இந்தியாவில் எத்தனை பெண்களுக்கான சிறைச்சாலை வளாகம் உள்ளது அவற்றில் எத்தனை தமிழ்நாட்டில் உள்ளது

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

இந்தியாவில் எத்தனை பெண்களுக்கான சிறைச்சாலை வளாகம் உள்ளது அவற்றில் எத்தனை தமிழ்நாட்டில் உள்ளது

Subbiahpatturajan

 பெண் கைதிகளின் சிறைவாசத்தின் போது ஏற்படும் பிரச்னைகள்!  

இந்தியாவில் எத்தனை பெண்களுக்கான சிறைச்சாலை வளாகம் உள்ளது அவற்றில் எத்தனை தமிழ்நாட்டில் உள்ளது

 இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்திய சிறைகள் தொடர்பான புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் உள்ள 1,316 சிறைகளில் 32 சிறைகள் 'பெண்கள் சிறைகள்' ஆகும். அவற்றில் ஐந்து சிறைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது.
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் சுதந்திரப்
போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டதற்காக பெண்கள் பலர் கைது செய்யப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைவாசத்தின் பொழுது உயிரிழந்த பெண்களும் உண்டு. சிறையில் உயிரிழந்த பெண்மணிகளில் கஸ்தூர்பாய் காந்தியும் ஒருவர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் சிறையில் அடைத்துவைக் கும் பழக்கம் உலக நாடுகளில் நடைமுறை யில் இருந்து வருகிறது. காலப்போக்கில் ஆண்களை மட்டுமின்றி, பெண்களையும் சிறையில் அடைத்து வைக்கப்படும் நடை முறை தொடங்கியது. 
ஆண் சிறைவாசிகளும், பெண் சிறைவாசிகளும் ஒரே சிறைச் சாலையில் தனித்தனியாக தங்க வைக்கப் பட்டனர்.
இந்தியாவில் எத்தனை பெண்களுக்கான சிறைச்சாலை வளாகம் உள்ளது அவற்றில் எத்தனை தமிழ்நாட்டில் உள்ளது
தொழிற்புரட்சியின் விளைவாக, ஆண் களும், பெண்களும் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காககுடும்பத்துடன் அவ ரவர் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி குடிபெயர்ந்தனர். அதன் விளை வாக, நகரங்களில் திருட்டு, கொள்ளை, கல வரம் போன்ற குற்றங்கள் அதிகரித்தன. வறுமையின் காரணமாக குற்றச் செயல்க ளில் ஈடுபட்ட பெண்களின் எண்ணிக்கை யும் கணிசமாக உயர்ந்தது.
சிறை நிர்வாகத்தையும், சிறைவாசிகளின் பாதுகாப்பையும் கவனித்துவந்த ஆண் சிறை அலுவலர்கள், ஆண் சிறைவாசிகள் ஆகியோரின் பாலியல் துன்புறுத்தல்களை சகித்துக் கொண்டும், பெண்களுக்குத் தேவைப்படும் தனியுரிமை (பிரைவசி) எது வுமின்றியும் பெண் சிறைவாசிகள் சிறை யில் இருந்து வந்தனர்.
இந்த சூழலில் 18-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் பெண் களுக்கென்று தனியாக சிறைகள் ஏற்படுத்தப்பட்டன. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவிலும்,அதைத் தொடர்ந்து பிரிட்டனிலும் 'பெண்கள் சிறைகள்' உருவாக்கப்பட்டன.
ஆங்கிலேயர்களின் நிர்வாகக் 
கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவிலும் சிறை சீர் திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய 1919- ஆம் ஆண்டில் சர் அலெக்ஸாண்டர் கார் டியூ தலைமையில் குழு ஒன்று அமைக் கப்பட்டது. சிறைவாசிகளுக்கு பிரம்படி, உடல்வதை செய்யும் தண்டனை கொடுக்ககூடாது போன்றவை இக்குழுவின் 
பரிந்துரைகளில் முக்கியமானவை.
இந்தியா விடுதலையடைந்த பின்னர் சிறை சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய நீதியரசர் ஏ.என். முல்லா 
தலைமையில் 1980-ஆம் ஆண்டில் 'அகில இந்திய சிறை சீர்திருத்தக் குழு' அமைக்கப்பட்டது. சிறையில் இருந்து விடுவிக்கப்படுவர்களின் மறுவாழ்வு குறித்துத் திட்டமிடுதல், சிறைவாசிகளுக்கு மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தல், பெண் சிறைவாசிகளின் பிரச்னைகளை அறிந்து செயல்படுதல், பொதுமக்களையும் செய்தியாளர் களையும் சிறை வளாகத்தினுள் சென்றுபார்வையிட்டு, சிறையின் நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்ள அனுமதித்தல் போன்றவை அக்குழுவின் பரிந்துரைகளில் முக்கியமானவை.
மேலைநாடுகளைப் போன்று இந்தியாவிலும் பெண்களுக்
தனியாக 'பெண்கள்கென்று தனிசிறைகள்’ ஏற்படுத்துதல், பெண் சிறைவாசிகளைச் சோதனையிட பெண் காவலர்களைப் பயன்படுத்துதல், பெண் சிறைவாசிகளுக்கு பெண் மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சையளித்தல், பெண் சிறைவாசிகளுடன் அவர்களின் குழந்தைகள் தங்க அனுமதித்தல் போன்ற பெண் சிறைவாசிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விரிவான அறிக்கையை 1987-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட நீதியரசர் கிருஷ்ணய்யர் தலைமையிலான குழு மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
அதைத் தொடர்ந்து, பெண்களுக் கென்று பிரத்யேகமாக 'பெண்கள் சிறைகள்' நம் நாட்டில் அமைக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பு இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்திய சிறைகள் தொடர்பான புள்ளிவிவரங்க ளின்படி, இந்தியாவில் உள்ள 1,316 சிறை
 களில் 32 சிறைகள் 'பெண்கள் சிறைகள்’ ஆகும். அவற்றில் ஐந்து சிறைகள் தமிழ் நாட்டில் அமைந்துள்ளன.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்சிறைகளின் எண்ணிக்கைதிறன்
ராஜஸ்தான்7998
தமிழ்நாடு52018
கேரளா3232
ஆந்திரப் பிரதேசம்2280
பீகார்2202
குஜராத்2410
உத்தரப்பிரதேசம்2540
டெல்லி2680
கர்நாடகா1100
மகாராஷ்டிரா1262
ஒடிசா155
மிசோரம்196
பஞ்சாப்1320
தெலுங்கானா1260
மேற்கு வங்காளம்1
பெண் சிறைவாசிகளின் குழந்தைகளை சிறை வளாகத்தில் தங்க வைத்து, பராமரிப் பது தொடர்பாக 2006-ஆம் ஆண்டில் உச் சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
பெண் சிறைவாசிகள், தங்களின் குழந்தைகளுக்கு ஆறு வயது நிறைவடையும் வரை அவர்களைத் தங்களுடன் சிறை வளாகத்தினுள் தங்கவைத்துப் பராமரிக்க லாம் என்றும், குழந்தைகளுக்குத் தேவை யான உணவு, உடை, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளையும், மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு குழந்தை கள் காப்பகமும், ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு மழலையர் பள்ளியும் மாநில அரசு அமைத்துக் கொடுக்க வேண் டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தி யுள்ளது.
நம்நாடு சுதந்திரம் அடைந்த போது, 
8 % -க்கும் குறைவான பெண்கள்தான் கல்வி கற்றவர்களாக இருந்தனர். 2021-ஆம் ஆண் டின் கணக்கெடுப்பின்படி, 70 % பெண் கள் நம் நாட்டில் கல்வி கற்றவர்களாக உள்
 ளனர். ஆண்டுதோறும் கல்வி கற்கும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வருகிறது. சுதந்திர இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் பெண்களிடையே கணிசமாக 
அதிகரித்துள்ள படிப்பறிவால், குற்றச் செயல்களில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருக்க 
வேண்டும். ஆனால், கள நிலவரம் அப்படியில்லாமல், அதிர்ச்சியூட்டும் தகவலை வெளிப்படுத்துகிறது.

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்பு சட்டங்களின் கீழ் நம் நாட்டில் 2020-ஆம் ஆண்டில் 63,465 பெண்களும், 2021-ஆம் ஆண்டில் 83,645 பெண்களும் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக் கப்பட்டனர்.

ஓராண்டு காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண்க ளின் எண்ணிக்கை 32% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் நம் நாட்டில் 
குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் குற்றச் செயல்களில் ஈடு
 பட்டதற்காக 2018-ஆம் ஆண்டில் 4,158 பெண்களும், 2021-ஆம் ஆண்டில் 5,861 பெண்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மூன்று ஆண்டுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட் டதற்காக கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டபெண்களின் 
எண்ணிக்கை 41% அதிகரித்துள்ளது.
'இந்திய சிறை புள்ளிவிவரங்கள்-2021- இன் படி 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியன்று இந்தியாவிலுள்ள அனைத்து பெண்கள் சிறைகளிலும் 3,808 பெண் சிறைவாசிகள் தங்கியிருந்தனர். அவர்களில் 573 பேர், தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் சிறைகளில் தங்கியிருந்தனர்.
2021-ஆம் ஆண்டின் இறுதி நாளன்று அதிகமான பெண் சிறைவாசிகள் 'பெண் கள் சிறை’களில் தங்கியிருந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2021-ஆம் ஆண்டின் இறுதி நாளன்று நம் நாட்டிலுள்ள அனைத்து பெண்கள் சிறைகளில் தண்டனை சிறைவாசிகளாகவும், விசாரணை சிறைவாசிகளாகவும் தங்கியிருந்த பெண் சிறைவாசிகளில் 1,650 பேர், அவர்களின் 1,867 குழந்தைகளுடன் தங்கியிருந்தனர். நம் நாட்டில் ஆண்டு தோறும் ஆறு வயதுக்கும் குறைவான ஆயிரக்கணக்கான குழந்தைகள் அவர்களின் குழந்தைப் பருவத்தை சிறைகளில் கழித்து வருகின்றனர். இத்தகைய சூழல் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வழிவகுக்காது.
குடும்ப பொருளாதார சூழல் காரணமாக திருட்டு, சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல், சாலையோர பாலியல் குற்றம் போன்ற செயல்களில் கடந்த காலத்தில் நம் நாட்டில் ஈடுபட்டுவந்த பெண் சமூகத்தினர்,அக்குற்றச் செயல்களில் இருந்து பெருமளவில் மீண்டுவிட்டனர்.
பெண் கல்வி முக்கியத்துவம் 
பெற்றுவருகின்ற இன்றைய சூழலில், வர்த்தகம், திதி நிறுவனம், தொழில்துறை போன்றவற்றில் பெண்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். அவர்களில், நிதி மோசடிகளில் ஈடுபட்டு, குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் பெண் களின் எண்ணிக்கை அதிகரித்து வருவ தைக் காணமுடிகிறது.
கையூட்டு பெற்ற குற்றத்திற்காக கைது செய்யப்படும் பெண் அரசு அதிகாரிகளின் எண்ணிக்கையும் நம் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதைப்பொருள், தங்கம் கடத்தல், குழந்தை கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் பெண்கள் ஈடுபட்டு, சிறை செல்லும் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்கின்றன.
நம் நாட்டில் தொடர்ந்து நிகழும் 
வரதட்சணை மரணங்கள் தொடர்பான குற்ற வழக்குகளில் ஆண்டுதோறும் சுமார் மூவாயிரம் பெண்களும், கொவை குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஆண்டுதோறும் சுமார் நான்காயிரம் பெண்களும் கைது செய்யப் பட்டு, சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.
குற்றச் செயலில் நேரடியாக
 ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் பெண்கள் மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்கள் செய்த குற்றச் செயலுக்குத் துணைபோன காரணத்திற்காக கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் பெண்களும் உண்டு. 
ஒரு குற்றச் செயலை ஆண், பெண் இரு
பாலரில் யார் செய்தாலும், சட்டப்படி
தண்டனையின் அளவு இருபாலாருக்கும்
சமமாக உள்ளது.
ஆனால், ஒரு பெண்ணுக்கு வழங்க படும் சிறை தண்டனை அவரை மட்டும் பாதிப்பதில்லை. அத்தண்டனையின் தாக் கம் அவரது குழந்தைகளையும், அவரது பராமரிப்பில் உள்ள மூத்த குடும்ப உறுப் பினர்களையும் பெருமளவில் பாதிப்படை யச் செய்கிறது.நாட்டில் உள்ள பெண் கைதிகளின் உண்மையான எண்ணிக்கையை விட 3.39 மடங்கு குறைவாக உள்ளது , இது 22,918 பெண்கள், கைதிகள், 6,767 சிறைகளில் அடைக்கக்கூடிய சிறைகளின் திறனுடன் ஒப்பிடும்போது.
மொத்தம் 22,918 பெண் கைதிகளில் 3,808 (5 திருநங்கைகள் உட்பட) மட்டுமே தற்போது பல்வேறு பெண்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர், 
நாட்டில் திருநங்கைகளுக்கு தனி சிறை இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. 2021 என்சிஆர்பி தரவுகளின்படி, திருநங்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மொத்தம் 91 கைதிகள் சிறையில் உள்ளனர்.
இந்த திருநங்கைகள் பெண்கள் சிறைகள் உட்பட பல்வேறு மாநிலங்களின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 91 கைதிகளில் 54 பேர் மத்திய சிறைகளிலும், 20 பேர் மாவட்ட சிறைகளிலும், தலா 5 பேர் துணை சிறைகளிலும், பெண்கள் சிறைகளிலும், 7 பேர் நாடு முழுவதும் உள்ள சிறப்பு சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

பெண் கைதிகள்: போதிய இடமில்லாத இடத்திலோ அல்லது தனி இடம் இல்லாமலோ பெண் கைதிகள் விஷயத்தில் சற்றும் கவலைப்படாத மாநிலமாக உத்தரகாண்ட் தோன்றுகிறது. முரண்பாடாக, அதிக பெண்கள் தங்கும் விகிதம் (178.8%) உள்ள மாநிலத்தில் பெண்கள் சிறை இல்லை.

இந்தியாவில் எத்தனை பெண்களுக்கான சிறைச்சாலை வளாகம் உள்ளது அவற்றில் எத்தனை தமிழ்நாட்டில் உள்ளது
கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னேறிவரும் பெண் சமூகத்தை குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டும் வாய்ப் புகளும், சந்தர்ப்பங்களும் இன்றைய சமு தாயத்தில் அதிகரித்து வருகின்றன. இத்த கைய சூழல் சமுதாய வளர்ச்சியில் ஏற்படுத் தும் பின்னடைவு குறித்து விழிப்புடன் பரி சீலனை செய்ய வேண்டிய தருணம் இது.                                      
✍🏻கட்டுரையாளர்:
காவல்துறை உயர் அதிகாரி (ஓய்வு)🚨

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
ம் சூப்பர் தகவல்கள் வாழ்த்துக்கள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

Subbiahpatturajan தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕 பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர். மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது அரசு . அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. ஆனால் இலங்கை அரசு இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை. 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கடத்திச் சென்றனர். புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்...

16 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளை வேலைக்கு சென்றால்....?

Subbiahpatturajan ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை…… ஆஸ்பத்திரி போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை !!! சில நேரங்களில் குள்ள நரி புத்தி கொஞ்சமாவது வேண்டும், குழி பறிக்க அல்ல, குழியில் விழாமல் இருக்க !!! உழைக்கும் வயதில் உறங்க நினைத்தால், உறங்கும் வயதில் உழைக்க வேண்டியிருக்கும்………. உயரப் போகும்போது உதவும் உறவை விட, விழும்போது தாங்கும் உறவே சிறந்தது!!! மனிதனுக்கு பிரச்சினை இல்லை என்றால், கடவுளுக்கு அர்ச்சனை இல்லை !!! மனிதன் ஸ்மார்ட் போன் வாங்கும் அளவுக்கு பணக்காரனாகவும், கீரை வியாபாரியிடம் பேரம் பேசும் அளவுக்கு ஏழையாகவும் இருக்கிறார்கள்……. பொறுமை ஒரு பொழுதும் தோற்றதில்லை, பொறாமை ஒரு போதும் ஜெயிப்பதில்லை………. பென்சிலுக்கு பின்னால் இருக்கும் ரப்பர் மாதிரி பல பிரச்சினைகளுக்கும், தீர்வு அதிலேயே இருக்கும்போது அதை விட்டு, நாம் எல்லா இடத்திலேயும் தேடிக்கொண்டிருக்கிறோம்…. விக்கலுக்கு பயந்தால் வயிறு நிறையாது, சிக்கலுக்கு பயந்தால், வாழ்க்கை நிறையாது !!! முதியோர் இல்லத்திற்கு பணம்கொடு, பொருள் கொடு, உடை கொடு, உணவு கொடு, உன் பெற்றோரை மட்டும் கொடுக்காதே !!! உள்ளம் கண்டு பழகு, உருவம் கண்டு பழகாதே!!!...

புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை

Subbiahpatturajan புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை இந்திய அரசு  கணக்கின்படி இந்தியாவில் பேசப்படுகின்ற மொழிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 19,500 மொழிகள். இவற்றில் 121 மொழிகள் 10,000 பேருக்கும் மேல் பேசப்படுகின்றன. மொத்த மக்கள் தொகையில் 96.71 % மக்கள் 18 வது அட்டவணையில் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளை பேசுகிறார்களாம். அந்த 22 மொழிகள் என்னென்ன? அஸ்ஸாம், வங்காளி, போமோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மெய்ட்டி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாமி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது. இதில் மேலும் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்துள்ள மொழிகள் அங்கிகா, பஞ்சாரா, பஜ்ஜிகா, பிஷ்ணுப்ரியா, போஜ்பூரி, லடாக்கி, போடியா, புந்தல்கண்டி, சத்தீஸ்கரி-கோசலி, தாட்கி, இந்திய இங்கிலீஷ், இந்திய பிரெஞ்சு, கார்வாலி (பகாரி), காரோ, கோண்டி, குஜ்ஜார்-குஜ்ஜாரி, ஹர்யான்வி, ஹோ, கச்சாசி, கம்டாபுரி, கர்பி, காஷி, கோடவா(கூர்கி), கோக்போரோக், குமாவ்னி(பகாரி), குருக், குர்மாலி, லெப்சா, லிம்பு, மகாஹி, மிசோ(லுசாய்), முன்டாரி, நாக்புரி, நிகோபாரிஸ், ஹ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* கோரானா கேள்வி பதில்கள்

Subbiahpatturajan *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* 1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?*  இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.  2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?*  இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந...

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்...

*TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா?

சுப்பியபட்டுராஜன் * டி.என்.பி.எஸ்.சி- ஒரு வேளை? ? 7, 8, ஒரு? * டி.என்.பி.எஸ்.சி- தமனிமகாத்துக்கு ஒரு வேளைக்கும், உங்களுக்கும் விருப்பம் இல்லை, இல்லையா? ஒரு வேளை? TNPSC இல் எத்தனை குழுக்கள்? * << - - - 1 (குழு -1)  (துணை கலெக்டர்)  ஒரு முறை (காவல்துறை துணை கண்காணிப்பாளர்)  (மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை)  (ஸல்)  (மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி)  ஒரு முறை (தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் அலுவலர்)  (ஸல் கமிஷனர்)  (கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்) - - 1A (குழு -1 I)  (காடுகளின் உதவி கன்சர்வேட்டர்) - - 1 பி (குழு -1 ஐ பி)  HR & CE (உதவி ஆணையர், HR & CE) - - 1 சி (குழு -1 சி) டிஓஓ (மாவட்ட கல்வி அலுவலர்) ஒரு வேளை  [2] (2) (ஒரு வேளை) (குழு -2)  ஜி துணை வணிக வரி அதிகாரி  ஒரு வேளை  ஒரு வேளை (ஒரு வேளை)  ஒரு வேளை (ஒரு வேளை)  ஒரு வேளை, -2  தொழிலாளர் உதவி ஆய்வாளர்  ஒரு வேளை (ஒவ்வொரு வகையிலும்)  (ஸல்)  (ஸல்)  தமது  ஒரு வேளை  ஒரு வேளை, தமதுமது  ஒரு வேளை  ஒரு வே...

"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க"

Subbiahpatturajan *Self Discipline* 1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். 2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும். 3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம். 4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம். "இன்னும் கல்யாணம் ஆகலயா?" "குழந்தைகள் இல்லையா?" "இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?" "ஏன் இன்னும் Car வாங்கவில்லை?" இது நமது பிரச்சினை இல்லைதானே!" 5. தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களா...

பாரதி கண்ட புதுமைப் பெண் ஆண்ட்ராய்டு போனுக்கு மயங்கிக் கிடக்கிறாள்..?!

Subbiahpatturajan பெண் ஏன் அடிமையானால்???                                              அவளின் அவசர பேராசை குறுக்கு புத்தி விளையாட்டாக செய்யும் அயோக்கியத்தனம் ---  தனது அழகை தானே ரசித்து ரசித்து ஒரு கட்டத்தில் அதற்க்கு மயங்கி அடிமையாகி அதை வைத்து பிற ஆடவரை மயக்கி அந்த மயக்கத்தில்  மயக்கத்தால் பல பிரச்சனைகளை உருவாக்கி  -------  படிக்க சென்ற இடத்தில் வேலைக்கு போன இடத்தில்  என எங்கு பாா்த்தாலும் --- பெண்ணால் தான் பிரச்சனை  தவறு என்று தெரிந்தும் ஆசையை அடக்க முடியாமல் மனதை அலை பாய விட்டு இச்சைக்கு அடிமையானால்  நகை பணம் வீடு காா் பங்களா ஆடம்பரம் என அனைத்திற்க்கும் அடிமையானால் பிறகு அதை தந்த ஆணுக்கு அடிமையானால்  தெரிந்தே தான் அடிமையானால்... ஒரு சில பெண்கள் நல்லவர்களாக இருக்கலாம்....  மற்றபடி  பெரும்பாண்மையான பெண்கள் தெரிந்தே அடிமையானவா்கள் தான் --------        இதில் மற்றவா்களையும் சமூகத்தையும் சொல்லி க...