Subbiahpatturajan
காலில் ஆணியா நீங்கள் நடக்க கஷ்டப்படுகின்றீர்களா?கவலை படாதீர்கள்
காலில் ஆணி ஏற்பட்டால் வெறும் காலில் நடக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.
செருப்பு இல்லாமல் வெறும் காலில் நடக்கவே பயமாக இருக்கும்.
எத்தனை முறை ஆபரேஷன் செய்தாலும் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கும் இதனால் பண விரயம் தான் ஏற்படும் இயற்கை வழிமுறையில் நாம் எப்போதும் தொடர்ந்து செய்தாலே இந்த கால் ஆணி குணமாகிவிடும்.
முக்கியமான விஷயம்
இந்த மருந்தை சிறுவர்களின் கைகளில் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
ஏனென்றால் இந்த மருந்தில் வசம்பு என்ற மருந்து சேர்க்கப்பட்டுள்ளதால் சிறுவர்கள் வாய்ப் பகுதியில் இந்த மருந்தை வைத்தால் நாக்கு உள் பகுதியில் இழுத்துக்கொள்ளும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வைத்து நீங்கள் மருந்து தயாரித்துக் கொள்ளலாம்.
மருந்து அரைக்க தேவையான பொருட்கள்
சூடம் -5 எண்ணம்
மஞ்சள் - சிறிதளவு,
மருதாணி இலை - ஒரு கை அளவு,
கற்றாழை உட்பகுதி - ஒரு தேக்கரண்டி,
வசம்புப் பொடி - ஒரு தேக்கரண்டி.
மருந்து அரைக்கும் போது
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
பிறகு மருதாணி இலையை நன்கு மை போல அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
மேலும் இதனுடன் இடித்த கற்பூரம்,மஞ்சள் தூள்,கற்றாழை உட்பகுதி மற்றும் வசம்பு பொடி ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.
இதை கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து ஒரு பருத்தி துணியால் நன்கு இறுக்கமாக கட்டவும்.
இதை இரண்டு முறை செய்து வந்தால் போதும் கால் ஆணி முற்றிலுமாக குணமாகும்.
இது எந்தவித பக்கவிளைவும் இல்லாத நன்கு பயனளிக்க கூடிய மருத்துவம் ஆகும்.
கருத்துகள்