முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பல வருடங்களாக தமிழ்நாட்டில் வசித்து வரும் எங்களை சில வருடங்களாக இவ்வாறு கையாள்வது மிகவும் மன வேதனையை

Subbiahpatturajan
தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள்

தமிழ்நாட்டில்ஈழத்தமிழர்நில

திருச்சி சிறப்பு முகாம் என்னும் வதை முகாமில் உள்ள ஈழத் தமிழர்களின் குமுறல்...   

  தமிழகத்தில் மற்றுமோர் முள்வேலி..... இங்கு அடைக்கப்பட்டுள்ள ஈழத்துப் பறவைகள் பறந்து அவர் அவர் உறவுகளோடு இன்னைந்து பயணிக்க உலகத் தமிழர்கள் ஆதரவுக்கரம் நீட்டி நிற்கின்றோம்...  

  ஈழத்தில் சிங்கள இனவாத அரசால் நிகழ்த்தப்பட்ட உள்நாட்டுப் போரில் உறவுகள் உடமைகள் இழந்து போரின் அழியா நினைவுகளோடு வாழவே வழி தெரியாது எங்கள் உயிரை காப்பாற்றி வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொள்ள எங்கள் உறவுகளிடம் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்து மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எங்களுக்கான மறுக்கப்பட்டு உரிமைகளும் சுதந்திரங்களும் மறுபடியும்  சிறப்பு முகாம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள முள்வேலி வதைமுகாமில் எங்களை அடைத்து வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குபவர்கள் யார் என்று கூட தெரியாது எமக்கு பொறுப்பானவர்கள் யார் என்றும் இனங்காண முடியாது தவித்து வருகிறோம்.

இந்த COVID-19 காலத்தில் முறையான சுகாதார வசதிகளும் மருத்துவ வசதிகளும் ஏதும் இல்லாது 60க்கும் மேற்பட்டோர் இந்நோயினால் பாதிக்கப்பட்ட போதிலும். தற்போது அதன் தாக்கத்திலிருந்து மீள முடியாது எமது உடல் நலிவடைந்த போதிலும் எம்மை மிருகங்களைப் போன்று மனிதாபிமானமின்றி அடைத்து வைத்திருப்பதும். குடும்பங்களிடம் இருந்து எம்மை பிரித்து வைத்திருப்பதும். மன வேதனையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.

வாழ்வாதாரத்தை தேடி வெளிநாடு செல்ல முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் முறையான நீதிமன்ற விசாரணைக்கு பின் ஜாமினில் வெளிவந்த எங்களை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்திற்கு தெரியாது,நீதிமன்ற நடவடிக்கை ஏதும் இன்றி எமது குடும்பங்களை பிரிந்து திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் என்னும் வதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம்.

பல வருடங்களாக தமிழ்நாட்டில் வசித்து வரும் எங்களை சில வருடங்களாக இவ்வாறு கையாள்வது மிகவும் மன வேதனையை அளிப்பதோடு குடும்பத் தலைவர்கள் ஆகிய எங்களை இங்கே காலவரயின்றி அடைத்து  வைத்திருப்பதால் எமது குடும்பங்கள் அன்றாடம் பல இன்னல்களை எதிர் நோக்குகின்றனர்.

கடந்த காலங்களில் எமது கோரிக்கைகளை முன்வைத்து பல கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்திய போது எங்கள் மீது பொய் வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. நமது குறைகளை உயரதிகாரிகள் கேட்பதும் இல்லை அதற்கான தீர்வுகளை தர முன்வருவது இல்லை.எனவே வேறு வழியின்றி உலகத் தமிழ் மக்கள் முன்னிலையில் மண்டியிட்டு கேட்டுக்கொள்கின்றோம் எமக்காக குரல் கொடுத்து எம்மை எமது குடும்பங்களின் இன்னக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 😭😭😭😭😭😭😭😭😭😭


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...