முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாரதி கண்ட புதுமைப் பெண் ஆண்ட்ராய்டு போனுக்கு மயங்கிக் கிடக்கிறாள்..?!

Subbiahpatturajan பெண் ஏன் அடிமையானால்???                                              அவளின் அவசர பேராசை குறுக்கு புத்தி விளையாட்டாக செய்யும் அயோக்கியத்தனம் ---  தனது அழகை தானே ரசித்து ரசித்து ஒரு கட்டத்தில் அதற்க்கு மயங்கி அடிமையாகி அதை வைத்து பிற ஆடவரை மயக்கி அந்த மயக்கத்தில்  மயக்கத்தால் பல பிரச்சனைகளை உருவாக்கி  -------  படிக்க சென்ற இடத்தில் வேலைக்கு போன இடத்தில்  என எங்கு பாா்த்தாலும் --- பெண்ணால் தான் பிரச்சனை  தவறு என்று தெரிந்தும் ஆசையை அடக்க முடியாமல் மனதை அலை பாய விட்டு இச்சைக்கு அடிமையானால்  நகை பணம் வீடு காா் பங்களா ஆடம்பரம் என அனைத்திற்க்கும் அடிமையானால் பிறகு அதை தந்த ஆணுக்கு அடிமையானால்  தெரிந்தே தான் அடிமையானால்... ஒரு சில பெண்கள் நல்லவர்களாக இருக்கலாம்....  மற்றபடி  பெரும்பாண்மையான பெண்கள் தெரிந்தே அடிமையானவா்கள் தான் --------        இதில் மற்றவா்களையும் சமூகத்தையும் சொல்லி குறையில்லை ---  அரை குறையாக ஆசையை தூண்டும்படி ஆடை அணிந்தால்  நடந்தால்    தவறுகள் நடக்கும்       அங்கம் தெரியும் ஆடை சுதந்திரம் நாலு சுவற்றுக்குள் சரி பொது வெளியில் சரியா வராது      தவறுகள் நடக்கத

WhatsApp தமிழ் தத்துவங்கள்...

Subbiahpatturajan WhatsApp தமிழ் தத்துவங்கள் 1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது. 2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது. 3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது. 4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம். 5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. 6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது. 7. தீயில் இட்ட நெய் திரும்ப வராது. 8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை. 9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம். 10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான். 11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு. 12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா? 13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல, கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல, சில்லரைக் கடன் சீரழிக்கும். 14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா? 15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. ( எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்) . 16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?

தமிழ்நாட்டில் கோயில்கள் எதற்காக கட்டப்பட்டது?

Subbiahpatturajan தமிழ்நாட்டில் கோயில்கள் எதற்காக கட்டப்பட்டது? தமிழ்நாட்டில் சமுகங்கள் வளர்ந்த கதை... (ஜாதிகள் இல்லை) எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள். இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன. *கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.*ஏன் உண்மையான காரணம்... என்ன.,. ஆசாரிகள்,தச்சர்கள்,கொல்லர் மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை. மூப்பனார், செட்டியார்,முதலியார்கள் *கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு வி

உங்கள் சொந்த இடம் பொது வழிபாதையாக மாற்றப்பட்டிருந்தால்..?

Subbiahpatturajan உங்கள் சொந்த இடத்தை பொது நடைபாதையாக யாரும் உபயோகித்தால்...? உங்களுக்கு சொந்தமான,உங்களது பட்டா இடத்தில் நீங்கள் உங்களை மீறி சிலர் செயல்பட விட்டது தவறு. நீங்கள் உங்கள் உரிமையை அதில் காட்டி இருக்க வேண்டும்.இருபுறமும் வழி யை சில நாட்கள் சங்கிலி கொண்டு அடைத்து அது தனிப்பட்ட வர் இடம் என்பதை அறிவித்து இருக்க வேண்டும். இப்போதும் ஒன்றும் காலம் கடந்து விடவில்லை. பஞ்சாயத்தை எதிர் மனுதாரராக போட்டு தங்கள் இடத்தை ஆக்கிரமித்து உள்ளார்கள் என வழக்கு பதியுங்கள். இருபுறமும் சுவர் எழுப்புங்கள். எவரும் தடுத்தால் தடையாணை பெறுங்கள். (தங்களுக்கு நல்ல முரட்டு வக்கீல் கிடைத்தால்)  ஒரே நாளில் இரவோடு இரவாக பொக்லைன் வைத்து பெயர்த்து எடுத்து பல மைல் தூரம் கொண்டு போய் போட்டு விடுங்கள்.. முடிந்தால் விற்று விடுங்கள். Erace the trace .) பஞ்சாயத்தின் மேலும் சம்பந்தப்பட்ட வர்கள் மேலும் கேவியட் மனு ஒன்றை போடுங்கள். சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதி செலவாகும்.(வக்கீலுக்கு) இடத்தை கவனிக்காது போட்டதற்கான புத்தி கொள்முதல் கணக்கில் செலவெழுதி கொள்ள வேண்டியது தான். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பட்டா என்பது

செல்போன் தொலைந்தால் எப்படி கண்டுபிடிக்கணும்...!!?

Subbiahpatturajan செல்போன் தொலைந்தால் எப்படி கண்டுபிடிக்கணும்...!!? செல்போன் தொலைந்து போனால் இருந்த இடத்திலேயே கண்டுபிடித்து விடலாம். அது மட்டுமில்லாமல் நம்முடைய தனிமனித தகவல்களை பிறருக்கு தெரியாமல் செய்து விடலாம் எப்படி? தனிமனித ரகசியத்தைப் பற்றி கவலை கொண்டால் உங்கள் மொபைலில் உள்ள Fileசை யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ.. இனி இந்த கவலை உங்களுக்கு வேண்டாம். ஆச்சரியமாக இருக்கிறதா உண்மைதான்... தொலைந்து போன செல்போனில் உள்ள தகவல்களை லாக் செய்ய முடியும் தவறவிட்ட திருடப்பட்ட செல்போனில் உங்கள் தகவல்களை அழிக்க முடியும். இந்த வசதிகளை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.! Find my device மூலம் இதை எளிதாகச் செய்ய முடியும். முதலில் உங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஒரு அப்ளிகேஷன் மூலமாக இதை சாத்தியப்படுத்தலாம் Find my device டவுன்லோட் செய்யுங்கள். பிறகு உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் கொண்டு log in செய்யுங்கள். உங்கள் ஈமெயில் பாஸ்வேர்டு கொடுத்து லாக் இன் செய்து கொள்ளுங்கள். அப்போது ஸ்கிரீன் இடதுபுறம் நான் தவறவிட்ட செல்போனின் மாடல் பேட்டரி அளவு அதற்குக் கீழே sound erase lock என்ற மூன்

தமிழ்நாட்டில் எத்தனை DCCB கிளைகள் உள்ளன?

Subbiahpatturajan தமிழ்நாட்டில் எத்தனை DCCB கிளைகள் உள்ளன? சென்னை மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட். சிதம்பரனார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட். கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட். கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட். தரம்புரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட். திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட். காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட். கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட். கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட். மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட். நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட். வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட். புதுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட். ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட். சிவகங்கை (பசும்பொன்) மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட். தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட். திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட். திர

In the middle of the road when traveling at night, pathetic women ... if standing ...

Subbiahpatturajan இரவு நேர பயணத்தின் போது பரபரப்பான திகிலான சம்பவம்* ➖➖➖➖➖➖➖ *இரவு நேரங்களில்  பயணம் செய்யும்போது நடு வழியில், பரிதாபமாக பெண்கள் யாராவது நின்று, உதவி கேட்பதுபோல் நிலைமை ஏற்பட்டால் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்*!!. *இதுபோன்ற ஒழுக்க கேடுகெட்ட மனிதர்கள். தேசம் எதை நோக்கிப் பயணிக்கிறது என்ற பயம் வருகிறது.  ஒரு தேசத்தில்  சந்தர்ப்ப சூழ்நிலையில் உண்மையிலேயே ஒரு அப்பாவிப் பெண் பாதிக்கப்பட்டால், எல்லாவற்றுக்கும் யார் பொறுப்பு ஏற்க வேண்டும்? என்பதுதான் தற்போதைய கேள்வி...*!!

கணவன் மனைவி போல குடும்பம் நடத்துபவர்கள் தான் ஆரியர்களும் திராவிடர்களும்..

Subbiahpatturajan கணவன் மனைவி போல அடித்துக்கொண்டே ஒன்றாக குடும்பம் நடத்துபவர்கள்தான் ஆரியர்களும்,  திராவிடர்களும். வைகை நாகரிகம், பொருணை நாகரிகம் எனும் பெயர் சூட்டல்களும் உள்ளடி ஆரிய - திராவிட சூழ்ச்சிகளும் ! தென்குமரி தொடங்கி வடவேங்கடம் வரை பரவியிருந்த தமிழ்நாடு - என்கிறது தமிழர் சங்ககால ஆவணங்கள். இந்தியா முழுதும் தமிழர்கள் பரவி வாழ்ந்தார்கள் என்கிறார் டாக்டர் அம்பேத்கர். தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரத்தை மையமாகக்கொண்டு கிழக்கு ஆசியா முழுவதும் ஆட்சி ஆண்டிருக்கிறார்கள் ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் என்கிறது வரலாற்று ஆவணங்கள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை,  உண்மையில் தொல்லியல் இடங்களில் கிடைக்கின்ற ஆவணங்கள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன. தென்னிந்தியா முழுவதும் தமிழ் கல்வெட்டுகள் ஏராளமாய் உள்ளன. இந்திய நிலப்பரப்பில் கிடைக்கிற 100 விழுக்காடு கல்வெட்டுகளில் 60 விழுக்காட்டிற்கும்  அதிகமான கல்வெட்டுகள் தமிழர்கள் கல்வெட்டுகளே. தெலுங்கு மொழி செம்மொழி அந்தஸ்தைப் பெற்றது தமிழ்க் கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டே.  தமிழ் மொழியில்தான் அதிக எண்ணிக்கையிலான ஓலைச்சுவடிகள் உள்ளன. இத்தனை பெருமைகளை கொ

Top 10 Reasons Why Good Family Disorders ..?! ஒரு நல்ல குடும்பம் சீரழிய 10 முக்கிய காரணங்கள்..!?

Subbiahpatturajan *ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கு 10 முக்கிய  காரணங்கள்:- 1. குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது. 2. சமூக அழுத்தத்தின் கீழ் விடுமுறைகள் உள்ளது . 3. அந்தஸ்து என்று கருதி கார் வாங்குவது. 4. வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவைத் தவிர்ப்பது மற்றும் வார இறுதி நாட்களில் தேவையில்லாமல் வெளியே சாப்பிடுவது. 5. சலூன்கள், பார்லர்கள் மற்றும் ஆடைகளுக்கு brand conciousnes  குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அடிமையாகுதல். அதனை பெருமையாக கருதுதல் . சீரழிந்த வாழ்க்கை முறை spoiled life  style மருத்துவச் செலவுகளை அதிகரிக்கிறது. 6.  உறவுகளுடன் ஒன்றாக நேரத்தை செலவழிப்பதை விட அதிக பணம் செலவழிப்பதன் மூலம் பிறந்தநாள் மற்றும் வருடாந்திர விழாக்கள் என்று  சிறப்பாக்க முயற்சிப்பது. 7. பிரமாண்ட திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்கள் மூலம் குடும்ப சேமிப்பை சீரழிப்பது. 8. மருத்துவமனைகள், பள்ளிகள்,  வணிகமயமயான அவல நிலையில் அவற்றிற்கு செலவு செய்வது  9. நீங்கள் இதுவரை சம்பாதிக்காத  பணத்தை கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலவு செய்தல். 10. வீடு மற்றும் அலுவலகத்தின் உட்புறங்களில் தேவை

Jai Bhim Ambedkar latest 2021 நான் இல்லாமல் போயிருந்தால் உன் உடையே கோவணம்தான் .?

Subbiahpatturajan Jai Bhim Ambedkar latest 2021 *நான் அம்பேத்கார் பேசுகிறேன்*.........| தனித்தொகுதியில் வென்றதற்கு பூஜை செய்ய சென்றவனே ...........| நான் போராடி பெற்றுத்தந்த வரலாற்றையே மறந்துபோனாய்..............| அரசு வேலை கிடைத்தவுடன்  *தீ மிதிக்கச்சென்றவனே*  நானில்லை என்றால் வேலை மட்டுமல்ல கல்வித்தகுதி கூட  உனக்கு கைநாட்டுதான்..............|  சேரியிலே பிறந்திருந்தும் ஆடையகம் வைத்திருப்பது  உனக்கு தெறியுமா....? நான் இல்லாமல் போயிருந்தால் உன் உடையே கோவணம்தான்  பணம் கொஞ்சம் வந்தவுடன பழசையெல்லாம் மறந்தவனே  நீ சேரித்தாண்டி நடப்பதற்கு  என் ஆயுளையே கரைத்தவன் நான்.........| படித்து பட்டம்வாங்கி சொத்தில் பங்குகேட்டு  வழக்கில் வென்றதற்கு  கடவுளுக்கு நன்றிசொல்லும் கண்ணான *பெண்ணிணமே... உனக்குத்தெரியுமா..........? கடவுளினூடாகத்தான்  *நீ அடுப்படிக்கும்* *அந்தப்புரத்தற்கும்*  மட்டுமே என அச்சடித்து சொல்லப்பட்டாய் .........| சொந்த வீடு கட்டியவுடன் பூஜையறை வைத்தவனே உனக்குத்தெரியுமா......? எல்லாக்கடவுளும் இருந்தபோதுதான்  நீ கேவலமா நடத்தப்பட்டாய்  *யாரால் நீ மனிதனாக* *மதிக்கப்பட்டாயோ*  *அந்தப் புகைப்ப

தினமும் மாலை ஆகிவிட்டால் பாட்டிலை தொடாமல் இருக்க முடியாது

Subbiahpatturajan தமிழர்கள்  உடல் உழைப்பை விரும்புவதில்லை....!!! ஏன்...? வடநாட்டு தொழிலாளர் தமிழ்நாட்டில் பெருக காரணம் என்ன? - நேர்மையான  அலசல் ! கொரனா வந்து 3 மாதங்களாகிவிட்டது...... அந்த நோய் பற்றிய அன்றாடச் செய்திகள் அனைத்தும்....... பழைய செய்திகளாகிவிட்டது.. மக்களுக்கும் பழகிவிட்டது......இந்தியாவில் டிசம்பருக்குள் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று செய்திகள்......முதலில் நம்மை பற்றிய சுயபரிசோதனையில் இருந்து தொடங்குவோம்... கடந்த 5-10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது... இதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம்...ஒரு பக்கம் வேலை இல்லை என்று திண்டாட்டம்.. இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை என்று திண்டாட்டம்...  எந்த படிப்பு படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற புலம்பல்.. எந்த தொழில் நடத்தவும் சரியான ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற விசும்பல்... பல தொழில் நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய முதலீடுகளில் தொடங்கப்பட்ட வேகத்தில் மூடப்படுகின்றன... எங்கு பார்த்தாலும் "எந்த பிசினசும் சரியில்லைங்க" என்ற பேச்சுகள்... இதற்கு ந

கணவன் ஏழு வருஷம் காணாமல் போனால் அவரை செத்தவராகக் கருதலாமா..?

Subbiahpatturajan கணவன் ஏழு வருஷம் காணாமல் போனால் அவரை செத்தவராகக் கருதலாமா..? *கணவன் உயிரோடு இருக்கும் போது!* கணவர் உயிரோடு இருக்கும்போது விதவை பென்ஷன் வாங்கியதோடு அதற்கு நியாயம் கேட்ட பெண்! தலைசிறந்த இயக்குனரும்,  ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஞான  ராஜசேகரன்  தனக்கு நேர்ந்த அனுபவங்களைப் புத்தகமாக எழுதி வருகிறார்.. அதில் இருந்து சில பகுதிகளை முக நூலிலும் தந்து வருகிறார். சமீபத்திய பதிவு இது... அணுகுமுறை வித்தியாசம் தமிழ்நாட்டு மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் கேரள மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கேரளாவில் பாமர மக்களுக்கு இருக்கின்ற பொது அறிவு நம்மை வியப்பில் ஆழ்த்தி விடும்.  நான் 1985 இல் பாலா சப் கலெக்டராக இருந்தபோது ஒருநாள் ஒருவர் என்னை அவசரமாகப் பார்க்க வேண்டுமென்று என் ஆபீசுக்கு வந்திருந்தார். நான் அவரை உள்ளே வரச் சொன்னேன்.  'என்ன விஷயம்?' என்று கேட்டேன். அவர் பதற்றத்தோடு விவரித்தார். "நான் தலையோலப்பறம்பு கிராமத்தில் இருந்து வருகிறேன். அங்கே ஒரு மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது. அந்த ஊரில் விதவையே ஆகாத ஒரு பெண்ணுக்கு விதவைப்பென்ஷன் சாங்ஷன் 

We conduct marriage and all ceremonies Rituals in Tamil culture..!!!

Subbiahpatturajan திருமணம் மற்றும் அனைத்து  சடங்குகளையும் தமிழ் முறையில் நடத்தி தரப்படும்... தமிழ் மந்திரங்கள் ஓதி சடங்குகளை செய்வோம்  உங்கள் இல்லங்களில் தமிழ் அந்தணர்களைக்கொண்டு, தமிழ் மா மந்திரங்கள் ஓதி சடங்குகள் நடத்த வேண்டுமா? சென்னை அம்பத்தூரில் "மங்கையர்க்கரசியார் திருக்கோவில் தெய்வத்தமிழ் வழிபாட்டு மன்றம்" என்ற பெயரில் திருக்கோவில் பணிகள், வீடுகளில் ஆன்மீகச்சடங்குகளை தமிழில் செய்யும் அமைப்புள்ளது. இந்த அமைப்பின் தலைவர் செந்தமிழ் ஆகம அந்தணர் சிவ.மு.சுகுமாரன் அவர்கள். செயலாளர் செந்தமிழ் ஆகம அந்தணர் த.கே.சங்கர், பொருளாளர் செந்தமிழ் ஆகம அந்தணர் சிவ. மு. கன்னியப்பன்.  இந்த அமைப்பினர் ஆலய குடமுழுக்கு முதல் வீட்டில் நடக்கும் திருமணம் மற்றும் அனைத்து  சடங்குகளையும் தமிழ் முறையில் நடத்தி வருகிறார்கள்.  பன்னிரு  திருமுறைகளை பயன்படுத்தி தமிழ் மந்திரங்களை உருவாக்கி கணபதி வேள்வி, திருமுறைப்படி திருமணச்சடங்கு மஞ்சள் நீராட்டு விழா புதுமனை புகுவிழா, கோவில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) வருட முழுக்கு, போன்ற அனைத்து சடங்குகளையும் நடத்திவருகிறார்கள்,  மரணம் அடைந்தவர்களுக்கு திருவடிப

How many type of rain in Tamil language..?

Subbiahpatturajan How many type of rain in Tamil language..? தமிழில், 14 வகையான மழை உண்டு! 1. மழை 2. மாரி 3. தூறல் 4. சாரல் 5. ஆலி 6. சோனை 7. பெயல் 8. புயல் 9. அடை (மழை) 10. கன (மழை) 11. ஆலங்கட்டி 12. ஆழிமழை 13. துளிமழை 14. வருள்மழை வெறுமனே, மழைக்குப் பல பெயர்கள் அல்ல இவை! ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு! இயற்கை நுனித்த தமிழ்! ஏன் அடைமழை என்கிறோம்? அடைமழை = வினைத்தொகை! ☆ அடைத்த மழை ☆ அடைக்கின்ற மழை ☆ அடைக்கும் மழை விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை = அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை! கனமழை வேறு! அடைமழை வேறு! மழ = தமிழில் உரிச்சொல்! ☆ மழ களிறு= இளமையான களிறு ☆ மழவர் = இளைஞர்கள் அந்த உரிச்சொல் புறத்துப் பிறப்பதே.. மழை எனும் சொல்! மழ + ஐ இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் மழை எ. காரணப் பெயர்! மழை வேறு/ மாரி வேறு!  அறிக தமிழ் நுட்பம்! இயற்கை! மழை/மாரி ஒன்றா? ☆ மழை= இள மென்மையாக அலைந்து பெய்வது, காற்றாடி போல! ☆ மாரி = சீராகப் பெய்வது, தாய்ப்பால் போல! மார்+இ= மாரி! தாய் மார்பிலொழுகு பால் போல், அலையாது சீராகப் பெயல்! அத