முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழை வஞ்சிக்கும் இந்த வெங்காயங்கள் தான் தமிழை வாழ வைப்பார்களாம்....?!

Subbiahpatturajan


பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளும் சில கேள்விகளும்...
1. சென்னை மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்படும். (அப்போ தமிழ்நாடு எத்தனையாக பிரிக்கப்படும் ?)
2. விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடப்படும். வருஷம் 6ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு மானியம். அதாவது மாதத்துக்கு 500 ஓவாய் மானியம்.(விவசாயிகளின் போராட்டங்கள், விவசாயச் சட்டங்கள் பற்றி வாயே திறக்கமாட்டோம்.)
3. மீனவருக்கும் இதே போல வருஷம் 6 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். (மீனவர்கள் கடலில் ஆழமான பகுதிகளில், கார்ப்பரேட்டுகளின் கப்பல்கள் மீன்களை கொத்தாக அள்ளும் மீன் வளம் நிறைந்த இடங்களில் போய் மீன் பிடிக்கக்கூடாது என்று தடைச் சட்டங்கள், மீறினால் பல லட்சம் அபராதம் என்று கடும் விதிகள் போட்டு மீனவர்கள் வாழ்க்கையை அழித்துவிட்டு மாதம் 500 ரூபாய் மானியத்தில் மெதுவாகச் சாகுங்கள் மீனவர்களே என்று சொல்லாமல் சொல்கிறார்கள்).
3.பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து கடேலார மாவட்டங்களிலும் உள்ள  முகத்துவாரங்கள் முறையாக தூர்வாரப்படும். (காட்டுப்பள்ளி துறைமுகம் அருகில் அதானிக்கு இலவசமாக அரசு சார்பில் தூர்வாரிக் கொடுத்தது போல).
4. முன்னேறிய, ஆனால் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். (69% பிற்பட்டோர் சதவீத ஒதுக்கீட்டை 50 ஆக பிடுங்கிச் சுருக்குவதெல்லாம் சைலன்ட்டாகச் செய்யப்படும்).
5. வெளிமாநிலங்களிலிருந்து அதிக அளவில் வந்து குடியேறி வேலை செய்யும் வட இந்திய தொழிலாளர்களுக்கு குடியிருப்பு கட்டித் தரப்படும். ( 1.50 லட்சம் வட இந்தியத் தொழிலாளர்கள் திருப்பூர் பகுதிகளில் மட்டும் குடியேறியுள்ளார்கள். இவர்களுக்கு குடியிருப்பு கட்டிக் கொடுத்து, வாக்காளர்களாக்கி இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்துவது போல பாஜக தமிழ்நாட்டை வட இந்தியாவாக்க முயற்சி செய்யப் போகிறார்கள்.)
6. தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டில் கண்டிப்பாக அமல்படுத்தப்படும். ( அதாவது 3 ஆம் வகுப்பிலிருந்து காலேஜ் வரைக்கும் எல்லாவற்றுக்கும் நுழைவுத் தேர்வு. எதற்கு இத்தனை நுழைவுத் தேர்வுகள் ? மேல்சாதியைத் தவிர கீழ்சாதிக்காரனெல்லாம் அவனவன் அப்பன் தொழிலை செய்யப் போ என்கிற மறைமுக திட்டத்தை அமல்படுத்துவதற்குத் தான். நீட் என்ற தேர்வினால் கழித்துக் கட்டப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 60 பேரை சேர்க்க எத்தனை கோர்ட் படியேறி போராடி சீட் பெற்றோம் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.)
7.ஈரோடு-தாராபுரம்-பழனி அகல ரயில் பாதை முடிக்கப்படும். இன்னும் பல பாதைகளும் போடப்படும். ( எதற்கு ? அம்பானியும், அதானியும் மக்கள் வரிப்பணத்துல போட்ட தண்டவாளத்துலயும், உருவாக்கின ரயில்கள்லயும், கட்டிய ரயில்வே நிலையங்கள்லயும் அவங்க தனியார் ரயில் விட்டு காசு சம்பாதிக்கவா ?)
8. நிலத்தடி நீர்ப்பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படும். ( அதாவது பெரிய பெரிய கார்ப்பரேட்டு நிறுவனங்கள், பெரும் தொழிற்சாலைகள் கணக்கேயில்லாமல் லட்சக்கணக்கான லிட்டர் நீரை உறிஞ்சி லாபம் கொழிக்க, சாதாரண மக்கள் வீட்டில் பம்ப் செட் போடக்கூடாது, கிணற்றில் நீர் அள்ளக் கூடாது என்று சட்டங்கள் போடுவார்கள். கேன்வாட்டரை சைக்கிளில் போட்டு வீடு வீடாய் டெலிவரி செய்யும் சிறு கம்பெனிகளைப் போட்டு வறுப்பார்கள்).
9. புதிய மின் நிலையங்கள் அமைக்கப்படும். (அமைத்த கையோடு சூடாக கார்ப்பரேட்டுகளிடம் விற்கப்படும். அதே கார்ப்பரேட்டுகளிடம் அதிக காசு கொடுத்து மின்சாரம் வாங்கப்படும். அந்தச் செலவுக் கணக்கு மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும். மின்சாரத்துறை நஷ்டத்தில் ஓட்டப்படும்).
10. 50 லட்சம் புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும். ( போன 2020 ல் மட்டும் இருந்த  சொற்ப வேலையை இழந்தவர்கள் 2 கோடிப் பேர். கேட்டால் கொரோனாவால் என்று அளப்பார்கள்).
11. மதம் மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்படும். ( மாசம் நாலு ஊர்களில்  மதக்கலவரத்துக்கு கியாரண்டி).
12.பசுப் பாதுகாப்பு அமல் படுத்தப்படும். ( மாட்டுக்கறியை விரும்பி உண்ணும் முஸ்லீம்களும், தாழ்த்தப்பட்டவர்களும் ஆர்எஸ்எஸ் சங்கிகளிடம் அடிபட்டு சாக ரெடியாகிக் கொள்ளுங்கள்).
13. இந்து அதிகாரிகளே நிர்வகிக்கும் இந்து அறநிலையத்துறையை  கலைக்கப்படும். (  கோயில் சொத்துக்களை அரசிடமிருந்து பிடுங்கி மீண்டும் பார்ப்பனர்களே நிர்வகிக்க வழி செய்யப்படும்.)
14.உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்படும். ( பள்ளி, கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் எல்லாம் தமிழைத் தூக்கிவிட்டு நீதிமன்றத்தில் மட்டும் தமிழை வைப்பார்களாம். நல்ல காதுகுத்து.).
இவற்றை தொகுத்த இந்த டாக்குமெண்ட் தான் பாஜகவின் 'தொலைநோக்குப் பத்ரமாம்' (அதாவது 'தேர்தல் அறிக்கை' என்கிற தூய தமிழ் வார்த்தையை சமஸ்கிருதம் கலந்த தமிழில் பத்ரம்ன்னு சொல்றாங்களாம்). 
ஒரு தேர்தல் அறிக்கை என்கிற பெயரில் கூட தமிழை வஞ்சிக்கும் இந்த வெங்காயங்கள் தான் தமிழை வாழ வைப்பார்களாம். இதை விடக் காமெடி என்னவென்றால் , தமிழக பாஜக தேர்தல் வேட்பாளர்கள் யார் யார் என்று அறிவித்து மத்திய பாஜகவிடமிருந்து வெளியிடப்பட்ட அறிக்கை லிஸ்ட் கூட இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருந்தது. அதில் கூடத் தமிழ் இல்லை.
இந்த லட்சணத்தில் தமிழகத்தில் தாமரை  மலரனுமாம்.  

மக்களே, தேர்தலில் இவர்களுக்கு நீங்கள் தக்க பதிலைச் சொல்லுங்கள். ஓட்டு எந்திரத்தில் அவர்கள் செய்யப்போகும் தில்லுமுல்லுகளையும் தாண்டி அவர்களை மரண அடி கொடுத்து வீழ்த்துங்கள். 

வெல்க  தமிழ்.

Fwded Msg.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...