முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருநெல்வேலி மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்கள் சீரழிக்கப் படுகின்றன.

Subbiahpatturajan
*பக்கத்து  மாநிலமான கேரளாவில் இதே சூழலில் உள்ள தளங்கள் எல்லாம் மென்மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மேம்படுத்தப் படுகிறது.*
திருநெல்வேலி மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்கள் சீரழிக்கப் படுகிறது.

ஆனால் இங்கே ??


சிறு வயதில் பள்ளி மூலமாகவோ, குடும்பத்துடனோ  பிக்னிக்காக சென்று
பார்த்து வந்த ஒரு நாள் முழுவதும் சுற்றி மகிழ்ந்த மணிமுத்தாறு அணை பூங்கா  *பராமரிப்பின்றி அழிக்கப்பட்டு விட்டது.*
பாபநாசம் காரையாறு அணையில் படகு சவாரி செய்து "சின்ன சின்ன ஆசை" பாடி, நீராடி மகிழ்ந்த அனுபவத்தை திரும்ப பெற *தடைகள் விதிக்கப் பட்டுள்ளது.*

*பாபநாசம் அகத்தியர் அருவியில் இலவசமாக வருடம் முமுவதும் குளித்து* மகிழும் வாய்ப்பை கொரானா பெயரில் தடை செய்து,

*இப்பொழுது நபருக்கு 30 ரூபாய் + வாகனக் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டிய அநியாய சூழல்.*
பாபநாசம் தலையணை நிலமை அதை விட மோசம்.
என்னை போன்ற பலர் நீச்சல் பயிற்சி செய்த பெரிய நீச்சல் குளம் போன்றும், 
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் சிறிய அருவியில் நீராடி மகிழும் வாய்ப்பைத் தந்த நீண்ட கரைப் பகுதியை கொண்ட தலையணையும் *மூடப்பட்டு விட்டது.*
அங்கு பாதுகாப்பாக குளிக்கும் வசதிகளை செய்து கொடுப்பதை விடுத்து அந்த பகுதியையே மூடியது,
வருடத்திற்கு ஒரு முறை அகத்தியரை தரிசிக்க பாபநாசம் வழியாக மலையேறி சென்ற பக்தர்களின் புனிதப் பயணமும், இயற்கையின் அழகை, பெருமையை மக்கள் உணரும் அரிய வாய்ப்புகளும் வேண்டும் என்றே முடக்கப் பட்டது.*
ஆனால் அதே இடத்திற்கு திருவனந்தபுரம் வழியாக கேரள வனத்துறையினரே பயணிகளை அழைத்து செல்லும் வசதிகள் விரிவு படுத்தப் பட்டுள்ளது.
*தமிழகத்தில் மட்டும் தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக அனுபவித்த உரிமைகள் பிடுங்கப் படுவது 
கண்டணத்திற்கு உரிய செயல்
சொந்த மாநில மக்களின் சுற்றுலா தலங்களில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...