Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
பெண் கைதிகளின் சிறைவாசத்தின் போது ஏற்படும் பிரச்னைகள்!
இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்திய சிறைகள் தொடர்பான புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் உள்ள 1,316 சிறைகளில் 32 சிறைகள் 'பெண்கள் சிறைகள்' ஆகும். அவற்றில் ஐந்து சிறைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது.
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் சுதந்திரப்
போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டதற்காக பெண்கள் பலர் கைது செய்யப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைவாசத்தின் பொழுது உயிரிழந்த பெண்களும் உண்டு. சிறையில் உயிரிழந்த பெண்மணிகளில் கஸ்தூர்பாய் காந்தியும் ஒருவர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் சிறையில் அடைத்துவைக் கும் பழக்கம் உலக நாடுகளில் நடைமுறை யில் இருந்து வருகிறது. காலப்போக்கில் ஆண்களை மட்டுமின்றி, பெண்களையும் சிறையில் அடைத்து வைக்கப்படும் நடை முறை தொடங்கியது.
ஆண் சிறைவாசிகளும், பெண் சிறைவாசிகளும் ஒரே சிறைச் சாலையில் தனித்தனியாக தங்க வைக்கப் பட்டனர்.
தொழிற்புரட்சியின் விளைவாக, ஆண் களும், பெண்களும் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காககுடும்பத்துடன் அவ ரவர் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி குடிபெயர்ந்தனர். அதன் விளை வாக, நகரங்களில் திருட்டு, கொள்ளை, கல வரம் போன்ற குற்றங்கள் அதிகரித்தன. வறுமையின் காரணமாக குற்றச் செயல்க ளில் ஈடுபட்ட பெண்களின் எண்ணிக்கை யும் கணிசமாக உயர்ந்தது.
சிறை நிர்வாகத்தையும், சிறைவாசிகளின் பாதுகாப்பையும் கவனித்துவந்த ஆண் சிறை அலுவலர்கள், ஆண் சிறைவாசிகள் ஆகியோரின் பாலியல் துன்புறுத்தல்களை சகித்துக் கொண்டும், பெண்களுக்குத் தேவைப்படும் தனியுரிமை (பிரைவசி) எது வுமின்றியும் பெண் சிறைவாசிகள் சிறை யில் இருந்து வந்தனர்.
இந்த சூழலில் 18-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் பெண் களுக்கென்று தனியாக சிறைகள் ஏற்படுத்தப்பட்டன. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவிலும்,அதைத் தொடர்ந்து பிரிட்டனிலும் 'பெண்கள் சிறைகள்' உருவாக்கப்பட்டன.
ஆங்கிலேயர்களின் நிர்வாகக்
கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவிலும் சிறை சீர் திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய 1919- ஆம் ஆண்டில் சர் அலெக்ஸாண்டர் கார் டியூ தலைமையில் குழு ஒன்று அமைக் கப்பட்டது. சிறைவாசிகளுக்கு பிரம்படி, உடல்வதை செய்யும் தண்டனை கொடுக்ககூடாது போன்றவை இக்குழுவின்
பரிந்துரைகளில் முக்கியமானவை.
இந்தியா விடுதலையடைந்த பின்னர் சிறை சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய நீதியரசர் ஏ.என். முல்லா
தலைமையில் 1980-ஆம் ஆண்டில் 'அகில இந்திய சிறை சீர்திருத்தக் குழு' அமைக்கப்பட்டது. சிறையில் இருந்து விடுவிக்கப்படுவர்களின் மறுவாழ்வு குறித்துத் திட்டமிடுதல், சிறைவாசிகளுக்கு மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தல், பெண் சிறைவாசிகளின் பிரச்னைகளை அறிந்து செயல்படுதல், பொதுமக்களையும் செய்தியாளர் களையும் சிறை வளாகத்தினுள் சென்றுபார்வையிட்டு, சிறையின் நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்ள அனுமதித்தல் போன்றவை அக்குழுவின் பரிந்துரைகளில் முக்கியமானவை.
மேலைநாடுகளைப் போன்று இந்தியாவிலும் பெண்களுக்
தனியாக 'பெண்கள்கென்று தனிசிறைகள்’ ஏற்படுத்துதல், பெண் சிறைவாசிகளைச் சோதனையிட பெண் காவலர்களைப் பயன்படுத்துதல், பெண் சிறைவாசிகளுக்கு பெண் மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சையளித்தல், பெண் சிறைவாசிகளுடன் அவர்களின் குழந்தைகள் தங்க அனுமதித்தல் போன்ற பெண் சிறைவாசிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விரிவான அறிக்கையை 1987-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட நீதியரசர் கிருஷ்ணய்யர் தலைமையிலான குழு மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
அதைத் தொடர்ந்து, பெண்களுக் கென்று பிரத்யேகமாக 'பெண்கள் சிறைகள்' நம் நாட்டில் அமைக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பு இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்திய சிறைகள் தொடர்பான புள்ளிவிவரங்க ளின்படி, இந்தியாவில் உள்ள 1,316 சிறை
களில் 32 சிறைகள் 'பெண்கள் சிறைகள்’ ஆகும். அவற்றில் ஐந்து சிறைகள் தமிழ் நாட்டில் அமைந்துள்ளன.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் | சிறைகளின் எண்ணிக்கை | திறன் |
ராஜஸ்தான் | 7 | 998 |
தமிழ்நாடு | 5 | 2018 |
கேரளா | 3 | 232 |
ஆந்திரப் பிரதேசம் | 2 | 280 |
பீகார் | 2 | 202 |
குஜராத் | 2 | 410 |
உத்தரப்பிரதேசம் | 2 | 540 |
டெல்லி | 2 | 680 |
கர்நாடகா | 1 | 100 |
மகாராஷ்டிரா | 1 | 262 |
ஒடிசா | 1 | 55 |
மிசோரம் | 1 | 96 |
பஞ்சாப் | 1 | 320 |
தெலுங்கானா | 1 | 260 |
மேற்கு வங்காளம் | 1 |
பெண் சிறைவாசிகளின் குழந்தைகளை சிறை வளாகத்தில் தங்க வைத்து, பராமரிப் பது தொடர்பாக 2006-ஆம் ஆண்டில் உச் சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
பெண் சிறைவாசிகள், தங்களின் குழந்தைகளுக்கு ஆறு வயது நிறைவடையும் வரை அவர்களைத் தங்களுடன் சிறை வளாகத்தினுள் தங்கவைத்துப் பராமரிக்க லாம் என்றும், குழந்தைகளுக்குத் தேவை யான உணவு, உடை, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளையும், மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு குழந்தை கள் காப்பகமும், ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு மழலையர் பள்ளியும் மாநில அரசு அமைத்துக் கொடுக்க வேண் டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தி யுள்ளது.
நம்நாடு சுதந்திரம் அடைந்த போது,
8 % -க்கும் குறைவான பெண்கள்தான் கல்வி கற்றவர்களாக இருந்தனர். 2021-ஆம் ஆண் டின் கணக்கெடுப்பின்படி, 70 % பெண் கள் நம் நாட்டில் கல்வி கற்றவர்களாக உள்
ளனர். ஆண்டுதோறும் கல்வி கற்கும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வருகிறது. சுதந்திர இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் பெண்களிடையே கணிசமாக
அதிகரித்துள்ள படிப்பறிவால், குற்றச் செயல்களில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருக்க
வேண்டும். ஆனால், கள நிலவரம் அப்படியில்லாமல், அதிர்ச்சியூட்டும் தகவலை வெளிப்படுத்துகிறது.
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்பு சட்டங்களின் கீழ் நம் நாட்டில் 2020-ஆம் ஆண்டில் 63,465 பெண்களும், 2021-ஆம் ஆண்டில் 83,645 பெண்களும் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக் கப்பட்டனர்.
ஓராண்டு காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண்க ளின் எண்ணிக்கை 32% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் நம் நாட்டில்
குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் குற்றச் செயல்களில் ஈடு
பட்டதற்காக 2018-ஆம் ஆண்டில் 4,158 பெண்களும், 2021-ஆம் ஆண்டில் 5,861 பெண்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மூன்று ஆண்டுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட் டதற்காக கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டபெண்களின்
எண்ணிக்கை 41% அதிகரித்துள்ளது.
'இந்திய சிறை புள்ளிவிவரங்கள்-2021- இன் படி 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியன்று இந்தியாவிலுள்ள அனைத்து பெண்கள் சிறைகளிலும் 3,808 பெண் சிறைவாசிகள் தங்கியிருந்தனர். அவர்களில் 573 பேர், தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் சிறைகளில் தங்கியிருந்தனர்.
2021-ஆம் ஆண்டின் இறுதி நாளன்று அதிகமான பெண் சிறைவாசிகள் 'பெண் கள் சிறை’களில் தங்கியிருந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2021-ஆம் ஆண்டின் இறுதி நாளன்று நம் நாட்டிலுள்ள அனைத்து பெண்கள் சிறைகளில் தண்டனை சிறைவாசிகளாகவும், விசாரணை சிறைவாசிகளாகவும் தங்கியிருந்த பெண் சிறைவாசிகளில் 1,650 பேர், அவர்களின் 1,867 குழந்தைகளுடன் தங்கியிருந்தனர். நம் நாட்டில் ஆண்டு தோறும் ஆறு வயதுக்கும் குறைவான ஆயிரக்கணக்கான குழந்தைகள் அவர்களின் குழந்தைப் பருவத்தை சிறைகளில் கழித்து வருகின்றனர். இத்தகைய சூழல் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வழிவகுக்காது.
குடும்ப பொருளாதார சூழல் காரணமாக திருட்டு, சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல், சாலையோர பாலியல் குற்றம் போன்ற செயல்களில் கடந்த காலத்தில் நம் நாட்டில் ஈடுபட்டுவந்த பெண் சமூகத்தினர்,அக்குற்றச் செயல்களில் இருந்து பெருமளவில் மீண்டுவிட்டனர்.
பெண் கல்வி முக்கியத்துவம்
பெற்றுவருகின்ற இன்றைய சூழலில், வர்த்தகம், திதி நிறுவனம், தொழில்துறை போன்றவற்றில் பெண்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். அவர்களில், நிதி மோசடிகளில் ஈடுபட்டு, குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் பெண் களின் எண்ணிக்கை அதிகரித்து வருவ தைக் காணமுடிகிறது.
கையூட்டு பெற்ற குற்றத்திற்காக கைது செய்யப்படும் பெண் அரசு அதிகாரிகளின் எண்ணிக்கையும் நம் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதைப்பொருள், தங்கம் கடத்தல், குழந்தை கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் பெண்கள் ஈடுபட்டு, சிறை செல்லும் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்கின்றன.
நம் நாட்டில் தொடர்ந்து நிகழும்
வரதட்சணை மரணங்கள் தொடர்பான குற்ற வழக்குகளில் ஆண்டுதோறும் சுமார் மூவாயிரம் பெண்களும், கொவை குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஆண்டுதோறும் சுமார் நான்காயிரம் பெண்களும் கைது செய்யப் பட்டு, சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.
குற்றச் செயலில் நேரடியாக
ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் பெண்கள் மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்கள் செய்த குற்றச் செயலுக்குத் துணைபோன காரணத்திற்காக கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் பெண்களும் உண்டு.
ஒரு குற்றச் செயலை ஆண், பெண் இரு
பாலரில் யார் செய்தாலும், சட்டப்படி
தண்டனையின் அளவு இருபாலாருக்கும்
சமமாக உள்ளது.
ஆனால், ஒரு பெண்ணுக்கு வழங்க படும் சிறை தண்டனை அவரை மட்டும் பாதிப்பதில்லை. அத்தண்டனையின் தாக் கம் அவரது குழந்தைகளையும், அவரது பராமரிப்பில் உள்ள மூத்த குடும்ப உறுப் பினர்களையும் பெருமளவில் பாதிப்படை யச் செய்கிறது.நாட்டில் உள்ள பெண் கைதிகளின் உண்மையான எண்ணிக்கையை விட 3.39 மடங்கு குறைவாக உள்ளது , இது 22,918 பெண்கள், கைதிகள், 6,767 சிறைகளில் அடைக்கக்கூடிய சிறைகளின் திறனுடன் ஒப்பிடும்போது.
மொத்தம் 22,918 பெண் கைதிகளில் 3,808 (5 திருநங்கைகள் உட்பட) மட்டுமே தற்போது பல்வேறு பெண்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்,
நாட்டில் திருநங்கைகளுக்கு தனி சிறை இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. 2021 என்சிஆர்பி தரவுகளின்படி, திருநங்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மொத்தம் 91 கைதிகள் சிறையில் உள்ளனர்.
இந்த திருநங்கைகள் பெண்கள் சிறைகள் உட்பட பல்வேறு மாநிலங்களின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 91 கைதிகளில் 54 பேர் மத்திய சிறைகளிலும், 20 பேர் மாவட்ட சிறைகளிலும், தலா 5 பேர் துணை சிறைகளிலும், பெண்கள் சிறைகளிலும், 7 பேர் நாடு முழுவதும் உள்ள சிறப்பு சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
பெண் கைதிகள்: போதிய இடமில்லாத இடத்திலோ அல்லது தனி இடம் இல்லாமலோ பெண் கைதிகள் விஷயத்தில் சற்றும் கவலைப்படாத மாநிலமாக உத்தரகாண்ட் தோன்றுகிறது. முரண்பாடாக, அதிக பெண்கள் தங்கும் விகிதம் (178.8%) உள்ள மாநிலத்தில் பெண்கள் சிறை இல்லை.
கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னேறிவரும் பெண் சமூகத்தை குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டும் வாய்ப் புகளும், சந்தர்ப்பங்களும் இன்றைய சமு தாயத்தில் அதிகரித்து வருகின்றன. இத்த கைய சூழல் சமுதாய வளர்ச்சியில் ஏற்படுத் தும் பின்னடைவு குறித்து விழிப்புடன் பரி சீலனை செய்ய வேண்டிய தருணம் இது.
✍🏻கட்டுரையாளர்:
காவல்துறை உயர் அதிகாரி (ஓய்வு)🚨
கருத்துகள்