பழக்கம் இருந்தால் திருத்திக் கொள்ளலாம்.
4. சிலரை உற்றுப் பார்ப்பது...
மற்றவர்களை நாம் பார்க்கும் விதம் பார்த்தும் பாராதது போல் இருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து Camera mode போல மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நோட்டம் விடுவது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் சாப்பிடுகிறார்கள் என்று கேமரா கண்களைக் கொண்டு பார்க்கக்கூடாது.
5. கை கால் தலையை அடிக்கடி ஆட்டும் பழக்கம்
மற்றவர்களுடன் நாம் உரையாடும் போதும் மற்றவர்கள் பேசும்போது அவர்களுக்கு நாம் சொல்லும் விஷயங்கள் புரியுமாறு அடிக்கடி கை கால் தலையை போல் ஆட்டுவது
இந்த பழக்கம் இருந்தால் நீங்கள் உங்களை நீங்கள் திருத்திக் கொள்ள வேண்டியது அவசியம்...
சில பழக்கவழக்கங்களை உடனேயே மாற்றவேண்டும் என்ற அவசியம் இல்லை... கொஞ்சம் கொஞ்சமாக உங்களை நீங்கள் கவனித்தாலே போதுமானது...
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
கருத்துகள்