இணையதளத்தை நன்கு புரிந்து கொண்டவர்கள் இந்த முதலீட்டில் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள்!!!

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

"Google Pay PhonePe Paytm support numbers"How to contact. Here are some steps.

Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம்.  இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்:  1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்:  080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...

இணையதளத்தை நன்கு புரிந்து கொண்டவர்கள் இந்த முதலீட்டில் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள்!!!

Subbiahpatturajan

க்ரிப்டோ கரன்ஸி வாங்கலாமா வேண்டாமா..?!

இணையதளத்தை நன்கு புரிந்து கொண்டவர்கள் இந்தமுதலீட்டில் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள்.!

தமிழகத்தில் பெருகி வரும் க்ரிப்டோ கரன்ஸி செயல்பாடுகள்.*

 பெருநகரங்களில் மாத்திரம் அல்லாமல். தமிழகத்தின் பல பகுதிகளில் புற்றீசல் போல க்ரிப்டோ கரன்ஸி பெயரில் முதலீட்டு திட்டங்கள் ஆங்காங்கே தொடங்கப்பட்டு பலரும் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இதனை புரிந்து கொள்ள ஆதியோடு அந்தமாக இந்த விஷயத்தை ஒரு பறவை பார்வையில் பார்த்து விடுவோம்....

க்ரிப்டோ கரன்ஸி என்பதை டிஜிட்டல் கரன்ஸி யாக  பலர் புரிந்து கொண்டாலுமே கூட *நிஜத்தில் இவைகளை  விருச்சுவல் கரன்ஸி யாகவே மதிப்பீடு செய்கிறார்கள்.* இங்கு விருச்சுவல் என்பது *இல்லாத ஒன்றை உருவகம் செய்து கொள்ளவது.* அல்லது இருப்பதாக கொள்வது. 

VFX விஷுவல் எஃபெக்ட் எனும் திரைப்படத்தில் வரும் மாயாஜாலக் காட்சி போல. இங்கு இந்த விருச்சுவல் என்பதின் பொருளாக நாம் கொள்ள வேண்டும்.

ஆனால் விருச்சுவல் கரன்ஸி எனும் இதனை கணினி தொழில்நுட்பத்தின் மூலம் வேறோர் விதமாக கட்டமைப்பு செய்து வைத்து இருக்கிறார்கள்.

 கணினி மென்பொருள் ஊடாக உள்ளீடு செய்வதென்பது இன்றளவும் 0,1 எனும் எண்கள் மட்டுமே. அதாவது கணித மொழியில் இரும எண்கள் மாத்திரமே. இதற்கு பைனரி என்று பெயர். இந்த அலகுகளை தான் கணினி மொழியில் பிட் அண்ட் ஃபைட் என்பர். அதாவது கணினிநினைவகத்தில் ஃபைட் (byte)களாகவே நாம் உள்ளீடுபவை சேகரிக்கப்படுகிறது. ஒரு ஃபைட் என்பது 8 பிட் (bit) களை கொண்ட ஒரு தொகுப்பு. அதனால் தான் கணினி நினைவகம் எட்டின் பெறுக்கலாகவே இருக்கிறது. 8,16,32,64.......
இன்று நாம் உபயோகிக்கும் செல்போனில் உள்ள நினைவகம் இந்த அலகில் தான் கணக்கிடப்படுகிறது. 

இன்றைய தேதியில் நாம் அநாயாசமாக பயன்படுத்தி வரும் வார்த்தைகள் 1gb, 2gb என்பதெல்லாம் இதனையே குறிக்கிறது. இங்கு gb என்பது ஜிகா ஃபைட். அதுபோலவே நம் செல்ஃபோனில் உள்ள நினைவகம் 32ஜிபி, 64ஜிபி, 128ஜிபி எட்டு எண்ணின் பெறுக்கலில் இருப்பதை நன்கு கவனித்தால் புரிந்து கொள்ள முடியும்.
அவ்வளவே சமாச்சாரம். 

இப்பொழுது நாம் விஷயத்திற்கு
வருவோம்.

 க்ரிப்டோ கரன்ஸி எனும் இந்த டிஜிட்டல் கரன்ஸி உலக அளவில் ஆனது. இதன் இன்றைய வர்த்தக மதிப்பு மாத்திரமே  ஜஸ்ட் 197 லட்சம் கோடி டாலர்கள் என்கிறார்கள். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா...

 ஆனாலும்கூட நிஜம் இது தான்.இந்த க்ரிப்டோ கரன்ஸியில் கோலோச்சும் பிட்காயின் தான் இன்று பலரது தூக்கத்தை கெடுத்து வைத்து இருக்கிறது.
இதில் பல க்ரிப்டோ கரன்ஸி இருக்கிறது என்ற போதிலும் இந்த பிட் காயின் மாத்திரமே உலக அளவில் எல்லோருக்கும்  நன்கு பரிச்சயமான முதலில் வெளிவந்த விருச்சுவல் ரூபாய்.நாணயம். டாலர். என எப்படி வேண்டுமானாலும் இதை வைத்துக் கொள்ளலாம்.

நாம் முதலில் பார்த்த கணினி மென்பொருள் மொழியின் நினைவக அலகான பிட்டுடன் இதனை சமன் செய்கிறார்கள். அப்படி புரிந்து கொள்ள சொல்கிறார்கள்.
சரியா... 
இந்த பிட்காயின்
2017 ஆம் ஆண்டு வெளிவந்த சமயத்தில் இதன் சந்தை மதிப்பு நம் இந்தியாவில் 1780 ரூபாய் மட்டுமே..
அதன் இன்றைய மதிப்பு ஐம்பத்தி மூன்று லட்சம் டாலர்கள். அதாவது ஒரு பிட்காயின் மதிப்பு மாத்திரமே இது.எந்த ஒரு தொழில் முதலீடும் இத்தனை பெரிய லாபவிகிதாசாரத்தை தந்திருக்காது. அன்று யார் ஒருவர், ஒரு பிட்காயின் வாங்கி இருந்தாலும் இன்று அவர் கோடீஸ்வரர்.
அவ்வளவு தான்
நம்மவர்களை கேட்கவா வேண்டும்.பித்து பிடித்து அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஷேர் மார்க்கெட்டை  விட மோசமான பிஸினஸ் போலவே ஆகியிருக்கிறது. 

நம் இந்தியாவில் இதனை அரசு இன்னமும் அங்கீகரிக்கவில்லை..அங்கீகரிக்கும் உத்தேசமும் இல்லை. ஆனால் இதனை தடை செய்ய முடியவில்லை.

 தடை விதித்த போது உச்ச நீதிமன்றம் வரை சென்று சண்டை பிடிக்க ஒரு கூட்டமே தயாராக நின்றது. ஆதலால் ஸைபர் செக்யூரிட்டி மூலமாக கட்டுப்படுத்த கண்காணிக்க. முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்...... பலன் கிட்டதட்ட பூஜ்யம் தான்.
இது எதுவுமே சரியாக தெரிந்துகொள்ளாமல். இதில் முதலீடு செய்வதாக. செய்து தருவதாக அட்டகாசமான வலைப்பின்னலை வகுத்து செயல் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் தற்போது நம் தமிழகத்தில்..
பங்கு சந்தையை விட மிக ஆபத்தான அபாயகரமான முதலீடு இது....

நாளை எது ஒன்று என்றாலும் கூட புகார் கொடுக்க எந்த ஒரு தடயமும் இல்லாத வகையில் தான் இந்த வலைப்பின்னல் தளங்கள் செயல்படுகின்றன. 
இவற்றை எதனையும் கண்டுக்கொள்ளாமல்.சட்டை செய்யாமல் கிட்டத்தட்ட ஏழாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நம் தமிழகத்தில் மாத்திரமே கடந்த மூன்று மாதங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று சொல்லி அதிர்ச்சி அளித்து இருக்கிறார்கள்.

 இதில் ஈடுபட்டவர்கள். இப்படி முதலீடு செய்த பலரும் படித்தவர்கள், சாமானியர்கள்... நடுத்தர வர்க்கம் என்பது தான் இதில் வேதனை தரும் விஷயமாக இருக்கிறது.

இணையத்தை நன்கு புரிந்து கொண்டவர் இந்த பக்கம் தலைவைத்து படுக்க மாட்டார்கள்.

 காரணம் இதில் புழங்கும் தொகை மருந்துக்கு கூட நல்ல விஷயங்களுக்கு பயன் படவில்லை. சமூக விரோத செயல்களுக்கு தான் பயன்படுத்துகிறார்கள்.
 ஆள் அடையாளம் தெரியாத செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். நேரிடையான காரியங்களாக இருக்கப்போவதில்லை

.கணினி வழி சூதாட்டம் முதல் போதை வஸ்து பரிமாற்றம் வரையிலும் நிழலான காரியங்களுக்கு இந்த க்ரிப்டோ கரன்ஸி பயன் படுத்தப்படுகிறது.


தொழில் முகவர்களை இதில் இழுக்கும் வண்ணம். அவர்களிடம் வரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இருக்காது என்பது போன்ற பொய் செய்திகள் பரப்பப்படுகின்றன.

குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்க ஆகும் செலவில் பாதியளவு இந்த வகை க்ரிப்டோ கரன்ஸி கொடுத்தால் போதும் என்பது போன்ற செயல்பாடுகளை இது கொண்டு இருக்கிறது.
ஓர் வளமான சமுதாயத்திற்கு இவையெல்லாம் சாப கேடுகள். தேசத்தின் வளர்ச்சி என்பது அதன் மக்களாகிய நாம் செலுத்தும் வரியில் தான் அடங்கி இருக்கிறது.  அதனை குறுக்கு வழியில் குழி பறிக்கும் வேலை தான் இந்த க்ரிப்டோ கரன்ஸி சமாச்சாரம்.

டிஜிட்டல்பரிவர்த்தனைக்குகுதித்தவர்களுக்கு....கேலிபேசியவர்களுக்கு.இந்த டிஜிட்டல் கரன்ஸி பற்றி தெரியாதிருக்குமா என்ன. ஆனால் மூச்சே விடவில்லை யாரும்.நாம் தான் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காரணங்கள் எதுவாக இருந்தாலும்.அவைநியாயமானதாகவே இருந்தாலுமே கூட இந்த பக்கம் தலை வைத்து படுத்துவிடாதீர்கள்.

 இதில் முதலீடு செய்கிறேன் பேர்வழி என கிளம்பி விடாதீர்கள். கவர்ச்சி கரமான ஆரம்ப கால லாபம் நிரந்தரமான வீழ்ச்சிக்கு வித்திட்டு வாழ்க்கையை சீரழித்துவிடும்.
வளமான தமிழகம்..
வலிமையான பாரதம் என்பதே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.... அப்போது தான் இது போன்ற விஷயங்களில் மனம் ஈடுபடாதிருக்கும்.

நாம் பார்க்கும் நபர்கள்.... நமக்கு தெரிந்தவர்களை இதில் ஈடுபடாது பார்த்து கொள்வதும் கூட நமது பொறுப்பு தான் தற்போதைக்கு... வேறு வழி இல்லை.

கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

மூலப்பத்திரம் என்றால் என்ன மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?"

` `எங்களுடைய பரம்பரைச் சொத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது. அதற்குப் பத்திரம் பதிவுசெய்வது எப்படி?" ``பரம்பரைச் சொத்துக்குப் பட்டா மட்டுமே இருந்தால் கவலையில்லை. ஏதாவது பத்திரம் வேண்டுமென்றால், குடும்பத்துக்குள்ளேயே ஒருவருக்கு அடமானம், குத்தகை போன்ற ஆவணம் எழுதி, பதிவு செய்தால், உங்களின் பெயருக்கு வில்லங்கம் மாறிவிடும். சில நாள்கள் கழித்து, பதிவான அடமானம் அல்லது குத்தகையை ரத்து செய்து பத்திரம் பதிவு செய்தால், வில்லங்கச் சான்றில் மீண்டும் உங்கள் பெயர் பதிவு இடம்பெறும்.'' பத்திரம் ``பத்திரப் பதிவில் மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?" ``ஆம். ஒருவருக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு தாய்ப்பத்திரம் சொத்துக்கு முக்கியம். தாய்ப்பத்திரம் இல்லாத சொத்து அநாதைதான். தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்." ``தாம்பரம் வரதராஜபுரத்தில் பெரும் நிலப்பரப்பு விற்கப்பட்டது. 3,600 சதுர அடி நிலத்தை நான் 1980-ல் வாங்க...

ஆப்பிள் இந்தியா வந்த வரலாறு தெரியுமா உங்களுக்கு...!!? Do you know the history of Apple India ... !!?

Subbiahpatturajan மெல்ல அழிந்த #இயற்கை உணவுகள்..!! ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா?.. இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான்...  குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்.. தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது.. அரேபிய #பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது.. ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி. #ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது.. மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது.. இங்கு வெள்ளையன்  வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாரை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை. வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான்... வந்...

உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️

Subbiahpatturajan விவசாயிகள் மட்டுமின்றி,  உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️ 1️⃣ எதற்காக அதானி குழுமம் 9.5 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை தயாராக வைத்துள்ளது..? இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது மோடிக்கு அவரது அறிவுரையா..?? 2️⃣ அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பட்டியலை மாற்றியது ஏன்..? 3️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சிறு விவசாயி எப்படி ஒப்பந்தம் போட முடியும்..?? அவன் சொன்ன இடத்தில்தானே கையெழுத்துப் போடவேண்டும். 4️⃣ மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்றால் யாருக்கு லாபம் ..?? 5️⃣ விற்பனைத் தொகையில் இப்படித் தவணை முறையில் தந்தால் எந்த விவசாயியால் பிழைக்கமுடியும்..?? 6️⃣ PDS system  என்னாவது ..?? 7️⃣ Food Corporation of India வின் நிலை என்ன..?? அவர்கள் நாடெங்கிலும் ஏற்படுத்தி உள்ள வசதிகள் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பதை ஊகிப்பதில் சந்தேகம் உள்ளதா ..?? 8️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களால் மாநில இளநிலை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்வது அவ்வளவு கடினமா ..?? 9️⃣ ஒரு நாட்டில் உழவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நீதி மன்றம் செல்லமுடியாது என்பது உண்மையில்...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* கோரானா கேள்வி பதில்கள்

Subbiahpatturajan *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* 1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?*  இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.  2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?*  இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந...

தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே...???

Subbiahpatturajan ஏன்? எதற்கு? என, சிந்தித்துண்டா? தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட் டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே  நல்ல வேலைக்கு போகவா? ஆங்கிலம் சரளமாக பேசவா? குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?? ஏன்? எதற்கு? என்று சிந்தித்ததுண்டா?? 11TO12 200000 லட்சம் ஆக மொத்தம் Pre kg 25000 ல் துவங்குகிறது  Lkg 40000 Ukg 50000 1st.60000 2ND 70000 3D. 80000 4TH 90000 5TH 100000 6TO8 1.20000 9TO10. 150000 9,85,000 ரூபாய்  இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க. சரி! இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா? உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும் அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.?  ஒன்றை நினைவில் வையுங்க...

பாத்ரூம் கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம்...!?

Subbiahpatturajan 60/65 வயதிற்கு மேற்பட்ட  இருபால் அன்பர்களுக்கும் சில முக்கியமான டிப்ஸ்:- 1.பாத்ரும் செல்லும் பொழுது(வீட்டில்) கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம். 2.வீட்டை தண்ணீர் கொண்டு தரையை துடைக்கும்பொழுது நடக்கவேண்டாம். 3.ஸ்டூல்,நாற்காலி,பெஞ்ச் போன்றவற்றின் ‌.மீது ஏறி பொருட்களை எடுப்பது,சுத்தம் செய்வது, துணிகளை காயப்போடுவது, போன்ற வேலைகளை தவிர்க்கவும். 4.கார் இருந்தால் தனியாக ஓட்டவே கூடாது.கூட யாராவது கண்டிப்பாக இருக்க வேண்டும். 5.மாத்திரை மருந்துகளை வேளா வேளைக்கு தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.. 6.உங்களை எந்தவிஷயம் சந்தோஷப்படுத்துமோ அதை யாருக்காகவும், காம்ப்ரமைஸ் செய்ய வேண்டாம். 7.வங்கிக்கு பணம் எடுக்கச்சென்றால் தனியாகச்செல்ல வேண்டாம்.துணையுடன்செல்லவும். 8.வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அறிமுகமில்லாதோர் யாராவது வந்தால் கூடியவரை அச்சூழலை தவிர்க்கவும்.அல்லது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவும். 9.கூடியவரை படுக்கையறை, குளியலறை, கழிப்பறை  ஆகியவற்றில் காலிங் பட்டன் அவசியம். அசாதாரண சூழலில் அழைப்பதற்கு உதவும். 10.சைக்கிள் முதல் கார் ...

*TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா?

சுப்பியபட்டுராஜன் * டி.என்.பி.எஸ்.சி- ஒரு வேளை? ? 7, 8, ஒரு? * டி.என்.பி.எஸ்.சி- தமனிமகாத்துக்கு ஒரு வேளைக்கும், உங்களுக்கும் விருப்பம் இல்லை, இல்லையா? ஒரு வேளை? TNPSC இல் எத்தனை குழுக்கள்? * << - - - 1 (குழு -1)  (துணை கலெக்டர்)  ஒரு முறை (காவல்துறை துணை கண்காணிப்பாளர்)  (மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை)  (ஸல்)  (மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி)  ஒரு முறை (தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் அலுவலர்)  (ஸல் கமிஷனர்)  (கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்) - - 1A (குழு -1 I)  (காடுகளின் உதவி கன்சர்வேட்டர்) - - 1 பி (குழு -1 ஐ பி)  HR & CE (உதவி ஆணையர், HR & CE) - - 1 சி (குழு -1 சி) டிஓஓ (மாவட்ட கல்வி அலுவலர்) ஒரு வேளை  [2] (2) (ஒரு வேளை) (குழு -2)  ஜி துணை வணிக வரி அதிகாரி  ஒரு வேளை  ஒரு வேளை (ஒரு வேளை)  ஒரு வேளை (ஒரு வேளை)  ஒரு வேளை, -2  தொழிலாளர் உதவி ஆய்வாளர்  ஒரு வேளை (ஒவ்வொரு வகையிலும்)  (ஸல்)  (ஸல்)  தமது  ஒரு வேளை  ஒரு வேளை, தமதுமது  ஒரு வேளை  ஒரு வே...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

எப்படா திருந்தப் போறீங்க தமிழர்களே...தமிழர்கள் நாம் இனி இவர்களை அன்னாந்து பார்க்க கூட முடியாது.

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #lifeworkshop இத படிக்கும் போது உங்களுக்கு ரோசம் வந்தால் நீங்க உண்மையான தமிழர் தான்... கம்மா  நாயுடுக்களின் மாபியா..!(தமிழ்நாட்டு  மாபியா மட்டும்) மிகுந்த  செல்வாக்கு வாய்ந்தவர்களில் 25 பேர் மட்டும் .    1.பெரியவீடு வெங்கட்டராம நாயுடு (PSG குழுமம்)    2.ஜி,டி,நாயுடு    3.பி.ராமசந்திரன் ( முன்னாள் (மத்திய  அமைச்சர்,கேரளா ஆளுநர்)    4.கே.கோவிந்தசாமி நாயுடு (KG குழுமம்)    5.வி.ராமசாமி நீதிபதி    6.கெங்குசாமி  நாயுடு (முதல் தலைமுறை தொழிற்பேட்டை  ரவுடி)    7.வை.கோபால்சாமி  (கிரேக்க வரலாற்று  பேராசிரியர்)    8.எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் (காங்கிரசு)    9.வெலகபுடி லக்ஸ்மன் தத்   10.தாமோதரசாமி நாயுடு(அண்ணபூர்ணா குழுமம்)   11.கே.ரகுபதி  மேயர்   12.சுதர்சனம்  காங்கிரசு சபாநாயகர்   13.பாலகுருசாமி  EX.வேந்தர்  அண்ணா பல்கலைகழகம்    14.பக்தவச்சலம்  (KG மருத்துவமனை )   ...