Cinar tamilan

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

"Google Pay PhonePe Paytm support numbers"How to contact. Here are some steps.

Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம்.  இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்:  1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்:  080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...

"பில் தரவில்லை என்றால் பணம் கொடுக்க தேவையில்லை"

Subbiahpatturajan நேற்று நான்  எனது சொந்த ஊரான திருநெல்வேலியில் இருந்து தாதர் விரைவு வண்டியின் (11022) மூலம் பயணம் செய்தேன்.  இரவு உணவிற்கு எதுவும் கிடைக்காததால் ரயிலில் இருந்த IRCTC பேன்ட்ரியில் அசைவ உணவை ஆர்டர் செய்தேன்.  நான் வாங்கிய உணவு  சுவையாகவும் சாப்பிடும் அளவுக்கு  இருந்தது, எனவே நான் உணவை முழுமையாக ரசித்தேன்.   சரி இப்போது  தான் சுவாரஸ்யமான பகுதி வருகிறது,  பேன்ட்ரி பையன் பணம் கேட்டு வந்தபோது, ​​ சிக்கன் ரைஸ்க்கு 150 ஆச்சு சார் என்று ரூபாய் கொடுக்கச் சொன்னார்.  அசைவ சாப்பாடு விலை ரூ.130 என்பது எனக்கு முன்பே தெரியும், மேலும் ரூ.20 கூடுதலாக தரச் சொன்னார்.நான் அவனிடம் விலை விபரத்தை கூறினேன். சரி நான் சாப்பிட்டு சாப்பாட்டிற்கு பில் அடித்து கொண்டு வா என்றேன்   அவன் பிடிவாதமாக  மிஷின் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி என்னிடம் மழுப்பலான பதில் சொல்ல  முதலில் மறுத்த சாப்பாட்டுக்கான பில் தொகையை என்னிடம் வழங்குமாறு பணிவுடன் கேட்டேன்.    பில் கொடுத்தால் மட்டுமே பணம் தருவேன் அல்லது  மேலாளரை தொடர்பு கொள்க...

மன அழுத்தம் தீர சுலபமான 10 வழிமுறைகள் ஆண் பெண் இருபாலரும் கடைப்பிடிக்கலாம்

Subbiahpatturajan *மன அழுத்தத்தை குறைக்க 10 சுலபமான எளிய வழிகள்* 1 - Have a laugh   ஒவ்வொரு முறை நாம் சத்தமாக சிரிக்கும் போது , அதிகப்படியான ஆக்சிஜன் நம் உடல் உறுப்புகளுக்கு சென்று வரும். இதனால் ரத்த ஓட்டம் அதிகமாகி, மன அழுத்தம் தானாகவே குறைந்துவிடும். 2.Spend time with your bestee நமக்கு பிடித்தவர்களிடம் நேரம் செலவிடும் போது, நம் உடலில் இருந்து நல்ல ஹார்மோன்களான செரடோனின் மற்றும் ப்ரோலேக்டின் ஆகியவை சீராக வெளியேறுகின்றன. இவை மன அழுத்தம் ஏற்படும் சூழலை குறைக்கின்றன. 3.Get rid of the clutter நாம் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். அதேபோல் சுற்றி இருக்கும் பொருட்களை ஒழுங்காக பராமரித்து வைத்திருக்க வேண்டும். 4.Do the housework வீட்டில் இருக்கும் போது, உங்களுக்கு பிடித்தமான இசை அல்லது நல்ல டிவி நிகழ்ச்சியை ஒளிபரப்பிக் கொள்ளவும். இதையடுத்து வீட்டில் செய்ய வேண்டிய நமக்கு பிடித்தமான வேலைகளை செய்யலாம். அவ்வாறு செய்யும் போது, உடலில் உள்ள கலோரிகள் எரிவதுடன், சோர்வடையாமல் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும். 5.Drink juices ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை வெகுவ...

Applications are welcome from unmarried men and women ARMY,NAVY,AIRFORCE NEW JOB VACANCIES -2022

Subbiahpatturajan இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள அதிகாரி பணிகளுக்கான 400 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான திருமணமாகாத ஆண் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: தேர்வின் பெயர்: National defence academy and navel academy examination(II)-2022 Vacancy: 400 National defence academy: 370 (Army -208,Navy -42, Airforce -120) Naval academy: 30 Age: 2.7.2004-1.7.2007 க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். கல்வித்தகுதி: National defence academy பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Navy, Air force பணிக்கு physics and mathematics ஐ ஒரு பாடமாக கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் UPSC யால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் SSB ஆள் நடத்தப்படும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் mathematics and general ability test பாடப்பிரிவுகளில் இருந்து கொள்குறி வகையில் கேள்விகள் கேட்கப்படும் ஒவ்வொரு தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும்: எழுத்துத்தேர்வு ...

12ம் வகுப்பு தேர்வு எழுதவிருந்த இரண்டு கிராமத்து பெண்களுக்கிடையிலான மிகவும் சுவாரஸ்யமான உரையாடல்

Subbiahpatturajan    12ம் வகுப்பு தேர்வு எழுதவிருந்த இரண்டு கிராமத்து பெண்களுக்கிடையிலான மிகவும் சுவாரஸ்யமான உரையாடல். *ஷ்யாம்லி-* சமேலி, நீ படிக்கவே இல்லையே  ஏன்?  *சமேலி-* நான் தேர்வில் தேர்ச்சி பெற விரும்பவில்லை, ஏன் படிக்க வேண்டும்?  *ஷ்யாம்லி-* எனக்கு அதிர்ச்சி!  நீ ஏன் தோல்வியடைய விரும்புகிறாய் ?  *சமேலி-* நான் தேர்ச்சி பெற்றால், நான் மேற்கொண்டு படித்துவிட்டு நகரத்தில் பணிபுரியும் ஒரு படித்த பையனை திருமணம் செய்துகொள்ள வேண்டும்.  *ஷ்யாம்லி-* அது நல்லது  தானே ?  அதில் என்ன தவறு?  *சமேலி-* இதில் என்ன சரி?   *கவனமாக கேளுங்கள்:*  # ஏன் ஒரு பெரிய மாசுபட்ட நகரத்தில் இருக்க வேண்டும்.  # கணவருக்கு ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்.  # அவரது ஊதியம் வெறும் ரூ.  18000/மாதம்.  # அவரது சம்பளத்தில் பாதி வீட்டு வாடகைக்கு செலவிடப்படுகிறது.  # அல்லது கடன் வாங்கி, சொந்தமாக வீடு வாங்கி, வயதாகும் வரை கடனை செலுத்திக்கொண்டே இருக்கவேண்டும் !  # நோய்வாய்ப்பட்டு மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் மர...

உலக விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தாலும் உருவாக்க முடியாத ஓர் ஆச்சர்யமான ‘கெமிக்கல் ஃபேக்டரி’ இது.

Subbiahpatturajan கல்லீரல் (liver) நம் சருமத்துக்கு அடுத்ததாக, உடலின் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். வயிற்றின் மேற்புறத்தில், வலது பக்கத்தில், இலை போல் விரிந்திருக்கும் உதரவிதானத்துக்குக் கீழே, கால் இல்லாத காளான் வடிவில் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது கல்லீரல். ஆங்கிலத்தில் இது ‘லிவர்’. பேச்சுத் தமிழில் ‘ஈரல்’. ஒன்றரை கிலோ எடையுள்ள கல்லீரல், மார்புக் கூட்டுக்குப் பின்புறம் பத்திரமாகப் பதுங்கியிருக்கிறது. இதயத்தைப் போலவே இதிலும் எலும்புகள் இல்லை;  தொட்டுப் பார்த்தால் பஞ்சு  மாதிரி அத்தனை மிருது! மேலோட்டமாகப் பார்த்தால், ஒரே உறுப்பாகத் தெரிந்தாலும் அமைப்பு ரீதியில் வலப்பக்கம் ஒன்றும் இடப்பக்கம் ஒன்றுமாக இரண்டு பகுதிகளைக் கொண்டது.    கல்லீரலின் ‘மத்தியப் பிரதேச’த்திலிருந்து (Porta Hepatis), நான்கு அங்குல நீளத்தில் ‘பித்த நாளம்’ (Bile duct) கிளம்புகிறது. பாதிக்கப்படுகிறது.  இது கீழ்நோக்கி இறங்கி, சிறிய வெள்ளரிப் பிஞ்சு அளவில் இருக்கும் பித்தப்பை (Gall bladder)யோடும், முன் அடைப்புக்குறி போலிருக்கும் முன்சிறுகுடலோடும் (Duodenum) கல்லீரலை இணைக்கிறது.  கல்லீரலைக்...

எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்”

Subbiahpatturajan இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை. ஒவ்வொரு நொடியை. நாம் விடும் ஒவ்வொரு மூச்சை. ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்: உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்? அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன். “உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.” “வேறு ஒண்ணா…? எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன். “உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.” “என்னது பிசினஸ் பார்ட்னரா...?" ஆமாம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்யவேண்டியதெல்லாம...

ஒரு நாள் தமிழர்கள் இல்லாமல் இந்த உலகம் இயங்காது என்கிற நிலை வரும்

Subbiahpatturajan ஆம் நாங்கள் தமிழர்கள்  உலக நாடுகள் எல்லாம் தமிழர்களை கிள்ளுக் கிடையாக நினைத்து அவனுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் துட்சமாக வழிநடத்துகின்றனர்.ஒரு நாள் தமிழர்கள் இல்லாமல் இந்த உலகம் இயங்காது என்கிற நிலை வரும்போது நாங்கள் விழித்தெழுவோம்

ஒரு நாள் நான் சொல்வேன் வாழ்ந்ததுபோதும் என்று முதுமையின் வாசலில் - நான் !?

Subbiahpatturajan  ஓர் தாய் முதுமையில் மகனிடம் சொல்லும் கண்ணீர் கவிதை. இது போன்ற கவிதைகளை பதிவு இடுவதில் பெருமைப் படுகின்றேன், ஒரு தாயின் புலம்பல் கவிதை, எனதருமை மகனே !எனதருமை மகனே ! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.. முதுமையின் வாசலில் - நான் முதலடி வைக்கையில் தள்ளாட்டம் என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்... கொஞ்சம் பொறுமை கொள்க ! அதிகம் புரிந்து கொள்க ! என்முதுமை பார்த்து முகம் சுளிக்காதே ! நான் சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா? சத்தம் போடாதே..... உனக்கு நான் நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு கூர்க ! ஆடை மாற்றுகையில் அவதிப் படுகின்றேனா? அசுத்தம் செய்து விட்டேனா? ஆத்திரப்படாதே..... படுக்கை முழுதும் நீ பண்ணிய ஈரங்களின் ஈர நினைவுகளை இதயம் கொள்க ! ஒரே பேச்சை, தேய்ந்த ஒலிநாடா போல் ஓயாமல் சொல்கிறேனா? சலித்துக் கொள்ளாதே.... ஒரே மாயாவி கதையை ஒரு நூறு முறை எனை படிக்கச் சொல்லி நீ உறங்கிய இரவுகளை ஞாபகம் கொள்க  நான் குளிக்க மறுக்கிறேனா? சோம்பேறித்தனம் என்று சுடுசொல் வீசாதே....ஒரு நாள் நான் சொல்வேன் வாழ்ந்ததுபோதும் என்று முதுமையின் வாசலில் - நான் !? உன்னை குளிக்க வைக்க நான் செய்...

இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான NURSING ASSISTANTS பணிக்கான விண்ணப்பங்கள் 2022

Subbiahpatturajan NURSING ASSISTANTS பெண்களுக்கான இராணுவ  நர்சிங் வேலை வாய்ப்பு தேர்வு எழுத 12வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது    www.joininindianarmy.nic.in வரும் மே 11 முதல் மே31 வரை பதிவு செய்யலாம்   இதற்கான வயது வரம்பு 17 முதல் 23 வயது வரை தேர்வு செய்ய படுவார்கள்  இந்தியாவில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள இராணுவ மருத்துவமனையில் மட்டுமே பணியில் அமர்த்தபடுவார்கள் மாதம் சம்பளம்  80000 முதல் 200000 வரை கிடைக்கும்  இராணுவ வீரர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்கப்படும்  கல்வி தகுதி 12வது தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்  Science group ( or) Maths grup  இயற்பியல் வேதியியல் உயிரியல் தாவரவியல் & விலங்கியல்  படித்து இருக்க வேண்டும்  ஆங்கிலத்தில் 50%வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் The minimum salary of a Military Nurse in India lies between  10,000 to 15,000 per month . The maximum salary of a Military Nurse in India that one can earn lies between 15,000 to 22,000.   தேர்வில் தேர்ச்சி பெற்றவர் 4 வருடம் BS...

இலங்கையின் வீழ்ச்சியும் இந்தியாவின் மோசமான பொருளாதார கொள்கையும்

Subbiahpatturajan இலங்கையின் நிலைமை  இந்தியாவுக்கு வராமல் தடுக்க நமது இந்திய நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.  உண்மையைக் சொல்ல போனால் நமக்கு தேவையான அனைத்து பொருள்களையும் நம்ம பக்கத்தில் உள்ள நம்ம சொந்தக்காரர்,   மாமன்,மச்சான் கடைகளில்தான் வாங்க வேண்டும். பத்து ரூபாய் விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை.  வெளி நாட்டுக்காரன் திங்கிறத நம்ம ஆளுங்க சாப்பிடட்டும்.  நம்ம வீட்டு எல்லா  நிகழ்ச்சியிலும் நம்ம சொந்தக்காரர்கள் தான் கலந்து கொள்வார்கள்.  அமேசான் கம்பெனிகாரனோ பிளிப்கார்டு கம்பேனிகாரனோ எந்த ஆன்லைன் சூப்பர் மார்க்கெட் கம்பெனிகாரனோ உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.  அரசு வேலை எல்லா மக்களுக்கும் கிடைக்காது.  கொடுக்கவும் முடியாது.  சுயமாக தொழில் செய்யும் சின்ன கடைகளிலும் தெருவில் கொண்டு வரும் சிறு வியாபாரிகளிடமும் பொருட்கள் வாங்க வேண்டும்.  அவர்கள் குடும்பங்கள் வாழ உதவி செய்ய வேண்டும்.   இலங்கையின் வீழ்ச்சிக்கு காரணம் சீனாவின் கம்பெனிகளே?!  சீனா பொரு...

இந்தி என்பது ஒரு மொழியின் தகுதி பெற்ற மொழியே அல்ல.

Subbiahpatturajan ஒரே நாடு ஒரே மொழி என்று கூப்பாடு போட்டு நம்மையும் இந்தி பேசும் மாநில மக்களாக மாற்றப்பார்க்கிறார்கள் முட்டாளின் மூளையிலே முன்னூறு பூ மலரும் என்பர்! அது குறைவு எனத் தோன்றுகிறது. மூவாயிரத்துக்கும் அதிகமான பூக்கள் வண்ண வண்ணமாய் மலரும் ஆம்! அதுவும் இந்த முட்டாள் எங்காவது அடித்துப்பிடித்து ஓர் அமைச்சன் ஆகிவிடின் முப்பதினாயிரம் பூக்களானாலும் வியக்க ஒன்றுமில்லை! ' இந்தி தெரியாதவர்கள் இந்தியாவை விட்டு போகலாம் "  அண்மையில் உ.பி.யை சேர்ந்த ஒரு மந்திரி நமக்கு அளிக்கும் விசா!  இந்தி என்பது ஒரு மொழியின் தகுதி பெற்ற மொழியே கிடையாது என்பதும் பல்வேறு வெளிநாட்டு உள்நாட்டு மொழிகளின் கலவையால் ஆன குப்பை என்பதும் இந்த குப்பைகளுக்கு யார்தான் எடுத்து சொல்வது? அந்த குப்பை எப்படி சேர்ந்தது என்பதை எப்படித்தான் இவர்களுக்கு புரிய வைப்பது தான் இந்த பதிவின் நோக்கம். டில்லியை சுல்தான்கள் கைப்பற்றி நிர்வாகம் செய்ய துவங்கிய போது அவர்கள் #துருக்கி, #அரபி, #பெர்ஷியா ஆகிய இனக்குழுக் களை சேர்ந்த சிப்பாய்களை இங்கே கொண்டு வந்து படை முகாம்களில் அடைத்தார்கள், இந்த சிப்பாய்கள் புதியதாய் தோன்றிய இஸ்லாம...

வயதான காலத்தில் ஏன் என்று கேட்க நாதி அற்று முதியோர் இல்லத்திலோ கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக....

Subbiahpatturajan தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் அண்ணன், தம்பி, அக்கா,தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான்,மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன்.. இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050க்கு பிறகு  யாருடைய காதிலும் பாசத்தோடு விழாது. யாரும் கூப்பிடவும் மாட்டார்கள் ! அகராதியில் இருந்தே கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும். காரணம் என்ன ! #ஒண்ணேஒண்ணு, #கண்ணேகண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான் ! அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்? பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர் வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத் தரவோ எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை ! திருமணத்தின் போது அரசாணைக்கால் நட எந்த அண்ணனும் இருக்கப்போவது இல்லை ! மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப் போவது இல்லை, குழந்தைக்கு மொட்டை போட யார் மடியில் ...

"இன்னொரு நாள் வரேன்"வேலை ஏதாச்சும் இருந்தால் சொல்லுங்க, செஞ்சிட்டு போறேன் என்றார்.

Subbiahpatturajan  உழைக்காமல் எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை என்றார். இன்று  காலை 8 மணிக்கு வயதான தாத்தா ஒருவர் வந்தார்,  "அம்மா பசிக்கிறது. ...சாப்பாடு இருந்தால் கொஞ்சம் போடுங்க என்றார். 10 நிமிடம் இங்கயே உட்காருங்க.. சாப்பாடு  கொண்டுவரேன் என்று சமையலறைக்குள் ..அவசர அவசரமாக சென்று  இட்லி - சட்னி செய்து உணவு பரிமாற எடுத்துகொண்டு வெளியே வந்தேன்... 10 நிமிடத்தில் எங்கள் வீட்டை சுற்றியுள்ள குப்பை, ,புல் மற்றும் தேவையற்ற செடிகளை கையாலேயே பிடுங்கி சுத்தம் செய்துகொண்டு இருந்தார்..  என் மனம் கலங்கியது... என் தாத்தாவை விட பெரியவராக இருப்பார். ..நடக்கவும் முடியவில்லை, கை,கால் நடுக்கம் வேறு.....தாத்தா இங்கே வாங்க, என்று கூறியதும் சாப்பிட அமர்ந்து 2 இட்லி போதும் வயதாகிவிட்டது அதிகமா சாப்பிட முடியவில்லை என்றார்....2 இட்லி சாப்பிடவா வீட்டை சுற்றி சுத்தம் செய்து சாப்பாடு கேட்கிறார். ..மிகவும் வருத்தமாக உள்ளது. உங்களுக்கு உணவு அளித்து பாதுகாத்த தாய்,தந்தையை வீதியில் விட்டுவிடாதீர்கள்... தாத்தா சாப்பிட்டு விட்டு கிளம்பும்போது  அவரது  கையில் 100 ரூபாய் கொடுத்ததும் ம...

ஒரு தேசிய இனம் என்றுச் சொல்லிக் கொள்கிற தகுதி கூட இவர்களுக்கு இல்லை..

Subbiahpatturajan டெல்லியில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம், போகலாம், ஆனால் முடிவெடுப்பவர்கள் பார்ப்பனர்களே..! "பிராமணன் எழுந்தால் சூத்திரன் அழிவான்" இது மனுதர்மம். இந்தியாவின் தலைநகர் டெல்லி ஆக இருக்கலாம், டெல்லியை நிர்ணயிப்பது சங்கர மடங்களே... ஆர் எஸ் எஸ் கூடாரங்களே.. ஆர்எஸ்எஸ் இயக்கம் மாத்திரமல்ல, அந்த இயக்கத்துக்குள் வெளியே உள்ள ஒரு "உஞ்சவிருத்தி"க் கூட இதே நினைப்பில் தான் உறங்கி விழிக்கிறான்... பிரபஞ்சம் இயற்கைக்கு கட்டுப்பட்டது, இயற்கைக் கடவுளுக்குக் கட்டுப்பட்டது, கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர், மந்திரம் பிராமணணுக்கு கட்டுப்பட்டது,  என்று வெகு காலமாய் பார்ப்பனர்கள் ஒரு நம்பிக்கையில் வளர்ந்திருக்கிறார்கள்.... அவர்களைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்களுக்காகவே எல்லாம்,  பார்ப்பனர்களால் எல்லாம், பார்ப்பனர்களுடையது எல்லாம், " வானுக்கும் மண்ணுக்கும் அவர்களே சர்வாதிகாரிகள்." அறிவெல்லைக் கடந்த இந்த கேவலமானக் கருத்தை நாகரீக உலகில் எந்த மனிதனும் ஏற்க மாட்டான்.  ஆனால் ஏற்காத இந்த அகம்பாவத்தை தாங்க முடியாத அளவுக்கு தின்று... தின்று குரூரமாய் போயிருக்க...

படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது, ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடாது, இது எதுவுமே மாணவனுக்கு பிடிக்காது

Subbiahpatturajan மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது, திட்டவும் கூடாது, மனம் புண்படும் படி பேசவும் கூடாது... எனில்... படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது, ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடாது, இது எதுவுமே மாணவனுக்கு பிடிக்காது, மாணவன் மனம் புண்படும்.. எனில் ஆசிரியரின்( பெற்றோரின் ) வேலை தான் என்ன...? பண்படுத்துவது என்பது புண்படுத்துதல் அல்ல... கற்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு சிற்பங்கள் எப்படி கிடைக்கும்...? நிலங்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு விளைச்சல் எப்படி கிடைக்கும்...? தங்கத்தை நெருப்பில் இடாதே என்று சொன்னால் - தங்க ஆபரணங்கள் எப்படி கிடைக்கும்...? புரிதல் வேண்டும்... பண்படுத்துவது என்பது - புண்படுத்துவது அல்ல என்ற புரிதல் மாணவர்களுக்கு மட்டுமல்ல - மற்றவர்களுக்கும் வேண்டும்...! ஒரு பச்சிளம் குழந்தைக்கு ஊசி போடுகிறார் மருத்துவர்... குழந்தைக்கு வலிக்கும் இது தவறு என்று அவரிடம் சொன்னால் குழந்தை நலமுடன் வாழ்வது எப்படி...? ஒரு வீட்டில் குழந்தையின் கைகளை தந்தை பிடிக்க, கால்களை மாமா பிடிக்க.. தலையை அசைக்காமல் பாட்டி அழுத்தி பிடிக்க, குழந்தைக்கு பிடிக்காத கசப்பு...

TAMILNADU GIRLS STUDENT SOCIAL AWARENESS VIDEO

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

மூலப்பத்திரம் என்றால் என்ன மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?"

` `எங்களுடைய பரம்பரைச் சொத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது. அதற்குப் பத்திரம் பதிவுசெய்வது எப்படி?" ``பரம்பரைச் சொத்துக்குப் பட்டா மட்டுமே இருந்தால் கவலையில்லை. ஏதாவது பத்திரம் வேண்டுமென்றால், குடும்பத்துக்குள்ளேயே ஒருவருக்கு அடமானம், குத்தகை போன்ற ஆவணம் எழுதி, பதிவு செய்தால், உங்களின் பெயருக்கு வில்லங்கம் மாறிவிடும். சில நாள்கள் கழித்து, பதிவான அடமானம் அல்லது குத்தகையை ரத்து செய்து பத்திரம் பதிவு செய்தால், வில்லங்கச் சான்றில் மீண்டும் உங்கள் பெயர் பதிவு இடம்பெறும்.'' பத்திரம் ``பத்திரப் பதிவில் மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?" ``ஆம். ஒருவருக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு தாய்ப்பத்திரம் சொத்துக்கு முக்கியம். தாய்ப்பத்திரம் இல்லாத சொத்து அநாதைதான். தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்." ``தாம்பரம் வரதராஜபுரத்தில் பெரும் நிலப்பரப்பு விற்கப்பட்டது. 3,600 சதுர அடி நிலத்தை நான் 1980-ல் வாங்க...

பாத்ரூம் கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம்...!?

Subbiahpatturajan 60/65 வயதிற்கு மேற்பட்ட  இருபால் அன்பர்களுக்கும் சில முக்கியமான டிப்ஸ்:- 1.பாத்ரும் செல்லும் பொழுது(வீட்டில்) கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம். 2.வீட்டை தண்ணீர் கொண்டு தரையை துடைக்கும்பொழுது நடக்கவேண்டாம். 3.ஸ்டூல்,நாற்காலி,பெஞ்ச் போன்றவற்றின் ‌.மீது ஏறி பொருட்களை எடுப்பது,சுத்தம் செய்வது, துணிகளை காயப்போடுவது, போன்ற வேலைகளை தவிர்க்கவும். 4.கார் இருந்தால் தனியாக ஓட்டவே கூடாது.கூட யாராவது கண்டிப்பாக இருக்க வேண்டும். 5.மாத்திரை மருந்துகளை வேளா வேளைக்கு தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.. 6.உங்களை எந்தவிஷயம் சந்தோஷப்படுத்துமோ அதை யாருக்காகவும், காம்ப்ரமைஸ் செய்ய வேண்டாம். 7.வங்கிக்கு பணம் எடுக்கச்சென்றால் தனியாகச்செல்ல வேண்டாம்.துணையுடன்செல்லவும். 8.வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அறிமுகமில்லாதோர் யாராவது வந்தால் கூடியவரை அச்சூழலை தவிர்க்கவும்.அல்லது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவும். 9.கூடியவரை படுக்கையறை, குளியலறை, கழிப்பறை  ஆகியவற்றில் காலிங் பட்டன் அவசியம். அசாதாரண சூழலில் அழைப்பதற்கு உதவும். 10.சைக்கிள் முதல் கார் ...

உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️

Subbiahpatturajan விவசாயிகள் மட்டுமின்றி,  உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️ 1️⃣ எதற்காக அதானி குழுமம் 9.5 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை தயாராக வைத்துள்ளது..? இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது மோடிக்கு அவரது அறிவுரையா..?? 2️⃣ அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பட்டியலை மாற்றியது ஏன்..? 3️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சிறு விவசாயி எப்படி ஒப்பந்தம் போட முடியும்..?? அவன் சொன்ன இடத்தில்தானே கையெழுத்துப் போடவேண்டும். 4️⃣ மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்றால் யாருக்கு லாபம் ..?? 5️⃣ விற்பனைத் தொகையில் இப்படித் தவணை முறையில் தந்தால் எந்த விவசாயியால் பிழைக்கமுடியும்..?? 6️⃣ PDS system  என்னாவது ..?? 7️⃣ Food Corporation of India வின் நிலை என்ன..?? அவர்கள் நாடெங்கிலும் ஏற்படுத்தி உள்ள வசதிகள் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பதை ஊகிப்பதில் சந்தேகம் உள்ளதா ..?? 8️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களால் மாநில இளநிலை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்வது அவ்வளவு கடினமா ..?? 9️⃣ ஒரு நாட்டில் உழவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நீதி மன்றம் செல்லமுடியாது என்பது உண்மையில்...

As your habits are, there will be people who behave with you in the same way.

Subbiahpatturajan நல்ல பழக்கவழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்..* _ உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே..  எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது._  _*இறுக்கமான மனிதர்களாகவும், எந்திரகதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசை எல்லாம் பார்க்க முடிகிறது.*_ _சகமனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி விட்டது._  _*இதற்கெல்லாம் அடிப்படை என்ன என்று சிந்தித்தால் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.*_ _எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது. மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை_ _ *நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும். ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கு...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* கோரானா கேள்வி பதில்கள்

Subbiahpatturajan *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* 1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?*  இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.  2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?*  இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந...

முன்னொரு காலத்தில் பெண் சுதந்திரம் என்பது

Subbiahpatturajan #பெண்சுதந்திரம் காஞ்சிபுரத்திற்கு பக்கத்தில் உள்ள கிராமம் தான் நான் வளர்ந்தது. என் வீட்டில் எல்லாம்  எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது ஆனா அக்கம் பக்கத்து வீடுகளில் பெண்களோட அடிப்படை உரிமைகள் கூட அவங்க பெற்றோர்களாலேயே பறிக்கப்படுவதை நேரில் பார்த்து வெறுத்துப் போய் இருக்கிறேன். பொட்ட புள்ளைங்க விளையாடக்கூடாது. பூமி அதிர நடக்கக்கூடாது.வாய்விட்டு சிரிக்க கூடாது . சமையல்கட்டு உள்ளேயே முடங்கி கிடக்க வேண்டும் . ஆனால் இந்த கட்டுப்பாடு எல்லாம் ஆம்பளை பசங்களுக்கு கிடையாது .அதை விட கொடுமை சாப்பாடு விஷயம் தான். ஆண்பிள்ளை பசங்களுக்கு நிறைய சாப்பாடு போடுவாங்க பொம்பளை பசங்களுக்கு கம்மிதான் சொந்த அம்மா அப்பாவே இதை பண்ணா எப்படி இருக்கும் ஆம்பளையாகட்டும் பொம்பளையாகட்டும் வயிறு ஒன்றுதானே . அப்பவே எங்க அம்மாகிட்ட ஏம்மா இப்படி பண்றாங்கன்னு சண்டை போட்டு இருக்கேன். அதுல எங்க அம்மா நம்ம வீட்டில இப்படி இல்லை மத்தவங்க வீட்ல நடக்கிற தான் நாம எப்படிமா கேட்க முடியும் என்று சொல்லுவாங்க. நீங்களும் அந்த கொடுமைக்கு ஆளாகி இருக்கீங்களா...? அந்த சமயத்துல அம்மா அப்பாவை எதிர்த்து ஒன்றும் பண்ண...

ஆப்பிள் இந்தியா வந்த வரலாறு தெரியுமா உங்களுக்கு...!!? Do you know the history of Apple India ... !!?

Subbiahpatturajan மெல்ல அழிந்த #இயற்கை உணவுகள்..!! ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா?.. இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான்...  குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்.. தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது.. அரேபிய #பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது.. ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி. #ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது.. மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது.. இங்கு வெள்ளையன்  வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாரை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை. வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான்... வந்...

தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே...???

Subbiahpatturajan ஏன்? எதற்கு? என, சிந்தித்துண்டா? தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட் டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே  நல்ல வேலைக்கு போகவா? ஆங்கிலம் சரளமாக பேசவா? குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?? ஏன்? எதற்கு? என்று சிந்தித்ததுண்டா?? 11TO12 200000 லட்சம் ஆக மொத்தம் Pre kg 25000 ல் துவங்குகிறது  Lkg 40000 Ukg 50000 1st.60000 2ND 70000 3D. 80000 4TH 90000 5TH 100000 6TO8 1.20000 9TO10. 150000 9,85,000 ரூபாய்  இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க. சரி! இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா? உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும் அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.?  ஒன்றை நினைவில் வையுங்க...