Subbiahpatturajan
மேலே கொடுக்கப்பட்டுள்ள விஷயத்தில் சரியான முறையில் இருக்கிறோமா என்று பெண்கள் சிந்தித்து பார்க்கலாம்...
- கணவர் வீட்டிற்கு வருவதற்கு முன் தன்னையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பாள்....
- நல்ல விஷயங்களை செய்வதற்கு முன் தர்மம் கொடுப்பதற்கு கணவருக்கு ஆர்வமூட்டுவாள்....
- இறைவனைப் புகழ்ந்த வண்ணமாக சமைப்பாள்....
- வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்வாள்....
- மற்ற பெண்களைப் பற்றி (நல்லதும், கெட்டதும்) கணவரிடம் சொல்லமாட்டாள்....
- கணவரை வீட்டின் வாசல் வரை வந்து பிரார்த்தனையுடன் வழியனுப்புவாள்....
- கணவன் மனைவியைப் பார்த்தால் அவர்களுடய குணங்களால் பார்வையால் சந்தோஷப்படுவார்கள்....
- கணவனுக்கு கட்டுப்படுவாள்....
- தனது மானத்தையும் , மரியாதையும், கணவருடைய பொருள்களையும் பாதுகாப்பாள்....
- தன்னுடைய தவறை ஒப்புக்கொள்வாள்....
- கணவருடைய உறவினரிடத்தில் நல்ல முறையில் நடந்துகொள்வாள்...
- இறைவனுக்கு மாற்றமான விஷயத்தில் யாருக்கும் கட்டுப்படமாட்டாள்....
- கணவரை கண்ணியமான வார்த்தைகளைக் கொண்டு அழைப்பாள்....
- எந்த கஷ்டத்திலும், சிரமத்திலும் இறைவனுக்காக பொறுமையாக இருப்பாள்....
- போதும் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்துவாள்....
- ஒவ்வொரு நிலையிலும் கணவருக்கு உதவியாக இருப்பாள்....
- கணவர் விஷயத்தில் இறைவனைப் பயந்து நடப்பாள்....
- எப்போதும் முகம் சுழிக்கமாட்டாள்....
- கணவர் எந்த பொருளை (மட்டமானதும்) கொடுத்தாலும் அதை மதிப்பாள்....
- கணவருடய பார்வையில் தனது மதிப்பை தாழ்த்தி விடமாட்டாள்....
- குழந்தைகளின் விஷயத்தில் ஒவ்வொன்றையும் கணவரிடம் ஆலோசனை செய்வாள்....
- கணவருடய தேவையைப் பூர்த்தி செய்வதில் தாமதிக்கமாட்டாள்....
- கணவரின் கஷ்டமான நேரத்தில் ஆறுதலாக இருப்பாள்....
- கணவரின் வருமானத்திற்கு ஏற்றபடி வாழ்க்கையை சிக்கனமான முறையில் நடத்துவாள்....
- எப்பொழுதும் தன்னுடய குணத்தாலும் உடல் மற்றும் உடையில் சுத்தமாக இருப்பாள்....
- கணவரை விட எவ்வகையிலும் தன்னை சிறப்பாக , உயர்வாக நினைக்கமாட்டாள்....
- கெட்ட நடத்தை உள்ள பெண்களிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளமாட்டாள்....
- இல்லம் எப்பொழுதும் சந்தோஷத்துடன் இருக்கவேண்டும் என்று நினைப்பாள்....
- கணவனின் முன்னால் எப்போதும் புத்துணர்ச்சியாக இருப்பாள்....
- கணவரிடத்தில் மட்டும் தன்னை அலங்கரித்துக் கொள்வாள்....
- கணவருடய குறைகளை பார்க்காமல் நிறைகளை மட்டுமே பேசுவாள்....
- கணவரின் உத்தரவு இல்லாமல் எங்கும் செல்லமாட்டாள்....
- ஆகவே இறைவனின் அருள் வேண்டும், பெற்றோர்களின் பிரார்த்தனை வேண்டும். இவை இரண்டும் இல்லாத திருமணமும், மனைவியும் நறுமணம் இல்லாத வாழ்வுதான் என்பதை நீங்கள் உணர வேண்டும்....
- ஒரு நல்ல பண்புள்ள மனைவி கிடைக்க இறைவனிடம் எப்பொழுதும் பிரார்த்தனை செய்ய வேண்டும்...
- அதே போல ஒரு பெண்ணுக்கு ஒரு நல்ல கணவர் கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்....
- இறைப்பற்று உள்ள மனைவி அமைய வேண்டும். இறைப்பற்று உள்ள கணவர் அமைய வேண்டும்... கணவனும் மனைவியும் வேண்டிக்கொள்ளலாம்!?
கருத்துகள்