முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உங்கள் மனைவிக்கு இந்த அடையாளங்கள் இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி..!!!

Subbiahpatturajan
உங்கள் மனைவிக்கு இந்த அடையாளங்கள் இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி..!!!
  1. கணவர் வீட்டிற்கு வருவதற்கு முன் தன்னையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பாள்....
  2. நல்ல விஷயங்களை செய்வதற்கு முன் தர்மம் கொடுப்பதற்கு கணவருக்கு ஆர்வமூட்டுவாள்....
  3. இறைவனைப் புகழ்ந்த வண்ணமாக சமைப்பாள்....
  4. வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்வாள்....
  5. மற்ற பெண்களைப் பற்றி (நல்லதும், கெட்டதும்) கணவரிடம் சொல்லமாட்டாள்....
  6. கணவரை வீட்டின் வாசல் வரை வந்து பிரார்த்தனையுடன் வழியனுப்புவாள்....
  7. கணவன் மனைவியைப் பார்த்தால் அவர்களுடய குணங்களால் பார்வையால் சந்தோஷப்படுவார்கள்....
  8. கணவனுக்கு கட்டுப்படுவாள்....
  9. தனது மானத்தையும் , மரியாதையும், கணவருடைய பொருள்களையும் பாதுகாப்பாள்....
  10. தன்னுடைய தவறை ஒப்புக்கொள்வாள்....
  11. கணவருடைய உறவினரிடத்தில் நல்ல முறையில் நடந்துகொள்வாள்...
  12. இறைவனுக்கு மாற்றமான விஷயத்தில் யாருக்கும் கட்டுப்படமாட்டாள்....
  13. கணவரை கண்ணியமான வார்த்தைகளைக் கொண்டு அழைப்பாள்....
  14. எந்த கஷ்டத்திலும், சிரமத்திலும் இறைவனுக்காக பொறுமையாக இருப்பாள்....
  15. போதும் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்துவாள்....
  16. ஒவ்வொரு நிலையிலும் கணவருக்கு உதவியாக இருப்பாள்....
  17. கணவர் விஷயத்தில் இறைவனைப் பயந்து நடப்பாள்....
  18. எப்போதும் முகம் சுழிக்கமாட்டாள்....
  19. கணவர் எந்த பொருளை (மட்டமானதும்) கொடுத்தாலும் அதை மதிப்பாள்....
  20. கணவருடய பார்வையில் தனது மதிப்பை தாழ்த்தி விடமாட்டாள்....
  21. குழந்தைகளின் விஷயத்தில் ஒவ்வொன்றையும் கணவரிடம் ஆலோசனை செய்வாள்....
  22. கணவருடய தேவையைப் பூர்த்தி செய்வதில் தாமதிக்கமாட்டாள்....
  23. கணவரின் கஷ்டமான நேரத்தில் ஆறுதலாக இருப்பாள்....
  24. கணவரின் வருமானத்திற்கு ஏற்றபடி வாழ்க்கையை சிக்கனமான முறையில் நடத்துவாள்....
  25. எப்பொழுதும் தன்னுடய குணத்தாலும் உடல் மற்றும் உடையில் சுத்தமாக இருப்பாள்....
  26. கணவரை விட எவ்வகையிலும் தன்னை சிறப்பாக , உயர்வாக நினைக்கமாட்டாள்....
  27. கெட்ட நடத்தை உள்ள பெண்களிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளமாட்டாள்....
  28. இல்லம் எப்பொழுதும் சந்தோஷத்துடன் இருக்கவேண்டும் என்று நினைப்பாள்....
  29. கணவனின் முன்னால் எப்போதும் புத்துணர்ச்சியாக இருப்பாள்....
  30. கணவரிடத்தில் மட்டும் தன்னை அலங்கரித்துக் கொள்வாள்....
  31. கணவருடய குறைகளை பார்க்காமல் நிறைகளை மட்டுமே பேசுவாள்....
  32. கணவரின் உத்தரவு இல்லாமல் எங்கும் செல்லமாட்டாள்....
  33.  ஆகவே இறைவனின் அருள் வேண்டும், பெற்றோர்களின் பிரார்த்தனை வேண்டும். இவை இரண்டும் இல்லாத திருமணமும், மனைவியும் நறுமணம் இல்லாத வாழ்வுதான் என்பதை நீங்கள் உணர வேண்டும்....
  34. ஒரு நல்ல  பண்புள்ள மனைவி கிடைக்க இறைவனிடம் எப்பொழுதும் பிரார்த்தனை செய்ய வேண்டும்...
  35. அதே போல ஒரு பெண்ணுக்கு ஒரு நல்ல கணவர் கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்....
  36. இறைப்பற்று உள்ள மனைவி அமைய வேண்டும். இறைப்பற்று உள்ள கணவர் அமைய வேண்டும்... கணவனும் மனைவியும் வேண்டிக்கொள்ளலாம்!?

மேலே கொடுக்கப்பட்டுள்ள விஷயத்தில் சரியான முறையில் இருக்கிறோமா என்று பெண்கள் சிந்தித்து பார்க்கலாம்...
அதேபோல் ஆண்களும் நாமும் நல்ல பண்புடையவர்களாக கணவனாக நடந்து கொள்கிறோமா என்பது கேள்விக்குறியே?
நல்ல பெண்ணின்  அடையாளங்களை குறிப்பிட்ட நான் நல்ல ஆண்களின் அடையாளங்களை பற்றி அடுத்த பதிவில் குறிப்பிடுவேன் அதுவரை எல்லாம் வல்ல இறைவன் ஆண்களுக்கு நல்ல புத்தியும் நல்லுதவியும் புரிவானாக! 
அடுத்த பதிவு விரைவில்....

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
இதல்லாம் நடக்கிற காரியமா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...