Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
மனைவியின் " ம்ம்" என்பதற்கு "சரி" என்றும்..!
மனைவியின் " ம்ம்" என்பதற்கு "சரி" என்றும்..! "ம்ம்ம்ம்கும்" என்பதற்கு என்ன அர்த்தம்...
கொலை செய்வதற்கு நிகரான ஒன்று...!
நேரத்திற்கு தகுந்தார்போல பேசுவது....!!
உழவு செய்ய தெரிந்திருந்த விவசாயிக்கு ...!
ஊழல் செய்ய தெரிந்திருந்தால்...!
இன்று அவனும் மதிக்கப்பட்டு இருப்பான்....!!
அட்டப் பூச்சியை விட...
அதிவேகமாக மனிதனின் இரத்தத்தை உறிவதில்
திறமை வாய்ந்தது...!
பணம்...!!
திருவிழா கொண்டாட்டங்கள் முடிந்தபின் தான் துவங்குகிறது ...!
பலூன் விற்பவர் வீட்டில் திருவிழா...!!
தெருநாய்களிடமிருந்து தப்பிப்பதற்கு எளிய வழி அவைகளை கண்டுகொள்ளாமல் போவதுதான் ....!!!
தினமும் காலண்டரில் எந்த ராசிக்கு மகிழ்ச்சி என்று எழுதப்பட்டு இருக்கிறதாே ...!
அந்த ராசிதான் நம்ம ராசி என்று எண்ணிக் கொண்டால்.....!
வாழ்நாள் முழுவதும் சந்தோஷம்தான்...!!
செருப்பும் நம் வாழ்க்கையும் ஒன்றுதான் ஏனென்றால் ஒன்று தொலைந்தால் மற்றொன்றிற்கு மதிப்பில்லை ....!
அது போலத்தான் நம் வாழ்க்கையும். கணவனோ மனைவியோ உடன் இல்லையென்றால் இருப்பவருக்கு மதிப்பில்லை...!!
ஏணியாக இருப்பது தப்பில்ல ...
ஆனால் ஏணியாகவே இருப்பது தான் தப்பு...!!
இன்றைய நியூஸ் பேப்பர் ...
நாளைய வேஸ்ட் பேப்பர்...
அவ்வளவுதான் விஷயம் ...
இதுக்கு தான் இங்க இம்புட்டு ஆட்டம்...!!
அம்மாவிற்க்கு நல்ல மருமகளாக இரு என்று மனைவியிடம் சொல்லும் ஆண்கள்...!
தன் அம்மாவிடம் உன் மருமகளுக்கு நல்ல மாமியாராக இரு என்று பல கணவன்கள் சொல்வதில்லை...!!
மனைவியின் " ம்ம்" என்பதற்கு "சரி" என்றும்..!
"ம்ம்ம்ம்கும்" என்பதற்கு "பண்ணித் தான் பாரேன்" என்றும் அர்த்தம்...!!
வீட்டு மருத்துவம்.
கசகசாவை மாதுளம் பழச்சாற்றில் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.
மாவிலைக் கொழுந்துடன் ,துவரம் பருப்பு , உப்பு சேர்த்து வேகவைத்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்
பொது தகவல்.
ரஷ்ய நாட்டில் அழுக்கான காரில் செல்வது குற்றம்.
கருத்துகள்