Subbiahpatturajan
12ம் வகுப்பு தேர்வு எழுதவிருந்த இரண்டு கிராமத்து பெண்களுக்கிடையிலான மிகவும் சுவாரஸ்யமான உரையாடல்.
*சமேலி-* நான் தேர்வில் தேர்ச்சி பெற விரும்பவில்லை, ஏன் படிக்க வேண்டும்?
*ஷ்யாம்லி-* எனக்கு அதிர்ச்சி! நீ ஏன் தோல்வியடைய விரும்புகிறாய் ?
*சமேலி-* நான் தேர்ச்சி பெற்றால், நான் மேற்கொண்டு படித்துவிட்டு நகரத்தில் பணிபுரியும் ஒரு படித்த பையனை திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
*ஷ்யாம்லி-* அது நல்லது தானே ? அதில் என்ன தவறு?
*சமேலி-* இதில் என்ன சரி?
*கவனமாக கேளுங்கள்:*
# ஏன் ஒரு பெரிய மாசுபட்ட நகரத்தில் இருக்க வேண்டும்.
# கணவருக்கு ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்.
# அவரது ஊதியம் வெறும் ரூ. 18000/மாதம்.
# அவரது சம்பளத்தில் பாதி வீட்டு வாடகைக்கு செலவிடப்படுகிறது.
# அல்லது கடன் வாங்கி, சொந்தமாக வீடு வாங்கி, வயதாகும் வரை கடனை செலுத்திக்கொண்டே இருக்கவேண்டும் !
# நோய்வாய்ப்பட்டு மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்துகளுக்கு நிறைய பணம் செலவிடவேண்டும் .
# தொடர்ந்து வருமான வரி செலுத்த வேண்டும் .
# ஆரோக்கியமாக இருக்க ஜிம்மில் சேர்ந்து ஆர்கானிக் உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு அதிக அளவில் செலவிடவேண்டும் .
*ஷ்யாம்லி-* சரி, ஆனால் ஏன் தோல்வியைத் திட்டமிட வேண்டும்?
*சமேலி-*
நான் தேர்வில் தவறினால் என்னாகும் கேளுங்கள்:
# மேற்கொண்டு படிப்பு இல்லை!
# கிராமத்தில் உள்ள சில விவசாயிகளை மட்டும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் .
# மாசு இல்லாத சூழலில் இருப்போம் .
# ஆர்கானிக் உணவுகளை சாப்பிடுவோம் .
# ஆரோக்கியமாக வாழ்வோம் அதனால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ செலவுகள் இல்லை.
# வருமான வரி பிரச்சனை இல்லை.
# கணவருடன் எப்போதும் வயலில் வேலை செய்வேன் .
#எந்தக் கடன் வாங்கினாலும் தேர்தல் நேரத்தில் தள்ளுபடி ஆகும் !
* ஷியாம்லி-* அப்படியானால் கடனை யார் செலுத்துவது?
*சமேலி-* கிராமத்தை விட்டு நகரத்திற்கு சென்று வேலை செய்து வரி கட்டும் முட்டாள்களிடம் வசூலிக்கும் வரியின் அடிப்படையில் கடன் தள்ளுபடி! சரிதானே !
*ஷ்யாம்லி-* ஓ! அப்படியா! இதுதான் விஷயமா ?
இந்த உரையாடலை வேடிக்கையாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்
அவர்கள் பேசியதில் சில உண்மை இருந்ததாலேயே இப்பதிவை பதிவு செய்கிறேன்
கருத்துகள்