முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Where is this habit? இந்த பழக்கம் எங்க போச்சுங்க?.... யார் மாத்துனது? ஏன்?

Subbiahpatturajan 30 வருஷத்துக்கு முன்னால ஒரு கல்யாணத்துக்கு அழைப்பு வந்தா... 10 நாளுக்கு முன்னாடியே குடும்பத்தோடு போயிருவோம். நம்ம வீட்டை மறந்து உறவு வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்வோம்.. பந்தி முதல் பந்தல் வரை சலிக்காம பாப்போம்... விடிய விடிய பாக்காத உறவுகளுடன் பேசி தூங்காம, கோலமும், மருதாணியும் வைப்போம்... வீட்டில் அமர்வதற்கு இரும்பு கதிரை அல்லது மர கதிரை போடப்பட்டிருக்கும்.  பெண்கள் அமர கலர் கலரா பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும். அதுல குழந்தைகளும் பெண்களும் உறவுக் கதைகளை பேசிட்டிருப்பாங்க. சின்ன சின்ன பசங்க எல்லாம் ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள். பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு, வீட்டுக்கதைகள் முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள். சாப்பாட்டு பந்தியில் வெளியாட்களை பாக்கவே முடியாது. உறவுகளே பரிமாறினார்கள். நிச்சயம் ஒரு சண்டையும் கோபித்து கொண்டு அடம்பிடிக்கும் நிகழ்வும் நடக்கும். பொண்ணு மாப்பிள்ளை போனாலும் நாம் ஊர் திரும்ப மனசு வராது. மனசு நெறைய சந்தோசத்துடனும், கனத்துடனும் திருப்புவோம். இப்படியாக.. ... அங்கு நடந்த நிகழ்வுகளின் நினைவு சுவடுகள் மறைய மாதங்

HDFC BANK Customer pls note this point HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு

Subbiahpatturajan பிரபல வங்கி செய்த முக்கிய மாற்றம்! இனிமே அந்த பிரச்சனையே இல்லை வாடிக்கையாளர்களுக்காக எச்.டி.எப்.சி வங்கி அறிமுகப்படுத்திய திட்டம் தான் இந்த Cardless cash withdrawal. எச்டிஎஃப்சி வங்கியின் ‘Cardless cash withdrawal’ திட்டம் குறித்து இதுவரை தெரியாதவங்க தெரிஞ்சிக்கோங்க. எச்.டி.எப்.சி வங்கி சில வாரங்களுக்கு முன்பு அப்டேட் செய்த இந்த திட்டம் குறித்து இதுவரை தெரிந்து கொள்ளாதவர்கள் இதன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். இந்த சூப்பரான திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முன்பெல்லாம் பர்சில் எப்போதுமே பணம் இருக்க வேண்டிய சூழல் போகி கார்டுகள் நிரம்பின. ரொக்க பரிவர்த்தனை குறைந்து கார்டுகள் பயன்பாடு அதிகரித்தது. அதன் பின்பு ஃபோன்பே ஆப்ஸ்கள் மூலம் பணம் செலுத்தும் முறைகள் பயன்பாட்டிற்கு வந்தன. இப்படி அடிக்கடி மாற்றங்கள் ஒருபக்கம் நிகழ்ந்து கொண்டிருக்க வங்கிகளும் தங்கள் பங்குக்கு அவ்வப்போது அப்டேட்டுகளை செய்து வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்காக எச்.டி.எப்.சி வங்கி அறிமுகப்படுத்திய திட்டம் தான் இந்த Cardless cash withdrawal. இந்த திட்டம் வழங்கும் வசதி என

வாங்கும் பொருள் நன்றாக இருக்கிறதா என்று பரிசோதித்து வாங்க அனுமதிக்கிற வண்டிக்கார அம்மாவிடம் ஊர், உலக நியாயம் எல்லாம் பேசுகிறோம்.

Subbiahpatturajan முன்னுரை: இந்த உலகத்தில் எல்லா மனிதர்களும் கெட்டவர்கள் என்று சித்தரிப்பதைப் போல இந்தக் கட்டுரை சிலருக்கு அநியாயமாக படலாம்.  ஆனால் நான், நீங்கள் என நம் எல்லோருக்குள்ளும் ஊறிப் போயிருக்கும் நாம் கவனிக்காத மனஉணர்வின் விவரணைகள்தான் இவை. ஒரு நட்சத்திர ஹோட்டலில் இரவு முழுக்கக் குடித்து, கும்மாளமிட்டு நிலைதடுமாறி இரண்டு பேர் துணையுடன் தவழ்ந்து காரில் ஏறிப்போகிற மனிதர், மறுநாள் காலை டாஸ்மாக் வாசலில் கால் இரண்டையும் பரப்பிக்கொண்டு தலைதொங்கி, போதையில் கிடக்கும் ஒருவரைப் பார்த்து 'நாஸ்ட்டி பீப்பிள்’ என்கிறார்.  நேற்று இரவு அவரும் 'நாஸ்ட்டி பீப்பிள்’ ஆகத்தான் இருந்தார்! சவாரிக்காக அல்லாடி நிற்கும் ஆட்டோ மீது சர்ரென்று லத்தியை வீசி, 'எடு வண்டியை’ என்று அதட்டும் போலீஸ்காரர், சிக்னல் முனை ஷாப்பிங் மால் வாசலில் காரை நிறுத்திவிட்டுப் போனவரிடம், 'ஏன் சார் இப்படிப் பண்றீங்க?’ என்று குசலம் விசாரித்து, சலாம் அடித்து அனுப்பிவைக்கிறார். லத்தியால் ஆட்டோவில் அடித்ததைப் போல கார் டிக்கியில் அடிக்க அவருக்கு மனம் வருவது இல்லை. 'போன மாசம் வரை 550 ரூபாய்தான் டிக்கெட். இப்போ 750

எப்படா திருந்தப் போறீங்க தமிழர்களே...தமிழர்கள் நாம் இனி இவர்களை அன்னாந்து பார்க்க கூட முடியாது.

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #lifeworkshop இத படிக்கும் போது உங்களுக்கு ரோசம் வந்தால் நீங்க உண்மையான தமிழர் தான்... கம்மா  நாயுடுக்களின் மாபியா..!(தமிழ்நாட்டு  மாபியா மட்டும்) மிகுந்த  செல்வாக்கு வாய்ந்தவர்களில் 25 பேர் மட்டும் .    1.பெரியவீடு வெங்கட்டராம நாயுடு (PSG குழுமம்)    2.ஜி,டி,நாயுடு    3.பி.ராமசந்திரன் ( முன்னாள் (மத்திய  அமைச்சர்,கேரளா ஆளுநர்)    4.கே.கோவிந்தசாமி நாயுடு (KG குழுமம்)    5.வி.ராமசாமி நீதிபதி    6.கெங்குசாமி  நாயுடு (முதல் தலைமுறை தொழிற்பேட்டை  ரவுடி)    7.வை.கோபால்சாமி  (கிரேக்க வரலாற்று  பேராசிரியர்)    8.எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் (காங்கிரசு)    9.வெலகபுடி லக்ஸ்மன் தத்   10.தாமோதரசாமி நாயுடு(அண்ணபூர்ணா குழுமம்)   11.கே.ரகுபதி  மேயர்   12.சுதர்சனம்  காங்கிரசு சபாநாயகர்   13.பாலகுருசாமி  EX.வேந்தர்  அண்ணா பல்கலைகழகம்    14.பக்தவச்சலம்  (KG மருத்துவமனை )    15.தாமோதரன் EX துணை வேந்தர் சென்னை பல்கலைகழகம்    16.பாக்கியராஜ் நடிகர்,இயக்குனர்     17.ஸ்ரீதேவி  நடிகை (சினேகா,கௌதமி போன்ற  சில்வண்டுகள் கணக்கில்              வராது)     18.கோவிந்தப்பா வேங

தமிழர்கள் இனி சாம்பாரையும் உரிமைகொண்டாட முடியாது .ஏன்...?

Subbiahpatturajan #சினார்தமிழன் #southindiansambar #copyright சாம்பாரின்_கதை :* குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு சாம்பார் தென்னிந்தியாவின் உணவில் இரண்டறக் கலந்துவிட்ட துணைக்கறி ஆகும்.  சாம்பார் இல்லாத விருந்தையோ அன்றாடச் சமையலையோ தமிழர்கள் கற்பனைகூடச் செய்து பார்க்க இயலாது. தமிழர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத இடம்பிடித்துள்ள சாம்பார் தமிழ் மரபு சார்ந்த துணைக்கறி உணவு என்று பலர் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தனர். இனி அவ்வாறு பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது.  இந்த சாம்பார் மராத்தியர்கள் தமிழகத்திற்கு மராத்தியர்கள் அளித்த கொடை என்று தஞ்சை மராத்தியர் வரலாறு பதிவு செய்துள்ளது. முதலாம் சாஹூஜி போன்சலே காலத்தில் தான் தஞ்சை அரச மாளிகையின் சாரு விலாச போஜன சாலையில் சாம்பார் முதன் முதலாகச் சமைக்கப்பட்டது. இந்தக் கதை மிகவும் சுவாரஸ்யமானது. சாம்பார் சமைக்கப்பட்டது ஏன் எப்போது எப்படி பார்ப்போமா?* சாம்பார், குழம்பு வகையை (Sauce or Gravy) சேர்ந்த, அரைத் திடமான துணைக்கறி / தொடுகறி உணவு ஆகும். உலகம் முழுவதிலும் சமைக்கப்படும் உணவு வகைகளில் குழம்புகள் (Sauces) முக்கிய அங்கம் வகிக்கின்றன. பெரும்பாலா

உங்கள் திருமணமான புதிதில் இருந்த அதே வசந்தம் மீட்டெடுக்கப்படும்…

Subbiahpatturajan #சினார்தமிழன் #lifeworkshop #reallifestyle #Lifeworkshop தயவு_செய்து திருமணமான_பெண்கள் மட்டும்_படியுங்கள்…!!! கல்யாணம் ஆன புதுசுல உங்க கணவர் சமயம் கிடைக்கும்போதெல்லாம் உங்களை கட்டி அணைத்திருப்பார்… முத்தம் கொடுத்திருப்பப்பார்… சமையலறைக்கு அடிக்கடி ஓடி வந்திருப்பப்பார்…. உங்கள் பிறந்தநாளுக்கு சிறப்பு பரிசுகள் கொடுத்திருப்பப்பார்…. நள்ளிரவில் வாழ்த்தி இருப்பார்….. திருமணநாளுக்கு புடவையோ நகையோ பரிசளித்திருப்பார்…. ஆனால்.. வருடங்கள் கூட கூட இதெல்லாம் குறைந்திருக்கும்…. உங்களை கட்டி அணைப்பதுவும், முத்தம் கொடுப்பதுவும் வெகுவாக குறைந்து போயிருக்கும்.. சமயங்களில் அறவே நின்றுகூட போயிருக்கும்…. சமையலறை பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டார்… பிறந்தநாளை மறந்துகூட போயிருப்பார்… எல்லா நாளையும் போல திருமண நாளையும் ஒரு சாதாரண நாளாக கடந்துகொண்டிருப்பார்.. இதுதான்_எதார்த்தம்….. ஆரம்பத்தில் ஓடி வந்து ஓடி வந்து கட்டிப்பிடித்தீர்களே… இப்போது நானாக அருகில் வந்தால் கூட கசகசன்னு இருக்குன்னு புரண்டு படுக்கிறீங்களே…. என்னோட பிறந்தநாள் எப்போன்னு கூட தெரியலையே…. என்பது போன்ற பல ஆரம்பகால விஷயங்கள

தமிழை வளர்த்த தமிழே பிச்சை எடுக்கிறது.வாழ்க தமிழ்நாடு

Subbiahpatturajan • •• ஓரிரு நிமிடங்கள் ஒதுக்கி இதை படிக்க வேண்டுகிறேன் ••• இன்று பிற்பகல் ECR இஞ்சம்பாக்கத்தில் ஒரு ஹோட்டலுக்கு குடும்பத்துடன் சென்றேன். கொரோனா wave 2 க்கு பிறகு பிள்ளைகளை பொது இடத்துக்கு இப்போது தான் கூட்டி செல்கிறேன், அதுவும் இன்று பெரிய மகள் தமிழிசை பிறந்த நாள் என்பதால். ஹோட்டலுக்குள் ஒரு ஊரே இருந்தது வெளியிலும் கூட்டம். நேரம் இரண்டு மணி ஆனதால், வேறெங்கும் செல்ல முடியாது, இந்த கூட்டத்திலும் நிற்பதா என இருவேறு எண்ணங்கள் எங்களுக்குள். கிளம்பி விடுவோம் என ஏதோ சொல்ல சற்று தள்ளி நிறுத்தப் பட்டுருக்கும் காரை நோக்கி நடந்தோம். காரில் நான் ஏறி உடகார, பின்னர் வந்த மனைவி ஏறும் போது ஒரு அம்மா பாவமா நம்ம கார பார்த்துகிட்டே இருக்காங்க என்றார். அதற்குள் கார் கண்ணாடி அருகே அந்த அம்மா வந்து நின்றார். கண்ணாடியை நான் கீழே இறக்க.. ஐயா கொஞ்சம் காசு கிடைக்குமா என உடைந்த குரலில் சொன்னார்... ப..ஸ்...ஸுக்கு இல்ல... என்றார் உடைந்த குரலில் தயங்கி தயங்கி! பார்த்தவுடன் வாழ்ந்த குடும்பம் என்றே பட்டது... எழுபது வயது க்கு மேல வயது.....சீரான உடை.... கையில் பழைய handbag... மாஸ்க் போட்டுக்கொள்ள வேண்ட

பனை மரத்தில் இருந்து பெறப்படும் பொருட்கள்

Subbiahpatturajan #சினார்தமிழன் பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை, 1. 🌴ஆண் பனை 2. 🌴பெண் பனை 3. 🌴கூந்தப்பனை 4. 🌴தாளிப்பனை 5. 🌴குமுதிப்பனை 6.🌴சாற்றுப்பனை 7. 🌴ஈச்சம்பனை 8. 🌴ஈழப்பனை 9. 🌴சீமைப்பனை 10. 🌴ஆதம்பனை 11. 🌴திப்பிலிப்பனை 12. 🌴உடலற்பனை 13. 🌴கிச்சிலிப்பனை 14. 🌴குடைப்பனை 15. 🌴இளம்பனை 16. 🌴கூறைப்பனை 17. 🌴இடுக்குப்பனை 18. 🌴தாதம்பனை 19. 🌴காந்தம்பனை 20. 🌴பாக்குப்பனை 21. 🌴ஈரம்பனை 22. 🌴சீனப்பனை 23. 🌴குண்டுப்பனை 24. 🌴அலாம்பனை 25. 🌴கொண்டைப்பனை 26. 🌴ஏரிலைப்பனை 27. 🌴ஏசறுப்பனை 28. 🌴காட்டுப்பனை 29. 🌴கதலிப்பனை 30. 🌴வலியப்பனை 31. 🌴வாதப்பனை 32. 🌴அலகுப்பனை 33. 🌴நிலப்பனை 34. 🌴சனம்பனை பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் : பனை உணவு பொருட்கள் : 🌴நுங்கு 🌴பனம் பழம் 🌴பூரான் 🌴பனாட்டு 🌴பாணிப்பனாட்டு 🌴பனங்காய் 🌴பனங்கள்ளு 🌴பனஞ்சாராயம் 🌴வினாகிரி 🌴பதநீர் 🌴பனங்கருப்பட்டி 🌴பனைவெல்லம் 🌴சில்லுக் கருப்பட்டி 🌴பனங்கற்கண்டு 🌴பனஞ்சீனி 🌴பனங்கிழங்கு 🌴ஒடியல் 🌴ஒடியல் புட்டு 🌴ஒடியல் கூழ் 🌴 புழுக்கொடியல் 🌴முதிர்ந்த ஓலை 🌴 பனை குருத்து உணவுப்பொருள் அல்லாதவை : 🌴பனை ஓ

தமிழ்நாட்டை மட்டும் தனியா போக விட்டுருங்க... ப்ளீச்...

Subbiahpatturajan "இந்தியா விற்பனைக்கு..." மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்! ஒவ்வொன்றாக தனியாருக்கு விற்பனை செய்வதை விட, ஒரேயடியாக "இந்தியா விற்பனைக்கு" என அறிவித்து விடுங்கள்! அதுக்கு முன்னாடி தமிழ்நாட்டை மட்டும் தனியா போக விட்டுருங்க... ப்ளீச்... ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பாஜக நிதி மந்திரி நிர்மலா

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம் என்று க

Afghanistan latest Top story . ஆப்கானிஸ்தான் புதிய செய்திகள்.

Subbiahpatturajan Panjshir #Afghanistan #topnews பஞ்ச் சீர் : பஞ்ச் சீர் என்பது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மாவட்டம் இந்த மாவட்டத்தில் தாலிபான்கள் இன்னும் நுழைய முடியவில்லை. Panjshir #Afghanistan #topnews பஞ்ச் சீர் : பஞ்ச் சீர் என்பது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மாவட்டம் இந்த மாவட்டத்தில் தாலிபான்கள் இன்னும் நுழைய முடியவில்லை. பஞ்ச் சீர் என்றால் என்ன? பஞ்ச் சீர் என்றால் ஐந்து தலைகளுடன் கூடிய சிங்கங்கள் என்று பொருள். பஞ்ச் சீர் சிறப்பு: பஞ்ச் சீர் மாவட்டத்தில் மலை முகடுகளுடன் கூடிய இயற்கை அரண்களாக அந்த மாவட்டம் அமைந்துள்ளது இதுநாள் வரை அமெரிக்க ரஷ்ய படைகள் கூட அங்கு சென்றதாக வரலாறு இல்லை. அகமது ஷா அகமது மசூத் anti Taliban. சலே என்று சொல்ல கூடிய துணை அதிபர் இந்த பஞ்ச் சீர் மாவட்டத்தில் தான் இருக்கிறார்கள் தாலிபான்கள் இங்கு வந்துவிடுவார்கள் என்று விழிப்புடன் இந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள நதியின் கரைகளில் அந்த ஊர் மக்களுடன் அங்குள்ள இளைஞர் படையை சலே அவர்கள் நிறுத்தி வைத்துள்ளார். பரிதாபம் இதில் பரிதாபம் என்னவென்றால் அந்த மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 1லட்சத்து 50 ஆயிரம் மக்கள் மொத்த தாலிபான்க

world first human .உலகின் முதல் மனிதனாக இல்லாத போதும் ஆரியனே உயர்ந்தவன் மற்றவர்கள் அல்ல !!

Subbiahpatturajan  #Worldfirsthuman ஐந்து மாநிலங்களின் கழிவுகளை சுமந்து வந்தாலும் கங்கைதான் புனித நதி, காவிரி அல்ல !! ஐவரைக் கலந்தாலும் பாஞ்சாலிதான் பத்தினி, கண்ணகி அல்ல !! பல மொழிகள் கலந்திருந்தாலும் இந்தியும், சமஸ்கிருதமும் தான்  உயர்ந்த மொழி, தமிழ் அல்ல !! உலகின் முதல் மனிதனாக இல்லாத போதும் ஆரியனே உயர்ந்தவன் மற்றவர்கள் அல்ல !! மனித வாழ்வியலுக்கான உலகப் பொதுமறையாக போற்றப்பட்டாலும் இராமாயணம் மகாபாரதம்  போன்ற புராணப் புரட்டுகள்தான் உயர்ந்தவை, திருக்குறளோ,  சங்க இலக்கியங்களோ அல்ல !! எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்  ஆரிய இந்துத்துவா கழிசடைகள் ஆளும் இந்தியாவின் பார்வை இதுதான் இது மாறாது.

Real Lifestyle " *செலவு* " போக மீதியை சேமிக்காதே.

Subbiahpatturajan #சினார்தமிழன் #மக்களின் மனநிலை #Reallifestyle  #சினார்தமிழன்   #Reallifestyle # சின ார ்தம ிழன ் # RealLifestyle *வாழ்வில் தெரிந்துகொள்ள வேண்டியவை* சில காயங்கள் " *மருந்தால்* " சரியாகும்.  சில காயங்கள் " *மறந்தால்* " சரியாகும். " *ஆடம்பரம்* " அழிவைத்தரும். " *ஆரோக்கியம்* " நல்வாழ்க்கை தரும்.  கார் இருந்தால் " *ஆடம்பரமாக* " வாழலாம் .  மிதி வண்டி இருந்தால் " *ஆரோக்கியமாக* " வாழலாம். " *வறுமை* " வந்தால் வாடக்கூடாது.  " *வசதி* " வந்தால் ஆடக்கூடாது.  *வீரன்*  சாவதே இல்லை.  " *கோழை* " வாழ்வதே இல்லை. தவறான பாதையில் " *வேகமாக* " செல்வதைவிட.  சரியான பாதையில் " *மெதுவாக* " செல்லுங்கள். மனிதனுக்கு ABCD " *தெரியும்* " ஆனா *"Q"* ல போகத் "தெரியாது". எறும்புகளுக்கு ABCD " *தெரியாது* " ஆனா *"Q"* ல போகத் "தெரியும்". ஆயிரம் பேரைக்கூட " *எதிர்த்து* " நில்.  ஒருவரையும் " *எதிர்பார்த்து* " நிற்காதே. த

Sagayam IAS *'உனக்கு இங்கே நிற்கும் உரிமையை வாங்கிக்கொடுத்ததே என் பாட்டன்தானடா*

Subbiahpatturajan # sagayamIAS #cinartamilan #சினார்தமிழன்   #தமிழர்கள் *மதுரையில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது திங்கள்கிழமை மனுநாளில் மனு வாங்கி முடித்துவிட்டு வெளியில் வந்தேன்.* *கைலி, அழுக்கு* *சட்டையோடு 45 வயது மதிக்கத்தக்க* *ஆசாமி ஒருவர் என் எதிரே* *வந்தார். 'ஏன் முன்னாடியே வரக் கூடாதா?* *கிளம்பும்போது வருகிறீர்களே...* *நீங்கள்யார்?’ என்று அவரிடம் கேட்டேன்.* *'அய்யா... நான் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பேரன்.*  *நானும் என் தம்பியும் கட்டடங்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறோம்.*  சமீபத்தில் ஒரு உயரமான கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்கும்போது என் தம்பி தவறி விழுந்துவிட்டான்.   இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். அவனுக்காக உதவி கேட்டு இங்கே வந்தேன்.  வெளியில் இருக்கும் காவலாளி என்னை உள்ளே விடாமல் துரத்தி அடித்தார்.    அவரை சமாளித்துவிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது’ என்று பரிதாபமாகச் சொன்னார்.     நான் அதிர்ந்துபோனேன். *'உனக்கு இங்கே நிற்கும் உரிமையை வாங்கிக்கொடுத்ததே என் பாட்டன்தானடா* *என்று முகத்தில் அடித்ததுபோல சொல்ல* *வேண்டியதுதானே?’*  என்று சொல்லி அவர

நேத்து வரை ஏமாளி... இன்று முதல் கோமாளி...

Subbiahpatturajan #தமிழர்கள் #சினார்தமிழன் #இந்துக்கள் #தமிழர்கள் #சினார்தமிழன் #இந்துக்கள் நேத்து வரைக்கும், நாமெல்லாம் இந்து.. ஒன்றிணைவோம் வா.. துலுக்கனை விரட்டுவோம் .. பாவாடையை விரட்டுவோம்.. என்றெல்லாம் கோவிலுக்கு போய் சாமி கும்பிடும் நாடார் பரையர் வன்னியர் சாம்பவர் செட்டியார் வள்ளுவர் கோனார் வெள்ளாளர் தேவேந்திரர் உடையார் மறவர் கள்ளர் போன்றோரை அடியாள் வேலைக்கு கூப்பிட்ட அதே கூட்டம் தான் இப்போது அனைத்து பிரிவினரும் முறையாக படித்துவிட்டு பூசை செய்யலாம் என்ற அரசின்  உத்தரவை எதிர்க்கிறது.. கோவில்களில் ஒரு இஸ்லாமியரையோ கிறிஸ்த்தவரையோ புத்தமதத்தவரையோ பூசை செய்ய நியமித்திருந்தால் எதிர்ப்பு தெரிவிப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது.. ஆனால் சக இந்துக்களை நியமிக்கவே எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த கூட்டம் உண்மையில் யாருக்கு எதிரானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.. கோவில் உங்களுடையது.. சாமி உங்களுடையது.. #தமிழர்கள் #சினார்தமிழன் #இந்துக்கள் ஹாக்கியில் வெண்கல பதக்கம் வென்ற ராணுவ வீரருக்கு நேர்ந்த அவமானம் பாருங்கள்... ஆனால் பூசை மட்டும் அவாளுடையது மட்டும் என்று மிரட்டும் இந்த கூட்டத்தின் அர

*இந்தக் கட்டுரையை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்...??!

Subbiahpatturajan #savethisartical # savethisarticals இந்தக் கட்டுரையை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.....* *ஒவ்வொரு கஷ்ட சமயங்களில் படித்து தேறுதல் பெருங்கள்.....* *இது  ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை* *ஆத்மவிலாசம்* *உன்னை வாழ்த்த* *மனம்*  *இல்லாதவர்கள் இருப்பார்கள்* *அவர்களைப் பற்றி கவலைப்படாதே*. *நீ* *எதை செய்தாலும்* *அதில் ஒரு குறையை* *கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும்* *இருந்து கொண்டுதான் இருப்பார்கள்*. *அதையும் பெரிது பண்ணாதே*. *உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ*. *ஒன்றை மட்டும் தெரிந்து கொள்*. *ஒவ்வொரு மனிதனும்* *தனித்தனி* *ஜென்மங்கள்*. *அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்*.  *அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்*. *அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே*. *அவர்கள் போகும் வரை போகட்டும்* *போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்* . *அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும்*. *அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்

Helicopter Defects ஹெலிகாப்டர் பழுதானால் என்ன ஆகும்

Subbiahpatturajan #HelicopterDefects ஹெலிகாப்டர் என்ஜின் திடீரென பழுதானால் என்னாகும்..?? மேலே பறந்து கொண்டிருக்கும் போது எஞ்சின் பழுதடைந்தால், ஹெலிகாப்டர் அப்படியே தொபுக்கடீர்(!!) என்று கீழே விழுந்து விடாது. இந்த மாதிரி சமயங்களில், எந்தச் சேதாரமும் இன்றி ஹெலிகாப்டரை தரைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான வசதிகள் அதில் செய்யப்பட்டுள்ளன. புரியும் படி சொல்கிறேன். ஒரு ஹெலிகாப்டரில் இரண்டு எஞ்சின்கள் உண்டு. அதில் ஒரு எஞ்சின் சர்வீஸில் இருக்கும் ஒன்று பழுதானாலும் மற்றொன்று உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்.இதையும் மீறி காற்று வேகமாக அடித்தாலோ... பைலெட் பார்த்தாலோ... காற்றுடன் மழை பெய்யும் போது எமர்ஜென்சி லேண்டிங் செய்ய முடியும்.எமர்ஜென்சி லேண்டிங் செய்யும் போது தரை சமதளமாக இல்லாமல் இருந்தால் ஏதாவது மரங்கள் இருந்தால் விபத்துகள் ஏற்படக்கூடும். ஹெலிகாப்டர் ஓட்டுனருக்கான பயிற்சியில், சேஃப் லேண்டிங் என்றழைக்கப்படும் இந்த தரையிறக்கும் முறை கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது. பயிற்சியின் போது இஞ்சினை மொத்தமாக நிறுத்தி விடாமல், அதன் செயல்பாடுகளைக் குறைத்து சேஃப் லேண்டிங் செய்வது எப்படி என்று சொல்லித் தருகிறா

Warning ...!? தமிழினம் சொந்தத் தாயகத்தில் சிறுபான்மை இனமாகிய விடுவர்.எச்சரிக்கை....

Subbiahpatturajan Thank you dinamalar. #Warning  #Warning நாட்டிலேயே முதியவர்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, இறப்பு விகிதம் குறைந்துள்ளதால் நாட்டில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கேரள மாநிலத்தில்தான் முதியவர்கள் அதிகமாக உள்ளனர். அம்மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள்தொகையில் முதியவர்களின் பங்கு 16.5 சதவிகிதமாக உள்ளது  அடுத்ததாக தமிழ்நாட்டில் முதியவர்களின் அளவு 13.6 சதவிகிதமாகவும், இமாச்சலில் 13.1 சதவிகிதமாகவும், பஞ்சாப்பில் 12.6 சதவிகிதமாகவும், ஆந்திராவில் 12.4 சதவிகிதமாகவும் உள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, அங்கு பொருளாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் எனவும், குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதும் காரணம் என கூறப்படுகிறது. இவ்வாறு வயது மூத்தோர் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 25% இருப்பதால்தான்  எதிர்காலத்தில் குறையும் மக்கள் தொகையை ஈடு கட்டும் நோ

தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள் தமிழையும் அழித்து, தமிழின சிந்தனையையும் அழித்து வருகின்றனர்.

Subbiahpatturajan #தெலுங்கர்கள் #சினார்தமிழன்  -தமிழர்கள் காதில் பூ சுற்றுகிற வேலை...!                    °°° -----------------------ஆந்திர தெலுங்கர்களும், தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்களும், திராவிடத்தை தமிழினத்தின் மீது திணிப்பது ஏன்?            டி. இரவி என்பவர் தமிழ்நாட்டில் தெலுங்கர்களின் ஆதிக்கம் இருப்பதை சரி என்கிறார். அதற்கான ஆதாரத்தை கீழே விவரிக்கிறார                                            டி. இரவி:                     தெலுங்கர்கள் யார்?ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களா? இல்லை அன்டார்டிகாவிலிருந்து வந்தவர்களா?            சம்ஸ்க்ருத மொழியை ஏற்றுக் கொண்ட தமிழன் தானே தெலுங்கனாக மாறினான்.தெலுங்கிலிருந்து தமிழை நீக்கி விட்டால்..அவர்கள் சனாதனிகளாகி விட மாட்டார்கள். ஆனால் அவர்கள் சம்ஸ்க்ருத மொழியை விட்டு விட்டால்... அவர்கள் தமிழர்கள் ஆவதைத் தவிர வேறு வழியில்லை. ----------------------------------------                      பொன்பரப்பி அரசேந்தின்.:              நீதிக்கட்சியில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் ஆந்திர தெலுங்கர்களே.  அவர்கள் கட்சி கொள்கைகளை பரப்ப தொடங்கிய தமிழ் இதழுக்கு, &quo

தமிழர்கள் கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல….

Subbiahpatturajan #தமிழர்கள் #cinartamilan விடுதலை புலிகளை 30 நாடுகள் ஏன் சேர்ந்து அழித்தது ? காரணம் தெரிய வேண்டுமா ? விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி..... “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சில போராளிகள், சில தளபதிகள் சிங்கள அரசப் படைகளை எதிர்த்து கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நின்று போராடியிருக்கிறார்கள்.  சிங்களப்படைகள் நெருங்க நெருங்க துப்பாக்கி ரவைகள் முடியும் வரை நின்று போராடியிருக்கிறார்கள்.  அவர்கள்தான் அங்கே உடனடியாக கைது செய்யப்பட்டு அந்தந்த இடங்களில் வைத்தே உடனடியாக பழி தீர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்.. உலகில் எந்த யுத்த களத்திலும் அதியுச்ச போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறுகலான சிறிய இடத்தில் வைத்து அந்தப் போராட்ட வேளையிலே யுத்த கோரத்தாண்டவங்களை நேரடியாக எவரும் ஒலிப்பரப்பு செய்து