முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற

இப்போதே இப்படி என்றால் ஹிந்தி வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமாகும்.* *

Subbiahpatturajan புதைக்கப்படும் தமிழரின் தொன்மை வரலாறு...?! *தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கான வாய்ப்பினை தட்டிப்பறிக்கும்  தமிழ்நாடு தொல்லியல்துறையின் செயல்பாட்டை கைவிட வேண்டும் . தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்வெட்டுப் பயிற்சி நிறுவனத்தில், தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் முதுநிலைப் பட்டயப் பயிற்சி ஆண்டுதோறும் நடைபெற்று சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது . இதுவரை ஓராண்டாக இருந்துவந்த இந்தப் பட்டயப் பயிற்சி இப்போது இரண்டாண்டாக மாற்றப்பட்டுள்ளது;  2000 உரூபாயாக இருந்த மாத உதவித்தொகையினை 5000 உரூபாயாக மாற்றியதும், ஆண்டிற்கு 8 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த பயிற்சினை 20 மாணவர்களுக்கென உயர்த்தியுள்ளதும் வரவேற்கதக்கதே. ஆனால், இப்பயிற்சியில் சேர்வதற்கு உரிய தகுதியாக இதுவரை முதுகலை தமிழ், வரலாறு, தொல்லியல் மற்றும் சமற்கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்ததை இந்த ஆண்டு முதல் முதுநிலை அறிவியல் மற்றும் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றவர்களும் சேரலாம் என்று அறிவிப்பு செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கதக்கது;  இதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இது  இந்தத் துறை

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்...

Subbiahpatturajan மாலை 6:30 மணியளவில் நாங்கள் ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.  அந்த நேரத்தில், ஒரு மனிதன் தனது ஒன்பது முதல் பத்து வயது மகளுடன் வந்து முன் மேஜையில் அமர்ந்தார்.  அவரது சட்டை சேறும் சகதியுமாக இருந்தது, முதல் இரண்டு பொத்தான்கள் காணவில்லை.  சாலையின்  வேலை செய்யும் ஒரு தொழிலாளி போல் இருந்தது, சிறுமியின் ஃபிராக் கழுவப்பட்டு சுத்தமாக இருந்தது, அவள் தலைமுடியை எண்ணெயிட்டு சுத்தமாக வைத்திருந்தாள்.  அவள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தோன்றியது.  ஹோட்டலின் முழு அழகையும் அவள் ரசிப்பதை நாங்கள் கவனித்தோம்.  மேலே இருந்து குளிர்ந்த காற்றை வழங்கிய விசிறியின் மீது அவள் கண்கள் ஒரு கணம் ஓய்வெடுத்தன.  குஷன் செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து சற்று எழுந்து அவள் அதை ரசிப்பதைக் கண்டோம்.  பணியாளர் இரண்டு பெரிய கண்ணாடி குளிர்ந்த நீரை அவர்களுக்கு முன்னால் வைத்தார்.  அவர் தனது மகளுக்கு ஒரு மசாலா தோசை கூறினார்.  அவன் அதைக் கேட்டதும், அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி மீண்டும் தெளிவாகியது.  உங்களுக்கு என்ன வேண்டும்?  என்று பணியாளர் கேட்டார்.  எனக்கு எதுவும் தேவையில்லை: அவர் பதிலள

_*நான்... நான்... நான்...*_

Subbiahpatturajan _*நான்... நான்... நான்...*_

சின்னதா ஒரு காதல் கதை...

Subbiahpatturajan சின்னதா ஒரு காதல் கதை... அண்ணே! நீங்க எனக்கு கதை சொல்லி ரொம்ப நாள் ஆச்சு. எதாச்சும் சுவாரசியமான கதை இருந்தா சொல்லுங்கண்ணே" " கதை சொல்றேன் ! அது சுவாரசியமா இருக்கா, இல்லியான்னு நீதான் சொல்லணும்." "சரி சொல்லுங்க" "இது என்னோட  காதல் கதை. இந்த கதை நடக்கும்போது நான் +2 படிச்சுக்கிட்டு இருந்தேன்." "என்னது படிச்சீங்களா?" "சரி +2   க்ளாஸ்ல தினமும் போய் உக்காந்துகிட்டு இருந்தேன். அப்போ என்னோட க்ளாஸ்ல ப்ரீத்தின்னு  புதுசா ஒரு பொண்ணு வந்து சேந்தா. அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு ஒரு பக்கம் இருந்து பாத்தா அப்பிடியே த்ரிஷா மாதிரி இருப்பா." "அப்போ இன்னொரு பக்கம் இருந்து பாத்தா கமலா காமேஷ் மாதிரி இருப்பங்களாண்ணே." "டேய்! மூடிகிட்டு கதையை கேளு." "சரி சரி சொல்லுங்க. அந்த பொண்ணு வந்ததும் பசங்க கிளாஸ் கட் அடிக்கிறதே குறைஞ்சு போச்சு. எல்லாரோட கண்ணும் அந்த பொண்ணு மேலதான். நல்ல வேலையா எங்க பள்ளி கூடத்துல பசங்களும் பொண்ணுங்களும் பேசிக்க கூடாதுன்னு ரூல் இருந்ததால அவ தப்பிச்சா" "புரியுது. ஈ மொய்க

அவ்வளவு தான்.. மறுபடியும் சொல்றேன்.....

Subbiahpatturajan இந்தி மட்டும் அல்ல உலகின் எந்த மொழியும் கற்றுக்கொள்வதில் தவறில்லை ! இந்தியாவில் இந்தி தேசிய மொழியும் அல்ல. அதிகப்படியான மக்கள் பேசும் மொழியும் இல்ல. இந்தியாவில் 22 பிரதான மொழிகள் கொண்ட முப்பது மாநிலங்கள் இருக்கிறது. இதில் இந்தியும் ஒரு மொழி அவ்வளவே. இந்தியுடன் ஒத்துப்போகும் ஒரு சில மொழிகளையும் சேர்த்து கொண்டு இந்தி அதிகப்படியான மக்களால் பேசப்படும் மொழியாக சித்தரிக்கப்படுகிறது. சரி.. இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் என்ன? என்ன குறைந்துவிட போகிறது ? இது தானே உங்கள் கேள்வி..! சொல்றேன். முதலில் பலதரப்பட்ட வரிகள் இருந்தது. அதை மாற்றி ஒரே தேசம், ஒரே வரி என்று GST கொண்டு வந்தார்கள். அப்போது அவர்கள் சொன்னது. இனி விலைவாசி குறையும்  மாநிலங்களின் வருமானம் அதிரிக்கும். அதன் மூலம் மாநிலங்கள் வளர்ச்சி பெறும் என்று தானே. ஆனால் நடந்தது என்ன? தமிழகத்துக்கு வழங்கவேண்டிய மாநில GST பணமான 12 ஆயிரம் கோடியை இன்று வரை மத்திய அரசு வழங்கவில்லை. அதுவும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில். இதனால் என்ன நடக்கும் என்றால். நிதி பற்றாக்குறையால் மாநிலங்களில் ஏற்படுத்த வேண்டிய வளர்ச்சி பணிகள் தடைபடும். அப்படி

கோஹினூர் வைரம்: கொஞ்சம் விபரக்குறிப்பு

Subbiahpatturajan கோஹினூர் வைரம்: வைரத்தின் விலை பெரும்பாலும் அதுவிற்பனை ஆகும் அளவுசெயலாக்க அளவுஊழியர்களின் ஊதியம்வாடகைஇவை அனைத்தையும் சேர்த்த பின் வரும் தொகையுடன் ஒவ்வொரு கடைக்கு என விற்பனையில் அவர்களுக்கான இலாப சதவீதத்தை ஒரு குறிப்பிட்ட அளவு வைத்திருப்பர்.அதனுடன் சேர்த்து விற்கப்படும். வைரத்தின் வகைகள் வைரத்தில் பல வகைகள் உள்ளன.வெள்ளை வைரம் (White Diamond)மதுவை வைரம் (Champagne Diamond)இளஞ்சிவப்பு மதுவை வைரம் (Pink Champagne Diamond)மஞ்சள் வைரம் (Yellow Diamond)நீல வைரம் (Blue Diamond)பச்சை வைரம் (Green Diamond)ஊதா வைரம் (Purple Diamond)செயற்கை வைரம் (Synthetic Diamond) கோஹினூர் வைரம் கோஹினூர் என்பதற்கு பெர்சிய மொழியில் மலையின் ஒளி என்பது பொருள். இது, கோஹினூர், கோஹ்-இ நூர் அல்லது கோஹ்-இ-நுர் என்றும் உச்சரிக்கப்படுகின்றது. இது 105 காரட் அளவுடையது. இந்த வைரம் இந்தியாவினுடையது.தற்போது இது பிரிட்டன் வசம் உள்ளது. (இந்தியத் தலைவர்கள் பிரிட்டன் தலைவர்களுடன் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தும்போது கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி கோரிக்கை வைப்பதாகவும் இங்கிலாந்து அதை மறு

*உங்கள் உடலை நீங்கள் கவனித்தால்....

Subbiahpatturajan *உங்கள் உடலை நீங்கள்  கவனித்தால், உங்கள் உடல் உங்களை கவனித்துக் கொள்ளும்* *ஆரோக்கியமான வாழ்வுக்கு* நம் ஆரோக்கியத்தை ஆராயும் வழி. ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை, திறந்துப் பார்க்க சில எளிய வழிமுறைகள். ஸ்கேன்,எக்ஸ்ரே, ப்லட் டெஸ்ட், யுரின் டெஸ்ட், மொஷென் டெஸ்ட் எதுவும் வேண்டாம். ஆயிரம் கணக்காக பணம் செலவழிக்கவும் வேண்டாம். கீழ் கூறப்படும் ஐந்து விஷயங்களை சரி பார்த்தாலே போதும். 1. தரமான பசி 2. தரமான தாகம் 3. தரமான உறக்கம் 4. முழுமையான கழிவு நீக்கம் 5. மன அமைதி *தரமான பசி* • உழைப்புக்கேற்ற பசி இருக்க வேண்டும் • அதிக உழைப்பு அதிக பசி, குறைந்த உழைப்பு குறைந்த பசி • குறைந்தது 2 வேளை பசி இருக்க வேண்டும் • உண்ட உணவு சுலபமாக செரிக்க வேண்டும் • உண்ட பிறகு வயிறு  உப்புசம், பாரம், அசதி, தூக்கம் இருக்கக் கூடாது *தரமான தாகம்* • உழைப்புக்கேற்ற தாகம் இருக்க வேண்டும் • உதடு காய்வது தாகம் அல்ல • தாகத்தை புரிந்துகொள்ள வேண்டும் • தாகத்துக்கு வெறும் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும், புட்டியில் அடைத்த, சுவை, மனம், இரசாயனம் கலந்த நீரை அருந்தக் கூடாது *தரமான உறக்கம்* • பட

நம்மை நாமே பார்த்து பரிதாபப்பட்டுக்கொள்ளலாம்...🤔😔😭.

Subbiahpatturajan நம்மை நாமே பார்த்து பரிதாபப்பட்டுக்கொள்ளலாம். Add caption மத்திய அரசின் செயல்பாடுகள்....?! நம் கவலையெல்லாம் தேவையற்றது.. டிமானிசேஷன்.. கருப்பு பணம் ஒழியும் என்றார்கள். 99 சதவீத நோட்டுக்கள் திரும்பிவந்துவிட்டன. ஏடிஎம், வங்கி வாசல்கள் முன்பு பலபேர் செத்தார்கள். லட்சோப லட்சம்பேரின் தொழில், வர்த்தகம் குளோஸ்.. ஜிஎஸ்டியால் பாலும் தேனும் ஓடும் என்றார்கள். வசூலிக்கப்பட்டதில் மாநில அரசுகளின் பங்குத் தொகையை கேட்டால் கையை விரிக்கிறார்கள். குழந்தைக்கு கிடைத்த உணவை தாய் பிடுங்கி சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்கு சமானம் இது.. காஷ்மீரில் சிறப்பு சட்டம் ஒழிப்பு..ஆனால் ஒன்றரை ஆண்டுகளாக அம்மாநிலம் குவாரண்டைனில்.. ரிசல்ட் இதுவரை தெரியவில்லை..அறுபதாண்டு பிரச்சினை ஓராண்டில் தீருமா என்பார்கள் மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையே இன்னும் இரண்டு ஆண்டுகளில் புல்லட் ரயில் ஒடுமா என்று தெரியவில்லை. அதுபற்றிய செய்திகளையே காணோம் உலகமே கொரோனாவால் கதறுகிறது. இந்த நிலையிலும் கூடஒரு நாட்டின் பிரதமர் செயதியாளர்களை சந்திக்க மறுக்கிறார். உலக வரலாற்றில் கொரோனா காலத்தில் இப்படி ஒரு தலைவர் அனேகமாக மோடி ம

சினிமா என்பது ஓழுக்கச் சீர்கேட்டின் "கையேடு ".

Subbiahpatturajan சினிமா என்பது ஓழுக்கச் சீர்கேட்டின் "கையேடு ". *சினிமாவின் மூலம் நம் சமூகம் அடைந்த தீமைகள் :-* 1) சகோதரிகளாக பார்க்க வேண்டிய இளம் பெண்களை காதலிகளாக பார்க்க வைத்தது இந்த சினிமா 2) பெற்றோர்களை எதிரிகளாக காட்டியது இந்த சினிமா 3) திருட்டின் வகைகளை கற்றுகொடுத்தது இந்த சினிமா 4) நகைச்சுவை என்ற போர்வையில் பொய்யை மனித பண்பாக மாற்றியது இந்த சினிமா 5) இசையை கேட்போரின் மனங்களில் திணித்து சிந்தனையை பாவங்களின் பக்கம் திருப்பியது இந்த சினிமா 6) வன்முறையை ஹீரோயிசமாக காட்டியது இந்த சினிமா 7) காதல் என்பதை புனிதமாக காட்டி பிஞ்சு மனங்களில் கூட நஞ்சை ஊட்டியது இந்த சினிமா 8) தீய பழக்க வழக்கங்களை ஆண்மைத்தனமாக காட்டியது இந்த சினிமா 9) Fashion என்ற பெயரில் பெண்களை அரைகுறை ஆடைகளுடன் வீதிகளில் திரிய விட்டு கலாச்சாரம், பண்பாடுகளை அழித்தது இந்த சினிமா 10) ஆபாசத்திற்கு பொழுதுபோக்கு என்ற பெயரை வைத்தது இந்த சினிமா 11) உறவுகளின் புனிதத்தன்மையை பாழ்படுத்தியது இந்த சினிமா 12) உண்மையை சொல்கிறோம் என்ற பெயரில் வன்புணர்ச்சியை வளர்த்தது இந்த சினிமா 13) திரையில் பெண்களை போகப்பொருளாக

நாம் எல்லோரும் *சாதாரண மனிதர்களா...?!

Subbiahpatturajan 😱😳😀🙃😥💐💐*அழகான வரிகள் பத்து*. 1} அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்.. நாம் எல்லோரும்  *சாதாரண மனிதர்கள்* 🏹 2} பொறாமைக்காரரின் பார்வையில்.. நாம் அனைவரும்  *அகந்தையாளர்கள்* 🏹 3} நம்மைப் புரிந்து  கொண்டோரின்  பார்வையில்.. நாம்  *அற்புதமானவர்கள்* 🏹 4} நேசிப்போரின் பார்வையில்.. நாம் *தனிச் சிறப்பானவர்கள்* 🏹 5} காழ்ப்புனர்ச்சி  கொண்டவர்களின்  பார்வையில்..நாம்  *கெட்டவர்கள்* 🏹 7}  சுயநலவாதிகளின்  பார்வையில் நாம்... *ஒழிக்கப்பட வேண்டியவர்கள்* 🏹 8) சந்தர்ப்பவாதிகளின்  பார்வையில் நாம் *ஏமாளிகள்* 🏹 9} எதையும் புரிந்து  கொள்ளாதவர்கள்  பார்வையில்  நாம்  *குழப்பவாதிகள்* 🏹 10} கோழைகளின்  பார்வையில் நாம் *அவசரக்குடுக்கைகள்* 🏹 ✅  *நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும்* *ஒரு தனியான பார்வை உண்டு.*  🕊 ஆதலால் -  பிறரிடம் உங்கள் பிம்பத்தை  அழகாக்கிக் காட்ட  *சிரமப்படாதீர்கள்* 🏹 🥁 மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்ளாவிட்டாலும்...... *நீங்கள் நீங்களாகவே இருங்கள்* 🥁 *மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு...* 🥁 இந்த மனிதர்களிடம்  *எட்ட முடியா

*ஆங்கில மருத்துவம் எப்படி?* *செயல்படுகின்றது, அவசியம் படியுங்கள்* ்

வலையில் சிக்கிய சிறப்பு தகவல்  🔮🔮📿📿📿🔮🔮 *ஆங்கில  மருத்துவம்  எப்படி?*  *செயல்படுகின்றது, அவசியம் படியுங்கள்* ்  *பெரியபதிவு  என்று  புறக்கணிக்க  வேண்டாம்,*  >>>>>>>> <> <>>>>>> <>>>> <<<<>>>> <<< நாம்  வீட்டை  பெறுக்கி அந்த  குப்பையை.  வெளியே  போடாமல் கட்டிலுக்கு  அடியில்  சேர்த்து  வைத்துவந்தால் நிலமை  என்னவாகும்  முதலில்  எறும்பு  வரும், பிறகு கரப்பான்வரும்  கரப்பானை  சாப்பிட பல்லி வரும், பிறகு  எலி வரும்.  நிலைமை  மோசமாகி போனால்  பாம்பு வரும்,  பாம்பு  வந்துவிட்டால் எலிக்கு  மட்டும் பாதிப்பில்லை நம் உயிருக்கும்  பாதிப்பாக  அமையும். இதுதான் ஆங்கில மருத்துவம். உடலில்  கழிவுகள்  சேர  சேர  நோய்கள்  அதிகரிக்கும் , கழிவுகள் வெளியேற வெளியேற நோய்கள்  நம்மை  விட்டு  நீங்கும். ஆங்கில  மருத்துவம்  சாதாரண சளி  முதல் பெரும்  பெரும்  வியாதிகள்  வரை  எதையும் தீர்ப்பதில்லை,  மாறாக  நம்  உடலுக்குள்ளேயே  ஒளித்து  வைக்கின்றது. கடுமையான தலைவலி, மாத்திரையை  போட்டதும் எப்படி  நீங்கியது. வெ

*சர்க்கரை பற்றிய ஆராய்ச்சி அதிர்ச்சியூட்டும் தகவல்கள்* பாருங்கள்

*சர்க்கரை பற்றிய ஆராய்ச்சி   அதிர்ச்சியூட்டும்  தகவல்கள்* பாருங்கள் *நோயை உருவாக்கும் சக்கரை* 🏴நாம் தினமும் உபயோகப்படுத்தும் சக்கரையில் எவ்வளவு நச்சுத் தன்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் நமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும். *ஆதாரம்* http://www.dinamalar.com/news_detail.asp?id=814341 ❌கரும்பிலிருந்து  சாறு  பிழியப்படும்போது, *பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின்* எனப்படும் கெமிக்கலை ஃபுளுய்டு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள். ❌பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் *பாஸ்போரிக் அமிலம்* லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த அமிலம் அழுக்கு நீக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. ❌பின்னர் *சுண்ணாம்பை* 2 சதவிகித அளவில் சேர்த்து *சல்பர்-டை-ஆக்சைடு வாயுவை* செலுத்துகிறார்கள். ❌இதை 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி *நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு* சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது. ❌இதையடுத்து, *பாலி எலக்ட்ரோலைட்டை* சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு ப

ஆண்மகனுக்கு நிறைய விஷயம் வாழ்க்கையின் கடைசி வரைக்கும் புரியாது.

Subbiahpatturajan யோசிக்க வைக்கும் #பதிவு: ஆண்மகனுக்கு நிறைய விஷயம் வாழ்க்கையின் கடைசி வரைக்கும் புரியாது. அதில் ஒரு விஷயம்  நினைத்த நேரம் “சாப்பாடு போடு” என்று வீட்டுப் பெண்களை உத்தரவிடுவதால் அவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது. பெண் காலையில் தோசை சுட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பாள். கணவன் ஏதோ ஒரு வேலையில் இருப்பான். மனைவி சாப்பிடுங்க என்று சொன்னால் “ இரு இரு இந்த வேலையை முடிச்சிட்டு வந்திர்ரேன். இந்த புரோகிராம் முடியட்டுமே, சாப்பிடுற மூட் இல்ல. அரை மணி நேரம் போகட்டுமே” என்பான். மறுபடி அரை மணி நேரம் பிறகு கல்லை வைத்து சூடாகும் வரை காத்திருந்து மாவை ஊற்றி, தோசை வேகும் வரை காத்திருந்து, அதைத் தட்டில் போட்டு சட்னி எல்லாம் ஊற்றி அவனுக்கு கொடுக்க வேண்டும். அனைவருக்கும் தோசை சுட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே ஐந்து நிமிடம் நேரமெடுத்துக் கூடவே சாப்பிட்டிருந்தால் பெண்ணுக்கு எளிதாக இருந்திருக்கும். ஆனால் இது பல ஆண்களுக்குத் தெரியாது. அதுவும் இளைஞர்களாக இருக்கும் ஆண்களுக்கு சுத்தமாக இந்த அறிவு கிடையாது. சொந்தக்காரர்கள் வீட்டில் இருக்கும் போதும் இப்படிச் செய்

ஒருவனுக்கு விஷப்பாம்பு கடித்தும் விஷமில்லை! ஏனாம்?

Subbiahpatturajan ஒருவனுக்கு விஷப்பாம்பு கடித்தும் விஷமில்லை! ஏனாம்? மருத்துவமுறையை மாற்றுங்கள்... டாக்டர்... வாயைத்திற என்பீர்கள்! வயிறு தெரியும்படி வாய்திறப்போம்! நாக்கைநீட்டு என்பீர்கள்! கல்கத்தா காளியாய் நாக்கை நீட்டுவோம்! முதுகைத்திருப்பி மூச்சிழு என்பீர்கள்! அப்போதுதான் உண்மையாய் சுவாசிப்போம்! அவ்வளவுதான்! அஞ்சேல் என்று அருள்வாக்கு சொல்வீர்கள்! வாசிக்கமுடியாத கையெழுத்தில் வாயில்வராத பெயரெழுதி காகிதங்கிழிப்பீர்கள்! மூன்றுவேளை... என்னும் தேசியகீதத்தை இரண்டேவார்த்தையில் பாடி முடிப்பீர்கள்! போதாது டாக்டர்! எங்கள்தேவை இதில்லை டாக்டர்! நோயாளி, பாமரன்! சொல்லிக்கொடுங்கள்! நோயாளி, மாணவன்! கற்றுக்கொடுங்கள்! வாய்வழி சுவாசிக்காதே! காற்றை வடிகட்டும் ஏற்பாடு வாயிலில்லையென்று சொல்லுங்கள்! சுவாசிக்கவும் சூத்திரமுண்டு! எத்துணை பாமரர் இஃதறிவார்? சுவாசிக்கப்படும் சுத்தக்காற்று நுரையீரலின் தரைதொடவேண்டும்! தரையெங்கேதொடுகிறது? தலைதானேதொடுகிறது! சொல்லிக்கொடுங்கள்! சாராயம் என்னும் திரவத்தீயைத்தீண்டாதே! கல்லீரல் எரிந்துவிடும்! கல்லீரல் என்பது க

புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை

Subbiahpatturajan புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை இந்திய அரசு  கணக்கின்படி இந்தியாவில் பேசப்படுகின்ற மொழிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 19,500 மொழிகள். இவற்றில் 121 மொழிகள் 10,000 பேருக்கும் மேல் பேசப்படுகின்றன. மொத்த மக்கள் தொகையில் 96.71 % மக்கள் 18 வது அட்டவணையில் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளை பேசுகிறார்களாம். அந்த 22 மொழிகள் என்னென்ன? அஸ்ஸாம், வங்காளி, போமோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மெய்ட்டி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாமி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது. இதில் மேலும் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்துள்ள மொழிகள் அங்கிகா, பஞ்சாரா, பஜ்ஜிகா, பிஷ்ணுப்ரியா, போஜ்பூரி, லடாக்கி, போடியா, புந்தல்கண்டி, சத்தீஸ்கரி-கோசலி, தாட்கி, இந்திய இங்கிலீஷ், இந்திய பிரெஞ்சு, கார்வாலி (பகாரி), காரோ, கோண்டி, குஜ்ஜார்-குஜ்ஜாரி, ஹர்யான்வி, ஹோ, கச்சாசி, கம்டாபுரி, கர்பி, காஷி, கோடவா(கூர்கி), கோக்போரோக், குமாவ்னி(பகாரி), குருக், குர்மாலி, லெப்சா, லிம்பு, மகாஹி, மிசோ(லுசாய்), முன்டாரி, நாக்புரி, நிகோபாரிஸ், ஹிமாச