முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சிறு கோரிக்கை

Subbiahpatturajan

மாட்டின் உரிமையாளர்கள்மற்றும்
மாடுபிடி வீரர்களுக்கு சிறு கோரிக்கை

மாட்டின் உரிமையாளர்கள் கவனத்திற்கு
மாட்டின் மணியின் உட்புறம் உங்களது தொலைபேசி எண் முடிந்தால் முகவரி எழுத வேண்டும்....
இழு கயிறுடன் விடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்...
(இதனால் காளை மரத்தின் வேர்ப்பகுதியில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது)....
மாடுபிடி வீரர் அல்லது மாட்டின் உரிமையாளருக்கு கழுத்தில் தப்பித்தவறி மாட்டிக் கொண்டால் உயிர் போக வாய்ப்புள்ளது.
முடிந்தால் என் காளையை பிடித்துப்பார் என்பதை கூறுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.....
காளையை அவிழ்த்த பிறகு இரு சக்கர வாகனத்தில் காளையை பின் தொடர்வதை நிறுத்துங்கள்....
(இதனால் மாடுபிடி வீரர்களுக்கும் இடையூறு காயங்களும் ஏற்படுகிறது)

மாடுபிடி வீரர்களின் கவனத்திற்கு

காளை பிடிபட்டவுடன் தயவு செய்து கீழே சாய்த்து அதன் அடையாளங்களை அவிழ்க்க வேண்டாம்.....
ஒரு குழுவில் குறைந்த பட்சம் 10 நபர்களாவது இருப்போம் அதனால் காளை பிடிபட்டவுடன் நிறுத்தி வைத்து அவிழ்த்து கொள்ள பழகிக் கொள்ளவும் .....
தண்ணீரில் இறங்கிய காளையை பிடிக்க வேண்டாம் ....
வயல் வரப்பில் தடுமாறி விழுந்த காளைகளை பிடிக்க வேண்டாம்....
காளை பிடிபட்ட பிறகு மணியை வாங்க வரும் உரிமையாளரிடம் , 
 காளையை பிடித்து விட்டோம் என்பதற்காக காணிக்கையை நீங்கள் நிர்ணயம் செய்ய வேண்டாம்....
உரிமையாளர் வெகு தொலைவில் இருந்து காளை கொண்டு வந்து இருக்கலாம்,
அவர்களிடம் பணம் இல்லாமல் இருக்கலாம் அவற்றையும் நாம் சிந்திக்க வேண்டும்.....
உரிமையாளர் 1 ரூபாய் காணிக்கை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வரவேண்டும்.....
நாம் பணத்திற்காக காளைகளை பிடிப்பது இல்லை.....
நம் குழுவின் வீரம் , அடையாளம்.....
நம் ஊரின் பெருமை , புகழ் ......
ஒரு காளையை இரு குழுக்கள் பிடித்தால் விட்டுக்கொடுத்து போக வேண்டும்.....
வருகின்ற காணிக்கையை சம பங்காக பிரித்து எடுத்து கொள்ளவது அழகு....
வீண் விவாதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.....
இரு குழுக்களும் வீரர்கள் தான்.
நண்பர்கள் தான் என்று மனம் ஒத்து செல்லவேண்டும்.....
சில நபர்கள் ஊர்ச்சண்டை , நண்பர்கள் சண்டை , பழைய மஞ்சுவிரட்டு சண்டை , சாதி சண்டை இதை பழிக்குப் பழி வாங்க சரி செய்ய மஞ்சுவிரட்டு களத்தினை பயன்படுத்துகின்றனர் இது வருத்தப்படக் கூடிய விசயம் இதனை தவிர்த்து விடுங்கள் ......

வடமாடு வளர்க்கும் உரிமையாளர்களுக்கு

நீங்கள் உங்கள் காளையை விற்பதாக முடிவு செய்திருந்தால் தயவு செய்து களத்திற்கு கொண்டுவராமல் விற்று விடுங்கள்...

உதாரணத்திற்கு 

ஒரு வடத்தில் உங்கள் காளை விளையாட போவது என்றால்...
உங்கள் காளை மற்றும் காளை அடக்கும் அணியினர் விழா கமிட்டி அறிவிக்கப்படுவர்....
நீங்கள் அந்த அணியினரை அழைத்து நாங்கள் உங்களுக்கு 1000 ரூ 2000ரூ பணம் தருகிறோம் காளையை அடக்க வேண்டாம் இந்த காளை விற்பனைக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் ....

உங்களின் காளை வெற்றி பெருகிறது.....

(அந்த காளை விற்கப்போவது , விற்கப்பட மாட்டாது அது உங்களுக்கு தான் தெரியும் ஆனால் காளை வெற்றி).
அந்த வீரர்கள் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கும் , விழா கமிட்டி கொடுக்கும் பரிசுக்கும் விளையாடுவது இல்லை.....
அவர்கள் குழுவினரின் பெயர் மற்றும் அவர்களின் வீரம் அவர்களின் ஊரின் பெருமை இதை நிலை நாட்டத்தான் வருகிறார்கள்......
5000 பார்வையாளர்கள் முன்னிலையில் வெற்றி கைக்கு எட்டும் தூரம் இருந்தும் , 
காளையை அடக்காமல் உங்களுக்கு பெருமை அவர்கள் கொடுக்கிறார்கள்......

வாடிவாசல் மாடுபிடி வீரர்கள் 

குறிப்பாக ஒரு ஊரில் வாடி மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது என்றால் ,
அந்த ஊரைச் சுற்றியுள்ள அந்த பகுதியில் உள்ள வீரர்கள் வாடி வாசலை சூழ்ந்து கொண்டு மாறி மாறி நீங்களே காளைகளை அடக்குறீர்கள் , 
வெளி ஊரில் இருந்து வந்த வீரர்களும் , வெளி மாவட்டத்தில் இருந்து வீரர்களுக்கும் காளைகளை அடக்கும் வாய்ப்பு மிக அரிதாக கிடைக்கிறது,
வெளிமாவட்ட வீரர்கள் இரண்டு நாட்கள் தூங்காமல் கண் விழித்து டோக்கன் வாங்கி , பலர் பரிசுகள் எதுவும் பெறாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்......
சிறந்த மாடுபிடி வீரர் என்று அறிவிக்கும் பொழுது அந்தப்பகுதியில் உள்ள ஒரு வீரராகத்தான் இருப்பார்....

சிறு குறிப்பு

மஞ்சுவிரட்டிற்கு பொதுவாக 
வாகனத்தில் கொண்டு செல்லும் காளை 90% தானாக வீடு வருவதில்லை?
நடந்து கொண்டு செல்லும் காளை 95% தானாக வீடு வந்துவிடும் ஏன் எப்படி தெரியுமா?
நடந்து கொண்டு செல்லும் போது 
காளை சிறுநீர் கழிக்கும் , மற்றும் பாதையின் மண் வாசத்தினை நுகர்ந்து கொண்டே செல்லும்,
 காளை அவிழ்த்த பிறகு இந்த இரண்டு வாசத்தினை வைத்து காளை பின் தொடர்ந்து வீடு வருகிறது....
▪️மற்ற காளைகள் இனப்பெருக்கத்திற்காக பசுவோடு சென்று விடும்......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...