Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
*பக்கத்து மாநிலமான கேரளாவில் இதே சூழலில் உள்ள தளங்கள் எல்லாம் மென்மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மேம்படுத்தப் படுகிறது.*
ஆனால் இங்கே ??
சிறு வயதில் பள்ளி மூலமாகவோ, குடும்பத்துடனோ பிக்னிக்காக சென்று
பார்த்து வந்த ஒரு நாள் முழுவதும் சுற்றி மகிழ்ந்த மணிமுத்தாறு அணை பூங்கா *பராமரிப்பின்றி அழிக்கப்பட்டு விட்டது.*
பாபநாசம் காரையாறு அணையில் படகு சவாரி செய்து "சின்ன சின்ன ஆசை" பாடி, நீராடி மகிழ்ந்த அனுபவத்தை திரும்ப பெற *தடைகள் விதிக்கப் பட்டுள்ளது.*
*பாபநாசம் அகத்தியர் அருவியில் இலவசமாக வருடம் முமுவதும் குளித்து* மகிழும் வாய்ப்பை கொரானா பெயரில் தடை செய்து,
*இப்பொழுது நபருக்கு 30 ரூபாய் + வாகனக் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டிய அநியாய சூழல்.*
பாபநாசம் தலையணை நிலமை அதை விட மோசம்.
என்னை போன்ற பலர் நீச்சல் பயிற்சி செய்த பெரிய நீச்சல் குளம் போன்றும்,
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் சிறிய அருவியில் நீராடி மகிழும் வாய்ப்பைத் தந்த நீண்ட கரைப் பகுதியை கொண்ட தலையணையும் *மூடப்பட்டு விட்டது.*
அங்கு பாதுகாப்பாக குளிக்கும் வசதிகளை செய்து கொடுப்பதை விடுத்து அந்த பகுதியையே மூடியது,
வருடத்திற்கு ஒரு முறை அகத்தியரை தரிசிக்க பாபநாசம் வழியாக மலையேறி சென்ற பக்தர்களின் புனிதப் பயணமும், இயற்கையின் அழகை, பெருமையை மக்கள் உணரும் அரிய வாய்ப்புகளும் வேண்டும் என்றே முடக்கப் பட்டது.*
ஆனால் அதே இடத்திற்கு திருவனந்தபுரம் வழியாக கேரள வனத்துறையினரே பயணிகளை அழைத்து செல்லும் வசதிகள் விரிவு படுத்தப் பட்டுள்ளது.
*தமிழகத்தில் மட்டும் தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக அனுபவித்த உரிமைகள் பிடுங்கப் படுவது
கண்டணத்திற்கு உரிய செயல்
சொந்த மாநில மக்களின் சுற்றுலா தலங்களில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
கருத்துகள்