Subbiahpatturajan
உலக பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா. இவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்...
அவர் ஒரு நேர்காணலில் ....
"உங்களை
வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு ..
ஃபெமி கூறினார்:
"நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் பொருளை புரிந்து கொண்டேன்."
1.முதல் கட்டமாக செல்வத்தை சேர்த்தேன், ஆனால் இதில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை.
2.பின்னர் மதிப்புமிக்க பொருட்களை சேர்க்கும் கட்டம். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் இன்பமும் தற்காலிகமானது என்பதை உணர்ந்தேன். மதிப்புமிக்க பொருட்களின் மீதான ஈர்ப்பு நீண்ட காலம் நீடிக்காது.
3.பின்னர் பெரிய திட்டங்களைப் பெறுவதற்கான மூன்றாம் கட்டம் வந்தது. நைஜீரியா மற்றும் ஆபிரிக்காவில் 95% எரிபொருள் ( டீசல்) விநியோகத்தை நான் வைத்திருந்தேன். ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் நான் மிகப்பெரிய கப்பல் உரிமையாளராக இருந்தேன். ஆனால் இங்கே கூட நான் கற்பனை செய்த மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவே இல்லை.
4. இறுதிக்காலத்தில் தான் என் நண்பன் அவனுக்கு தெரிந்த பள்ளியில் ஊனமுற்ற குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வாங்கி கொடுக்க சொன்னான், கிட்டத்தட்ட200 குழந்தைகள்.
என் நண்பன் கேட்டதற்காக நானும் உடனடியாக சக்கர நாற்காலிகள் வாங்கினேன்.
ஆனால் நண்பனோ நானும் அவனுடன் வந்து சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வற்புறுத்தினான். நானும் மன மாறுதலுக்காக அவனுடன் சென்றேன்.
அங்கே சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு நானே கொடுத்தேன். அப்போதுதான் அந்த குழந்தைகளின் முகங்களில் ஒருவிதமான ஒளிவீச்சைக் கண்டேன். அவர்கள் அனைவரும் சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்து, சுற்றி, நகர்ந்து வேடிக்கை பார்த்தனர்.
அவர்களின் மகழ்ச்சியை என்னால் விவரிக்கவே முடியவில்லை... அது
எனக்குள் ஏதோ சொல்லமுடியாத ஒரு அற்புதத்தை உணர்த்தியது.
எல்லாம் முடிந்து நான் வெளியேற முடிவு செய்த போது அவர்களில் ஒரு பெண் குழந்தை என் கால்களை மிக நேசமாக பிடித்து கொண்டது, நான் சிரித்து கொண்டே என் கால்களை மெதுவாக விடுவிக்க முயன்றேன், ஆனால் குழந்தை என் முகத்தை உற்றுப் பார்த்து கொண்டே விடாமல் இறுக பிடித்து கொண்டது.
நான் குனிந்து குழந்தையிடம் கேட்டேன்: உனக்கு வேறு ஏதாவது வேணுமா?
அந்த குழந்தை எனக்கு அளித்த பதில் மிகுந்த திருப்தியை தந்து வாழ்க்கையைப் பற்றிய எனது அணுகு முறையையும் முற்றிலுமாக மாற்றியது.
அந்த குழந்தை கூறியது இது தான்:
"நான் உங்கள் முகத்தை நினைவில் வைக்க விரும்புகிறேன், உங்களை சொர்க்கத்தில் சந்திக்கும் போது, உங்களுக்காக கடவுளிடம் பேசி நான் உங்களுக்கு பிடித்ததை வாங்கி தருகிறேன் என்று சொல்லி அந்த சக்கர நாற்காலியில் ஏறி மற்ற குழந்தைகளுடன் விளையாட சென்று விட்டது... தெய்வத்தின் அருளை நான் அன்று தான் முழுமையாக உணர்ந்தேன்....
பகிர்வு...
கருத்துகள்