Subbiahpatturajan
#பெண்சுதந்திரம்
காஞ்சிபுரத்திற்கு பக்கத்தில் உள்ள கிராமம் தான் நான் வளர்ந்தது.
என் வீட்டில் எல்லாம் எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது ஆனா அக்கம் பக்கத்து வீடுகளில் பெண்களோட அடிப்படை உரிமைகள் கூட அவங்க பெற்றோர்களாலேயே பறிக்கப்படுவதை நேரில் பார்த்து வெறுத்துப் போய் இருக்கிறேன்.
பொட்ட புள்ளைங்க விளையாடக்கூடாது. பூமி அதிர நடக்கக்கூடாது.வாய்விட்டு சிரிக்க கூடாது . சமையல்கட்டு உள்ளேயே முடங்கி கிடக்க வேண்டும் .
ஆனால் இந்த கட்டுப்பாடு எல்லாம் ஆம்பளை பசங்களுக்கு கிடையாது .அதை விட கொடுமை சாப்பாடு விஷயம் தான். ஆண்பிள்ளை பசங்களுக்கு நிறைய சாப்பாடு போடுவாங்க பொம்பளை பசங்களுக்கு கம்மிதான் சொந்த அம்மா அப்பாவே இதை பண்ணா எப்படி இருக்கும் ஆம்பளையாகட்டும் பொம்பளையாகட்டும் வயிறு ஒன்றுதானே .
அப்பவே எங்க அம்மாகிட்ட ஏம்மா இப்படி பண்றாங்கன்னு சண்டை போட்டு இருக்கேன்.
அதுல எங்க அம்மா நம்ம வீட்டில இப்படி இல்லை மத்தவங்க வீட்ல நடக்கிற தான் நாம எப்படிமா கேட்க முடியும் என்று சொல்லுவாங்க.
நீங்களும் அந்த கொடுமைக்கு ஆளாகி இருக்கீங்களா...?
அந்த சமயத்துல அம்மா அப்பாவை எதிர்த்து ஒன்றும் பண்ண முடியாது ஒரு முட்டை பண்ணா கூட ஆம்பளை பையனுக்கு முழு முட்டை சாப்பாட்டுல வைப்பாங்க ஆனா பொம்பிளைக்கு பாதிதான் அதுகூட ஆம்பளைங்க சாப்பிட்டது போக மிஞ்சினால் தான்.
கேட்டா பெண் பிள்ளைகளுக்கு வயிற்றைச் சுருக்கி
வளர்க்கணும்பாங்க.
இப்போ நான் என் பிள்ளைகளை அந்தமாதிரி பாகுபாடு பார்க்கிறதே இல்லை எனக்கு ரெண்டு பொண்ணு ஒரு பையன் எல்லோருக்கும் சமமாக தான் சாப்பாடு போடுவேன்
இன்னும் சொல்லப்போனா பொட்டபுள்ளைக்கு ஒருகை அதிகமாகவே நாளைக்கு நெறைய வேலை செய்ய உடம்பில் தெம்பு வேணும்ல.
உங்க கல்யாணம் எப்ப நடந்துச்சு அதுல ஏதாவது உங்கள் தனிப்பட்ட விருப்பத்தை கேட்டாங்களா...
கல்யாணம் நடந்து 17 வருஷமா ஆச்சு.
பஸ்ல வர்றப்ப எங்க மாமனார் என் பெரியப்பா கிட்ட உங்க ஊர்ல ஏதாவது பொண்ணு இருக்கான்னு கேட்க அப்படி கேள்விப்பட்டு தான் என்ன பொண்ணு பார்க்க வந்தாங்க.
18 பொண்ணு பாத்துட்டு கடைசியா என்னை அவங்களுக்கு பிடிச்சு போகவே இரண்டாவது தடவை
வரும்போது என் கணவரை கூட்டிட்டு வந்தாரு அப்பதான் அவரைப் பார்த்தேன்.
எனக்கு அவரை சுத்தமா பிடிக்கல என்ன... அவரு எம்ஜிஆர் மாதிரி ஸ்டைலா இல்ல தேமேன்னு ரொம்ப அப்ரானியா இருந்தாரு இத்தனைக்கும் பேண்ட் சட்டை தான் போட்டு இருந்தார்.
ஆனால் என்னமோ அவரை பிடிக்கல.
அவர் போனதும் என் அம்மாகிட்ட அவரை கட்டிக்க இஷ்டம் இல்லன்னு சொல்லிட்டேன்.
ஆனா அவங்க கேட்கவே இல்ல அழுது கூட பார்த்தேன் ஒன்னும் நடக்கல என்ன செய்கிறது அவ்வளவுதான் ஒப்புக்கொண்டேன்.
பாத்தீங்களா ஒரு பெண்ணுக்கு அவை இஷ்டப்பட்ட கணவரை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட தரப்படவில்லை.
பெண்களுக்கும் மனது ஒன்று இருக்கிறதே... இவங்க யாருமே அதை ஒரு பொருட்டாக உணர்வதில்லை.
கருத்துகள்