பல வருடங்களாக தமிழ்நாட்டில் வசித்து வரும் எங்களை சில வருடங்களாக இவ்வாறு கையாள்வது மிகவும் மன வேதனையை
Subbiahpatturajan
தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள்
தமிழ்நாட்டில்ஈழத்தமிழர்நிலை
திருச்சி சிறப்பு முகாம் என்னும் வதை முகாமில் உள்ள ஈழத் தமிழர்களின் குமுறல்...
தமிழகத்தில் மற்றுமோர் முள்வேலி..... இங்கு அடைக்கப்பட்டுள்ள ஈழத்துப் பறவைகள் பறந்து அவர் அவர் உறவுகளோடு இன்னைந்து பயணிக்க உலகத் தமிழர்கள் ஆதரவுக்கரம் நீட்டி நிற்கின்றோம்...
ஈழத்தில் சிங்கள இனவாத அரசால் நிகழ்த்தப்பட்ட உள்நாட்டுப் போரில் உறவுகள் உடமைகள் இழந்து போரின் அழியா நினைவுகளோடு வாழவே வழி தெரியாது எங்கள் உயிரை காப்பாற்றி வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொள்ள எங்கள் உறவுகளிடம் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்து மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
எங்களுக்கான மறுக்கப்பட்டு உரிமைகளும் சுதந்திரங்களும் மறுபடியும் சிறப்பு முகாம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள முள்வேலி வதைமுகாமில் எங்களை அடைத்து வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குபவர்கள் யார் என்று கூட தெரியாது எமக்கு பொறுப்பானவர்கள் யார் என்றும் இனங்காண முடியாது தவித்து வருகிறோம்.
இந்த COVID-19 காலத்தில் முறையான சுகாதார வசதிகளும் மருத்துவ வசதிகளும் ஏதும் இல்லாது 60க்கும் மேற்பட்டோர் இந்நோயினால் பாதிக்கப்பட்ட போதிலும். தற்போது அதன் தாக்கத்திலிருந்து மீள முடியாது எமது உடல் நலிவடைந்த போதிலும் எம்மை மிருகங்களைப் போன்று மனிதாபிமானமின்றி அடைத்து வைத்திருப்பதும். குடும்பங்களிடம் இருந்து எம்மை பிரித்து வைத்திருப்பதும். மன வேதனையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.
வாழ்வாதாரத்தை தேடி வெளிநாடு செல்ல முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் முறையான நீதிமன்ற விசாரணைக்கு பின் ஜாமினில் வெளிவந்த எங்களை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்திற்கு தெரியாது,நீதிமன்ற நடவடிக்கை ஏதும் இன்றி எமது குடும்பங்களை பிரிந்து திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் என்னும் வதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம்.
பல வருடங்களாக தமிழ்நாட்டில் வசித்து வரும் எங்களை சில வருடங்களாக இவ்வாறு கையாள்வது மிகவும் மன வேதனையை அளிப்பதோடு குடும்பத் தலைவர்கள் ஆகிய எங்களை இங்கே காலவரயின்றி அடைத்து வைத்திருப்பதால் எமது குடும்பங்கள் அன்றாடம் பல இன்னல்களை எதிர் நோக்குகின்றனர்.
கருத்துகள்