Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
உண்மையான தேசப் பிதா காந்திஜியா-நேதாஜியா?!
*பத்து வருடம்1947-ல் காந்தியின்* *மூலமாகக் கிடைத்தது போல கொடுத்தார்கள் -*
*"குருதியைத் தாருங்கள், விடுதலை பெற்றுத் தருகிறேன்" என்று வீர முழக்கமிட்டு இளைஞர்களிடேயே விடுதலை வெறியை ஊட்டியவர் 'நேதாஜி' என்று தாகூரால் பட்டம் சூட்டப்பெற்ற சுபாஷ் சந்திரபோஸ் -*
*ஜெய்ஹிந்த்' என்ற வீர முழக்கத்தை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் (இதை இவர் செண்பகராமன் பிள்ளை மூலம் பெற்றார்) -*
*உண்மையில் நாம் 1947-ல் பெற்றது சுதந்திரமே அல்ல -*
*அது தனக்கு விசுவாசமாக இருந்த காந்தி, நேரு* *போன்றோருக்கு பிரிட்டிஷாரால் அதிகாரங்களை மட்டும் மாற்றிக் கொடுக்கப்பட்ட ஒரு நிகழ்வு -*
காந்தி-நேதாஜி மோதல்
*ஜெனரல் டயரைச் சுட்டுக்கொன்ற உத்தம்சிங்கிற்கு கன்டனம் தெரிவித்தவர் காந்தி -*
*இந்தச் சம்பவம் தான் காந்தி --* *போஸ் மோதலுக்கு முக்கியக் காரணம் -*
*1939-ல் காங்கிரஸ் தலைவராக போஸ் காந்தியின் எதிர்ப்பையும் மீறி தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது -*
*போஸின் செல்வாக்கு அதிகரித்து வருவதைப் புரிந்து கொண்ட காந்தி -*
*அவருக்கு எதிராக உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்* *( இதை விட அயோக்கியத்தனம் இருக்க முடியுமா?)*
*இதைப் பார்த்த போஸ் மனமுடைந்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் -*
*அதே வருடம் ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியைத் தொடங்கினார் -*
*(அதன் தமிழகத் தலைவராக இருந்தவர் தேவர்) -*
*அதன் பிறகு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட போஸ் அங்கிருந்து தப்பி ஆப்கன் வழியாக ஜெர்மன் சென்றடைந்தார் -*
*அங்கு ஹிட்லரைச் சந்தித்த போது அவர் எப்படி வரவேற்றார் தெரியுமா? -
*வருங்கால இந்தியாவின் சர்வாதிகாரியே வருக என்று வரவேற்றார் -*
*அதே போல் தான், அடுத்ததாக ஜப்பான் பிரதமர் டோஜோ அவர்களும் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவின் அனைத்துமாக போஸ் இருப்பார் என்று தெரிவித்தார் --*
*ஆனால், இந்த இரண்டு இடங்களிலுமே போஸ் அவர்கள் கூறிய மறுமொழி "என் நாட்டின் சுதந்திரத்திற்கு உதவி மட்டுமே வேண்டும், நாட்டை ஆள்பவனை மக்கள் தான் முடிவு செய்வார்கள்" என்பதே -*
*இப்பொழுது புரிந்திருக்கும் காந்தி, நேரு வகையறா ஏன் இவர் மேல் கோபமாக இருந்தார்கள் என்று*
வரலாற்றுப் பிழைகள்
*உண்மையில் அறுபது ஆண்டுகளாக பள்ளிகளில் நாம் படித்து வருவது வரலாறு அல்ல -*
*அது காங்கிரஸின் வரலாற்றுத் திரிபு
*உண்மையில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருக்க வேண்டியவர் பட்டேல்* *அவர்கள்தான்
*தேர்ந்தெடுக்கப்பட்டவரும் அவர் தான் ஆனால் நேரு காந்தியின் ஆதரவுடன் பிரதமரானார் -*
*1945-ல் ஆகஸ்ட் 18ம் தேதி நேதாஜி தைவான் விமான விபத்தில் காலமானதாக அறிவித்தார்கள் -*
*ஆனால், அப்படி ஒரு விமான விபத்தே நடக்கவில்லை என்று தைவான் சொன்னது -*
*சுதந்திர இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் வீற்றிருக்க வேண்டிய தலைவர்களை சதியால் வென்று தலைமைப் பதவியை அடைந்த காங்கிரஸின் துரோகப் பட்டியல் மிகப் பெரியது -*
*ஒரு வேளை
போஸ் மட்டும் முதல் பிரதமராக வாய்த்திருந்தால் -*
*பாரதம் எப்பொழுதோ வல்லரசாகி இருக்கும் -*
ஆயிரம் தான் நேருமீது கோபம் இருந்தாலும் தேசத்தின் விடுதலைசம்பந்த பட்ட விஷயம் என்றவுடன் வியன்னா வில் இருந்து பம்பாய் வந்த போஸை ஆங்கிலேய அரசு அள்ளி ஜெயிலில் போட்டது. வெளிநாட்டில் இருந்த நேதாஜியை வெள்ளைக்காரன் பேச்சை கேட்டு இந்தியா வர வைத்து ஜெயிலில் அடைத்தவர்கள்
தான் காந்தியும் நேருவும்.
இருந்தாலும் பதினோரு மாதங்களில் ஜெயிலில் இருந்து வெளி வந்த போஸ் 1937ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி கல்கத்தாவில் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்படி காங்கிரஸ் கட்சியில் போஸுக்கும் காந்திக்கும் உட்கட்சி போர் நடந்து வரும் நிலையில் 1939 ம் ஆண்டில் செப்டம்பர் மாதம்இரண்டாம் உலகப்போர் வந்து விட்டது..இந்த போரில் இங்கிலாந்தும் பங்கேற்கும் அதனால் அவர்களை சுதந்தி ரம் கேட்டு டிஸ்டர்ப் செய்ய கூடாது என்றார் காந்தி..ஆஹா..என்ன ஒரு தேச பற்று...ஆனால் நேதாஜியோ இது தான் சரியான சந்தர்ப்பம் ..ஏனெனில் வெளிநாடுகளுடன் போர் நடைபெறும் பொழுது இங்கிலாந்தால் இந்தியாவின் உள்நாட்டில் கவனம் செலுத்த முடியாது ..ஆதலால் போராட்டத்தை தீவிர படுத்த வேண்டும் என்றார்.
காங்கிரஸ் தலைவரான போஸ்
இந்த நிலையில் தான் காங்கிரஸ் தலைவர் தேர்தல் வந்தது.இதில் போட்டியிட்ட நேதாஜியை எதிர்த்து காந்தியின் கைத்தடி பட்டாபி சீதாராமய்யா போட்டியிட்டார் தேர்தல் நடந்த பொழுது காந்தி சீதாராமய்யாக்கு போடும் ஓட்டு எனக்கு போடும் ஓட்டு என்று காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களிடம் மன்றாடினார்.ஆனால்
நேதாஜி மாபெரும் வெற்றி பெற்றார். இதனால் கட்சி தன்னுடைய கையை விட்டு போவதை அறிந்த காந்தி பட்டாபியின் தோல்வி என்னுடைய தோல்வி காங்கிரஸ் கட்சி பாதை மாறுகிறது என்று கூறி உண்ணாவிரதம் இருந்தார்.
பாருங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து தனக்கு பிடிக்காத நேதாஜி தலைவர் ஆகிறார் என்றவுடன் அவரை விரட்ட காந்தி இருந்த உண்ணாவிரதம் மூலமாக காந்தி எப்பேர்பட்ட சுயநலவாதி என்பதை அறிந்து கொள்ளலாம்.
நேதாஜியை காங்கிரஸ் தலைவராக ஏற்க விரும்பாது காந்தி போட்ட உண்ணா விரத டிராமாவினால் மனம் மாறிய காங் செயற்குழு உறுப்பினர்கள் நேதாஜிக்கு ஒத்துழைப்பு தர மறுத்தனர். கடை சியில் காந்தியின் கபடவேடம் வெற்றி பெற்றது.
நேதாஜி தன்னுடைய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த பின் கல்கத்தா வில் உள்ள ஹஸ்ரா பூங்காவில் நேதாஜி நிகழ்த்திய நான் ஏன் ராஜினாமா செய்தேன் என்ற உரையை கேட்டு மானமிருந்து இருந்தால் காந்தியும் நேருவும் அன்றே அரசியலில் இருந்து விலகி இருப்பார்கள்.
காந்தியின் மரணத்தின் காரணம்
காந்தியை ஏன் கோட்சே சுட்டுக் கொ ன்றார்? மத வழி அரசியலால் காந்தி மீது கோட்சேவுக்கு ஏற்பட்ட கோபத்தினால் காந்தி கொல்லப் பட வில்லை. மாறாக காந்தி பாகிஸ்தானுக்கு 55கோடியை இந்தியா அளிக்க வேண்டும் என்று டெல்லி பிர்லா ஹவுசில் உண்ணாவிரதம் இருந்தார்.
எதற்கு தெரியுமா?
வல்லபாய் பட்டேல் எச்சரிக்கை
இந்திய பாகிஸ்தான் பாகப்பிரிவனை நடைபெற்ற பொழுது
இந்தியா பாகிஸ்தானுக்கு அளிக்க வேண்டிய பணம் 75 கோடி ரூபாய் அப்போது இந்தியா 20 கோடியை அளித்து விட்டு
55 கோடி ரூபாயை பெண்டிங் வைத்து இருந்தது.
இந்த 55 கோடி ரூபாயை பாகிஸ்தானு க்கு இந்தியா அளிக்க வேண்டும் என்று உண்ணா விரதம் இருந்தார்.ஆனால் அந்த நேரத்தில் இந்தியா பாகிஸ்தான்
இடையே காஷ்மீர் விசயத்தில் முதல் போர் நடைபெற்று வந்தது.இந்த 55 கோடி ரூபாயை அளித்தால் பாகிஸ்தான் அதைவைத்து ஆயுதம் வாங்கி இந்தியாவை
போட்டுத்தாக்கும் என்று அப்போதைய உள்துறை அமைச்சர் பட்டேல் மறுத்தார்.ஆனால் காந்தி உண்ணாவிரதம் இருந்து இந்திய அரசை மிரட்டி பாகிஸ்தானுக்கு
55 கோடி ரூபாயை கிடைக்க வைத்தார் இந்த பணத்தை வைத்து பாகிஸ்தான் வாங்கிய ஆயுதங்களினால் தான் இந்தியாவிடம் இருந்து பிரிந்த ஒரு சிறிய நாட்டிடம் இந்தியா ஒரு வருடத்துக்கு மேல் மல்லுக்கு நின்றது.
முதல் இந்திய பாகிஸ்தான் போர் சுமார் ஒரு வருடம் நீடித்தது. இதன் விளைவாகத்தான் இந்தியா காஷ்மீரின் ஒரு பகுதியை இழந்தது .இப்பொழுது சொல்லுங்கள் காந்தி தன்னுடைய புகழுக்காக இந்தியாவையும் பலி கொடுத்த
சுயநலவாதி .ஒரு வேளை காந்தியும் நேருவும் நேதாஜியை இந்தியாவில் இருந்து துரத்தாமல்
இருந்து இருந்தால் சுதந்திர இந்தியா வின் முதல் பிரதமராக நேதாஜியே வந்து இருப்பார்.
வரலாற்றை புரிந்து கொள்ளவேண்டும்
எங்களைப்பொறுத்த வரை நேதாஜி தான் உண்மையான தேசப்பிதா.இதை வருங்கால தலைமுறையினர் அறியும் வகையில் இந்திய வரலாற்றை எழுதி
அவர்களை காந்தியின் துரோக வரலாற்றை அறிய வைத்து அவர்கள் மூலமாகவே நேதாஜி தான் இந்தியாவின் தேசப்பிதா என்று உலகம் அறிய வைப்போம்.
கருத்துகள்