Cinar tamilan

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

"Google Pay PhonePe Paytm support numbers"How to contact. Here are some steps.

Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம்.  இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்:  1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்:  080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...

இந்தியாவின் உண்மையான தேசப் பிதா காந்திஜியா-நேதாஜியா?!

Subbiahpatturajan உண்மையான தேசப் பிதா காந்திஜியா-நேதாஜியா?! *1937-லேயே நேதாஜி அவர்களால் கிடைக்க வேண்டிய விடுதலையை -* *பத்து வருடம்1947-ல் காந்தியின்* *மூலமாகக் கிடைத்தது போல கொடுத்தார்கள் -*  *"குருதியைத் தாருங்கள், விடுதலை பெற்றுத் தருகிறேன்" என்று வீர முழக்கமிட்டு இளைஞர்களிடேயே விடுதலை வெறியை ஊட்டியவர் 'நேதாஜி' என்று தாகூரால் பட்டம் சூட்டப்பெற்ற சுபாஷ் சந்திரபோஸ் -* * ஜெய்ஹிந்த் ' என்ற வீர முழக்கத்தை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் ( இதை இவர் செண்பகராமன் பிள்ளை மூலம் பெற்றார் ) -* *உண்மையில் நாம் 1947-ல் பெற்றது சுதந்திரமே அல்ல -* *அது தனக்கு விசுவாசமாக இருந்த காந்தி, நேரு* *போன்றோருக்கு பிரிட்டிஷாரால் அதிகாரங்களை மட்டும் மாற்றிக் கொடுக்கப்பட்ட ஒரு நிகழ்வு -* காந்தி-நேதாஜி மோதல் *ஜெனரல் டயரைச் சுட்டுக்கொன்ற உத்தம்சிங்கிற்கு கன்டனம் தெரிவித்தவர் காந்தி -* *இந்தச் சம்பவம் தான் காந்தி --* *போஸ் மோதலுக்கு முக்கியக் காரணம் -* *1939-ல் காங்கிரஸ் தலைவராக போஸ் காந்தியின் எதிர்ப்பையும் மீறி தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது -* *போஸின் செல்வாக்கு அதிகரித்து வருவதைப் புர...

உங்களுக்கு பிடித்த இந்திய நடிகர் யார்" என்று மோகன்லாலிடம் கேட்டபோது

Subbiahpatturajan நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை..! " உங்களுக்கு பிடித்த இந்திய நடிகர் யார்" என்று மோகன்லாலிடம் கேட்டபோது டக்கென சொன்னது எம்ஆர். ராதாவின் பெயரைதான்! அந்த காலத்தில், சாமி படத்தை காட்டி சாம்பிராணி புகை போட்டு தான், நாடகங்களை ஆரம்பிப்பது வழக்கம்..! ஆனால் முதன்முதலில் 'தமிழ்த்தாய்" வாழ்த்து பாடி ஆரம்பித்து வைத்தவர் எம்.ஆர்.ராதா அவர்கள்தான்!   நாடகம் என்பது வெறும்பக்தி, காதல், புராணம் என்றிருந்ததை, பகுத்தறிவு, சீர்திருத்தம் என்ற திடீர் திருப்பத்தை அள்ளி தெளித்தது ராதாதான்..! "நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான்... சினிமாவில கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறான்... உலகத்தில் அசமத்துவம் ஒழிக்க முடியாதபடி சபிக்கப்பட்ட கொள்ளை பிரதேசம்னா அது சினிமா ஒன்னுதான்" என்று பொதுமேடையிலேயே முழங்கியவர்..! ஒரு முறை ராதாவின் நாடகத்திற்கு ஜஸ்டிஸ் எஸ்ஏபி "ஐயர்" என்பவர் தலைமை தாங்கியிருந்தார்... முன்வரிசையில் உட்கார்ந்து நாடகத்தையும் பா...

திருநெல்வேலி மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்கள் சீரழிக்கப் படுகின்றன.

Subbiahpatturajan *பக்கத்து  மாநிலமான கேரளாவில் இதே சூழலில் உள்ள தளங்கள் எல்லாம் மென்மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மேம்படுத்தப் படுகிறது.* ஆனால் இங்கே ?? * திருநெல்வேலி மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்கள் சீரழிக்கப் படுகிறது. * சிறு வயதில் பள்ளி மூலமாகவோ, குடும்பத்துடனோ  பிக்னிக்காக சென்று பார்த்து வந்த ஒரு நாள் முழுவதும் சுற்றி மகிழ்ந்த மணிமுத்தாறு அணை பூங்கா  *பராமரிப்பின்றி அழிக்கப்பட்டு விட்டது.* பாபநாசம் காரையாறு அணையில் படகு சவாரி செய்து "சின்ன சின்ன ஆசை" பாடி, நீராடி மகிழ்ந்த அனுபவத்தை திரும்ப பெற *தடைகள் விதிக்கப் பட்டுள்ளது.* * பாபநாசம் அகத்தியர் அருவியில் இலவசமாக வருடம் முமுவதும் குளித்து* மகிழும் வாய்ப்பை கொரானா பெயரில் தடை செய்து , *இப்பொழுது நபருக்கு 30 ரூபாய் + வாகனக் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டிய அநியாய சூழல்.* பாபநாசம் தலையணை நிலமை அதை விட மோசம். என்னை போன்ற பலர் நீச்சல் பயிற்சி செய்த பெரிய நீச்சல் குளம் போன்றும்,  ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் சிறிய அருவியில் நீராடி மகிழும் வாய்ப்பைத் தந்த நீண்ட கரைப் பகுதியை கொண்ட தலையணையும் *மூடப்பட்டு விட்ட...

நினைத்துப்பாருங்கள் இவை எல்லாம் இந்தியாவில் சாத்தியமா என்று.?

Subbiahpatturajan  நான் என் இளங்கலை மருத்துவபடிப்பை ரஷ்யாவில் பயின்றேன்.முதுகலை மகப்பேறு மருத்துவத்தை தமிழ்நாட்டில் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் முடித்தேன். கல்லூரி வாழ்க்கையில்        இளங்கலை படிக்க நான் ரஷ்யா சென்றபோது எனக்கான அனுபவங்கள் நம் நாட்டிற்கு நேர் எதிராக இருந்தது.நான் சென்றபோது விடுதியில் என் அறை தோழிகளாக கென்ய நாட்டை சேர்ந்த இரு மாணவிகள் இருந்தனர்(கதீஜா மற்றும் லும்பிரியாது).அதுவே ஒரு சிறப்பான அனுபவம் தான்.அப்போது தான் தெரிந்தது நான் மொழிப்பாடம் பயின்ற அந்த கல்லூரியில் இந்திய பெண்களே யாரும் இல்லை,இந்தியாவில் இருந்து அங்கு படிக்கும் ஒரே பெண்ணாக நான் இருக்கிறேன் என்பது.பிறகு சில மாதங்கள் கழித்து வேறு இந்திய பெண்கள் வந்தனர்.பிறகு தமிழ் பெண்களும்(மாணவிகள்) ஒருசிலர் வந்து இணைந்தனர்.அதன்பிறகு மருத்துவக்கல்லூரிக்கு மாற்றப்பட்டேன். ரஷ்ய காவல்துறை          மொழிப்பாடம் பயின்ற காலத்தில்(MADI Institute) ஒருநாள் அவசரமாக கல்லூரிக்கு சென்ற நேரத்தில் என்னுடைய passport மற்றும் student ID card எடுத்துச்செல்ல மறந்துபோனேன்.இது இல்லாமல் சாலையி...

மைக்கேல் ஜாக்சனை கூகுளில் மில்லியன் கணக்கான மக்கள் ஒன்றாகத் தேடினர். ஏன்?

Subbiahpatturajan வேதனையான உண்மை என்னவென்றால் இவற்றில் எதையும் பணத்தை கொண்டு வாங்க முடியாது * மைக்கேல் ஜாக்சன் எனும் இதிகாசம் 150 ஆண்டுகள் வாழ விரும்பினார்⁴; *அதற்காக, தலைமுடி முதல் கால் வரை தினமும் பரிசோதிக்கும் 12 மருத்துவர்களை அவர் வீட்டில் நியமித்தார்.* *அவரது உணவு எப்போதும் அவர் சாப்பிடுவதற்கு முன்பு ஆய்வகத்தில் சோதிக்கப்பட்ட பின்னரே அவருக்கு வழங்கப்பட்டது.* *தனது அன்றாட உடற்பயிற்சி மற்றும்  உடல் பராமரிப்புகளை மட்டும் கவனிக்க அவர் மேலும் 15 பேரை நியமித்தார்.* *ஆக்ஸிஜனின் அளவைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு படுக்கையைப் பயன்படுத்தினார்.* *அவரது உறுப்புகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், உடனடியாக உடல் உறுப்புதான நன்கொடையாளர்களை அறுவை சிகிச்சைக்கு தயார் நிலையில் வைத்திருந்தார்.* *மேலும் இந்த உடல்தான  நன்கொடையாளர்களின் அன்றாட செலவுகளை அவரே ஏற்றுக்கொண்டார்.* *அவர் 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற கனவுடன் முன்னேறிக்கொண்டிருந்தார். *ஆனால் கடைசியில் அவரின் கனவு பலிக்காது தோல்வியடைந்தார் ....* *ஜூன் 25, 2009 அன்று, தனது 50 வயதில், அவரது இதயம் துடிப்பதை நிறுத்தியது.* *அந்...

கள்ளைப் பற்றிய சமூகத்திற்கு தெளிவான அறிவுரை வாங்க பார்க்கலாம்.

Subbiahpatturajan வியாபார நோக்கம்.., அரசியலுக்காக இயற்கையான பனங்கள்ளு, தென்னைகள்ளுதடை செய்ய பட்டு இருப்பது மாற வேண்டும்…!!! கள் FAQ's, 1. # கள்என்றால்என்ன ? #பனை, #தென்னை மரங்களில் பாளையை  பக்குவப்படுத்தி சீவினால் தேன் போன்ற இனிப்பான  திரவம் கிடைக்கும். அது சற்று நொதித்து புளிப்பு சுவையாக மாறினால், அதுதான் கள் 2. பதநீர் என்றால் என்ன ? மண் கலையத்தில் சுண்ணாம்பு தடவி பனை, தென்னை மரங்களின் பாளைகளில் இருந்து கிடைக்கும் திரவத்தை சேகரித்தால், அதுதான் பதநீர்.  3. கள் மது வகையா ? கள் மது வகை கிடையாது. உணவு வகைகளில் ஒன்று. இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 47, கள்ளை உணவாகவும், மருந்தாகவும் வகைப்படுத்தி உள்ளது. 4. கள் போதை தருமா ? புளித்த மாவில், தயிரில் கிட்டத்தட்ட 2% ஆல்காஹல் உள்ளது. கள்ளில் 2%-4% ஆல்காஹல் உள்ளது, இதனால் போதை வராது, கள் குடித்த பிறகு, சூடாக காரமான உணவுகளை உண்டால் சிறிது போதை வரும் 5. கள்ளால் என்ன பயன் ? பல ஊட்டச்சத்துகள் உள்ளன, சில நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது, தடை நீக்கப்பட்டால் #பனை மரங்கள் அழிவதை தடுக்கலாம், பனை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்பட...

கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது ஆனால் ஒரு கண்டீசன்..!?

Subbiahpatturajan  ஒருஊரில் கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது. அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் 3 விஷயங்கள் எழுதப்பட்டிருந்தது... 1. கடைக்கு ஒரு தடவை தான் வரலாம். 2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் மேல போகப்போக அதிகமாகிக் கொண்டே போகும். 3. ஒரு தளத்தில் இருந்து மேலே சென்று விட்டால் மறுபடியும் கீழே வர முடியாது.. அப்படியே வெளியே தான் போக வேண்டும்..... இது தான் அந்த விதிமுறைகள்.... இதையெல்லாம் படித்து பார்த்து விட்டு, ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்.. "கணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமல்லவே, என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்தார்... முதல் தளம் அறிக்கை பலகையில் , இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் "வேலை உள்ளவர்கள்". "கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்". இது என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்... இரண்டாம் தளம் அறிக்கை பலகையில் , இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் "வேலை உள்ளவர்கள்". "கடவுள் நம்பிக்கை உளளவர்கள்" மேலும்  "குழந்தை...

பெண்கள் ஏன் பெரும்பாலும் ஆண்களை சார்ந்தே வாழ்கிறார்கள்? காரணம் என்ன!?

Subbiahpatturajan பெண்களை பற்றி தெரிந்து கொண்டால் அவர்களை ஊதாசீனம் செய்ய மாட்டீர்கள் . பெண் ஆணை விட இருபது சதவீதம் எடை குறைவு. ஆணைப் போல வேகமாக ஓடவோ தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைச்சல். இதயமும் சுவாசப்பையும் அவளுக்குக் கொஞ்சம் சின்னது.  வியர்வை அதிகம். சின்ன வயதிலிருந்தே ஆணைவிட அவள் அதிகம் புன்னகை செய்கிறாள்.  விருப்பங்கள் ஆணைவிடச் சிறிய பொருட்களை விரும்புகிறாள். சின்ன குடைகள், சின்ன பர்ஸ்கள், கைக்குட்டை கூட சின்னது. சைக்கிள், ஸ்கூட்டி போன்ற சின்ன வாகனங்கள்.  இப்படியே அவள் பயன்படுத்தும் அத்தனை வஸ்துக்களும் சிறியது. புத்தகங்களை எப்போதும் நெஞ்சோடுதான் அணைத்துச் செல்வாள். ஆண்களைப் போல் பக்கவாட்டில் இல்லை.  உடலமைப்பு வித்தியாசம் அவளுடைய எலும்பு அமைப்பு நளினமானது. தசை நார்கள் முப்பது சதவீதம் வலிமை குறைவு. தொண்டை சின்னது. அதனால் கீச்சுக்குரல், இடுப்பு கொஞ்சம்  பெரிசு. அவள் ரத்தத்தின் அடர்த்தி கொஞ்சம் குறைவு. அதில் ஹிமோக்ளோபின் குறைவு.  குறைபாடுகள் நாடித்துடிப்பு ஆண்களை விட அதிகம். படக்கென்று வெட்கப்பட்டு கன்னம் சிவப்பாள். அவள் உடலில் கால்சியம் ஸ்திரமாக அமைவத...

உங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்...

Subbiahpatturajan உங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நீங்கள் கவனிக்க வேண்டியது வெளி உலகத்தை அல்ல....உங்களை.  உங்களை நீங்கள் எந்த அளவிற்கு கவனிக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் செயல்கள் தெளிவாய் இருக்கும். உங்கள்  எண்ணங்களையும்   சிந்தனைகளையும்  செயல்களையும் கற்பனைகளையும் எந்த அளவிற்கு நீங்கள் கவனிக்கிறீர்களோ  அந்த அளவிற்கு உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தேவையற்ற சிந்தனைகளை விட்டுவிட்டு நேர்மறையாக சிந்திக்க முயற்சி செய்யுங்கள்.  நீங்கள் ஒன்றை செய்கிறீர்கள் என்றால் அதை மனிதர்களுக்காக செய்யாமல் இறைவனுக்காக செய்யுங்கள். நீங்கள் எதை அடையவேண்டும் என்று  ஆசைப்படுகிறீர்களோ அதைப்பற்றி இடைவிடாமல் கற்பனை செய்யுங்கள். அதை அடைய தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் 👍  நிச்சயமாக ஒருநாள் அதை அடைவீர்கள்  இந்த உலகில் நம்மால் முடியும் என்று நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். முடியாது என்று நினைத்தால் நிச்சயமாக முடியாது. நம் எண்ணங்களே நம்மை எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்ய வைக்கின்றன.. நம் மனதால் நம்மை எதையும்  செய்ய வைக்க ம...

பிறப்பு மற்றும் இறப்பு இரண்டும் இப்போது மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டது

Subbiahpatturajan உங்கள் வாழ்க்கைக்கு அருமையான மேற்கோள்கள்.  இவை நான் குறிப்பிட்ட காலப்பகுதியில் பெற்ற மேற்கோள்களில் இருந்து எடுக்கப்பட்டவை, வாழ்க்கைப் பயணம்  I) முந்தைய நாட்களில், நம் உறவினர்கள் சில நாட்கள் எங்களைச் சென்று பார்த்துவிட்டு வீட்டை விட்டு வெளியே வரும்போது நம் கண்கள் ஈரமாகிவிடும்.  அதேசமயம், இப்போதெல்லாம் இறுதிச் சடங்குகளின் போது கூட கண்ணீரைக் காண முடியாது; பிறப்பு மற்றும் இறப்பு இரண்டும் இப்போது மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டது ;  அறுவைசிகிச்சை இல்லாமல் பிறப்பு இல்லை, காற்றோட்டம் இல்லாமல் இறப்பு இல்லை; கண்ணீரும் புன்னகையும் பொய்யாகிவிட்ட நிலையில், உண்மையான மனிதனை அடையாளம் காண்பது இன்றைய நாட்களில் மிகவும் கடினம். உறவைப் பேணுங்கள்  II) உங்கள் கையில் டச் ஃபோன் மொபைலை வைத்திருப்பது நமது நிலைக்கு நல்லது;  ஆனால் அனைவருடனும் தொடர்பில் இருப்பது நமது அன்றாட வாழ்க்கைக்கு நல்லது;  III) வாழ்க்கை மாறுவதற்கு நேரம் எடுக்கும் என்று தோன்றியது ஆனால் காலம் மாறுவது நம் வாழ்க்கையையும் மாற்றிவிட்டது என்பதை மறந்து விடுகிறோம்; மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்  ...

மனைவியுடன் விஷயத்தை சொல்லிவிட்டு ஸ்மார்ட்போனை தூக்கி எறிந்து விடுங்கள்

Subbiahpatturajan ஆன்லைன் சூதாட்டம் மற்றுமொரு அழகிய குடும்பத்தைச் சிதைந்திருக்கிறது.  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை. ஆண்டுக்கு 28 லட்சம் சம்பளம். அத்தனை அழகான இரண்டு பிள்ளைகள் என வரம் வாங்கி வாழ்ந்திருந்த வாழ்வை, ஆன்லைன் ரம்மி ஒரு நொடியில் முடித்து வைத்த கொடூரத்தால் மனம் பற்றி எரிகிறது.  சூது கவ்வும் மற்ற மரணங்கள் போல இதிலும் சூது விளையாட்டாய்த்தான் ஆரம்பித்திருக்கிறது. பாதியில் விட முடியாமல் நண்பர்களிடத்தில் கடன் பெற்றும் விளையாடியிருக்கிறார். ஒரு கோடிக்கு மேல் இழந்து பரிதவிக்க அப்போது தான் இது மனைவிக்கு தெரிய வந்திருக்கிறது. பிரச்சினை வெடிக்க, கோபத்தில் மொத்த குடும்பத்தையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  ஆன்லைன் சூதில் வெல்வது மிகமிகக் கடினம். அதன் RNG (Random Number Generator )அல்காரிதம் அதிநுணுக்கமாக உருவாக்கப்பட்டது. நியாயமாக இதன் வேலை ரேண்டமாக எண்களை உருவாக்கி அனுப்புவதுதான் என்றாலும், நீங்கள் தோல்வி அடைந்ததும் எவ்வளவு துரிதமாக மற்றுமொரு ஆட்டத்தை ஆரம்பிக்கிறீர்கள், பண இருப்பு கரைந்ததும் எவ்வளவு வேகமாக மீண்டும் ரீசார்ஜ் செய்கிறீர...

வெள்ளை படுதல் பால்வினை நோய் உள்ளவர்களுக்கு எளிய முறையில் வீட்டு வைத்தியம்...!!!

Subbiahpatturajan✍🏻  சங்குப்பூ,.. சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. *சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; உடல் வெப்பத்தைத் தணிக்கும்; வாந்தி உண்டாக்கும்; பேதியைத் தூண்டும்; தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.  சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். எப்படி கண்டுபிடிக்க  சங்குப்பூ விதை புளிப்பாகவும், மணமுள்ளதாகவும் இருக்கும். உடலுக்கு வலிமை தரும் சர்பத், பான வகைகளில் சங்குப்பூ சேர்க்கப்படுகின்றது. சங்குப்பூ ஏறு கொடி வகையைச் சார்ந்தது. பச்சையானகூட்டிலைகளையும், பளிச்சிடும் நீல நிறமான மலர்களையும்  உடையது* நிறங்கள் *சங்குப்பூ வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகள் பொதுவாக காணப்படும். மேலும் நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட தாவரங்களும் உண்டு....

விளையாட்டு வீரர்களுக்கு இந்திய துணை ராணுவப் படையில் வேலைவாய்ப்பு...2022

Subbiahpatturajan விளையாட்டு வீரர்களுக்கு இந்திய துணை ராணுவப் படையில் வேலைவாய்ப்பு . துணை ராணுவப்படை களில் ஒன்றான மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் ( CISF )காலியாக உள்ள 249 பணியிடங்களுக்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இது பற்றி விவரங்கள் பின்வருமாறு ... 1. பணியின் பெயர்: head constable sports quota 2022 காலியிடங்கள்:  249(காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் விளையாட்டு தகுதி ஆகியன அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பளம்:  25,000 முதல் 81,000வரை வயது வரம்பு: . 01/08/2021 தேதியின்படி 18 முதல் 23 வயதுககுள் இருக்க வேண்டும் SC/ST-5 வருடங்கள்,OBC-03 வருடங்கள் வயதுவரம்பில் சலுகைகள் தரப்படும். கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் அட்டவணையில் உள்ளபடி காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் ஏதாவது ஒன்றில் மாநில தேசிய சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று விளையாடி இருக்க வேண்டும். முக்கிய அறிவிப்பு: தற்போதும் விளையாட்டு வீரராக இருக்க வேண்டும்.01/01/2019முதல்31/03/2022 வரையிலான விளையாட்டு தகுதிக...

உங்கள் மனைவிக்கு இந்த அடையாளங்கள் இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி..!!!

Subbiahpatturajan நல்ல பண்புள்ள மனைவியின் அடையாளங்கள்  கணவர் வீட்டிற்கு வருவதற்கு முன் தன்னையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பாள்.... நல்ல விஷயங்களை செய்வதற்கு முன் தர்மம் கொடுப்பதற்கு கணவருக்கு ஆர்வமூட்டுவாள்.... இறைவனைப் புகழ்ந்த வண்ணமாக சமைப்பாள்.... வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்வாள்.... மற்ற பெண்களைப் பற்றி (நல்லதும், கெட்டதும்) கணவரிடம் சொல்லமாட்டாள்.... கணவரை வீட்டின் வாசல் வரை வந்து பிரார்த்தனையுடன் வழியனுப்புவாள்.... கணவன் மனைவியைப் பார்த்தால் அவர்களுடய குணங்களால் பார்வையால் சந்தோஷப்படுவார்கள்.... கணவனுக்கு கட்டுப்படுவாள்.... தனது மானத்தையும் , மரியாதையும், கணவருடைய பொருள்களையும் பாதுகாப்பாள்.... தன்னுடைய தவறை ஒப்புக்கொள்வாள்.... கணவருடைய உறவினரிடத்தில் நல்ல முறையில் நடந்துகொள்வாள்... இறைவனுக்கு மாற்றமான விஷயத்தில் யாருக்கும் கட்டுப்படமாட்டாள்.... கணவரை கண்ணியமான வார்த்தைகளைக் கொண்டு அழைப்பாள்.... எந்த கஷ்டத்திலும், சிரமத்திலும் இறைவனுக்காக பொறுமையாக இருப்பாள்.... போதும் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்துவாள்.... ஒவ்வொரு நிலையிலும் கணவருக்கு உதவியாக இருப்பாள...

Indian Army Navy Airforce ல் அதிகாரியாக பணியாற்ற வேண்டுமா? CDS Examination vacancy..

Subbiahpatturajan இந்திய ராணுவத்தில் அதிகாரி பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. UPSC தேர்வு செய்யப்படும் defence service exam மூலமாக தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு எழுதும் இளைஞர்கள் இளைஞிகள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ARMY 1.பணியின் பெயர்:. Leftinent (இந்திய ராணுவ பயிற்சி மையம்) காலியிடங்கள்:.  100 வயது :02/01/1999-01/01/2004க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும் கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் NAVY 2.வேலையின் பெயர்: லெப்டினன்ட் (Indian Navay academy) காலியிடங்கள்:. 22 வயது வரம்பு:. 02/01/1999-01/01/2004 க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும் கல்வி தகுதி: Engineering பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். AIRFORCE 3.பணியின் பெயர்:  லெப்டினன்ட் (இந்திய விமானப்படை) காலியிடங்கள் :  32 வயது வரம்பு:  20 வயது முதல் 24 வயது வயது வரை கல்வித்தகுதி:  physics ,mathematics பாடப்பிரிவில் பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது BE,/B. Tec  முடித்திருக்க வேண்டும். Pune 4. பணியின் பெய...

உலகிலேயே குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ள நாடு ஏது?

Subbiahpatturajan *அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்?* நோக்கியா செல்போன் நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலக அளவில் 'கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும்  பின்லாந்து தான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும் அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டி போட முடியவில்லை. பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான். இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால் அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை.  ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும் கூ...

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

மூலப்பத்திரம் என்றால் என்ன மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?"

` `எங்களுடைய பரம்பரைச் சொத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது. அதற்குப் பத்திரம் பதிவுசெய்வது எப்படி?" ``பரம்பரைச் சொத்துக்குப் பட்டா மட்டுமே இருந்தால் கவலையில்லை. ஏதாவது பத்திரம் வேண்டுமென்றால், குடும்பத்துக்குள்ளேயே ஒருவருக்கு அடமானம், குத்தகை போன்ற ஆவணம் எழுதி, பதிவு செய்தால், உங்களின் பெயருக்கு வில்லங்கம் மாறிவிடும். சில நாள்கள் கழித்து, பதிவான அடமானம் அல்லது குத்தகையை ரத்து செய்து பத்திரம் பதிவு செய்தால், வில்லங்கச் சான்றில் மீண்டும் உங்கள் பெயர் பதிவு இடம்பெறும்.'' பத்திரம் ``பத்திரப் பதிவில் மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?" ``ஆம். ஒருவருக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு தாய்ப்பத்திரம் சொத்துக்கு முக்கியம். தாய்ப்பத்திரம் இல்லாத சொத்து அநாதைதான். தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்." ``தாம்பரம் வரதராஜபுரத்தில் பெரும் நிலப்பரப்பு விற்கப்பட்டது. 3,600 சதுர அடி நிலத்தை நான் 1980-ல் வாங்க...

பாத்ரூம் கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம்...!?

Subbiahpatturajan 60/65 வயதிற்கு மேற்பட்ட  இருபால் அன்பர்களுக்கும் சில முக்கியமான டிப்ஸ்:- 1.பாத்ரும் செல்லும் பொழுது(வீட்டில்) கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம். 2.வீட்டை தண்ணீர் கொண்டு தரையை துடைக்கும்பொழுது நடக்கவேண்டாம். 3.ஸ்டூல்,நாற்காலி,பெஞ்ச் போன்றவற்றின் ‌.மீது ஏறி பொருட்களை எடுப்பது,சுத்தம் செய்வது, துணிகளை காயப்போடுவது, போன்ற வேலைகளை தவிர்க்கவும். 4.கார் இருந்தால் தனியாக ஓட்டவே கூடாது.கூட யாராவது கண்டிப்பாக இருக்க வேண்டும். 5.மாத்திரை மருந்துகளை வேளா வேளைக்கு தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.. 6.உங்களை எந்தவிஷயம் சந்தோஷப்படுத்துமோ அதை யாருக்காகவும், காம்ப்ரமைஸ் செய்ய வேண்டாம். 7.வங்கிக்கு பணம் எடுக்கச்சென்றால் தனியாகச்செல்ல வேண்டாம்.துணையுடன்செல்லவும். 8.வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அறிமுகமில்லாதோர் யாராவது வந்தால் கூடியவரை அச்சூழலை தவிர்க்கவும்.அல்லது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவும். 9.கூடியவரை படுக்கையறை, குளியலறை, கழிப்பறை  ஆகியவற்றில் காலிங் பட்டன் அவசியம். அசாதாரண சூழலில் அழைப்பதற்கு உதவும். 10.சைக்கிள் முதல் கார் ...

உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️

Subbiahpatturajan விவசாயிகள் மட்டுமின்றி,  உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️ 1️⃣ எதற்காக அதானி குழுமம் 9.5 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை தயாராக வைத்துள்ளது..? இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது மோடிக்கு அவரது அறிவுரையா..?? 2️⃣ அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பட்டியலை மாற்றியது ஏன்..? 3️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சிறு விவசாயி எப்படி ஒப்பந்தம் போட முடியும்..?? அவன் சொன்ன இடத்தில்தானே கையெழுத்துப் போடவேண்டும். 4️⃣ மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்றால் யாருக்கு லாபம் ..?? 5️⃣ விற்பனைத் தொகையில் இப்படித் தவணை முறையில் தந்தால் எந்த விவசாயியால் பிழைக்கமுடியும்..?? 6️⃣ PDS system  என்னாவது ..?? 7️⃣ Food Corporation of India வின் நிலை என்ன..?? அவர்கள் நாடெங்கிலும் ஏற்படுத்தி உள்ள வசதிகள் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பதை ஊகிப்பதில் சந்தேகம் உள்ளதா ..?? 8️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களால் மாநில இளநிலை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்வது அவ்வளவு கடினமா ..?? 9️⃣ ஒரு நாட்டில் உழவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நீதி மன்றம் செல்லமுடியாது என்பது உண்மையில்...

As your habits are, there will be people who behave with you in the same way.

Subbiahpatturajan நல்ல பழக்கவழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்..* _ உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே..  எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது._  _*இறுக்கமான மனிதர்களாகவும், எந்திரகதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசை எல்லாம் பார்க்க முடிகிறது.*_ _சகமனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி விட்டது._  _*இதற்கெல்லாம் அடிப்படை என்ன என்று சிந்தித்தால் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.*_ _எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது. மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை_ _ *நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும். ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கு...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* கோரானா கேள்வி பதில்கள்

Subbiahpatturajan *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* 1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?*  இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.  2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?*  இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந...

முன்னொரு காலத்தில் பெண் சுதந்திரம் என்பது

Subbiahpatturajan #பெண்சுதந்திரம் காஞ்சிபுரத்திற்கு பக்கத்தில் உள்ள கிராமம் தான் நான் வளர்ந்தது. என் வீட்டில் எல்லாம்  எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது ஆனா அக்கம் பக்கத்து வீடுகளில் பெண்களோட அடிப்படை உரிமைகள் கூட அவங்க பெற்றோர்களாலேயே பறிக்கப்படுவதை நேரில் பார்த்து வெறுத்துப் போய் இருக்கிறேன். பொட்ட புள்ளைங்க விளையாடக்கூடாது. பூமி அதிர நடக்கக்கூடாது.வாய்விட்டு சிரிக்க கூடாது . சமையல்கட்டு உள்ளேயே முடங்கி கிடக்க வேண்டும் . ஆனால் இந்த கட்டுப்பாடு எல்லாம் ஆம்பளை பசங்களுக்கு கிடையாது .அதை விட கொடுமை சாப்பாடு விஷயம் தான். ஆண்பிள்ளை பசங்களுக்கு நிறைய சாப்பாடு போடுவாங்க பொம்பளை பசங்களுக்கு கம்மிதான் சொந்த அம்மா அப்பாவே இதை பண்ணா எப்படி இருக்கும் ஆம்பளையாகட்டும் பொம்பளையாகட்டும் வயிறு ஒன்றுதானே . அப்பவே எங்க அம்மாகிட்ட ஏம்மா இப்படி பண்றாங்கன்னு சண்டை போட்டு இருக்கேன். அதுல எங்க அம்மா நம்ம வீட்டில இப்படி இல்லை மத்தவங்க வீட்ல நடக்கிற தான் நாம எப்படிமா கேட்க முடியும் என்று சொல்லுவாங்க. நீங்களும் அந்த கொடுமைக்கு ஆளாகி இருக்கீங்களா...? அந்த சமயத்துல அம்மா அப்பாவை எதிர்த்து ஒன்றும் பண்ண...

ஆப்பிள் இந்தியா வந்த வரலாறு தெரியுமா உங்களுக்கு...!!? Do you know the history of Apple India ... !!?

Subbiahpatturajan மெல்ல அழிந்த #இயற்கை உணவுகள்..!! ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா?.. இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான்...  குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்.. தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது.. அரேபிய #பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது.. ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி. #ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது.. மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது.. இங்கு வெள்ளையன்  வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாரை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை. வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான்... வந்...

தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே...???

Subbiahpatturajan ஏன்? எதற்கு? என, சிந்தித்துண்டா? தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட் டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே  நல்ல வேலைக்கு போகவா? ஆங்கிலம் சரளமாக பேசவா? குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?? ஏன்? எதற்கு? என்று சிந்தித்ததுண்டா?? 11TO12 200000 லட்சம் ஆக மொத்தம் Pre kg 25000 ல் துவங்குகிறது  Lkg 40000 Ukg 50000 1st.60000 2ND 70000 3D. 80000 4TH 90000 5TH 100000 6TO8 1.20000 9TO10. 150000 9,85,000 ரூபாய்  இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க. சரி! இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா? உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும் அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.?  ஒன்றை நினைவில் வையுங்க...