Cinar tamilan

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

"Google Pay PhonePe Paytm support numbers"How to contact. Here are some steps.

Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம்.  இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்:  1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்:  080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...

பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

Subbiahpatturajan மனிதனை_கொல்வது நோயா? பயமா? 1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்? 2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்? 3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்? 4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே? 5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு  வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே? 6.அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்? 7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்? ஏன்? ஏன்? ஏன்? காரணம் மிக சிறிது.   இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று. நோயைப் ...

பல வருடங்களாக தமிழ்நாட்டில் வசித்து வரும் எங்களை சில வருடங்களாக இவ்வாறு கையாள்வது மிகவும் மன வேதனையை

Subbiahpatturajan தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் தமிழ ்ந ாட ்ட ில ்ஈழத ்தம ிழர ்ந ில ை திருச்சி சிறப்பு முகாம் என்னும் வதை முகாமில் உள்ள ஈழத் தமிழர்களின் குமுறல்...      தமிழகத்தில் மற்றுமோர் முள்வேலி..... இங்கு அடைக்கப்பட்டுள்ள ஈழத்துப் பறவைகள் பறந்து அவர் அவர் உறவுகளோடு இன்னைந்து பயணிக்க உலகத் தமிழர்கள் ஆதரவுக்கரம் நீட்டி நிற்கின்றோம்...     ஈழத்தில் சிங்கள இனவாத அரசால் நிகழ்த்தப்பட்ட உள்நாட்டுப் போரில் உறவுகள் உடமைகள் இழந்து போரின் அழியா நினைவுகளோடு வாழவே வழி தெரியாது எங்கள் உயிரை காப்பாற்றி வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொள்ள எங்கள் உறவுகளிடம் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்து மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்களுக்கான மறுக்கப்பட்டு உரிமைகளும் சுதந்திரங்களும் மறுபடியும்  சிறப்பு முகாம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள முள்வேலி வதைமுகாமில் எங்களை அடைத்து வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குபவர்கள் யார் என்று கூட தெரியாது எமக்கு பொறுப்பானவர்கள் யார் என்றும் இனங்காண முடியாது தவித்து வருகிறோம். இந்த COVID-19 காலத்தில் முறையான சுகாதார வசதிகளும் ம...

வாலுப்பசங்க பார்த்துக் கொண்டே இருக்கலாம்...

New bikes வாங்குவோர் கவனத்திற்கு...!!?

Subbiahpatturajan கவனம் நண்பர்களே,,,                  சமீபத்தில் எனது உறவினர் புதிதாக இரு சக்கர வாகனத்தை மதுரையில் உள்ள ஒரு ஷோரூமில் வாங்கியிருந்தார்,  நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து விட்டு அதன் விலை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் ஆன் ரோடு விலை Rs.58500/- ஆகி விட்டது என கூறி பையில் இருந்த invoice யை காட்டினார்... அதில் வண்டியின் அடக்க விலை வரி உட்பட ரூ 41000/- என போட்டு இருந்தது.. மீதம் ரூ 17500/ க்கு கணக்கு கேட்டேன்...அவர் 8700/ ரூபாய் இன்சூரன்ஸ் எனவும், சாலை வரி 6800/- எனவும் மீதம் extra fitting க்காக எனவும் சொன்னார்.... நான் உடனடியாக RTO அலுவலகம் அழைத்து புதிய வாகன பதிவு பற்றி விசாரித்தேன்,  அவர்கள் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது...அதாவது நாமே நேரடியாக வாகனத்தை பதிவு செய்து கொள்ளலாம்  அதற்கான சாலை வரி மற்றும் பதிவு தொகையை ஆன்லைனில் செலுத்த முடியும்  மேலும் அந்த தொகை வாகனத்தின் இன்வோய்ஸ் தொகையில் வெறும் 8 சதம்வீதம் செலுத்தினால் போதும்.  மேலும் பதிவு தொகை வெறும் 300 ரூபாய் மட்டும் தான் என்பதை அறிந்தோ...

இப்படியொரு காட்சியை எங்கள் ஊர் முன்னோர்கள் யாரும் கண்டு இருக்க வாய்ப்பே இல்லை..

Subbiahpatturajan https://www.cinartamilan.com/2021/05/blog-post_19.html #வற்றாதஜீவநாடி  # Thamirabarani இந்த புகைப்படங்களை பார்த்ததில் இருந்து என் நெஞ்சில்  ஏதோ ஒரு இனம்புரியாத வலி உண்டாகி கொண்டு இருக்கிறது... முதலில் இந்த புகைப்படம் எந்த ஊர் எந்த இடம் என்று தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஆம் இது நெல்லை மாவட்டம்  பாபநாசத்தில் பொதிகைதாயினால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட அமுதசுரபி போன்ற எந்தகாலத்திலும் வற்றாத தாமிரபரணிதாயின் செல்லப்பிள்ளையான அகத்தியர் அருவிதான் இது. ‌ இப்படியொரு காட்சியை எங்கள் ஊர் முன்னோர்கள் யாரும் கண்டு இருக்க வாய்ப்பே இல்லை.. ஆனால்  இப்படியொரு கொடூரசெயலை வனத்துறையினர் அரங்கேற்றி தலைமுறையினரை பார்க்கவைத்து இருக்கிறார்கள்.  ஒவ்வொரு ஊரில் நீர் வற்றிபோய் ஆறுகுளங்கள் சிதிலமடைந்து வரண்டுபோய் தான் அநேகர் பார்த்து இருப்பார்கள். ‌ஆனால் இங்கே வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணியில் வருடம்முழுவதும் தண்ணீர்கொட்டும் அகத்தியர் அருவியின் ‌ நீர்வழித்தடத்தை மணல் மூட்டைகள் கொண்டு அடைத்து இயற்க்கைத் தாய் கொடுத்த கொடையை,  பொங்கி பாய்ந்து ஓடியஅகத்தியர் அரு...

இது செய்தி அல்ல... நிஜம்... இதை செய்தியாக்கித் தருவதால்...?

Subbiahpatturajan 🙏ஊடகங்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்!   நோயாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், உதவியற்ற குடும்பங்கள் தன் குடும்பத்தினரின் நோய் தீர வேண்டி சுற்றித் திரிகின்றனர். பசியால் அவதிப்படுகின்றனர்!  மருந்திற்காக வரிசையில் நாள் கணக்காக நிற்கின்றனர்...  இறக்கும் மக்களின் உடல்களை பொது இடங்களில் எரிக்கின்றனர் - 🙏இதைத்தானே நாள் முழுவதும் நீங்கள் ஒளிபரப்புகிறீர்கள்🙏 இது செய்தி அல்ல... நிஜம்... இதை செய்தியாக்கித் தருவதால் எங்களுக்கு எந்த நன்மையும் செய்யாது அல்லது எங்களுக்கு எந்த புதிய தகவலையும் கொடுக்காது 🙏 பீதியைப் பரப்புவதன் மூலம் நீங்கள் என்ன நிரூபிக்க விரும்புகிறீர்கள்? ஒரு ஆரோக்கியமான நபர் கூட நோய்வாய்ப்படும் அளவுக்கு அச்சத்தை உருவாக்குகிறீர்கள்! 🙏ஒரு தொற்றுநோய் நடக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நிலைமைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதையும், சரியான முடிவு என்னவென்று யாருக்கும் தெரியாது என்பதையும் நாங்கள் அறிவோம் !! எங்கள் மன உறுதியை நீங்கள் அதிகரிக்க முடியாவிட்டாலும், தயவுசெய்து அதை உடைக்காதீர்கள் !!!🙏 பிரச்சினைகளை தீர்க்க உதவுங்கள்.🙏 நோயிலி...

யார் இந்த குஞ்சரம்மாள்...?! #குஞ்சரம்மாள்

Subbiahpatturajan ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது  கேள்விப்பட்டதுண்டா? 1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து திண்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கை கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்து தின்று உயிர் பிழைத்துக்கிடந்த கொடிய பஞ்சமது. கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது . பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம் அம்மாவினுடையது.  குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி. மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான  தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவள். மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் ...

யூதர்கள் கூட தமிழகத் தெலுங்கர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்.

Subbiahpatturajan *தெலுங்கு வந்தேறிகளை பாராட்டித்தான் ஆகவேண்டும்*  கன்னடரிடம் போரில் தோற்ற தமிழர்களின் தாய்நிலத்தில்,  கன்னடரை காக்கா பிடித்து அவர்களின் பிரதிநிதியாக..  ஆதிக்க நோக்கத்துடன் கன்னடத்தில்  குடியேறி ,  கன்னடர் வீழ்ந்த பிறகு 350ஆண்டுகள் ஆண்டு அனுபவித்து  அதன்பிறகும்  350ஆண்டுகளாக *(தொடர்ச்சியாக 700 ஆண்டுகள்)* *தாம் கைப்பற்றிய அதிகாரத்தையும் சொத்துக்களையும் நிலவுடைமையையும்*  *வழிவழியாக கைமாற்றி தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் ஆதிக்க சக்தியாகவே இருக்கிறார்கள் தெலுங்கர்கள்...*  எனக்குத் தெரிந்து வரலாற்றில் வேறு எந்த இனமும் இன்னொரு இனத்தை இப்படி மிக மிகத் தந்திரமாக சுரண்டி கொழுத்து அதுவும் இத்தனை காலம் நீடிக்கவில்லை.  எந்த ஒரு இனமும் தமிழினம் போல போரில் ஏற்பட்ட தோல்விக்கு இத்தனை பெரிய விலையைக் கொடுக்கவுமில்லை..  இன்றுவரை தமிழகத்தில் அவர்களின் மக்கட்தொகையும் சரி, சொத்துபத்துக்களும் சரி, அரசியல் ஆதிக்கமும் சரி, வணிக ஆதிக்கமும் சரி தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில்தான் செல்கிறது.  யூதர்களைக் கூட இவர்களுடன் ஒப்பிட முடியாது, ஏனென்ற...

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

மூலப்பத்திரம் என்றால் என்ன மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?"

` `எங்களுடைய பரம்பரைச் சொத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது. அதற்குப் பத்திரம் பதிவுசெய்வது எப்படி?" ``பரம்பரைச் சொத்துக்குப் பட்டா மட்டுமே இருந்தால் கவலையில்லை. ஏதாவது பத்திரம் வேண்டுமென்றால், குடும்பத்துக்குள்ளேயே ஒருவருக்கு அடமானம், குத்தகை போன்ற ஆவணம் எழுதி, பதிவு செய்தால், உங்களின் பெயருக்கு வில்லங்கம் மாறிவிடும். சில நாள்கள் கழித்து, பதிவான அடமானம் அல்லது குத்தகையை ரத்து செய்து பத்திரம் பதிவு செய்தால், வில்லங்கச் சான்றில் மீண்டும் உங்கள் பெயர் பதிவு இடம்பெறும்.'' பத்திரம் ``பத்திரப் பதிவில் மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?" ``ஆம். ஒருவருக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு தாய்ப்பத்திரம் சொத்துக்கு முக்கியம். தாய்ப்பத்திரம் இல்லாத சொத்து அநாதைதான். தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்." ``தாம்பரம் வரதராஜபுரத்தில் பெரும் நிலப்பரப்பு விற்கப்பட்டது. 3,600 சதுர அடி நிலத்தை நான் 1980-ல் வாங்க...

பாத்ரூம் கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம்...!?

Subbiahpatturajan 60/65 வயதிற்கு மேற்பட்ட  இருபால் அன்பர்களுக்கும் சில முக்கியமான டிப்ஸ்:- 1.பாத்ரும் செல்லும் பொழுது(வீட்டில்) கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம். 2.வீட்டை தண்ணீர் கொண்டு தரையை துடைக்கும்பொழுது நடக்கவேண்டாம். 3.ஸ்டூல்,நாற்காலி,பெஞ்ச் போன்றவற்றின் ‌.மீது ஏறி பொருட்களை எடுப்பது,சுத்தம் செய்வது, துணிகளை காயப்போடுவது, போன்ற வேலைகளை தவிர்க்கவும். 4.கார் இருந்தால் தனியாக ஓட்டவே கூடாது.கூட யாராவது கண்டிப்பாக இருக்க வேண்டும். 5.மாத்திரை மருந்துகளை வேளா வேளைக்கு தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.. 6.உங்களை எந்தவிஷயம் சந்தோஷப்படுத்துமோ அதை யாருக்காகவும், காம்ப்ரமைஸ் செய்ய வேண்டாம். 7.வங்கிக்கு பணம் எடுக்கச்சென்றால் தனியாகச்செல்ல வேண்டாம்.துணையுடன்செல்லவும். 8.வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அறிமுகமில்லாதோர் யாராவது வந்தால் கூடியவரை அச்சூழலை தவிர்க்கவும்.அல்லது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவும். 9.கூடியவரை படுக்கையறை, குளியலறை, கழிப்பறை  ஆகியவற்றில் காலிங் பட்டன் அவசியம். அசாதாரண சூழலில் அழைப்பதற்கு உதவும். 10.சைக்கிள் முதல் கார் ...

உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️

Subbiahpatturajan விவசாயிகள் மட்டுமின்றி,  உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️ 1️⃣ எதற்காக அதானி குழுமம் 9.5 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை தயாராக வைத்துள்ளது..? இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது மோடிக்கு அவரது அறிவுரையா..?? 2️⃣ அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பட்டியலை மாற்றியது ஏன்..? 3️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சிறு விவசாயி எப்படி ஒப்பந்தம் போட முடியும்..?? அவன் சொன்ன இடத்தில்தானே கையெழுத்துப் போடவேண்டும். 4️⃣ மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்றால் யாருக்கு லாபம் ..?? 5️⃣ விற்பனைத் தொகையில் இப்படித் தவணை முறையில் தந்தால் எந்த விவசாயியால் பிழைக்கமுடியும்..?? 6️⃣ PDS system  என்னாவது ..?? 7️⃣ Food Corporation of India வின் நிலை என்ன..?? அவர்கள் நாடெங்கிலும் ஏற்படுத்தி உள்ள வசதிகள் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பதை ஊகிப்பதில் சந்தேகம் உள்ளதா ..?? 8️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களால் மாநில இளநிலை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்வது அவ்வளவு கடினமா ..?? 9️⃣ ஒரு நாட்டில் உழவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நீதி மன்றம் செல்லமுடியாது என்பது உண்மையில்...

As your habits are, there will be people who behave with you in the same way.

Subbiahpatturajan நல்ல பழக்கவழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்..* _ உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே..  எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது._  _*இறுக்கமான மனிதர்களாகவும், எந்திரகதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசை எல்லாம் பார்க்க முடிகிறது.*_ _சகமனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி விட்டது._  _*இதற்கெல்லாம் அடிப்படை என்ன என்று சிந்தித்தால் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.*_ _எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது. மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை_ _ *நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும். ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கு...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* கோரானா கேள்வி பதில்கள்

Subbiahpatturajan *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* 1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?*  இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.  2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?*  இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந...

முன்னொரு காலத்தில் பெண் சுதந்திரம் என்பது

Subbiahpatturajan #பெண்சுதந்திரம் காஞ்சிபுரத்திற்கு பக்கத்தில் உள்ள கிராமம் தான் நான் வளர்ந்தது. என் வீட்டில் எல்லாம்  எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது ஆனா அக்கம் பக்கத்து வீடுகளில் பெண்களோட அடிப்படை உரிமைகள் கூட அவங்க பெற்றோர்களாலேயே பறிக்கப்படுவதை நேரில் பார்த்து வெறுத்துப் போய் இருக்கிறேன். பொட்ட புள்ளைங்க விளையாடக்கூடாது. பூமி அதிர நடக்கக்கூடாது.வாய்விட்டு சிரிக்க கூடாது . சமையல்கட்டு உள்ளேயே முடங்கி கிடக்க வேண்டும் . ஆனால் இந்த கட்டுப்பாடு எல்லாம் ஆம்பளை பசங்களுக்கு கிடையாது .அதை விட கொடுமை சாப்பாடு விஷயம் தான். ஆண்பிள்ளை பசங்களுக்கு நிறைய சாப்பாடு போடுவாங்க பொம்பளை பசங்களுக்கு கம்மிதான் சொந்த அம்மா அப்பாவே இதை பண்ணா எப்படி இருக்கும் ஆம்பளையாகட்டும் பொம்பளையாகட்டும் வயிறு ஒன்றுதானே . அப்பவே எங்க அம்மாகிட்ட ஏம்மா இப்படி பண்றாங்கன்னு சண்டை போட்டு இருக்கேன். அதுல எங்க அம்மா நம்ம வீட்டில இப்படி இல்லை மத்தவங்க வீட்ல நடக்கிற தான் நாம எப்படிமா கேட்க முடியும் என்று சொல்லுவாங்க. நீங்களும் அந்த கொடுமைக்கு ஆளாகி இருக்கீங்களா...? அந்த சமயத்துல அம்மா அப்பாவை எதிர்த்து ஒன்றும் பண்ண...

ஆப்பிள் இந்தியா வந்த வரலாறு தெரியுமா உங்களுக்கு...!!? Do you know the history of Apple India ... !!?

Subbiahpatturajan மெல்ல அழிந்த #இயற்கை உணவுகள்..!! ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா?.. இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான்...  குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்.. தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது.. அரேபிய #பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது.. ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி. #ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது.. மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது.. இங்கு வெள்ளையன்  வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாரை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை. வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான்... வந்...

தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே...???

Subbiahpatturajan ஏன்? எதற்கு? என, சிந்தித்துண்டா? தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட் டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே  நல்ல வேலைக்கு போகவா? ஆங்கிலம் சரளமாக பேசவா? குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?? ஏன்? எதற்கு? என்று சிந்தித்ததுண்டா?? 11TO12 200000 லட்சம் ஆக மொத்தம் Pre kg 25000 ல் துவங்குகிறது  Lkg 40000 Ukg 50000 1st.60000 2ND 70000 3D. 80000 4TH 90000 5TH 100000 6TO8 1.20000 9TO10. 150000 9,85,000 ரூபாய்  இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க. சரி! இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா? உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும் அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.?  ஒன்றை நினைவில் வையுங்க...