ஆற்றிலிருந்து எடுக்கும் மணலும், இயற்கையில் உருவாகும் மணலும் ஒரே விகிதத்தில் இருந்தால் மட்டுமே சமநிலையைப் பேண முடியும்.
Subbiahpatturajan
ஆற்றுமணல் செய்யும் அதிசயங்கள்
ஆற்றின் மட்டத்தை சரியாக வைத்திருப்பது மணல்!
மணல் என்பது புவியியல் மாறுபாட்டின் ஒரு பகுதியாக பாறைகள் சிதைந்து உருவாகும் ஒரு கனிமம் என்பதை பலரும் அறிந்திருப்பார்கள். அது உருவாக இயற்கை ஏராளமான ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும். இன்று நாம் பயன்படுத்தும் ஆற்று மணல் உருவாவதை எக்காரணம் கொண்டும் விரைவாக்க முடியாது.
வடிகட்டுதல்:
நீரிலிருந்து அசுத்தங்கள் மற்றும் வண்டல்களை அகற்ற ஆற்று மணல் நீர் வடிகட்டுதல் அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இது பெரிய துகள்களை அகற்றுவதில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும் மற்றும் நீர் சுத்திகரிப்பு முறைகளில் முன் வடிகட்டியாக பயன்படுத்தப்படலாம்.
சுற்றுச்சூழல் நன்மைகள்:
ஆற்றின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் ஆற்று மணல் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நீரின் இயற்கையான ஓட்டத்தை பராமரிக்கவும், ஆற்றங்கரைகளின் அரிப்பைத் தடுக்கவும், நீர்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடத்தை வழங்கவும் உதவுகிறது.
முடிவில், ஆற்று மணல் ஒரு பல்துறை மற்றும் மதிப்புமிக்க வளமாகும், இது பல பயன்பாடுகளையும் நன்மைகளையும் கொண்டுள்ளது. அதன் தனித்துவமான பண்புகள் பல தொழில்களில் இது ஒரு இன்றியமையாத அங்கமாக அமைகிறது, மேலும் அதன் கிடைக்கும் தன்மை உலகெங்கிலும் உள்ள சமூகங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கியமானது.
நாம் ஆற்றிலிருந்து எடுக்கும் மணலும், இயற்கையில் உருவாகும் மணலும் ஒரே விகிதத்தில் இருந்தால் மட்டுமே சமநிலையைப் பேண முடியும்.
மணலை ஆழமாகத் தோண்டி எடுப்பதன் மூலம் ஆறுகளைப் பள்ளமாக்கி அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கால்வாய்களுக்கு தண்ணீர் செல்லாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் எதிர் விளைவுகள் குளங்கள் வறண்டு போய் தமிழ் நாட்டின் நீர்வளம் குன்றி விடும்.
குளங்கள் இல்லாத ஊர்களைத் தமிழ்நாட்டில் காண்பது அரிதினும் அரிது. இந்தக் குளங்கள் ஆங்காங்கு பெய்யும் மழை நீரை மட்டும் சேமிப்பது இல்லை. பல மைல் தொலைவில் உள்ள ஆற்றில் இருந்து பெரும் நீரையும் பெற்று சேமிக்கின்றன. இப்படி சிறுதும் பெரிதுமான நீர்நிலைகள் அனைத்தும் பல கோடிக்கணக்கான மைல்கள் நீளமுடைய கால்வாய்களால் ஆறுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. சுருங்கச் சொன்னால், இந்தக் கால்வாய்கள் அனைத்தும் ஆற்றில் தொடங்கி குளங்களில் இணைந்து, பின்னர் மீண்டும் ஆற்றில் வந்து முடிகின்றன. வெகு சொற்பமான அளவு தண்ணீரே கடலுக்கு சென்று சேர்கிறது. எனவே, ஆறுகள் சீருடன் இருந்தால் மட்டுமே தமிழ் நாட்டில் உள்ள குளங்கள் சீருடன் இருக்கும்.
கருத்துகள்