முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதிமன்றங்களும் ஊடகமும் ஓயாது ஒப்பாரி வைத்து, உன்னை ஒதுக்கி வைக்கும்.ஓலமிட்டு அழச்செய்யும் உன்னை.

Subbiahpatturajan
அன்பு மாணவனே இந்த உலகில்  ஆயிரம் பணிகள் உண்டு. ஆசிரியர் பணி வேண்டாம் இன்று.
நீதிமன்றங்களும் ஊடகமும் ஓயாது ஒப்பாரி வைத்து, உன்னை ஒதுக்கி வைக்கும்.ஓலமிட்டு அழச்செய்யும் உன்னை.
 அகிலத்தின் ஆதாரம் அது என்றும், ஆகாயம் போன்று அதிசயமானது என்றும், அன்னையாய் மதிப்பு மிக்கதென்றும், அனைவரும் வணங்கும் ஏற்றமானது என்றும், ஆயிரம் கதைகள் சொல்லுவர்.
 அதை நம்பி ஏமாந்து விடாதே அதல பாதாளத்தில் விழுந்து விடாதே! 
ஆதி பகவன் பிள்ளை சொன்னாலும் நம்பாதே!

 ஆசிரியர் நான் சொல்கிறேன் வேண்டாம்.

 ஆணவத்தின் அடையாளமாய் மாணவர்களும்
 ஆணையிடும் அரக்கராய் அதிகார வர்க்கமும் ஆட்டுவிக்கும் பெற்றோர் கூட்டமும்
 ஆசிரியரை கேலிப் பொருளாக்கும்.
படியாத பிள்ளைக்கு பாடம் எடு
பண்பு இல்லாதவனிடம் பணிந்து போ அடிதடி செய்பவனை அரவணைத்துச் செல் ! எழுதத் தெரியாதவனை  எழுத்தாளர் என்று புகழ் !

 ஆணவம் கொண்டவனிடம் அன்பு செலுத்து

 இப்படித்தான் கல்வித் துறையும், கல்வி நிறுவனங்களும், கை விலங்கு போட்டு, உன்னை ஆசிரியனாய் அழகு பார்க்கும் .
உன்னை பாதுகாக்கவும் உன் உரிமைகளை உறுதிப்படுத்தவும் உனது உன்னதங்களை போற்றவும் ஒருவரும் முன்வர மாட்டார்கள்.
 தவறிச் செய்த தவறையும், திருந்தக் கொடுத்த தண்டனையையும், கொடுங் கொலைக் குற்றமெனக் கருதி நீதிமன்றங்களும் ஊடகமும் ஓயாது ஒப்பாரி வைத்து, உன்னை ஒதுக்கி வைக்கும்.ஓலமிட்டு அழச்செய்யும் உன்னை. 
இனிய நிகழ்வுகளையும், இன்னல்களையும் எடுத்துரைக்க இன்றைய ஏடுகளுக்குப் பிடிக்காது.
 இல்லாத பொய்களையும், நடவாத நிகழ்வுகளையும், இயல்புக்கு ஒப்பாமல் நிதம் ஒப்புவிப்பர்.
 ஈசனுக்கு  இணையானவன் என்று இணை வைத்தவனை,
 ஈனப்பிறவி என்று எண்ணுமளவிற்கு ஈவு இரக்கமின்றி புணைந்து எழுதுவர்.
 வள்ளுவன் வழி நீ நடந்தாலும்,
 வம்பிற்கு வந்து நிற்பான் வழியில்.
தொல்காப்பியன் சொல்படி நீ நடந்தாலும்,
 தொல்லை தருவதையே தயங்காமல் செய்வான்.
ஒழுக்க முடையவனாய் இரு என்றால் ஒப்பாரி வைப்பான் 
கை ஓங்க நினைத்தாலே ஒழிக கோஷமிடுவான்.
 ஊடகத்தை கூட்டி ஒப்பாரி வைப்பான்.
 நடத்தையில் சந்தேகம் என்பான்.
 நடந்ததைச் சொல்ல மாட்டான். அரசுப் பணியென்றாலும் அவதிகள் அதிகம் என்றாலும் சம்பளம் உண்டு.
 தனியார் பணியென்றால் அனைத்துப் பணியாளனும்  நீதான், ஊதியமா, மூச்சு விடலாம் பெரிதாக.
 அன்புமானவனே ஆயிரம் வேலைகள் இந்த உலகத்தில் உண்டு.
 அதில் ஒன்றை அடைந்திடு ஆனந்தமாய் வாழ்ந்திடு.

 ஆசிரியர் பணி மட்டும் வேண்டவே வேண்டாம்.

 ஆயிரம் பணிகள் உண்டு இந்த உலகத்தில் ஆசிரியர் பணி மட்டும் வேண்டாம்...

                       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...