Subbiahpatturajan
நீங்கள் கவனிக்க வேண்டியது வெளி உலகத்தை அல்ல....உங்களை.
உங்களை நீங்கள் எந்த அளவிற்கு கவனிக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் செயல்கள் தெளிவாய் இருக்கும்.
உங்கள்
எண்ணங்களையும்
சிந்தனைகளையும்
செயல்களையும்
கற்பனைகளையும்
எந்த அளவிற்கு நீங்கள் கவனிக்கிறீர்களோ
அந்த அளவிற்கு உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
தேவையற்ற சிந்தனைகளை விட்டுவிட்டு
நேர்மறையாக சிந்திக்க முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் ஒன்றை செய்கிறீர்கள் என்றால் அதை மனிதர்களுக்காக செய்யாமல் இறைவனுக்காக செய்யுங்கள்.
நீங்கள் எதை அடையவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ அதைப்பற்றி இடைவிடாமல் கற்பனை செய்யுங்கள்.
அதை அடைய தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் 👍
நிச்சயமாக ஒருநாள் அதை அடைவீர்கள்
இந்த உலகில் நம்மால் முடியும் என்று நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். முடியாது என்று நினைத்தால் நிச்சயமாக முடியாது.
நம் எண்ணங்களே நம்மை எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்ய வைக்கின்றன..
நம் மனதால் நம்மை எதையும் செய்ய வைக்க முடியும்.
மனதை திடப்படுத்துங்கள்.
எந்த ஒரு பெரிய வெற்றியும் சிறிய செயலில் தான் தொடங்குகிறது என்பதை நம்புங்கள்.
நீங்கள் செய்யும் சிறு சிறு முயற்சிகளும், சிறு பிரார்த்தனைகளும் கண்டிப்பாக வீணாவதில்லை. அதன் பலன்கள் கண்ணுக்கு தெரிவதில்லை அவ்வளவுதான்.
முயற்சி செய்வதை நிறுத்தாதீர்கள்.
முயன்று கொண்டே இருங்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் இலக்கை நோக்கி ஒரு அடியாவது எடுத்து வையுங்கள்.
அதன் பலன்கள் நிச்சயமாக ஒருநாள் பெரிய அளவில் கிடைக்கும் .
நம்புங்கள்.
உங்களை நம்புங்கள்.
கடவுளை நம்புங்கள்.
இந்த பிரபஞ்சத்தை நம்புங்கள்.
உங்களால் அடைய முடியாதது என்று எதுவும் இல்லை.
உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் அடைந்து மிக சிறப்பான செழிப்பான வாழ்க்கையை வாழ வாழ்த்துக்கள்.
இந்த நாள் ஒரு அற்புதமான நாளாக அமைவதற்கு வாழ்த்துக்கள்
கருத்துகள்