Subbiahpatturajan அன்பு மாணவனே இந்த உலகில் ஆயிரம் பணிகள் உண்டு. ஆசிரியர் பணி வேண்டாம் இன்று. அகிலத்தின் ஆதாரம் அது என்றும், ஆகாயம் போன்று அதிசயமானது என்றும், அன்னையாய் மதிப்பு மிக்கதென்றும், அனைவரும் வணங்கும் ஏற்றமானது என்றும், ஆயிரம் கதைகள் சொல்லுவர். அதை நம்பி ஏமாந்து விடாதே அதல பாதாளத்தில் விழுந்து விடாதே! ஆதி பகவன் பிள்ளை சொன்னாலும் நம்பாதே! ஆசிரியர் நான் சொல்கிறேன் வேண்டாம். ஆணவத்தின் அடையாளமாய் மாணவர்களும் ஆணையிடும் அரக்கராய் அதிகார வர்க்கமும் ஆட்டுவிக்கும் பெற்றோர் கூட்டமும் ஆசிரியரை கேலிப் பொருளாக்கும். படியாத பிள்ளைக்கு பாடம் எடு பண்பு இல்லாதவனிடம் பணிந்து போ அடிதடி செய்பவனை அரவணைத்துச் செல் ! எழுதத் தெரியாதவனை எழுத்தாளர் என்று புகழ் ! ஆணவம் கொண்டவனிடம் அன்பு செலுத்து இப்படித்தான் கல்வித் துறையும், கல்வி நிறுவனங்களும், கை விலங்கு போட்டு, உன்னை ஆசிரியனாய் அழகு பார்க்கும் . உன்னை பாதுகாக்கவும் உன் உரிமைகளை உறுதிப்படுத்தவும் உனது உன்னதங்களை போற்றவும் ஒருவரும் முன்வர மாட்டார்கள். தவறிச் செய்த தவறையும், திருந்தக் கொடுத்த தண்டனையையும், கொடுங் கொலைக் குற்றமெனக் கருதி நீ