- வாழ்வில் வெற்றி பெற....
#எதிரியைவெல்ல
வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த அவமானம் .பட்ட கஷ்டங்கள் மத்தியில் எதிரியின் செயலால் நீங்கள் ஏமாற்றம் அடைந்திருந்தால்... இந்த நிகழ்வை மறந்துவிட்டு வழக்கமான தொழிலைக் கவனிப்பதைப்போல நடந்துகொள்.- அவன் உன்னைத் தேடுவான். எதிரியின் காவல் கடிதாக இருந்தால் அவன் உன்னைத் தேடிவருவான். எச்சரிக்கையாக இரு. உன்னைவிட வலுவாக இருந்தால் அவனை விட்டு விலகிச் செல்.
- அவனது விருப்பு வெறுப்பு, பலம் பலவீனம், நட்பு பகை என அனைத்தையும் அறிந்துகொள். தன்னையும் அறிந்து எதிரியையுமஅறிந்தவனே முழு வெற்றி அடைகிறான். தன்னை மட்டும் அறிந்தவன் வெற்றி பெற்றாலும்அதற்கு அதிக விலை கொடுப்பான். தன்னையும் அறியாமல் எதிரியையும்அறியாதவன் வெற்றி பெறுவது கடினம். உன் எதிரிக்கு உதவி செய்வதுயார் என்று கண்டுபிடி. அவனை அடக்கு.
- எதிரிக்கு எதிரியாகஅறிந்தவனே முழு வெற்றி அடைகிறான். தன்னை மட்டும் அறிந்தவன் வெற்றி பெற்றாலும்அதற்கு அதிக விலை கொடுப்பான். தன்னையும் அறியாமல் எதிரியையும்அறியாதவன் வெற்றி பெறுவது கடினம்.
- உன்
- எதிரிக்கு உதவி செய்வதுயார் என்று கண்டுபிடி.
- அவனை அடக்கு. எதிரிக்கு எதிரியாக மாற்று
- உன் எதிரிகளைத் தேடுவதற்காகப் பொருள் செலவு செய்யாதே. எதிரிகளைத் தேடும் முயற்சியில் பொருளையும் ஈட்ட முயற்சி செய்அவ்வாறு செய்தால் காலம் வீணானாலும் பொருள் வீணாகாது. பொறுமை பொன்னுக்கு நிகர். பொறுமைதான் முதல் படைகலன். பொறுமைதான் உனது அரண். நம் தோல்வியைத் தவிர்ப்பது நம் கையில் உள்ளது. எதிரியின் தோல்வி அவன் கையில் உள்ளது. அதுவரை காத்திரு.காத்திருந்தால் நம்மை அறியாமலேயே வெற்றி நம்மைத் தேடி வரும்.எதிரியைப் பற்றி ஒற்று கிடைத்தால் தகுந்த திட்டம் தீட்டி, நீ இருக்கும் இடத்திற்கு அவனை வரச் செய். அவன் இருக்கும் இடத்திற்குப் போகாதே. அவன் அழைக்கும்போதெல்லாம்வருகிறேன் என்று ஒப்புக்கொள். முடியாதென்று சொல்லாதே. இன்று வரச் சொன்னால் நாளை புறப்படுகிறேன் என்று சொல். பாதி வழி சென்றபிறகு சாக்குச் சொல்லித் திரும்பிவிடு. பொறுமை இழந்து அவன் வெளியே வருவான். அவன் பொறுமை காத்தால், எதிரியை எப்படிமறைவிலிருந்து வெளியே கொண்டுவரப் போகிறாய்? வெள்ளாட்டைக் காட்டித்தான் புலியைப் பிடிக்க வேண்டும்.
கருத்துகள்