முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வள்ளலாரின் அறிவுரைகள்

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய். 5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை. 7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை. 8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே. 9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும். 10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு. 11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே. 12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. 13. அவ்வப்போது பரிசுகள் அளி. 14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே. 15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்! 16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம். 17. உன் ச

சொத்து பத்திரங்கள் தொலைத்து விட்டால் என்ன செய்வது?

சொத்து ஆவணங்களைத் தொலைத்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? உங்களுக்கு உதவும் சட்டங்கள், உபயோகமான தகவல்கள் முதலில், வழக்கறிஞர் (Advocate) மூலம் ஒரு தமிழ் மற்றும் ஓர் ஆங்கில நாளிதழில் பத்திரம் காணாமல் போனது பற்றிய பொது அறிவிப்பு கொடுக்க வேண்டும். அதில், சொத்து சம்பந்தமான முழு விவரங்கள், சர்வே எண், விஸ்தீரணம் (Area), பட்டா எண், அதன் நான்கு எல்லைகள், பத்திரப்பதிவு எண் உட்பட அனைத்து விவரங்களும் இருக்க வேண்டும்.  அந்த அசல் பத்திரத்தை வைத்துக்கொண்டு யாரும் தவறான வழியில் அடமானம் வைத்து கடன் பெறுதல் போன்றவை செய்யக் கூடாது என்றும், இது சம்பந்தமாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், ஏழு நாள்களுக்குள் தெரிவிக்குமாறும் அதில் குறிப்பிட வேண்டும். பொது அறிவிப்பு வெளியான ஏழு நாள்களுக்குப் பிறகு, ஒரு 20 ரூபாய் பத்திரத் தாளில் (Stamp paper) உறுதிமொழிப்பத்திரம் (Affidavit) தயார் செய்ய வேண்டும். அதில், அந்தப் பத்திரம் எங்கு எப்படித் தொலைந்தது என்கிற தகவலையும் சொத்து விவரங்களையும் முழுவதுமாகக் குறிப்பிட்டு, பத்திர எண், பதிவுசெய்த சார்பதிவாளர் அலுவலகத்தின் விவரம், யாரிடமிருந்து வாங்கினோமோ அவருடைய பெயர் போன்றவற்றையும்

பழநி மலை முருகன் அதிசய தகவல்கள்

பழநி மலை முருகன் அதிசய தகவல்கள் 1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம். 2. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். 3. அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. 4. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது. 5. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப

எதிரியின் செயலால் நீங்கள் ஏமாற்றம் அடைந்திருந்தால்...!!!

வாழ்வில் வெற்றி பெற.... #எதிரியைவெல்ல வாழ்க்கை யில் நீ ங்கள் சந்தித்த அவமானம் .பட்ட கஷ்டங்கள் மத்தியில் எதிரியின் செயலால் நீங்கள் ஏமாற்றம் அடைந்திருந்தால்... இந்த நிகழ்வை மறந்துவிட்டு வழக்கமான தொழிலைக் கவனிப்பதைப்போல நடந்துகொள்.  அவன் உன்னைத் தேடுவான். எதிரியின் காவல் கடிதாக இருந்தால் அவன் உன்னைத் தேடிவருவான். எச்சரிக்கையாக இரு. உன்னைவிட வலுவாக இருந்தால் அவனை விட்டு விலகிச் செல்.  வலுவில்லாதவன்போலக் காட்டிக்கொள். அதனைக் கேள்விப்பட்ட எதிரி உன்னைத் துச்சமெனெ நினைப்பான். நோக்கம் ஒன்றாக இருக்கலாம். ஆனால் திட்டம் பலவாக இருக்கவேண்டும்எந்தத் திட்டத்தின்படிச் செயலாற்றவேண்டும் என்பதை எதிரியின் செயல்பாடுகள்தான் முடிவு செய்யும். ‘எதிரியைப் பற்றி முற்றிலுமாகத் தெரிந்துகொள்.  அவனது விருப்பு வெறுப்பு, பலம் பலவீனம், நட்பு பகை என அனைத்தையும் அறிந்துகொள். தன்னையும் அறிந்து எதிரியையுமஅறிந்தவனே முழு வெற்றி அடைகிறான். தன்னை மட்டும் அறிந்தவன் வெற்றி பெற்றாலும்அதற்கு அதிக விலை கொடுப்பான். தன்னையும் அறியாமல் எதிரியையும்அறியாதவன் வெற்றி பெறுவது கடினம். உன் எதிரிக்கு உதவி செய்வதுயார் என்று கண்டுபிடி. அவனை அடக்

பூமியுடன்_தொடர்பில்_இருங்கள்

#பூமியுடன்_தொடர்பில்_இருங்கள் :- நம்மில் எத்தனை பேர் தினமும் பூமியுடன் தொடர்பில் உள்ளோம் அதாவது வெறும் கால்களுடன் நிலத்தில் நடக்கிறோம் ? பதில் முக்கால்வாசி இல்லை என்பதே. வெறும் கால்களுடன் நடந்ததால் நோய் தொற்றிக்கொள்ளும் என சொல்லியே காலனிக்கு (செருப்பு) பழகினோம், இப்பொழுது காலனியை விட shoes அணிவதை மார்டனகவும்,பெருமிதமாகவும் கொள்கிறோம். சரி இப்போது university of  California மற்றும் journal of Environmental and Public Health இவை இரண்டு அமைப்புகளும் மனிதன் காலனி அணியாமல் வெறும் கால்களுடன் பூமியில் நடந்தால் மனித உடம்பில் ஏற்ப்படும் மாற்றம் பற்றி ஒரு ஆய்வு நடத்தின அந்த ஆய்வின் முடிவில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை பார்ப்போம். ஆய்வறிக்கைப்படி நாம் பூமியில் வெறும் கால்களுடன் நடப்பதால் ஏற்ப்படும் நன்மைகள்: புவி இயற்கையாகவே negative charge (-) கொண்டது மற்றும் anti-oxidants கொண்டது, எனவே வெறும் கால்களுடன் நாம் பூமியில் நடக்கும் போது  உடல் செல்களை பாதிக்கும் தொடர் செயல்முறையான ஆக்சிஜனேற்றம் தடுக்கப்படுகிறது அதாவது உடலுக்கு நேரடியாக பூமியில் இருந்து vitamin "C" கிடைக்கிறது. உடலில் எலக்ட

தங்க நகைக் கடன் எப்படி வாங்கலாம்?How to get a gold jewelry loan?

தங்க நகைக்கடன் - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது ? தங்க நகைக்கடன் என்பது உண்மையில் மிகவும் பாதுகாப்பான ஒரு கடன் திட்டம். நம் வீட்டில் இருக்கும் நகைகளை வங்கியில் அடகு வைத்து, தேவையான பணத்தை கடனாக பெற்று, பின்னர் கடன் தொகையை திருப்பிச் செலுத்தி, நகைகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். வங்கிகளைப் பொறுத்தவரை, தங்க நகைக்கடன்களுக்கு வட்டியும் மிகப்பெரியதாக இல்லை. தங்க நகைகளை வங்கியில் வைத்து கடன் வாங்குவது என்பது இந்தியாவில் பொதுவாக உள்ள நடைமுறை ஆகும். மருத்துவ தேவை, திடீர் பொருளாதார நெருக்கடி, விவசாய தேவை, தொழில் தேவை என அவரவர் தேவைகளுக்காக தங்க நகைக்கடன் மிகவும் உதவியாக உள்ளது.எனினும், தங்க நகைக்கடன் தொடர்பாக பல சந்தேகங்கள் & கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம். அதனை இங்கே தெளிவுபடுத்தியுள்ளோம். தங்க நகைக்கடன் என்பது ஒரு பாதுகாப்பான கடன் திட்டம். வங்கி அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் உங்களது நகைகளை அடமானமாக வைத்து, அதற்கேற்ப உள்ள சந்தை மதிப்பை வைத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். நகைகளை மீட்பதற்கான காலக்கெடு ஓராண்டாக இருக்கும் நிலையில், அதற்குள்ளாக வட்டியுடன் பணத்தை செலுத்தி நகைகளை திரும்ப பெற்

சொந்த வீடு கட்டுபவர்களுக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 50 டிப்ஸ்கள்.....!!

Subbiahpatturajan சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!! 1. பத்திரப்படுத்தி வச்சுக்கோங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும். தண்ணீர் : 3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம். 4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது. 5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம் அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி

இன்றைய தலைமுறையினரின் ஈகோ.....?!

இன்றைய தலைமுறையினரின் ஈகோ.....!?  சனிக்கிழமை,6 ஜுன்  *ஈகோ….என்றால் என்ன*  ❓❓❓❓❓❓❓❓ *​ஈகோ என்பது என்ன?*⛔ *தன்னைப் பற்றியே சிந்தித்தல், சுய forநலம், வறட்டுக் கௌரவம், தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய குணங்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகும். மனிதனுக்கு பணம், பதவி, அழகு, செல்வாக்கு கூடும் பொழுது, அதே நேரத்தில் படிப்படியாக மமதை, ஆணவம், செருக்கு, திமிர், கர்வம் சிலருக்கு கூடி விடுகிறது.* *கடவுள் நம்மை விட்டு வெளியேறுவது என்பதன் சுருக்கம் தான் (Ending God out) ஈகோ என்பர்.* *நமது பலவீனத்தை, தவறை யாராவது சுட்டிக்காட்டினால் ஈகோ விழித்துக் கொள்கிறது. மோதல் ஏற்படுகிறது.* *ஈகோ மனிதர்களின் அடையாளம்:* *நம்மிடம் வணக்கத்தை கட்டாயம் எதிர்பார்ப்பர். நன்கு தெரிந்தவர் என்றாலும், கண்டும் காணாதது போல நடப்பர். அதிகம் பேச மாட்டார். தம் இனத்துடன் மட்டும் பழகுவர். தம்மை நாடியே பிறர் வர வேண்டும் என்று இருப்பர். தன்னை விட மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என எதிர்பார்ப்பர். தான் மட்டும் தான் சிறந்தவர் என நம்புவர். ஈரமும், இரக்கக் குணமும் அற்றதன்மை பேச்சில் வெளிப்படும். மற்றவர் தன்னை மதிக்க வேண்டு