Cinar tamilan

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

"பில் தரவில்லை என்றால் பணம் கொடுக்க தேவையில்லை"

Subbiahpatturajan நேற்று நான்  எனது சொந்த ஊரான திருநெல்வேலியில் இருந்து தாதர் விரைவு வண்டியின் (11022) மூலம் பயணம் செய்தேன்.  இரவு உணவிற்கு எதுவும் கிடைக்காததால் ரயிலில் இருந்த IRCTC பேன்ட்ரியில் அசைவ உணவை ஆர்டர் செய்தேன்.  நான் வாங்கிய உணவு  சுவையாகவும் சாப்பிடும் அளவுக்கு  இருந்தது, எனவே நான் உணவை முழுமையாக ரசித்தேன்.   சரி இப்போது  தான் சுவாரஸ்யமான பகுதி வருகிறது,  பேன்ட்ரி பையன் பணம் கேட்டு வந்தபோது, ​​ சிக்கன் ரைஸ்க்கு 150 ஆச்சு சார் என்று ரூபாய் கொடுக்கச் சொன்னார்.  அசைவ சாப்பாடு விலை ரூ.130 என்பது எனக்கு முன்பே தெரியும், மேலும் ரூ.20 கூடுதலாக தரச் சொன்னார்.நான் அவனிடம் விலை விபரத்தை கூறினேன். சரி நான் சாப்பிட்டு சாப்பாட்டிற்கு பில் அடித்து கொண்டு வா என்றேன்   அவன் பிடிவாதமாக  மிஷின் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி என்னிடம் மழுப்பலான பதில் சொல்ல  முதலில் மறுத்த சாப்பாட்டுக்கான பில் தொகையை என்னிடம் வழங்குமாறு பணிவுடன் கேட்டேன்.    பில் கொடுத்தால் மட்டுமே பணம் தருவேன் அல்லது  மேலாளரை தொடர்பு கொள்க...

மன அழுத்தம் தீர சுலபமான 10 வழிமுறைகள் ஆண் பெண் இருபாலரும் கடைப்பிடிக்கலாம்

Subbiahpatturajan *மன அழுத்தத்தை குறைக்க 10 சுலபமான எளிய வழிகள்* 1 - Have a laugh   ஒவ்வொரு முறை நாம் சத்தமாக சிரிக்கும் போது , அதிகப்படியான ஆக்சிஜன் நம் உடல் உறுப்புகளுக்கு சென்று வரும். இதனால் ரத்த ஓட்டம் அதிகமாகி, மன அழுத்தம் தானாகவே குறைந்துவிடும். 2.Spend time with your bestee நமக்கு பிடித்தவர்களிடம் நேரம் செலவிடும் போது, நம் உடலில் இருந்து நல்ல ஹார்மோன்களான செரடோனின் மற்றும் ப்ரோலேக்டின் ஆகியவை சீராக வெளியேறுகின்றன. இவை மன அழுத்தம் ஏற்படும் சூழலை குறைக்கின்றன. 3.Get rid of the clutter நாம் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். அதேபோல் சுற்றி இருக்கும் பொருட்களை ஒழுங்காக பராமரித்து வைத்திருக்க வேண்டும். 4.Do the housework வீட்டில் இருக்கும் போது, உங்களுக்கு பிடித்தமான இசை அல்லது நல்ல டிவி நிகழ்ச்சியை ஒளிபரப்பிக் கொள்ளவும். இதையடுத்து வீட்டில் செய்ய வேண்டிய நமக்கு பிடித்தமான வேலைகளை செய்யலாம். அவ்வாறு செய்யும் போது, உடலில் உள்ள கலோரிகள் எரிவதுடன், சோர்வடையாமல் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும். 5.Drink juices ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை வெகுவ...

Applications are welcome from unmarried men and women ARMY,NAVY,AIRFORCE NEW JOB VACANCIES -2022

Subbiahpatturajan இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள அதிகாரி பணிகளுக்கான 400 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான திருமணமாகாத ஆண் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: தேர்வின் பெயர்: National defence academy and navel academy examination(II)-2022 Vacancy: 400 National defence academy: 370 (Army -208,Navy -42, Airforce -120) Naval academy: 30 Age: 2.7.2004-1.7.2007 க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். கல்வித்தகுதி: National defence academy பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Navy, Air force பணிக்கு physics and mathematics ஐ ஒரு பாடமாக கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் UPSC யால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் SSB ஆள் நடத்தப்படும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் mathematics and general ability test பாடப்பிரிவுகளில் இருந்து கொள்குறி வகையில் கேள்விகள் கேட்கப்படும் ஒவ்வொரு தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும்: எழுத்துத்தேர்வு ...

12ம் வகுப்பு தேர்வு எழுதவிருந்த இரண்டு கிராமத்து பெண்களுக்கிடையிலான மிகவும் சுவாரஸ்யமான உரையாடல்

Subbiahpatturajan    12ம் வகுப்பு தேர்வு எழுதவிருந்த இரண்டு கிராமத்து பெண்களுக்கிடையிலான மிகவும் சுவாரஸ்யமான உரையாடல். *ஷ்யாம்லி-* சமேலி, நீ படிக்கவே இல்லையே  ஏன்?  *சமேலி-* நான் தேர்வில் தேர்ச்சி பெற விரும்பவில்லை, ஏன் படிக்க வேண்டும்?  *ஷ்யாம்லி-* எனக்கு அதிர்ச்சி!  நீ ஏன் தோல்வியடைய விரும்புகிறாய் ?  *சமேலி-* நான் தேர்ச்சி பெற்றால், நான் மேற்கொண்டு படித்துவிட்டு நகரத்தில் பணிபுரியும் ஒரு படித்த பையனை திருமணம் செய்துகொள்ள வேண்டும்.  *ஷ்யாம்லி-* அது நல்லது  தானே ?  அதில் என்ன தவறு?  *சமேலி-* இதில் என்ன சரி?   *கவனமாக கேளுங்கள்:*  # ஏன் ஒரு பெரிய மாசுபட்ட நகரத்தில் இருக்க வேண்டும்.  # கணவருக்கு ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்.  # அவரது ஊதியம் வெறும் ரூ.  18000/மாதம்.  # அவரது சம்பளத்தில் பாதி வீட்டு வாடகைக்கு செலவிடப்படுகிறது.  # அல்லது கடன் வாங்கி, சொந்தமாக வீடு வாங்கி, வயதாகும் வரை கடனை செலுத்திக்கொண்டே இருக்கவேண்டும் !  # நோய்வாய்ப்பட்டு மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் மர...

உலக விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தாலும் உருவாக்க முடியாத ஓர் ஆச்சர்யமான ‘கெமிக்கல் ஃபேக்டரி’ இது.

Subbiahpatturajan கல்லீரல் (liver) நம் சருமத்துக்கு அடுத்ததாக, உடலின் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். வயிற்றின் மேற்புறத்தில், வலது பக்கத்தில், இலை போல் விரிந்திருக்கும் உதரவிதானத்துக்குக் கீழே, கால் இல்லாத காளான் வடிவில் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது கல்லீரல். ஆங்கிலத்தில் இது ‘லிவர்’. பேச்சுத் தமிழில் ‘ஈரல்’. ஒன்றரை கிலோ எடையுள்ள கல்லீரல், மார்புக் கூட்டுக்குப் பின்புறம் பத்திரமாகப் பதுங்கியிருக்கிறது. இதயத்தைப் போலவே இதிலும் எலும்புகள் இல்லை;  தொட்டுப் பார்த்தால் பஞ்சு  மாதிரி அத்தனை மிருது! மேலோட்டமாகப் பார்த்தால், ஒரே உறுப்பாகத் தெரிந்தாலும் அமைப்பு ரீதியில் வலப்பக்கம் ஒன்றும் இடப்பக்கம் ஒன்றுமாக இரண்டு பகுதிகளைக் கொண்டது.    கல்லீரலின் ‘மத்தியப் பிரதேச’த்திலிருந்து (Porta Hepatis), நான்கு அங்குல நீளத்தில் ‘பித்த நாளம்’ (Bile duct) கிளம்புகிறது. பாதிக்கப்படுகிறது.  இது கீழ்நோக்கி இறங்கி, சிறிய வெள்ளரிப் பிஞ்சு அளவில் இருக்கும் பித்தப்பை (Gall bladder)யோடும், முன் அடைப்புக்குறி போலிருக்கும் முன்சிறுகுடலோடும் (Duodenum) கல்லீரலை இணைக்கிறது.  கல்லீரலைக்...

எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்”

Subbiahpatturajan இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை. ஒவ்வொரு நொடியை. நாம் விடும் ஒவ்வொரு மூச்சை. ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்: உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்? அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன். “உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.” “வேறு ஒண்ணா…? எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன். “உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.” “என்னது பிசினஸ் பார்ட்னரா...?" ஆமாம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்யவேண்டியதெல்லாம...

ஒரு நாள் தமிழர்கள் இல்லாமல் இந்த உலகம் இயங்காது என்கிற நிலை வரும்

Subbiahpatturajan ஆம் நாங்கள் தமிழர்கள்  உலக நாடுகள் எல்லாம் தமிழர்களை கிள்ளுக் கிடையாக நினைத்து அவனுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் துட்சமாக வழிநடத்துகின்றனர்.ஒரு நாள் தமிழர்கள் இல்லாமல் இந்த உலகம் இயங்காது என்கிற நிலை வரும்போது நாங்கள் விழித்தெழுவோம்

ஒரு நாள் நான் சொல்வேன் வாழ்ந்ததுபோதும் என்று முதுமையின் வாசலில் - நான் !?

Subbiahpatturajan  ஓர் தாய் முதுமையில் மகனிடம் சொல்லும் கண்ணீர் கவிதை. இது போன்ற கவிதைகளை பதிவு இடுவதில் பெருமைப் படுகின்றேன், ஒரு தாயின் புலம்பல் கவிதை, எனதருமை மகனே !எனதருமை மகனே ! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.. முதுமையின் வாசலில் - நான் முதலடி வைக்கையில் தள்ளாட்டம் என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்... கொஞ்சம் பொறுமை கொள்க ! அதிகம் புரிந்து கொள்க ! என்முதுமை பார்த்து முகம் சுளிக்காதே ! நான் சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா? சத்தம் போடாதே..... உனக்கு நான் நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு கூர்க ! ஆடை மாற்றுகையில் அவதிப் படுகின்றேனா? அசுத்தம் செய்து விட்டேனா? ஆத்திரப்படாதே..... படுக்கை முழுதும் நீ பண்ணிய ஈரங்களின் ஈர நினைவுகளை இதயம் கொள்க ! ஒரே பேச்சை, தேய்ந்த ஒலிநாடா போல் ஓயாமல் சொல்கிறேனா? சலித்துக் கொள்ளாதே.... ஒரே மாயாவி கதையை ஒரு நூறு முறை எனை படிக்கச் சொல்லி நீ உறங்கிய இரவுகளை ஞாபகம் கொள்க  நான் குளிக்க மறுக்கிறேனா? சோம்பேறித்தனம் என்று சுடுசொல் வீசாதே....ஒரு நாள் நான் சொல்வேன் வாழ்ந்ததுபோதும் என்று முதுமையின் வாசலில் - நான் !? உன்னை குளிக்க வைக்க நான் செய்...

இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான NURSING ASSISTANTS பணிக்கான விண்ணப்பங்கள் 2022

Subbiahpatturajan NURSING ASSISTANTS பெண்களுக்கான இராணுவ  நர்சிங் வேலை வாய்ப்பு தேர்வு எழுத 12வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது    www.joininindianarmy.nic.in வரும் மே 11 முதல் மே31 வரை பதிவு செய்யலாம்   இதற்கான வயது வரம்பு 17 முதல் 23 வயது வரை தேர்வு செய்ய படுவார்கள்  இந்தியாவில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள இராணுவ மருத்துவமனையில் மட்டுமே பணியில் அமர்த்தபடுவார்கள் மாதம் சம்பளம்  80000 முதல் 200000 வரை கிடைக்கும்  இராணுவ வீரர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்கப்படும்  கல்வி தகுதி 12வது தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்  Science group ( or) Maths grup  இயற்பியல் வேதியியல் உயிரியல் தாவரவியல் & விலங்கியல்  படித்து இருக்க வேண்டும்  ஆங்கிலத்தில் 50%வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் The minimum salary of a Military Nurse in India lies between  10,000 to 15,000 per month . The maximum salary of a Military Nurse in India that one can earn lies between 15,000 to 22,000.   தேர்வில் தேர்ச்சி பெற்றவர் 4 வருடம் BS...

இலங்கையின் வீழ்ச்சியும் இந்தியாவின் மோசமான பொருளாதார கொள்கையும்

Subbiahpatturajan இலங்கையின் நிலைமை  இந்தியாவுக்கு வராமல் தடுக்க நமது இந்திய நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.  உண்மையைக் சொல்ல போனால் நமக்கு தேவையான அனைத்து பொருள்களையும் நம்ம பக்கத்தில் உள்ள நம்ம சொந்தக்காரர்,   மாமன்,மச்சான் கடைகளில்தான் வாங்க வேண்டும். பத்து ரூபாய் விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை.  வெளி நாட்டுக்காரன் திங்கிறத நம்ம ஆளுங்க சாப்பிடட்டும்.  நம்ம வீட்டு எல்லா  நிகழ்ச்சியிலும் நம்ம சொந்தக்காரர்கள் தான் கலந்து கொள்வார்கள்.  அமேசான் கம்பெனிகாரனோ பிளிப்கார்டு கம்பேனிகாரனோ எந்த ஆன்லைன் சூப்பர் மார்க்கெட் கம்பெனிகாரனோ உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.  அரசு வேலை எல்லா மக்களுக்கும் கிடைக்காது.  கொடுக்கவும் முடியாது.  சுயமாக தொழில் செய்யும் சின்ன கடைகளிலும் தெருவில் கொண்டு வரும் சிறு வியாபாரிகளிடமும் பொருட்கள் வாங்க வேண்டும்.  அவர்கள் குடும்பங்கள் வாழ உதவி செய்ய வேண்டும்.   இலங்கையின் வீழ்ச்சிக்கு காரணம் சீனாவின் கம்பெனிகளே?!  சீனா பொரு...

இந்தி என்பது ஒரு மொழியின் தகுதி பெற்ற மொழியே அல்ல.

Subbiahpatturajan ஒரே நாடு ஒரே மொழி என்று கூப்பாடு போட்டு நம்மையும் இந்தி பேசும் மாநில மக்களாக மாற்றப்பார்க்கிறார்கள் முட்டாளின் மூளையிலே முன்னூறு பூ மலரும் என்பர்! அது குறைவு எனத் தோன்றுகிறது. மூவாயிரத்துக்கும் அதிகமான பூக்கள் வண்ண வண்ணமாய் மலரும் ஆம்! அதுவும் இந்த முட்டாள் எங்காவது அடித்துப்பிடித்து ஓர் அமைச்சன் ஆகிவிடின் முப்பதினாயிரம் பூக்களானாலும் வியக்க ஒன்றுமில்லை! ' இந்தி தெரியாதவர்கள் இந்தியாவை விட்டு போகலாம் "  அண்மையில் உ.பி.யை சேர்ந்த ஒரு மந்திரி நமக்கு அளிக்கும் விசா!  இந்தி என்பது ஒரு மொழியின் தகுதி பெற்ற மொழியே கிடையாது என்பதும் பல்வேறு வெளிநாட்டு உள்நாட்டு மொழிகளின் கலவையால் ஆன குப்பை என்பதும் இந்த குப்பைகளுக்கு யார்தான் எடுத்து சொல்வது? அந்த குப்பை எப்படி சேர்ந்தது என்பதை எப்படித்தான் இவர்களுக்கு புரிய வைப்பது தான் இந்த பதிவின் நோக்கம். டில்லியை சுல்தான்கள் கைப்பற்றி நிர்வாகம் செய்ய துவங்கிய போது அவர்கள் #துருக்கி, #அரபி, #பெர்ஷியா ஆகிய இனக்குழுக் களை சேர்ந்த சிப்பாய்களை இங்கே கொண்டு வந்து படை முகாம்களில் அடைத்தார்கள், இந்த சிப்பாய்கள் புதியதாய் தோன்றிய இஸ்லாம...

வயதான காலத்தில் ஏன் என்று கேட்க நாதி அற்று முதியோர் இல்லத்திலோ கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக....

Subbiahpatturajan தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் அண்ணன், தம்பி, அக்கா,தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான்,மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன்.. இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050க்கு பிறகு  யாருடைய காதிலும் பாசத்தோடு விழாது. யாரும் கூப்பிடவும் மாட்டார்கள் ! அகராதியில் இருந்தே கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும். காரணம் என்ன ! #ஒண்ணேஒண்ணு, #கண்ணேகண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான் ! அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்? பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர் வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத் தரவோ எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை ! திருமணத்தின் போது அரசாணைக்கால் நட எந்த அண்ணனும் இருக்கப்போவது இல்லை ! மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப் போவது இல்லை, குழந்தைக்கு மொட்டை போட யார் மடியில் ...

"இன்னொரு நாள் வரேன்"வேலை ஏதாச்சும் இருந்தால் சொல்லுங்க, செஞ்சிட்டு போறேன் என்றார்.

Subbiahpatturajan  உழைக்காமல் எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை என்றார். இன்று  காலை 8 மணிக்கு வயதான தாத்தா ஒருவர் வந்தார்,  "அம்மா பசிக்கிறது. ...சாப்பாடு இருந்தால் கொஞ்சம் போடுங்க என்றார். 10 நிமிடம் இங்கயே உட்காருங்க.. சாப்பாடு  கொண்டுவரேன் என்று சமையலறைக்குள் ..அவசர அவசரமாக சென்று  இட்லி - சட்னி செய்து உணவு பரிமாற எடுத்துகொண்டு வெளியே வந்தேன்... 10 நிமிடத்தில் எங்கள் வீட்டை சுற்றியுள்ள குப்பை, ,புல் மற்றும் தேவையற்ற செடிகளை கையாலேயே பிடுங்கி சுத்தம் செய்துகொண்டு இருந்தார்..  என் மனம் கலங்கியது... என் தாத்தாவை விட பெரியவராக இருப்பார். ..நடக்கவும் முடியவில்லை, கை,கால் நடுக்கம் வேறு.....தாத்தா இங்கே வாங்க, என்று கூறியதும் சாப்பிட அமர்ந்து 2 இட்லி போதும் வயதாகிவிட்டது அதிகமா சாப்பிட முடியவில்லை என்றார்....2 இட்லி சாப்பிடவா வீட்டை சுற்றி சுத்தம் செய்து சாப்பாடு கேட்கிறார். ..மிகவும் வருத்தமாக உள்ளது. உங்களுக்கு உணவு அளித்து பாதுகாத்த தாய்,தந்தையை வீதியில் விட்டுவிடாதீர்கள்... தாத்தா சாப்பிட்டு விட்டு கிளம்பும்போது  அவரது  கையில் 100 ரூபாய் கொடுத்ததும் ம...

ஒரு தேசிய இனம் என்றுச் சொல்லிக் கொள்கிற தகுதி கூட இவர்களுக்கு இல்லை..

Subbiahpatturajan டெல்லியில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம், போகலாம், ஆனால் முடிவெடுப்பவர்கள் பார்ப்பனர்களே..! "பிராமணன் எழுந்தால் சூத்திரன் அழிவான்" இது மனுதர்மம். இந்தியாவின் தலைநகர் டெல்லி ஆக இருக்கலாம், டெல்லியை நிர்ணயிப்பது சங்கர மடங்களே... ஆர் எஸ் எஸ் கூடாரங்களே.. ஆர்எஸ்எஸ் இயக்கம் மாத்திரமல்ல, அந்த இயக்கத்துக்குள் வெளியே உள்ள ஒரு "உஞ்சவிருத்தி"க் கூட இதே நினைப்பில் தான் உறங்கி விழிக்கிறான்... பிரபஞ்சம் இயற்கைக்கு கட்டுப்பட்டது, இயற்கைக் கடவுளுக்குக் கட்டுப்பட்டது, கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர், மந்திரம் பிராமணணுக்கு கட்டுப்பட்டது,  என்று வெகு காலமாய் பார்ப்பனர்கள் ஒரு நம்பிக்கையில் வளர்ந்திருக்கிறார்கள்.... அவர்களைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்களுக்காகவே எல்லாம்,  பார்ப்பனர்களால் எல்லாம், பார்ப்பனர்களுடையது எல்லாம், " வானுக்கும் மண்ணுக்கும் அவர்களே சர்வாதிகாரிகள்." அறிவெல்லைக் கடந்த இந்த கேவலமானக் கருத்தை நாகரீக உலகில் எந்த மனிதனும் ஏற்க மாட்டான்.  ஆனால் ஏற்காத இந்த அகம்பாவத்தை தாங்க முடியாத அளவுக்கு தின்று... தின்று குரூரமாய் போயிருக்க...

படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது, ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடாது, இது எதுவுமே மாணவனுக்கு பிடிக்காது

Subbiahpatturajan மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது, திட்டவும் கூடாது, மனம் புண்படும் படி பேசவும் கூடாது... எனில்... படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது, ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடாது, இது எதுவுமே மாணவனுக்கு பிடிக்காது, மாணவன் மனம் புண்படும்.. எனில் ஆசிரியரின்( பெற்றோரின் ) வேலை தான் என்ன...? பண்படுத்துவது என்பது புண்படுத்துதல் அல்ல... கற்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு சிற்பங்கள் எப்படி கிடைக்கும்...? நிலங்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு விளைச்சல் எப்படி கிடைக்கும்...? தங்கத்தை நெருப்பில் இடாதே என்று சொன்னால் - தங்க ஆபரணங்கள் எப்படி கிடைக்கும்...? புரிதல் வேண்டும்... பண்படுத்துவது என்பது - புண்படுத்துவது அல்ல என்ற புரிதல் மாணவர்களுக்கு மட்டுமல்ல - மற்றவர்களுக்கும் வேண்டும்...! ஒரு பச்சிளம் குழந்தைக்கு ஊசி போடுகிறார் மருத்துவர்... குழந்தைக்கு வலிக்கும் இது தவறு என்று அவரிடம் சொன்னால் குழந்தை நலமுடன் வாழ்வது எப்படி...? ஒரு வீட்டில் குழந்தையின் கைகளை தந்தை பிடிக்க, கால்களை மாமா பிடிக்க.. தலையை அசைக்காமல் பாட்டி அழுத்தி பிடிக்க, குழந்தைக்கு பிடிக்காத கசப்பு...

TAMILNADU GIRLS STUDENT SOCIAL AWARENESS VIDEO

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

Subbiahpatturajan தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕 பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர். மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது அரசு . அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. ஆனால் இலங்கை அரசு இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை. 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கடத்திச் சென்றனர். புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்...

16 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளை வேலைக்கு சென்றால்....?

Subbiahpatturajan ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை…… ஆஸ்பத்திரி போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை !!! சில நேரங்களில் குள்ள நரி புத்தி கொஞ்சமாவது வேண்டும், குழி பறிக்க அல்ல, குழியில் விழாமல் இருக்க !!! உழைக்கும் வயதில் உறங்க நினைத்தால், உறங்கும் வயதில் உழைக்க வேண்டியிருக்கும்………. உயரப் போகும்போது உதவும் உறவை விட, விழும்போது தாங்கும் உறவே சிறந்தது!!! மனிதனுக்கு பிரச்சினை இல்லை என்றால், கடவுளுக்கு அர்ச்சனை இல்லை !!! மனிதன் ஸ்மார்ட் போன் வாங்கும் அளவுக்கு பணக்காரனாகவும், கீரை வியாபாரியிடம் பேரம் பேசும் அளவுக்கு ஏழையாகவும் இருக்கிறார்கள்……. பொறுமை ஒரு பொழுதும் தோற்றதில்லை, பொறாமை ஒரு போதும் ஜெயிப்பதில்லை………. பென்சிலுக்கு பின்னால் இருக்கும் ரப்பர் மாதிரி பல பிரச்சினைகளுக்கும், தீர்வு அதிலேயே இருக்கும்போது அதை விட்டு, நாம் எல்லா இடத்திலேயும் தேடிக்கொண்டிருக்கிறோம்…. விக்கலுக்கு பயந்தால் வயிறு நிறையாது, சிக்கலுக்கு பயந்தால், வாழ்க்கை நிறையாது !!! முதியோர் இல்லத்திற்கு பணம்கொடு, பொருள் கொடு, உடை கொடு, உணவு கொடு, உன் பெற்றோரை மட்டும் கொடுக்காதே !!! உள்ளம் கண்டு பழகு, உருவம் கண்டு பழகாதே!!!...

புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை

Subbiahpatturajan புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை இந்திய அரசு  கணக்கின்படி இந்தியாவில் பேசப்படுகின்ற மொழிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 19,500 மொழிகள். இவற்றில் 121 மொழிகள் 10,000 பேருக்கும் மேல் பேசப்படுகின்றன. மொத்த மக்கள் தொகையில் 96.71 % மக்கள் 18 வது அட்டவணையில் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளை பேசுகிறார்களாம். அந்த 22 மொழிகள் என்னென்ன? அஸ்ஸாம், வங்காளி, போமோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மெய்ட்டி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாமி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது. இதில் மேலும் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்துள்ள மொழிகள் அங்கிகா, பஞ்சாரா, பஜ்ஜிகா, பிஷ்ணுப்ரியா, போஜ்பூரி, லடாக்கி, போடியா, புந்தல்கண்டி, சத்தீஸ்கரி-கோசலி, தாட்கி, இந்திய இங்கிலீஷ், இந்திய பிரெஞ்சு, கார்வாலி (பகாரி), காரோ, கோண்டி, குஜ்ஜார்-குஜ்ஜாரி, ஹர்யான்வி, ஹோ, கச்சாசி, கம்டாபுரி, கர்பி, காஷி, கோடவா(கூர்கி), கோக்போரோக், குமாவ்னி(பகாரி), குருக், குர்மாலி, லெப்சா, லிம்பு, மகாஹி, மிசோ(லுசாய்), முன்டாரி, நாக்புரி, நிகோபாரிஸ், ஹ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* கோரானா கேள்வி பதில்கள்

Subbiahpatturajan *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* 1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?*  இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.  2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?*  இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந...

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்...

"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க"

Subbiahpatturajan *Self Discipline* 1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். 2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும். 3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம். 4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம். "இன்னும் கல்யாணம் ஆகலயா?" "குழந்தைகள் இல்லையா?" "இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?" "ஏன் இன்னும் Car வாங்கவில்லை?" இது நமது பிரச்சினை இல்லைதானே!" 5. தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களா...

சொந்த வீடு கட்டுபவர்களுக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 50 டிப்ஸ்கள்.....!!

Subbiahpatturajan சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!! 1. பத்திரப்படுத்தி வச்சுக்கோங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும். தண்ணீர் : 3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம். 4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது. 5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம் அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ...

LIC policy யாரெல்லாம் வைத்திருக்கின்றீர்கள்... ?

 தேசபக்த அரசின்’ இந்த வள்ளல்தன்மையை கண்டிப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். #எல்ஐசியை_பங்குச்_சந்தையில்_ #விற்கும்_மோடி_அரசின்_முடிவு  #மிகச்சிறந்த_பொதுத்துறை #நிறுவனத்தின்_அழிவில்தான்_போய் #முடியும்  –      பிரதமர் மோடியும் அவரது அரசாங்கமும் ஒரு வினோதமான செயல்பாட்டை விடாப்பிடியாக முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொல்வது ஒன்று, செய்வது அதற்கு எதிரான ஒன்று என்பதே அதன் சாரம். ‘எல்லோருடனும் ஒற்றுமை;எல்லோருக்கும் வளர்ச்சி’(சப் கா சாத் சப் கா விகாஸ்’) என்ற முழக்கத்தை கட்டமைப்பதிலேயே இந்த அணுகுமுறைதான் வெளிப்பட்டது. இந்த மேல்பூச்சை பிரதமர் தனது ‘ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்’ போல் மிக எளிதாக செய்வதை கடந்த ஆறு ஆண்டு காலமாக நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அவருடைய வெற்றுமுழக்கப் பெட்டகத்திலிருந்து இப்பொழுது வந்திருக்கும் பிரச்சார வாசகம்தான் ‘ஆத்மநிர்பார் பாரத்’. நாடு ஒரு சிக்கலான, சிரமமான கட்டத்தில் இருக்கும்போது இது வெளிவந்திருக்கிறது. ஊக்கமான இந்த முழக்கம் செயல்படுத்த தொடங்கிய மறு நாளே அவருடைய உண்மையான நோக்கம் என்ன என்பது தெரிந்து விட்டது. வானம்,பூமி முதற்கொண்டு அதை ...