Subbiahpatturajan
நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வரும் சாட்சிகளுக்கு சாட்சியம் அளிக்கும் முன்பு முதலில் "தான் சொல்வது அனைத்தும் உண்மை. உண்மையைத் தவிர வேறு இல்லை" என்று சத்தியப் பிரமாணம் செய்யச் சொல்வார்கள்.
இஸ்லாமியர்களாக இருந்தால் திருக்குரான் மீதும் கிருத்துவர்களாக இருந்தால் பைபிளின் மீதும் சத்தியம் செய்யச் சொல்வார்கள்.
பைபிள்,குரான் போல புனிதநூல் என்று ஒன்று இல்லாத இந்துக்களை எந்த முறையில் சத்தியம் செய்ய வைப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது....
" ஆரம்பத்தில் ரிக் வேதத்தின் மேல் சத்தியம் செய்யும்படி செய்தனர். வேதம் புனிதமானது என்றும் அதை பார்ப்பனர் அல்லாதோர் தொட்டு சத்தியம் செய்வது அநாச்சாரம் என்றும் பார்ப்பனர்கள் ஆட்சேபித்தார்கள் .(வேதத்தை பார்ப்பனர் அல்லாதோர் தொடுவதைக் கூட பார்ப்பனர்களால் ஏற்க முடியவில்லை என்பதை கவனியுங்கள்)"
"அதனால் ரிக் வேதத்திற்கு பதிலாக கீதை மேல் சத்தியப் பிரமாணம் செய்ய வைக்கும் வழக்கம் வழக்குக்கு வந்தது. கீதை வேதம் போல புனித நூல் இல்லை என்பதால் அதன் மீது சத்தியம் செய்வது உண்மையைப் பேச வைக்கப் போதுமானது ஆகாது என்ற ஆட்சேபணை வந்ததால் அந்த வழக்கமும் கை விடப்பட்டது.
அதற்கு பின் ஒருபசுவையே நீதிமன்றத்திற்குள் ஒவ்வொரு கேசுக்கும் கொண்டு வந்து அதன் தலையைத் தொட்டு சத்தியம் செய்யும் பழக்கம் வந்தது..இதற்கென நீதிமன்றம் ஒரு பசுவை பராமரித்து வந்தது. போகப் போக மாட்டைப் பராமரிக்கும் இந்த வேலை ஆகாவழி வேலை என்பதைப் புரிந்து கொண்டதால் அதுவும் கைவிடப்பட்டது..
அதற்கு பதிலாக ஒரு பார்ப்பானை நீதீமன்றத்திற்குள் வரச் சொல்லி அவன் காலைத் தொட்டு சத்தியம் செய்யச் சொன்னார்கள்...
கும்பிடக் காலைக் காட்டுகிற வேலைக்காகவே பார்ப்பனர்களை வேலைக்கு வைத்து இருந்தார்கள். இதற்கும் "ஒத்தைப் பார்ப்பானைத் தொட்டு விட்டு சாட்சி சொல்வதை " சாங்கியங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் ஆட்சேபித்தார்கள். இது எல்லாவற்றையும் விட ஊசக் கோமாளித்தனம் என்று புரிந்து கொண்டு நீதிமன்றம் அதைக் கை விட்டு விட்டது.
அதன் பிறகு தான் பூமியைக் கால்கள் மிதிக்காமல் இருக்கும் வகையில் இடையில் மரப்பலகை வைத்த சாட்சிக் கூண்டில் நின்று சத்தியப் பிரமாணம் செய்யும் இப்போது உள்ள வழக்கம் வேறு பல சோதனை முயற்சிகளுக்குப் பின் வழக்கிற்கு வந்தது ..(இது மகாபாரதத்தில் உள்ள ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட ஏற்பாடு..அந்தக் கதையை தனிப் பதிவாக பின்பு பதிவிடுகிறேன்)
இதை திராவிடக் கழகத்தினரும் சில சீனியர் வக்கீல்களும் பன்னெடுங்காலமாய் சொல்லி வருகின்றனர்.
இது சத்தியப் பிரமாணம் செய்யத் தக்க புனிதநூல் என்று அனைத்து "இந்துக்களும்" ஏற்றுக் கொள்ளும் புனிதநூல் என்று எதையும் சொல்ல இன்று வரை பார்ப்பனர்களால் முடியவில்லை என்ற அவலநிலையைக் காட்டும் சின்ன உதாரணம்.
வேதங்கள் பழைய மகிமையை இழந்து இப்போது எல்லாக் கடைகளிலும் மலிவுவிலையில் கிடைக்கிறது. மனுசாஸ்திரத்தை வழக்கொழிந்து போன நூல் என்று பார்ப்பனர்களே சொல்லி விட்டார்கள்..
அதனால் இந்துக்களின் புனிதநூல் என்று எதையும் சொல்ல முடியாததால்... நீதிமன்றமே மனிதனுடைய மனசாட்சியின் மேல் மட்டும் நம்பிக்கை வைத்து அதன் மேல் சத்தியம்செய்தால் போதும் என்ற பகுத்தறிவு நிலைபாட்டை ஏற்றுக் கொண்டு விட்டது...
அதன் பிரதிபலிப்பு தான்"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற நான் என் உளமாற" என்று கம்பீரமாய் முழங்கியது..
இந்தப் பதிவு முன் வைக்கும் பிரதான கேள்வி:-
இந்த லட்சணத்தில் இந்து மதம் இருக்கும் போது நீங்கள் காக்கப் போவதாக. வாள் சுழற்றும் இந்து தர்மம் என்றால் என்ன என்று விளக்கும் நூல் எது என்பது தான்...
இந்துக்கள் சற்று யோசித்துப் பார்த்தால் உண்மை புரியும்.
கருத்துகள்