திருமணம் ஆன கணவன் மனைவிக்கு நினைவில் வைக்க வேண்டிய விஷயங்கள்..!!

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

"Google Pay PhonePe Paytm support numbers"How to contact. Here are some steps.

Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம்.  இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்:  1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்:  080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...

திருமணம் ஆன கணவன் மனைவிக்கு நினைவில் வைக்க வேண்டிய விஷயங்கள்..!!

Subbiahpatturajan
கணவன் மனைவி புரிதலுடன் வாழ
திருமணம் ஆன கணவன் மனைவிக்கு நினைவில் வைக்க வேண்டிய விஷயங்கள்..!!

திருமணம் ஆன கணவன் மனைவிகளுக்கு நினைவில் வைக்க  வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்று

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி அன்பும் பரிசும் தாம்பத்யத்துக்கு உறுதி ஆம் இன்று காதலிலும் திருமண பந்தத்திலும் தொடக்கத்தில் இருக்கும் அன்பும் பரிசு பரிமாற்றமும் நாளாக நாளாக குறைந்து மறைந்து இல்லாமலே போய்விடுகிறது அங்கு தான் தம்பதிகளுக்குள் பிரிவும் தொடங்கி விடுகிறது

தாம்பத்யம் என்று சொன்னவுடன் பலருக்கு அச்சமும் அருவறுப்பும் முகத்தில் பிரதிபலிக்கும் அது தேவையே இல்லை தாம்பத்யம் என்பது எளிமையான அன்புப் பகிர்தல் என்று எல்லா ஆண்களும் பெண்களும் புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம் 

இரண்டு அறை கொண்ட வீட்டில் கூட்டு குடும்பமாக நான்கு தம்பதிகள் வாழ்ந்த காலத்தில் கூட அன்யோன்யமாக இருந்த கணவன் மனைவி உறவு இப்போது தனி குடும்பமாக மூன்று தனி தனி அறைகள் உள்ள வீட்டில் வாழும் போது விலகி போயிருக்கிறது என்றால் இவர்கள் தாம்பத்யம் சிறக்கவில்லை என்றே அர்த்தம்

திருமணம் என்ற பந்தத்தில் உரிமை கிடைத்த ஒரே காரணத்தினாலே உடல் உரிமை பெற்று கணவன் மனைவி இணைந்திருப்பது மட்டுமே தாம்பத்யம் அல்ல பாரதி பாடி சென்றது போல் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்று அகமும் புறமும் மகிழ்ந்து இன்புற்றிருக்கும் வாழ்க்கையே சிறந்த தாம்பத்யம் அது fastfoodஉலக மனிதர்களாகிய நம்மில் 100 க்கு 90 சதவீதம் பேருக்கு வாய்ப்பதில்லை என்பது கசப்பான உண்மை

ஆனால் இந்த நிலை மாறி இனிமையான குடும்ப உறவுகளுக்குள் கூடி வாழ மகிழ்ந்து களிகூற தாம்பத்யம் சிறக்க உடலும் மனமும் தெளிவாக தெம்பாக அரும் ரகசியங்கள் நம் பாரம்பரிய ஆன்மீகத்திலும் மருத்துவத்திலும் குவிந்து இருக்கிறது அவற்றில் சிலவற்றை இந்த கட்டுரையில் பார்ப்போம்
தாம்பத்திய உறவு சிறக்க உணவு மற்றும் உணர்வு ரீதியாக பின்பற்ற வேண்டிய சின்ன சின்ன விஷயங்கள்

எப்போதுமே வீடும் அறைகளும் முழு சுத்தமாய் நறுமணம் கமழும் நிலையில் இருக்கவேண்டும்

வீட்டினுள் இனிமையான இசை நிரம்பியிருக்க சீரியல் போன்ற தொல்லைக்காட்சி நிகழ்ச்சிகள் காணாது தவிர்த்திருக்க வேண்டும்
தினமும் ஒரு வேளையாவது மனது ஒருமைப்பாட்டுடன் பூஜை செய்ய வேண்டும்
 எம்மதமாயினும் அந்தந்த மத வழிபாடுகள் முறையாக தினமும்  செய்து விளக்கு என்பது எல்லா மதத்திலும் பொது தானே தினம் தினம் ஆமணக்கு எண்ணையில் விளக்கு ஏற்றி வழிபட்டால் அந்த வீட்டு தம்பதிகளுக்குள் தாம்பத்தியம் சிறக்கும்

கீரைகள் முருங்கை கீரை முருங்கக்காய் அதிக அளவில் உணவில் எடுத்துக் கொள்ளலாம் உலர் திராட்சைக் பேரிச்சை பழங்கள் அடிக்கடி உணவில் சேர்த்து வரும் தம்பதிகளுக்கு உடல் பலம் பெரும் நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்னைகள் சரியாகும்
 வாழைப்பூ  முருங்கைப்பூ துவரம்பருப்பு சேர்த்துக் கூட்டு வைத்து நெய் சேர்த்துச் சாதத்துடன் 21 நாள்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் ஏற்பட்டு தாம்பத்யம் சிறக்க உதவும்.
 ஆண்கள் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து கொண்டால் அது இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது,இரத்த அளவு அதிகமாகி ஓட்டம் பெருகுகிறது.இது நீண்ட நேர  ஆணுறுப்பின் எழுச்சிக்கு காரணமாகிறது சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் வெள்ளை வெங்காயங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் இதனால் அதிக நேரம் உடலுறவில் ஈடுபடலாம்.

 கிராம்பு உடல் உஷ்ணத்தை அதிகரிக்கிறது உடல் உறுப்புகளுக்கு தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரித்து ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையை பெற உதவுகிறது

விந்து ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது கொண்ட கொண்டை[வேர் ] கடலை திருமணமான ஒவ்வொரு ஆணும் மாலை நேரங்களில்  சுண்டல் சாப்பிட மறக்காதீர்கள்

தயிர் சாதம் சாப்பிடுவது தாம்பத்ய உறவில் வெகுவாக நன்மை பயக்கும்.தயிரில் ஜிங்க் என்கிற துத்தநாக சத்து அதிகம் உள்ளது அசைவ உணவுகளில் உள்ள அதே அளவு துத்தநாக சத்து தயிரிலும் கிடைக்கும் தயிர் புளிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

முந்திரிபருப்பிலும் ஜிங்க் அதிக அளவில் உள்ளது. ஜிங்க் சத்தின் அளவிற்கும் தாம்பத்தியத்தில் ஆண்களின் ஆணுறுப்பு விறைப்புத்தன்மைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது

கத்திரிக்காய் ஆண்பெண் இருவருக்குமே தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் ஈடுபடும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கிறது
இரவு உணவுக்கு பிறகு சிறிது வெற்றிலை போடுவது கூட தாம்பத்திய உறவில் பலன் தரும்
தம்பதியர் அடிப்படையில் சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் உடல் எடையைக் கூட்டும் உணவுகளை எப்போதும் தவிர்த்தே இருக்க வேண்டும்

 ஜீரணக் குறைபாடுகள் உண்டாக்கும் உணவுகள் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வீதியோர உணவுகள் எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்துவிடவேண்டும் இதனால் உடலில் வரும் தொந்தரவுகள் தாம்பத்ய வாழ்க்கைக்கு பெரிதும் சிரமம் தரும்

 தினமும் உண்டு வரலாம் இதில் உள்ள புரதம் டெஸ்டோஸ்டீரோன் உற்பத்தியை அதிகரிக்க செய்து ஆண்களுக்கு மன இறுக்கம் மன அழுத்தம் போன்ற தொந்தரவுகள் வராமல் தடுக்கிறது

வாழைப்பழத்தை வைத்து மில்க் ஷேக் தயாரித்து தினமும் குடித்து வந்தால் அது உடல் நலத்திற்கு மிகவும் பயன் தரும் அதோடு தாம்தய உறவின் போது தம்பதிகளுக்கு உடல் சக்தியையும் அதிகம் கொடுக்கும்

உடல் ரீதியான தெம்பிற்கு மேற்சொன்னவற்றை பின்பற்றலாம் ஆனால் உண்மையான தாம்பத்யம் என்னவென்று உணர நேற்றையும் இன்றையும் அலசி நாளை பற்றிய ஒரு முடிவெடுத்து வாழ்வில் அமுல்படுத்த வேண்டியருக்கிறது.அது தான் தாம்பத்திய வாழ்வு சிறக்க உண்மையான நிலையான ரகசியம்.

ஒரு முப்பது வருடம் முன்பு வரை தா‌ம்ப‌த்ய‌ம் எ‌ன்பது குழ‌ந்தை‌ பெ‌ற்று‌க் கொ‌ள்வத‌ற்கான ஒரே காரணத்திற்காகவே பலருக்கும் இரு‌ந்தது. ஆனா‌ல் இந்த காலத்தில் பதின் பருவத்திலேயே தா‌ம்ப‌த்‌திய‌ம் ப‌ற்‌றி அதிகம் பேசும் அளவுக்கு ஊடக வெளிச்சம் அதிகம் ஆகிவிட்டது.

இ‌‌ன்றைய தலைமுறையில் அநேக ஆண்களும் பெண்களும் தா‌ம்ப‌த்‌ய‌ம் என்பது தெரிந்துகொள்ள வேண்டிய வயதிற்கு முன்னரே அதை தேடி அ‌த‌ன் ‌மேல் ஒரு ஆ‌ர்வ‌த்தை உருவாக்கி கொள்ள தொடங்கிவிட்டார்கள். அந்த அளவுக்கதிகமான ஆ‌ர்வமு‌ம், அதனை வெ‌ளி‌ப்படு‌த்துவத‌ற்கான சூழல் அமையாத நிலையும் தான் பலரை தவறான பாதைக்குள் அழைத்து செல்கிறது.

தா‌ம்ப‌த்ய‌ம் எ‌ன்பது அ‌ன்‌பி‌ன் ப‌ரிமா‌ற்ற‌ம் என்று எல்லோரும் உணர தொடங்கி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, தட்டி கொடுத்து,ஊக்கப்படுத்தி,உற்சாகப்படுத்தி, குறைகளை மறந்து,நிறைகளை வியந்து பாராட்டி சிரிப்பும் மகிழ்வுமாய் உரையாடி உலகம் மறந்து கரையும் போது தான் அது உண்மையான அர்த்தம் பெறுகிறது. ‌‌

ஆணாக இருப்பினும்  பெண்ணாக இருப்பினும் அழகு என்பது புறத்தில் இல்லை அகத்தில் உள்ளது என்பதை தெளிவாக புரிய வைக்க வேண்டும். இதனால் பெண்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனை ஏற்றுக்கொள்ளும் ஆண்கள் தான் வீட்டின் அதிபதியாக இருக்கின்றனர்இல்லையென்றால் நிலைமை தலைகீழ் தான்.. தாம்பத்திய நேரத்தை தவிர்த்து கிடைக்கும் சமயத்தில் சின்ன சின்ன கொஞ்சல்கள் அதிகம் பெண்களால் எதிர்பார்க்கபடுகிறது.

பெண்களை ஆச்சரியமூட்டும் வகையில் சமயலறையில் இருக்கும் போது பதுங்கி சென்று கட்டியணைத்து முத்தம் கொடுப்பதுஉதவியாக இருப்பது உனக்காக நான் இருக்கிறேன் என்று கதையளப்பது., அவ்வப்போது அன்பான முத்தத்துடன் ஐ லவ் யூ சொல்லுவது போன்ற செயல்களை செய்வது என்று பல சின்ன விஷயமும் தம்பதிகளுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தும். இதனை செய்ய தவறினால் சில கசப்பான விஷயம் நடைபெறும்.

இன்றுள்ள பெரும்பாலான ஆண்கள் தாம்பத்தியத்தில் அவசர புத்தியை காண்பித்துவிட்டு., கட்டில் போரை கால்மணி நேரத்தில் முடித்துவிட்டு., இரவு முழுவதும் குறட்டை விட்டு தூங்குவதை வழக்கமாக வைக்க துவங்கியுள்ளனர். பெண்களை பொறுத்த வரையில் இன்பத்திற்கான உணர்ச்சி தூண்டப்படுதல் நேரம் எடுத்தாலும்., தூண்டப்பட்டு விட்டால் ஆழ்ந்து அனுபவிக்கவே அதிகளவில் விரும்புவார்கள். அவர்களின் மனநிலையை செயல்பட்டால் தாம்பத்திய வாழ்க்கையும் இல்லற வாழ்க்கையும் சிறப்பாக அமையும்

எந்த ஒரு விசயத்திற்கும் துணையை காதலுடன் அணுகினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். காமத்திற்கு காதலின் வெளிப்பாடு அதிகம் இருக்கவேண்டும். சின்னச்சின்ன பரிசுகள், தொடுகைகள் என அன்றைய உறவிற்கான தேவையை அன்பால் வெளிப்படுத்த வேண்டும். துணையின் தேவையை உணர்ந்து உங்களின் பதிலை அன்பால் வெளிப்படுத்துங்கள்.
தூய அன்பும் காதலும் தாம்பத்ய உறவின் உச்சக்கட்டத்திற்கு அவசியம். 

உடல் ரீதியான சேர்க்கைக்கு முன்னதாகவே மனரீதியாக இணைந்து வெளிப்படுத்தும் அன்பும் உணர்வுகளின் மூலம் மட்டுமே மடை திறந்த வெள்ளம் போல உச்சக்கட்ட உணர்வை அடைய முடியும்.

காதலோ காமமோ ஒருவருக்கொருவர் தேவைகளை வெளிப்படுத்த தயங்கக் கூடாது. துணை கொஞ்சம் கூச்ச சுபாவத்தோடு இருந்தால் என்ன வேண்டும் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் எங்கு தொட்டால் என்னமாதிரியான உணர்வு ஏற்படுகிறது என்பதை நீங்களும் உங்களின் துணைக்கு தெரிவிக்கலாம்உங்கள் துணையிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்

காதலின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தொடுகை முக்கியம் தொடத் தொடத்தான் உறவு மலரும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தொடங்குவதை விட மென்மையான ஸ்பரிசம் சின்னச் சின்னச் விளையாட்டு என தொடங்கலாம் அதில் சிலிர்க்கும் துணையின் மூலம் உறவை தொடர்வதில் தடையேதும் இருக்காது.

காமம் உணர்வுப்பூர்வமான விளையாட்டு. இதில் அவசரத்திற்கு இடமில்லை. 

ரிலாக்ஸ்சாக வெளிப்படுத்தினால் மட்டுமே கூடுதல் சுகமும், உச்சக்கட்ட உணர்வும் கிடைக்கும். டென்சனோ, அவசரமோ காட்டினால் மகிழ்ச்சிக்கு பதிலாக அவதிதான் கிடைக்கும்.

காதலோ, காமமோ உங்கள் தேவையை துணைக்கு எப்படி புரியவைக்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. எனவே காதோடு மெதுவாக பேசி உங்களின் தேவையை உணர்த்துங்கள்கணவனோ, மனைவியோ உங்களின் தேவையை யார் வேண்டுமானலும் உணர்த்தலாம்.

எந்த ஒரு வேலைக்குமே சக்தி ரொம்ப முக்கியம். அதுவும் இது வாழ்க்கை விளையாட்டு. இதில் எப்படி, எங்கே சக்தியை வெளிப்படுத்தவேண்டும் என்று தெரிந்து கொள்ளவேண்டும். துணைக்கு வலிக்காமல், காயப்படுத்தாமல், விவேகமான முறையில் சக்தியை வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றிதான்.

தம்பதியர் ஒருவருக்கொருவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும்.

ஆகவே திருமணம் ஆன கணவன் மனைவிகளுக்கு நினைவில் வைக்க  வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்று தான் உனக்காய் உன்னோடே உன் சுக துக்கம் பகிர்ந்து உன்னுடன் எந்தநொடியும் பிரியாமல் வாழ்வேன் என்று மனதிற்குள் உறுதி கொண்டு வாழ தொடங்கினால் எந்நாளும் தாம்பத்யம் சிறக்கும் பொன்னாலே

 மிகினும் குறையினும் நோய்செய்யும்
அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம் 

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
அட போப்பா இதல்லாம் இந்த காலத்தில் ஒத்து வராது இது ஏட்டளவில் படிக்க நல்ல இருக்கும்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

மூலப்பத்திரம் என்றால் என்ன மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?"

` `எங்களுடைய பரம்பரைச் சொத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது. அதற்குப் பத்திரம் பதிவுசெய்வது எப்படி?" ``பரம்பரைச் சொத்துக்குப் பட்டா மட்டுமே இருந்தால் கவலையில்லை. ஏதாவது பத்திரம் வேண்டுமென்றால், குடும்பத்துக்குள்ளேயே ஒருவருக்கு அடமானம், குத்தகை போன்ற ஆவணம் எழுதி, பதிவு செய்தால், உங்களின் பெயருக்கு வில்லங்கம் மாறிவிடும். சில நாள்கள் கழித்து, பதிவான அடமானம் அல்லது குத்தகையை ரத்து செய்து பத்திரம் பதிவு செய்தால், வில்லங்கச் சான்றில் மீண்டும் உங்கள் பெயர் பதிவு இடம்பெறும்.'' பத்திரம் ``பத்திரப் பதிவில் மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?" ``ஆம். ஒருவருக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு தாய்ப்பத்திரம் சொத்துக்கு முக்கியம். தாய்ப்பத்திரம் இல்லாத சொத்து அநாதைதான். தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்." ``தாம்பரம் வரதராஜபுரத்தில் பெரும் நிலப்பரப்பு விற்கப்பட்டது. 3,600 சதுர அடி நிலத்தை நான் 1980-ல் வாங்க...

ஆப்பிள் இந்தியா வந்த வரலாறு தெரியுமா உங்களுக்கு...!!? Do you know the history of Apple India ... !!?

Subbiahpatturajan மெல்ல அழிந்த #இயற்கை உணவுகள்..!! ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா?.. இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான்...  குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்.. தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது.. அரேபிய #பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது.. ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி. #ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது.. மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது.. இங்கு வெள்ளையன்  வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாரை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை. வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான்... வந்...

உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️

Subbiahpatturajan விவசாயிகள் மட்டுமின்றி,  உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️ 1️⃣ எதற்காக அதானி குழுமம் 9.5 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை தயாராக வைத்துள்ளது..? இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது மோடிக்கு அவரது அறிவுரையா..?? 2️⃣ அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பட்டியலை மாற்றியது ஏன்..? 3️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சிறு விவசாயி எப்படி ஒப்பந்தம் போட முடியும்..?? அவன் சொன்ன இடத்தில்தானே கையெழுத்துப் போடவேண்டும். 4️⃣ மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்றால் யாருக்கு லாபம் ..?? 5️⃣ விற்பனைத் தொகையில் இப்படித் தவணை முறையில் தந்தால் எந்த விவசாயியால் பிழைக்கமுடியும்..?? 6️⃣ PDS system  என்னாவது ..?? 7️⃣ Food Corporation of India வின் நிலை என்ன..?? அவர்கள் நாடெங்கிலும் ஏற்படுத்தி உள்ள வசதிகள் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பதை ஊகிப்பதில் சந்தேகம் உள்ளதா ..?? 8️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களால் மாநில இளநிலை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்வது அவ்வளவு கடினமா ..?? 9️⃣ ஒரு நாட்டில் உழவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நீதி மன்றம் செல்லமுடியாது என்பது உண்மையில்...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* கோரானா கேள்வி பதில்கள்

Subbiahpatturajan *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* 1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?*  இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.  2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?*  இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந...

தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே...???

Subbiahpatturajan ஏன்? எதற்கு? என, சிந்தித்துண்டா? தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட் டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே  நல்ல வேலைக்கு போகவா? ஆங்கிலம் சரளமாக பேசவா? குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?? ஏன்? எதற்கு? என்று சிந்தித்ததுண்டா?? 11TO12 200000 லட்சம் ஆக மொத்தம் Pre kg 25000 ல் துவங்குகிறது  Lkg 40000 Ukg 50000 1st.60000 2ND 70000 3D. 80000 4TH 90000 5TH 100000 6TO8 1.20000 9TO10. 150000 9,85,000 ரூபாய்  இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க. சரி! இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா? உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும் அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.?  ஒன்றை நினைவில் வையுங்க...

பாத்ரூம் கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம்...!?

Subbiahpatturajan 60/65 வயதிற்கு மேற்பட்ட  இருபால் அன்பர்களுக்கும் சில முக்கியமான டிப்ஸ்:- 1.பாத்ரும் செல்லும் பொழுது(வீட்டில்) கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம். 2.வீட்டை தண்ணீர் கொண்டு தரையை துடைக்கும்பொழுது நடக்கவேண்டாம். 3.ஸ்டூல்,நாற்காலி,பெஞ்ச் போன்றவற்றின் ‌.மீது ஏறி பொருட்களை எடுப்பது,சுத்தம் செய்வது, துணிகளை காயப்போடுவது, போன்ற வேலைகளை தவிர்க்கவும். 4.கார் இருந்தால் தனியாக ஓட்டவே கூடாது.கூட யாராவது கண்டிப்பாக இருக்க வேண்டும். 5.மாத்திரை மருந்துகளை வேளா வேளைக்கு தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.. 6.உங்களை எந்தவிஷயம் சந்தோஷப்படுத்துமோ அதை யாருக்காகவும், காம்ப்ரமைஸ் செய்ய வேண்டாம். 7.வங்கிக்கு பணம் எடுக்கச்சென்றால் தனியாகச்செல்ல வேண்டாம்.துணையுடன்செல்லவும். 8.வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அறிமுகமில்லாதோர் யாராவது வந்தால் கூடியவரை அச்சூழலை தவிர்க்கவும்.அல்லது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவும். 9.கூடியவரை படுக்கையறை, குளியலறை, கழிப்பறை  ஆகியவற்றில் காலிங் பட்டன் அவசியம். அசாதாரண சூழலில் அழைப்பதற்கு உதவும். 10.சைக்கிள் முதல் கார் ...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

*TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா?

சுப்பியபட்டுராஜன் * டி.என்.பி.எஸ்.சி- ஒரு வேளை? ? 7, 8, ஒரு? * டி.என்.பி.எஸ்.சி- தமனிமகாத்துக்கு ஒரு வேளைக்கும், உங்களுக்கும் விருப்பம் இல்லை, இல்லையா? ஒரு வேளை? TNPSC இல் எத்தனை குழுக்கள்? * << - - - 1 (குழு -1)  (துணை கலெக்டர்)  ஒரு முறை (காவல்துறை துணை கண்காணிப்பாளர்)  (மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை)  (ஸல்)  (மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி)  ஒரு முறை (தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் அலுவலர்)  (ஸல் கமிஷனர்)  (கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்) - - 1A (குழு -1 I)  (காடுகளின் உதவி கன்சர்வேட்டர்) - - 1 பி (குழு -1 ஐ பி)  HR & CE (உதவி ஆணையர், HR & CE) - - 1 சி (குழு -1 சி) டிஓஓ (மாவட்ட கல்வி அலுவலர்) ஒரு வேளை  [2] (2) (ஒரு வேளை) (குழு -2)  ஜி துணை வணிக வரி அதிகாரி  ஒரு வேளை  ஒரு வேளை (ஒரு வேளை)  ஒரு வேளை (ஒரு வேளை)  ஒரு வேளை, -2  தொழிலாளர் உதவி ஆய்வாளர்  ஒரு வேளை (ஒவ்வொரு வகையிலும்)  (ஸல்)  (ஸல்)  தமது  ஒரு வேளை  ஒரு வேளை, தமதுமது  ஒரு வேளை  ஒரு வே...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...