Subbiahpatturajan
நாங்கள் இருவரும் தனியாக இருந்தோம், நான் மிகவும் பயந்தேன். சிறிது நேரம் கழித்து,..
3 வருடங்களுக்கு முன்பு, நான் சென்னைக்கு வந்து அதற்கு முன் ஹைதராபாத்தில் 6 மாதங்கள் வாழ்ந்தேன்.
என்னுடைய ஒரு அனுபவத்தைப் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நள்ளிரவு 1:30 மணியளவில் பலத்த மழையுடன் நள்ளிரவு, எனது விமானம் 12:45 மணியளவில் தரையிறங்கியது. நான் தனியாக இருந்தேன்.
நான் ஒரு வண்டியை முன்பதிவு செய்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிளம்பினேன். இடையில், கார் இன்ஜின் பழுதானதால் நள்ளிரவில் நான் மாட்டிக்கொண்டேன். உடனடியாக ரிப்பேர் செய்ய முடியாததால் விமானத்திற்கு, ஏற்கனவே தாமதமாகிவிட்டதால், வேறு வண்டியை முன்பதிவு செய்யும்படி, டிரைவர் என்னிடம் கூறினார்.
நாங்கள் இருவரும் தனியாக இருந்தோம், நான் மிகவும் பயந்தேன். சிறிது நேரம் கழித்து, அந்த டிரைவர் ஒரு அரசு உள்ளூர் பேருந்து வருவதைக் கண்டார் எப்படி வந்தது என்று எனக்கும் தெரியவில்லை, அவர் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரிடம், “தயவுசெய்து இவங்களை பாதுகாப்பாக இறக்கி விடுங்கள்” என்று தனது உள்ளூர் மொழியில் (தமிழ்) கூறினார்.
அன்றைய தினம் சென்னை தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என உணர்ந்தேன்.
ஒரு நகரத்தின் பண்புகள்தான் அந்நகரவாசிகளை தீர்மானிக்கும். சென்னைக்கு வரும் வட இந்தியர்கள் சென்னையை விட்டுப் போக விரும்புவதில்லை. ஏனென்றால் இந்நகரம் அவர்களை அரவணைக்கிறது. சாமானியப் பெண்கள் அவர்களுடன் இயல்பாகப் பேசுகிறார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்னை என வரும்போது துணை நிற்கிறார்கள். இது மற்ற நகரங்களில் சாத்தியம் இல்லை. அந்நியரை அரவணைக்கும் பண்பும் பாலியல் வன்முறைக்கான சாத்தியங்களைக் குறைக்கிறது. தமிழ் பெண்களுக்கு அந்தப் பண்பு இயல்பிலேயே இருக்கிறது. ஆகவே இந்நகரம் எவரையும் அரவணைக்கிற நகரமாக இருப்பதால் இங்கு குற்றங்கள் குறைந்து காணப் படுகிறது”
கருத்துகள்