முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கற்றபின்... *விற்க அதற்குத் தக*

Subbiahpatturajan

💐💐💐💐💐💐💐💐💐
கற்றபின்...
*விற்க அதற்குத் தக* என்று மாற்றி விட்டோமே...

*செக்குமாடு*

 சில வாரங்களுக்கு முன்பு நண்பருடைய மகள் திருமணத்திற்காக கடலூர் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றிருந்தேன்...

 காலை திருமணம் முடிந்ததும் கிராமத்தைச் சுற்றி வரலாம் என்று கிளம்பினேன்,..

 ஊர் ஓரமாக செக்குமாடு ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதை கவனித்து ஆச்சரியமாக அதன் அருகில் சென்றேன்...

 நமது பகுதியில் எந்திரம் வைத்து செய்வதைப் பார்த்த நமக்கு செக்குமாடு வைத்து எண்ணெய் ஆட்டுவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாகவும், வித்தியாசமானதாகவும் இருந்தது.….

யாருடைய மேற்பார்வையும் இன்றி மாடு தானாக சுற்றிக் கொண்டிருந்தது...

 அருகில் யாரும் இல்லை.. பக்கத்தில் ஒரு குடிசை இருந்தது.. அங்கே சென்று பார்த்தால் பெரியவர் ஒருவர் பழைய கூழ் குடித்துக் கொண்டிருந்தார்....

 அவரிடம் ஐயா செக்குமாடு உங்களுடையதா? என்று கேட்டேன்..

 ஆமாம் தம்பி என்றார்... வியாபாரம் நன்றாக போகிறதா? என்று கேட்டேன்..…. இப்போது பரவாயில்லை தம்பி என்றார்...
 இப்படித்தான் முதலில் எண்ணெய் ஆட்டி பயன்படுத்திக் கொண்டு இருந்தோம்.. இடையில்தான் யாரோ சிலர் கிளப்பிவிட்டதை நம்பி சூரியகாந்தி எண்ணெய் என்றெல்லாம் மாறிவிட்டோம்... அவ்வளவு சூரியகாந்தி விதை உலகில் உற்பத்தியாகிறதா என்றுகூட யோசிக்கவில்லை.... மறுபடியும் மாற்றம் வந்தது மகிழ்ச்சி தம்பி என்றார்...

 ஐயா எந்திரம் வைத்தால் வேலை சுலபமாக முடியுமே... இன்னும் செக்குமாடு வைத்து செய்கிறீர்களே? என்று கேட்டேன்...
 தம்பி ...எந்திரம் வைத்தால் எண்ணெய்  சூடாகி அதன் தன்மையையே மாற்றிவிடும்... இதுபோல செக்கில் ஆட்டும் போது தான் எண்ணெய் இயல்பான குணத்தை கொண்டிருக்கும்... உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்... என்று அனுபவித்து சொன்னார்... மன மகிழ்ச்சி அடைந்த  நான் *ஐயா நீங்கள் இங்கே கூழ் குடித்துக் கொண்டிருக்கிறீர்களே.. அங்கே மாடு சுற்றாமல் ஏமாற்றினால் என்ன செய்வீர்கள்?* என்று அறிவாளி தனமாக (?)கேட்டேன்...

 அவர் என்னை வித்தியாசமாக பார்த்துவிட்டு *தம்பி ..மாட்டின் கழுத்தில் ஒரு மணி கட்டி இருக்கின்றேன்.. சுற்றிவரும் பொழுது அதன் சத்தம் கேட்கும்.. கேட்காவிட்டால் வாயால் ஒரு சத்தம் போடுவேன்.. உடனே மாடு சுற்ற ஆரம்பித்துவிடும்* என்று சொன்னார்...

 நான் குசும்புத் தனமாக *ஏங்க பெரியவரே.. மாடு சுற்றாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டு கழுத்தை மட்டும் ஆட்டினால் என்ன செய்வீர்கள்.. அப்போதும் சத்தம் கேட்குமே* என்று கேட்டேன்..

அவர் என்னை வித்தியாசமாக பார்த்துவிட்டு *என்ன படித்திருக்கிறீர்கள்?* என்று கேட்டார்..

 நான் பெருமையாக *எம்எஸ்சி , எம்எட் எல்லாம் படித்து இருக்கிறேன்* என்று சொன்னேன்.

 அந்தப் பெரியவர் சொன்னார் *உங்களைப் போல் எல்லாம் யோசித்து ஏமாற்றக்கூடாது என்பதற்காகத் தான் என்னுடைய மாட்டை எல்லாம் நான் படிக்க வைக்கவில்லை* என்று சொன்னார். எனக்கு சவுக்குக் குச்சியால் அடி விழுந்தது போல் இருந்தது...

 *யோசித்துப் பார்த்தால் நாட்டில் நடக்கும் எல்லா திட்டமிட்ட, நுணுக்கமான திருட்டுகளுக்கும், குற்றங்களுக்கும் பின்னால் எல்லாம் நம்மைப்போல் படித்தவர்களின் மூளை பயன்பட்டுக் கொண்டிருக்கிறது* என்பதை அந்தப் பெரியவர் வார்த்தைகளால் சுட்டிக்காட்டினார்...

 நேர்மை, வாய்மை, ஒழுக்கம் எல்லாவற்றையும் படித்த நாம் அதையெல்லாம் பின்பற்றி வாழ்கிறோமா? என்ற கேள்வி எழுந்தது...

கற்றபின் *நிற்க அதற்குத் தக* என்றார் வள்ளுவர்.. ஆனால் நாம் அதை *விற்க அதற்குத் தக* என்று மாற்றி விட்டோமே...

 உண்மைதானே....

யோசிப்போம்.,..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...