உலக விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தாலும் உருவாக்க முடியாத ஓர் ஆச்சர்யமான ‘கெமிக்கல் ஃபேக்டரி’ இது.

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

உலக விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தாலும் உருவாக்க முடியாத ஓர் ஆச்சர்யமான ‘கெமிக்கல் ஃபேக்டரி’ இது.

Subbiahpatturajan

கல்லீரல் (liver)

நம் சருமத்துக்கு அடுத்ததாக, உடலின் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். வயிற்றின் மேற்புறத்தில், வலது பக்கத்தில், இலை போல் விரிந்திருக்கும் உதரவிதானத்துக்குக் கீழே, கால் இல்லாத காளான் வடிவில் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது கல்லீரல். ஆங்கிலத்தில் இது ‘லிவர்’. பேச்சுத் தமிழில் ‘ஈரல்’. ஒன்றரை கிலோ எடையுள்ள கல்லீரல், மார்புக் கூட்டுக்குப் பின்புறம் பத்திரமாகப் பதுங்கியிருக்கிறது. இதயத்தைப் போலவே இதிலும் எலும்புகள் இல்லை; 

தொட்டுப் பார்த்தால் பஞ்சு  மாதிரி அத்தனை மிருது! மேலோட்டமாகப் பார்த்தால், ஒரே உறுப்பாகத் தெரிந்தாலும் அமைப்பு ரீதியில் வலப்பக்கம் ஒன்றும் இடப்பக்கம் ஒன்றுமாக இரண்டு பகுதிகளைக் கொண்டது.    கல்லீரலின் ‘மத்தியப் பிரதேச’த்திலிருந்து (Porta Hepatis), நான்கு அங்குல நீளத்தில் ‘பித்த நாளம்’ (Bile duct) கிளம்புகிறது.
பாதிக்கப்படுகிறது. 

இது கீழ்நோக்கி இறங்கி, சிறிய வெள்ளரிப் பிஞ்சு அளவில் இருக்கும் பித்தப்பை (Gall bladder)யோடும், முன் அடைப்புக்குறி போலிருக்கும் முன்சிறுகுடலோடும் (Duodenum) கல்லீரலை இணைக்கிறது.  கல்லீரலைக் குறுக்காகப் பிளந்து பார்த்தால், அதனுள்ளே ஆச்சர்யம் காத்திருக்கிறது. ஒரு தேன் கூடு போல் பல்லாயிரக்கணக்கான ‘பல்லாங்குழிகள்’ தெரிகின்றன. அவற்றுள் கோடிக்கணக்கான  ‘ஹெப்பாடிக் செல்கள்’ கூடி பித்த நீரைச் (Bile) சுரக்கின்றன.

இந்த பித்தநீர், பித்த நாளம் வழியாகப் பித்தப்பைக்கு வந்து கொஞ்ச காலம் தங்கிவிட்டு, செரிமானத்துக்கு உதவ முன்சிறுகுடலுக்குப் போகிறது. உடலின் தேவைக்கேற்ப தினமும் அரை லிட்டர் வரை பித்தநீரைச் சுரக்கிறது, கல்லீரல். உலகில் உள்ள எல்லா நிபுணர்களும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தாலும் உருவாக்க முடியாத ஓர் ஆச்சர்யமான ‘கெமிக்கல் ஃபேக்டரி’ இது.

உடலுக்கு தேவையான வெப்பத்தை
கல்லீரல் உற்பத்தி செய்கிறது. ரத்தம்உறைவதற்கு தேவையான
பொருட்களையும், ரத்த 
நாளங்களுகளுக்குள் ரத்தம் உறையாமல் இருக்க வேண்டியபொருட்களையும் உற்பத்தி செய்கிறது.இரும்புச்சத்து வைட்டமின் பி12, வைட்டமின்ஏ ஆகியவற்றை சேமித்து வைத்துக்கொள்கிறது. நோய்த் தொற்றுதலைஎதிர்த்து போர்புரிகின்ற ஆன்டிபாடிகளைஉருவாக்குகிறது. இவ்வாறு உடலுக்குஊக்கமும், செயல் வேகமும், கொடுக்கிறது கல்லீரல்

சிறியதும் பெரியதுமாக அனுதினமும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட காரியங்களைச் செய்கிறது. இத்தனை செயல்களுக்கும் கல்லீரல் நடத்தும் ரசாயன மாற்றங்களை வெளியில் செய்து காட்ட விரும்பினால், இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒரு பெரிய ரசாயனத் தொழிற்சாலையே கட்ட வேண்டியிருக்கும். அப்படியும்கூட கல்லீரல் செய்யும் சில உட்பரிமாற்றங்களை வெளியில் செய்துகாட்ட முடியாது.

உணவில் இருக்கும் சத்துக்களைக் கிரகித்து, உடலுக்கு உதவும் சக்தியாக மாற்றித் தருவது கல்லீரலின் பணி. இது எப்படிச் சாத்தியமாகிறது?

பித்தநீரில் இருக்கிறது இந்த சூட்சுமம். உணவு இரைப்பையை விட்டு இறங்கியதும், பித்தநீர் பித்தப்பையிலிருந்து வெளியேறி,  முன்சிறுகுடலுக்கு வந்துவிடுகிறது. உணவிலிருக்கும் கொழுப்பைப் பிரித்துக் கூழ் போலாக்குகிறது. இப்போது அங்கு வந்து சேரும் கணைய நீரிலிருந்து ‘லைப்பேஸ் என்சைம் ’ துணைக்கு அழைத்துக்கொள்கிறது. கொழுப்புச் சத்தை உறிஞ்சி எடுத்து ரத்தத்துக்குக் கொடுக்கிறது. இது போர்ட்டல் சிரை வழியாக கல்லீரலுக்குத்தான் வந்து சேருகிறது. அங்கு குளுக்கோஸ் எனும் சக்திப்பொருளாக மாற்றப்படுகிறது. 

சரி, நீங்கள் சாப்பிட்டது அரிசி சோறு! அது எப்படிச் செரிமானமாகிறது? அரிசி சோற்றில் உள்ள கார்போ ஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றி ரத்தத்தில் கலப்பதற்குக் குடல் பிரதேசத்தில் ஏற்பாடு செய்வதும் கல்லீரல்தான். அதேசமயம் சாப்பிட்ட சோறு முழுவதும் குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலந்துவிட்டாலும் ஆபத்துதான்! ‘கோமா’வில் சரிந்துவிடுவீர்கள். தேவையான அளவுக்கு ரத்தத்துக்குக் குளுக்கோஸை கொடுத்துவிட்டு, மீதியை கிளைக்கோஜனாக மாற்றி, தன்னிடம் சேமித்துக்கொள்கிறது, கல்லீரல்.

அரசியல்வாதிகளின் நண்பன் 

கல்லீரல் மட்டும் இந்தச் சேமிப்பு வேலையைச் செய்யாவிட்டால், யாரும் ‘உண்ணாவிரதம் இருக்கிறேன்’ என்று பந்தல் போட்டு உட்கார முடியாது. அதேபோல் நீங்கள் விரதம் இருக்கும்போதும், வீட்டில் கோபித்துக்கொண்டு ஒருநாள், இரண்டு நாள் சாப்பிடாமல் இருக்கும்போதும், வயிறு பசித்து உணவுக்காக ‘அழும்’. அப்போது, ‘இந்தா நீ கேட்ட உணவு’ என்று தன் சேமிப்பில் இருக்கும் கிளைக்கோஜனை மறுபடியும் குளுக்கோஸாக மாற்றித்தரும் வள்ளலும் கல்லீரல்தான்!

உடம்பின் அவசரத்துக்கும் ஆபத்துக்கும் அயராமல் சத்துக்களை தறுவது கல்லீரல்! வறுமை, வறட்சி, பஞ்சம் போன்ற காலங்களில் பலர் மாதக்கணக்கில்கூட சாப்பிடாமல் இருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்படுவது உண்டு. அப்போது அவர்களுக்கு நாட்கணக்கில் சக்தியைத் தருமளவுக்கு கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் கிடைக்காது.

உயிர் காக்கும் நண்பர் 

இதுபோன்ற சமயங்களில் உடலில் படிந்திருக்கும் கொழுப்பிலிருந்து சத்தை எடுத்து குளுக்கோஸாக மாற்றி உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க வழிசெய்து, உயிர் காக்கும் போராளியாக மாறுகிறது கல்லீரல். சாப்பிட்ட உணவு மட்டுமல்ல, குடித்த மது, விழுங்கிய மாத்திரை, சுவாசித்த புகை, தலைக்குத் தேய்த்த தைலம், தவறுதலாகக் குடித்துவிட்ட விஷம்... இப்படி எல்லாமே கல்லீரலுக்குத்தான் போகிறது.

திருப்பதி உண்டியலில் பணத்தையும் நகைகளையும் பிரிக்கிற மாதிரி, இவற்றில் உள்ள ரசாயனங்களை தனித்தனியாகப் பிரித்து, ‘நல்லது எது? கெட்டது எது?’ எனத் தெரிந்து, மாத்திரை, மருந்து போன்ற நல்லதைச் செயல்பட வைக்கிறது. புகை, தூசி போன்ற கெட்டதைச் செயலிழக்கச் செய்கிறது. கல்லீரல் மட்டும் இந்தத் துப்புரவுப் பணியைச் செய்யாவிட்டால், நெருக்கமான சாலைகளில் வாகனங்கள் வெளிப்படுத்தும் நச்சுப் புகை மட்டுமே ஒரே வாரத்தில் நம்மைச் சாகடித்துவிடும்!

ரத்த அணுக்களின் ஆயுட்காலம் முடியும்போது, அவை மண்ணீரலுக்கு (Spleen) வந்து அழிகின்றன. அப்போது ‘பிலிரூபின்’ என்ற நச்சுப்பொருள் வெளிவருகிறது. இது ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருந்தால் உயிருக்கு ஆபத்தாகிவிடும். எனவே, அதை ‘விருந்து’க்கு அழைத்து, பக்குவப்படுத்தி, பித்த உப்புகளாக மாற்றிச் சிறுநீரிலும் மலத்திலும் ‘பத்திரமாக’ அனுப்பிவைக்கிறது. இந்த உபசரிப்பின் பலனால் ரத்தம் சுத்தமாகிறது; உயிர் ஆபத்து விடைபெறுகிறது.

இதுபோல், உடலில் புரதச்சத்து பயன்படுத்தப்படும்போது, ‘அமோனியா’ எனும் நச்சு வாயு கிளம்பும். இது நேரடியாக நுரையீரலுக்குப் போனால் நம் மூச்சு அடங்கிவிடும்.  ஆகவே, இதன் சுற்றுப்பாதையை மாற்றி அமைத்து, அதைத் தன்னிடம் வரச் செய்து, அதன் வடிவத்தை யூரியாவாக மாற்றிச் சிறுநீரகத்துக்கு அனுப்ப, அது சிறுநீரில் வெளியேறிவிடுகிறது. இந்தச் சுழற்சியில் தகராறு ஏற்பட்டால், ரத்தத்தில் யூரியா அதிகரிக்கும். அதனால் சிறுநீரகம் பழுதாகும். இதைத் தவிர்க்க, யூரியாவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டிய சிரமமான பணியையும் கல்லீரல்தான் சிரமேற்கொள்கிறது.

மாறிவிட்ட நம் வாழ்க்கை முறைகளால், தெரிந்தோ, தெரியாமலோ பலதரப்பட்ட விஷப் பொருட்களும் உடம்புக்குள் நுழைவது இப்போது சகஜமாகிவிட்டது. உதாரணத்துக்குச் சில... நீங்கள் அருந்தும் தேநீரில் ‘டேனின்’ என்ற நச்சுப்பொருள் இருக்கிறது. காபியில் ‘காஃபீன்’, சிகரெட்டில் ‘நிகோடின்’, ‘டாஸ்மாக்’ சமாச்சாரத்தில் ஆல்கஹால். இவை எல்லாமே கல்லீரலுக்குப் போகாமல் நேரடியாக இதயத்தையோ, மூளையையோ அடைந்தால், இரண்டே நிமிடங்களில் மரணம் நிச்சயம். ஆனால் நடப்பதென்ன? இந்த நச்சுக்கள் கல்லீரலுக்குப் போனதும் ‘பல் பிடுங்கப்பட்ட பாம்பு மாதிரி’ விஷம் இழந்துவிடுவதால் நம்மால் உயிர் பிழைக்கமுடிகிறது.

உடலில் எங்காவது வெட்டுக்காயம் ஏற்பட்டால் ஒன்றிரண்டு நிமிடங்களில் ரத்தம் வருவது நின்று விடுகிறதல்லவா? இதற்குக் காரணம் என்ன? கல்லீரல் தயாரிக்கும் ‘புரோத்ராம்பின்’ என்ற ரசாயனம்தான். இந்த ரசாயனத்தை மட்டும் தயாரிக்க மாட்டேன் என்று கல்லீரல் ஸ்டிரைக் செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவ்வளவுதான், உடலிலிருந்து ரத்தம் முழுவதும் வெளியேறி இறந்துபோவதற்கு நாம் ஷேவ் செய்யும்போது ஏற்படும் சின்னக் கீறல் போதும்!

கல்லீரல் பற்றி இத்தனை விஸ்தாரமாகப் பேசுவது ஏன்? உடல் உறுப்புகளில் இதயத்தைத் தெரிந்த அளவுக்குக் கல்லீரலின் அற்புதம் அநேகருக்கும் தெரியாத, புரியாத புதிர். ‘கல்லீரலை நம்பினோர் கைவிடப்படார்’ என்பதுதான் நடைமுறை நிஜம். உடம்பை வளர்க்கவும் உயிரைக் காக்கவும் கடைசி வரை போராடும் கல்லீரல், தனக்கு பாதிப்பு வரும்போது அது குறித்த அறிகுறிகளை ஆரம்பத்தில் காட்டாது. தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு, முடிந்தவரை செயல்படுகிற அசாத்திய சக்தி கல்லீரலுக்கு உண்டு.

அரிசி சோற்றைப் போலவே பருப்புச் சோற்றில் இருக்கும் புரதச்சத்தைச் செரித்து குளுக்கோஸாக மாற்றுவதும் கல்லீரல்தான். காய்கறிகளில் காணப்படும் வைட்டமின்களைக் குடலில் கிரகித்து ஊட்டச்சத்தாக மாற்றுவதும் இதே கல்லீரல்தான். சரி, இத்தனை சத்துக்களையும் வைத்துக்கொண்டு என்னதான் செய்கிறது கல்லீரல்? தனி ஒரு உறுப்பாக இருந்துகொண்டு, உடலின் பல உறுப்புகளைப் பாதுகாக்கும் பணியைச் செய்ய வேண்டியிருப்பதால், இந்தச் சத்துக்களை உடல் இயக்கத்துக்குத் தேவையான ‘ஆதார சக்தி’யாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதுதான் ஆச்சரியத்தின் உச்சம்!

இதயம் துடிப்பதற்குத் தேவையான சக்தி ஒரு வகை. கண் இமைப்பதற்குத் தேவையான சக்தி வேறு வகை. மூளை வளர்வதற்குத் தேவையான சத்து ஒன்று. முடி வளர்வதற்கான சத்து இன்னொரு வகை. உழைப்பதற்கும், உறங்குவதற்கும் தேவையான சக்திகள் வெவ்வேறானவை. வளரும் குழந்தைக்கும் வயதானவருக்கும் வேண்டிய சத்துக்கள் வேறுபடும்.

எந்த உறுப்புக்கு, எந்த சத்து, எந்த அளவில், எந்த நேரத்தில் தேவை என்பதை தேர்ந்த கணிப்பொறி போல் கல்லீரல்தான் தெரிந்துவைத்திருக்கிறது. அதை அந்தந்த உறுப்புக்குச் சரியான அளவில் சரியான நேரத்தில் கொடுத்து அனுப்புகிறது. அதனால்தான் வாக்கிங் போகும்போது, பாட்டு கேட்டுக்கொண்டே ‘செல்’லையும் நோண்டுகிற மாதிரி ஒரே நேரத்தில் பல வேலைகளை நம்மால் செய்ய முடிகிறது.

தேவையற்ற உணவு பழக்கம் 

மது , ரசாயன மருந்துகள் அதிகமாக உட்கொள்ளல், இரவு 11.00 மணியில் இருந்து 3.00 வரை தூங்காமல் இருத்தல், முறையற்ற உணவு பழக்கம் ஆகியவை கல்லீரலை பாதிக்கும் காரணிகள்.
நமது நாட்டைப் பொறுத்தவரை கல்லீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கு மூன்று காரணிகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒன்று, குடிப் பழக்கம். இரண்டாவதாக, கொழுப்பு நிறைந்த உணவுகள்.
மற்றும் அளவுக்கு அதிகமான மருந்து உட்கொள்ளல்.
அளவிற்கு அதிகமாக குடிப்பதனால்  கல்லீரலிற்கு ஏற்படும் பாதிப்பே சாதாரண மஞ்சள் காமாலை நோயிலிருந்து ஹெப்பாடிடிஸ் பி ஆகியனவும், நீரிழிவு உள்ளிட்ட நோய்களும் ஏற்படுகின்றன. இவற்றை ஆல்கஹால் தொடர்பான கல்லீரல் நோய்கள் என்று மருத்துவம் கூறுகிறது.
மற்றொரு வகையான பாதிப்பு கல்லீரலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதால் உண்டாகிறது. இதனை ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு வியாதிகள் (Non-alcoholics fatty liver disease – NAFLD) என்று மருத்துவம் வகைப்படுத்துகிறது.
இந்த இரண்டாவது வகை – அதாவது கொழுப்பு சேகரிப்பால் கல்லீரல் கெடுவது – ஒருவருக்கு 35 வயதில் ஏற்படுகிறது என்று வைத்துக் கொண்டால், அவர் 55 வயதை அடையும்போது, கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு, அதனை மாற்றுக் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது. கல்லீரல் வீங்கி சிகிச்சையால் குண்பபடுத்த முடியாத நிலையைத்தான் லிவர் சிர்ரோசிஸ் என்றழைக்கின்றனர்.
கல்லீரலை பாதுகாக்கும் உணவுமுறை 
முறையான உணவுப் பழக்கம், காலையில் உடற்பயிற்சி ஆகியன கல்லீரலை பாதுகாக்கும் மிகச் சாதாரண வழிகளாகும். பாதிக்கப்பட்டாலும் மருத்துவத்தின் உதவியால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பு கல்லீரல் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும். எனவே, மது குடித்தல், கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடுதல் ஆகியவற்றை தவிர்த்தால் போதும். நல்ல கல்லீரலுடன் வாழ்நாள் முழுவதும் நன்றாக வாழலாம்.
எலுமிச்சை: காலையில் எலுமிச்சை சாறு குடிப்பது கல்லீரலை தூண்டுகிறது.
பீட்ரூட், காரட்: நச்சுப் பொருட்களை வெளியேற்ற இவை உதவுகின்றன.
இந்த உணவுப் பொருட்கள் பொதுவான ஆரோக்கியத்திற்கும் உதவும்.
கல்லீரல் நோய்களை குணமாக்கும் கல்லீரலில் பித்த நீரைப் பெருக்கும் 
கல்லீரலை வலுவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளங்கனி.
குறிப்பாக புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி பழக்கமுள்ளவர் களுக்கு வரக்கூடிய கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகியவை வராமல் துளசி தடுக்கும்.
கல்லீரல் நோய்..
மனிதனுடைய உடல் அமைப்புகளில் அற்புதமான செயலை செய்வது ஈரல்.சுரப்பிகளிலேயே மிகவும் நுணுக்கமானது மற்றும் அளவிலும் பெரியது.இந்த ஈரலானது இருதயம்,சிறுநீரகம்,இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் உணவுகளைச் செரிக்கச் செய்வது போன்ற எண்ணற்ற வேலைகளை இடையறாது செய்துக் கொண்டே இருக்கிறது.இந்த செயல் திறனைக் குறைக்கும்படி பலவித நோய்களாலும்,கிருமித் தொற்றுகளினாலும் ஈரல் வீக்கம் அல்லது ஈரல் சுருங்கிப் போதல்,காமாலை போன்ற கல்லீரல் நோய்கள் உண்டாகின்றது.

அறிகுறிகள்..

வாயில் கசப்புச் சுவை,ருசியின்மை,வாயில் நீர் ஊறல்,பசியில்லாமை,உண்ட உணவு செரியாமை,காலையில் பித்தவாந்தி,முகத்தில் தேஜஸ் குறைதல்,முகம் வற்றி, எலும்புகள் தெரிதல்,வயிறு பெருத்து,கை கால் மெலிந்து போதல்,காய்ச்சல் இருத்தல் போன்ற குறிகள் தென்படும்.

1.வாய்வு கல்லீரல் நோய்..

வாய்வானது சீர்கோடடைந்து,வாய்வு தோஷம் உபரியாகி,உஷ்ணம்,காய்ச்சல் உண்டாகி சிறுகச் சிறுக உடம்பு இளைத்தல்,வயிறு பெருத்து,ரசத்தாது கேடு அடைந்து,நாளங்களின் முடிச்சுகளில் கட்டி போன்ற முடிச்சுகள் ஏற்படும்.

2.பித்தக் கல்லீரல் நோய்..

இரத்தத்தை கெடுத்து,பித்தத்தின் தன்மை அதிகரிக்கச் செய்து உடல் முழுவதும் பித்தநீர் பரவச் செய்து காண்பதற்கு மஞ்சளாகத் தோற்றம் அளிக்கும்.வாயில் கசப்பு ஏற்பட்டு பித்த வாந்தி எடுத்தல்,முகம் வெளிறிக் காணும்.

3.கபத்தினால் உண்டாகும் ஈரல் நோய்..

இந்நோய் சரீரத்திற்கு வன்மையும்,தெம்பும் கொடுக்கக் கூடிய உஷ்ணத்தை கேடுஅடையச் செய்து,அத்துடன் குளிர்ச்சியான கபம் கலந்து,கல்லீரலையும் கெடுத்து விடுகிறது.உடல் வீங்கி வெளுத்து வயிற்றைப் பெருக்கச் செய்யும்.

கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

Subbiahpatturajan தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕 பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர். மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது அரசு . அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. ஆனால் இலங்கை அரசு இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை. 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கடத்திச் சென்றனர். புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்...

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்...

உங்களுக்கு காது கேட்கும் திறன் மெதுவாக குறைந்தது வருகிறதா என்ன செய்ய வேண்டும்

Subbiahpatturajan செவித்திறனை மேம்படுத்துதல் எப்படி?  உங்கள் செவித்திறனை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன:  உரத்த சத்தங்களைத் தவிர்க்கவும்: உரத்த சத்தங்களை வெளிப்படுத்துவது உங்கள் உள் காதில் உள்ள முடி செல்களை சேதப்படுத்தும், இது காது கேளாமைக்கு வழிவகுக்கும். முடிந்த போதெல்லாம் உரத்த சத்தங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், மேலும் நீங்கள் சத்தமாக இருக்க வேண்டும் என்றால் காதில் செருகி அல்லது பிற பாதுகாப்பு கியர் அணியுங்கள்.  உங்கள் காதுகளை சுத்தமாக வைத்திருங்கள்:  காதுக்குள் மெழுகு போன்ற அழுக்கு காதில் கால்வாயில் குவிந்து இருந்தால் சத்தங்கள் செவிப்பறையை அடைவதைத் தடுக்கும். உங்கள் காதுகளின் உள்ப்புறத்தை துவைக்கும் துணி அல்லது பருத்தி துணியால் மெதுவாக சுத்தம் செய்யுங்கள், ஆனால் உங்கள் காது கால்வாயில் எதையும் செருகாமல் கவனமாக இருங்கள், ஏனெனில் இது செவிப்பறையை சேதப்படுத்தும்.  உங்கள் செவித்திறனைப் பரிசோதிக்கவும்:  உங்களுக்கு காது கேளாமை இருந்தால், உங்கள் செவித்திறனை ஒரு நிபுணரால் பரிசோதிக்க வேண்டியது அவசியம். செவிப்புலன் சோதனையானது உங்கள் ச...

வெட்டுக் கிளியை கட்டுப்படுத்த உழவர்களின் சிறந்த நண்பன் இந்த ரெட்டைவால் குருவி

Subbiahpatturajan வெட்டுக்கிளிக்கும் கரிச்சான் குருவிக்கும் இருக்கும் தொடர்பு பத்தி பார்ப்போம்!! வெட்டுக்கிளி பற்றி பேசும் போது இவனை பற்றி பேசாமல் இருக்க முடியாது... ஆமாம் இவனின் பிரதான உணவே வெட்டுக்கிளி தான்...  இவர்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 பூச்சிகளை வேட்டையாடி உண்பவர்கள்.   ஒரு நாளைக்கு எவ்வளவு பூச்சிகளை உண்ணுகிறார்கள் என நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  வயிறு நிறம்பியபிறகு சாப்பிடும் பூச்சிகளை ஒன்றிரண்டாக அரைத்து வெளியில் கக்கிவிடுகிறார்கள். அப்படி கக்கிய பூச்சிகள் மண்ணிற்கு சிறந்த உரமாக செயல்படுகிறது. இவனை போன்றவர்களின் எண்ணிக்கை குறைய குறைய வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கும்... அவன் தான் கரிச்சான் குருவி... இவனுக்கு மாட்டுக்காரன், ரெட்டைவால் குருவி, வால் நீண்ட கருங்குருவி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு. கரிச்சான் குருவிகள் கிராமப்புறங்களில்  ஆடு மாடுகளை மேய்க்க ஓட்டிச் செல்லும் போது அவற்றின் மீது உட்கார்ந்து சவாரி செய்யும். அப்போது ஆடு மாடுகளின் கால்கள் செடிகளில் உட்கார்ந்து இருக்கும் வெட்டுக்கிளி, வண்ணாத்திப் பூச்சி இவற்றைக் ...

கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா?

Subbiahpatturajan உடல் நலம்.... கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் மிக மிக நல்லது. கடல் நீரில் அயோடின், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம் ஆகிய பயன்மிக்க பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளது. எனவே, கடல் நீரில் குளித்தால் பல நோய்கள் நீங்குகிறது. 1. நரம்பு மண்டலம் அமைதி அடைகிறது. 2. உடலில் வெப்ப நிலைக்கு சரியான வெப்பம் உள்ள கடல் நீரில் குளிப்பதால், கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. 3. உடல் தசைகள் உரிய அளவில்  சுருங்கி விரிகிறது. 4. அயோடின் நிறைந்த கடல் நீரில் குளிப்பதால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்குகிறது, மகப்பேறு கிடைக்கும், சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும். 5. பொட்டாசியம் சிறுநீரை நன்கு வெளியேற்றும். 6. மக்னீசியம் தோல்நோய் மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தாக செயல்படுகிறது. 7. புரோமின் நரம்பு மண்டலத்தின் தளர்ச்சியை நீக்கி நல்ல ஓய்வு கொடுக்கும். 8  கால்சியம் உடலில் அனைத்து  வீக்கத்தை சரி செய்கிறது. 9. கடல்நீர் அனைத்துவகை அலர்ஜிகளையும் சரிசெய்கிறது. 10. கடல்நீர் எதிர்மறை சிந்தனை ( Negative ) உள்ளவர்களை நேர்மறை ( Positive )...

மூலப்பத்திரம் என்றால் என்ன மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?"

` `எங்களுடைய பரம்பரைச் சொத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது. அதற்குப் பத்திரம் பதிவுசெய்வது எப்படி?" ``பரம்பரைச் சொத்துக்குப் பட்டா மட்டுமே இருந்தால் கவலையில்லை. ஏதாவது பத்திரம் வேண்டுமென்றால், குடும்பத்துக்குள்ளேயே ஒருவருக்கு அடமானம், குத்தகை போன்ற ஆவணம் எழுதி, பதிவு செய்தால், உங்களின் பெயருக்கு வில்லங்கம் மாறிவிடும். சில நாள்கள் கழித்து, பதிவான அடமானம் அல்லது குத்தகையை ரத்து செய்து பத்திரம் பதிவு செய்தால், வில்லங்கச் சான்றில் மீண்டும் உங்கள் பெயர் பதிவு இடம்பெறும்.'' பத்திரம் ``பத்திரப் பதிவில் மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?" ``ஆம். ஒருவருக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு தாய்ப்பத்திரம் சொத்துக்கு முக்கியம். தாய்ப்பத்திரம் இல்லாத சொத்து அநாதைதான். தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்." ``தாம்பரம் வரதராஜபுரத்தில் பெரும் நிலப்பரப்பு விற்கப்பட்டது. 3,600 சதுர அடி நிலத்தை நான் 1980-ல் வாங்க...

திருமணம் ஆன கணவன் மனைவிக்கு நினைவில் வைக்க வேண்டிய விஷயங்கள்..!!

Subbiahpatturajan கணவன் மனைவி புரிதலுடன் வாழ திருமணம் ஆன கணவன் மனைவிகளுக்கு நினைவில் வைக்க  வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்று ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி அன்பும் பரிசும் தாம்பத்யத்துக்கு உறுதி ஆம் இன்று காதலிலும் திருமண பந்தத்திலும் தொடக்கத்தில் இருக்கும் அன்பும் பரிசு பரிமாற்றமும் நாளாக நாளாக குறைந்து மறைந்து இல்லாமலே போய்விடுகிறது அங்கு தான் தம்பதிகளுக்குள் பிரிவும் தொடங்கி விடுகிறது தாம்பத்யம் என்று சொன்னவுடன் பலருக்கு அச்சமும் அருவறுப்பும் முகத்தில் பிரதிபலிக்கும் அது தேவையே இல்லை தாம்பத்யம் என்பது எளிமையான அன்புப் பகிர்தல் என்று எல்லா ஆண்களும் பெண்களும் புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்  இரண்டு அறை கொண்ட வீட்டில் கூட்டு குடும்பமாக நான்கு தம்பதிகள் வாழ்ந்த காலத்தில் கூட அன்யோன்யமாக இருந்த கணவன் மனைவி உறவு இப்போது தனி குடும்பமாக மூன்று தனி தனி அறைகள் உள்ள வீட்டில் வாழும் போது விலகி போயிருக்கிறது என்றால் இவர்கள் தாம்பத்யம் சிறக்கவில்லை என்றே அர்த்தம் திருமணம் என்ற பந்தத்தில் உரிமை கிடைத்த ஒரே காரணத்தினாலே உடல் உரிமை பெற்று கணவன் மனைவி இணைந்திருப்பது மட்டுமே தாம்பத்யம் அல்ல பாரத...