#வற்றாதஜீவநாடி #Thamirabarani
இந்த புகைப்படங்களை பார்த்ததில் இருந்து என் நெஞ்சில் ஏதோ ஒரு
இனம்புரியாத வலி உண்டாகி கொண்டு இருக்கிறது...
முதலில் இந்த புகைப்படம் எந்த ஊர் எந்த இடம் என்று தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
ஆம் இது நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் பொதிகைதாயினால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட அமுதசுரபி போன்ற எந்தகாலத்திலும் வற்றாத தாமிரபரணிதாயின் செல்லப்பிள்ளையான அகத்தியர் அருவிதான் இது.
இப்படியொரு காட்சியை எங்கள் ஊர் முன்னோர்கள் யாரும் கண்டு இருக்க வாய்ப்பே இல்லை..
ஆனால் இப்படியொரு கொடூரசெயலை வனத்துறையினர் அரங்கேற்றி தலைமுறையினரை பார்க்கவைத்து இருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஊரில் நீர் வற்றிபோய் ஆறுகுளங்கள் சிதிலமடைந்து வரண்டுபோய் தான் அநேகர் பார்த்து இருப்பார்கள்.
ஆனால் இங்கே வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணியில் வருடம்முழுவதும் தண்ணீர்கொட்டும் அகத்தியர் அருவியின்
நீர்வழித்தடத்தை மணல் மூட்டைகள் கொண்டு அடைத்து இயற்க்கைத் தாய்
கொடுத்த கொடையை, பொங்கி பாய்ந்து ஓடியஅகத்தியர் அருவியை வரண்டு போகவைத்திருக்கிறார்கள்.
ஒரு இயற்கையின் அடிச்சுவடை
சத்தம் இல்லாமல் அகற்றப்பார்க்கிறார்கள்.
இந்த அருவியில் ஓடும் தண்ணீரை பார்த்து குளித்து ஆனந்தபட்டவர்கள் அநேகர்,ஆனால் அகத்தியர் அருவியின் இந்த நிலையைகண்டு கண்ணீர்வருகிறது.
https://www.cinartamilan.com/2021/03/blog-post_14.html?m=1
வனத்தை காப்பாற்றுங்கள்..
அருவி என்ற ஒன்று இருந்தால்தானே குளிக்க குதுகலாமாய் மக்கள் வந்து செல்வார்கள் அதனால் அருவியையே அழித்துவிட்டால் எவன் வருவான் என்று எடுக்கப்பட்ட நாட்டு மிராண்டித்தனமான முடிவு..
காட்டுமிராண்டி என்று சொல்ல இவர்கள் தகுதியற்றவர்கள்.
காட்டுமிராண்டிகளுக்கு வனத்தை மதிக்கதெரியும் இயற்கையை போற்றத்தெரியும். இவர்கள் அப்படியல்லதானே..
ஐயா வனத்துறையினரே காட்டைக்காப்பது உங்கள் கடமைதான்.
அதற்க்கு நாங்கள் தலைவணங்குகிறோம்.
உள்ளூர் வாசிகளான எங்களுக்கே தலையணையில் ஆரம்பித்து அகத்தியர் அருவி, கல்யாணதீர்த்தம்,சொரிமுத்து ஐய்யனார்கோயில்,காரையார்,சேர்வலார்,பாணதீர்த்தம், படகுசவாரிவரைக்கும் தடைபோட்டு விட்டீர்கள்...
இதுபோன்ற காடுகளையும் காடு சார்ந்த இடங்களையும் பக்கத்து மாநிலமான கேரளாவில் வனத்துறையினர் எப்படி சுற்றுலாதுறைக்கும் பாதிப்பு இல்லாமல் உள்ளூர்வாசிகளுக்கும் இடைஞ்சல் இல்லாமல் சட்டதிட்டங்களை ஏற்ப்படுத்தி கையாளுகிறார்கள் என்று பாருங்கள்.
https://www.cinartamilan.com/2021/05/blog-post_19.html
நான் வயநாடு சுற்றுலா சென்றபோது பார்த்தேன்.
உதாரணமாக பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் உள்ளே கொண்டு சென்றால் இருபதுரூபாய் பணத்தை
வனத்துறை வசூலிப்பார்கள்.
மீண்டும் பாட்டிலை திரும்ப கொண்டுவந்தால் வனத்துறையிடம் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கி கொள்ளலாம்.
இதுபோல பிளாஸ்டிக் மற்றும் இயற்கையை மாசுப்படுத்தும் பொருட்களோடு உள்ளே செல்ல அனுமதிமறுப்பு என்று சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
கேரளாவில் பயன்படுத்தும் நடைமுறைகளை பின்பற்றி நம்வனத்தையும் இயற்கையையும் காப்பாற்ற முடியாதா..???
அரசியல், சாதி, மத இன பாகுபாடு இல்லாமல்
அனைவரும் இந்த கொடுமையை எதிர்க்க வேண்டும்.
சிங்கை மக்கள் , மட்டுமல்ல
நெல்லை மக்கள் மட்டுமல்ல,
தமிழக மக்களனைவரும் எதிர்த்து குரல் கொடுத்து,
மீண்டும் அனைவரும் இழந்த அத்தனையையும்
( தலையணை, வாணதீர்த்தம் படகு சவாரி உட்பட திரும்ப ப்வேண்டும் )
எது எப்படியோபோகட்டும் இந்த நிலை மாறட்டும் உள்ளூர் வாசிகளான எங்களின் இரத்தபந்தம் போன்ற இந்த இயற்கையுடனான பந்தத்தை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எங்கள் வாழ்வியலை மீட்டுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் சிதிலமடைந்த அகத்தியர் கோயிலை புனரமைக்க வேண்டும்.
கருத்துகள்