முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,

Subbiahpatturajan


தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,




அந்த காலம் .

ஊசி போடாத *Doctor* ..

சில்லறை கேட்காத *Conductor* ..

சிரிக்கும் *police* ...

முறைக்கும் *காதலி* ..

உப்பு தொட்ட *மாங்கா* ..

மொட்டமாடி *தூக்கம்* ..

திருப்தியான ஏப்பம்...

Notebookன் *கடைசிப்பக்கம்* ...

தூங்க *தோள் கொடுத்த* சக பயணி ....

பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய *நண்பன்* ..

இப்பவும் டேய் என அழைக்கும் *தோழி* ..

இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் *அம்மா* ...

கோபம் மறந்த *அப்பா* ..

சட்டையை ஆட்டய போடும் *தம்பி* ..

அக்கறை காட்டும் *அண்ணன்* ..

அதட்டும் *அக்கா* ...

மாட்டி விடாத *தங்கை* ..

சமையல் பழகும் *மனைவி* ...

சேலைக்கு fleets எடுத்துவிடும் *கணவன்* ..

வழிவிடும் *ஆட்டோ* காரர்...

*High beam* போடாத லாரி ஓட்டுனர்..

அரை மூடி *தேங்கா* ..

12மணி *குல்பி* ..

sunday *சாலை* ...



மரத்தடி *அரட்டை* ...

தூங்க விடாத *குறட்டை* ...

புது நோட் *வாசம்* ..

மார்கழி *மாசம்* ..

ஜன்னல் *இருக்கை* ..

கோவில் *தெப்பகுளம்* ..

Exhibition *அப்பளம்* ..

முறைப்பெண்ணின் *சீராட்டு* ...

எதிரியின் *பாராட்டு* ..

தோசைக்கல் *சத்தம்* ..

எதிர்பாராத  *முத்தம்* ...

பிஞ்சு *பாதம்* ..

எளிதில் *மணப்பெண்* கிடைத்தாள்.,

வெஸ்ட் இன்டீசை வெல்லவே *முடியாது* .,

சந்தைக்கு போக *பத்து ரூபாய்* போதும்.,

முடி வெட்ட *இரண்டு ரூபாய்தான்*.,



*மிதி வண்டி* வைத்திருந்தோம்.,ல்

கபில் தேவின் *கிரிக்கெட்* .

குமுதம், விகடன் *நேர்மையாக* இருந்தது.

*வானொலி* நாடகங்களை ரசித்து கேட்டோம்.,

எல்லோரும் *அரசு* *பள்ளிகளில்* படித்தோம்.,

சாலையில் எப்போதாவது *வண்டி வரும்.,*

தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்.,

மயில் இறகுகள் குட்டி போட்டன, *புத்தகத்தில்* .,

மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே, *ஆங்கிலம்* .,

ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் *டவுசர்* .,

பேருந்துகுள் கொண்டுவந்து *மாலைமுரசு* விற்பார்கள் .,

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் *உட்கார இடம்* கிடைக்கும் பேருந்தில்..,

கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத [makeup] இல்லா *அழகி* ...

பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத *ஆசிரியர்* ...

கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற *வார்த்தை* ...

7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் *பாட்டி* ..

பாட்டியிடம் பம்மும் *தாத்தா* ...

எல்லா வீடுகளிலும், *ரேடியோவிலும், கேசட்டிலும்* பாடல் கேட்பது சுகமானது

வீடுகளின் முன் *பெண்கள்* காலையில் கோலமிட்டார்கள், *மாலைப்பொழுதுகளில்* வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள்

*சினிமாவுக்கு* செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம்

ஆடி 18 *தீபாவளி* பண்டிகையை கொண்டாட்ட ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுவோம்

பருவ பெண்கள் *பாவாடை* *தாவணி* உடுத்தினர்.,

சுவாசிக்க *காற்று* இருந்தது., *குடிதண்ணீரை* யாரும் விலைக்கு வாங்க வில்லை.,



தெருவில் சிறுமிகள் *பல்லாங்குழி* ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் *நுங்கு வண்டி* ஓட்டுவோம்.,

இதை எழுதும் *நான்* ..

படிக்கும் *நீங்கள்* ..

இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..

கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,
*நம்பிக்கைகளும் தான்.....* அன்புடன் அனுபவம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...