முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவில் எத்தனை பெண்களுக்கான சிறைச்சாலை வளாகம் உள்ளது அவற்றில் எத்தனை தமிழ்நாட்டில் உள்ளது

Subbiahpatturajan

 பெண் கைதிகளின் சிறைவாசத்தின் போது ஏற்படும் பிரச்னைகள்!  

இந்தியாவில் எத்தனை பெண்களுக்கான சிறைச்சாலை வளாகம் உள்ளது அவற்றில் எத்தனை தமிழ்நாட்டில் உள்ளது

 இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்திய சிறைகள் தொடர்பான புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் உள்ள 1,316 சிறைகளில் 32 சிறைகள் 'பெண்கள் சிறைகள்' ஆகும். அவற்றில் ஐந்து சிறைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது.
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் சுதந்திரப்
போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டதற்காக பெண்கள் பலர் கைது செய்யப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைவாசத்தின் பொழுது உயிரிழந்த பெண்களும் உண்டு. சிறையில் உயிரிழந்த பெண்மணிகளில் கஸ்தூர்பாய் காந்தியும் ஒருவர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் சிறையில் அடைத்துவைக் கும் பழக்கம் உலக நாடுகளில் நடைமுறை யில் இருந்து வருகிறது. காலப்போக்கில் ஆண்களை மட்டுமின்றி, பெண்களையும் சிறையில் அடைத்து வைக்கப்படும் நடை முறை தொடங்கியது. 
ஆண் சிறைவாசிகளும், பெண் சிறைவாசிகளும் ஒரே சிறைச் சாலையில் தனித்தனியாக தங்க வைக்கப் பட்டனர்.
இந்தியாவில் எத்தனை பெண்களுக்கான சிறைச்சாலை வளாகம் உள்ளது அவற்றில் எத்தனை தமிழ்நாட்டில் உள்ளது
தொழிற்புரட்சியின் விளைவாக, ஆண் களும், பெண்களும் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காககுடும்பத்துடன் அவ ரவர் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி குடிபெயர்ந்தனர். அதன் விளை வாக, நகரங்களில் திருட்டு, கொள்ளை, கல வரம் போன்ற குற்றங்கள் அதிகரித்தன. வறுமையின் காரணமாக குற்றச் செயல்க ளில் ஈடுபட்ட பெண்களின் எண்ணிக்கை யும் கணிசமாக உயர்ந்தது.
சிறை நிர்வாகத்தையும், சிறைவாசிகளின் பாதுகாப்பையும் கவனித்துவந்த ஆண் சிறை அலுவலர்கள், ஆண் சிறைவாசிகள் ஆகியோரின் பாலியல் துன்புறுத்தல்களை சகித்துக் கொண்டும், பெண்களுக்குத் தேவைப்படும் தனியுரிமை (பிரைவசி) எது வுமின்றியும் பெண் சிறைவாசிகள் சிறை யில் இருந்து வந்தனர்.
இந்த சூழலில் 18-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் பெண் களுக்கென்று தனியாக சிறைகள் ஏற்படுத்தப்பட்டன. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவிலும்,அதைத் தொடர்ந்து பிரிட்டனிலும் 'பெண்கள் சிறைகள்' உருவாக்கப்பட்டன.
ஆங்கிலேயர்களின் நிர்வாகக் 
கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவிலும் சிறை சீர் திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய 1919- ஆம் ஆண்டில் சர் அலெக்ஸாண்டர் கார் டியூ தலைமையில் குழு ஒன்று அமைக் கப்பட்டது. சிறைவாசிகளுக்கு பிரம்படி, உடல்வதை செய்யும் தண்டனை கொடுக்ககூடாது போன்றவை இக்குழுவின் 
பரிந்துரைகளில் முக்கியமானவை.
இந்தியா விடுதலையடைந்த பின்னர் சிறை சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய நீதியரசர் ஏ.என். முல்லா 
தலைமையில் 1980-ஆம் ஆண்டில் 'அகில இந்திய சிறை சீர்திருத்தக் குழு' அமைக்கப்பட்டது. சிறையில் இருந்து விடுவிக்கப்படுவர்களின் மறுவாழ்வு குறித்துத் திட்டமிடுதல், சிறைவாசிகளுக்கு மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தல், பெண் சிறைவாசிகளின் பிரச்னைகளை அறிந்து செயல்படுதல், பொதுமக்களையும் செய்தியாளர் களையும் சிறை வளாகத்தினுள் சென்றுபார்வையிட்டு, சிறையின் நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்ள அனுமதித்தல் போன்றவை அக்குழுவின் பரிந்துரைகளில் முக்கியமானவை.
மேலைநாடுகளைப் போன்று இந்தியாவிலும் பெண்களுக்
தனியாக 'பெண்கள்கென்று தனிசிறைகள்’ ஏற்படுத்துதல், பெண் சிறைவாசிகளைச் சோதனையிட பெண் காவலர்களைப் பயன்படுத்துதல், பெண் சிறைவாசிகளுக்கு பெண் மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சையளித்தல், பெண் சிறைவாசிகளுடன் அவர்களின் குழந்தைகள் தங்க அனுமதித்தல் போன்ற பெண் சிறைவாசிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விரிவான அறிக்கையை 1987-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட நீதியரசர் கிருஷ்ணய்யர் தலைமையிலான குழு மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
அதைத் தொடர்ந்து, பெண்களுக் கென்று பிரத்யேகமாக 'பெண்கள் சிறைகள்' நம் நாட்டில் அமைக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பு இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்திய சிறைகள் தொடர்பான புள்ளிவிவரங்க ளின்படி, இந்தியாவில் உள்ள 1,316 சிறை
 களில் 32 சிறைகள் 'பெண்கள் சிறைகள்’ ஆகும். அவற்றில் ஐந்து சிறைகள் தமிழ் நாட்டில் அமைந்துள்ளன.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்சிறைகளின் எண்ணிக்கைதிறன்
ராஜஸ்தான்7998
தமிழ்நாடு52018
கேரளா3232
ஆந்திரப் பிரதேசம்2280
பீகார்2202
குஜராத்2410
உத்தரப்பிரதேசம்2540
டெல்லி2680
கர்நாடகா1100
மகாராஷ்டிரா1262
ஒடிசா155
மிசோரம்196
பஞ்சாப்1320
தெலுங்கானா1260
மேற்கு வங்காளம்1
பெண் சிறைவாசிகளின் குழந்தைகளை சிறை வளாகத்தில் தங்க வைத்து, பராமரிப் பது தொடர்பாக 2006-ஆம் ஆண்டில் உச் சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
பெண் சிறைவாசிகள், தங்களின் குழந்தைகளுக்கு ஆறு வயது நிறைவடையும் வரை அவர்களைத் தங்களுடன் சிறை வளாகத்தினுள் தங்கவைத்துப் பராமரிக்க லாம் என்றும், குழந்தைகளுக்குத் தேவை யான உணவு, உடை, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளையும், மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு குழந்தை கள் காப்பகமும், ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு மழலையர் பள்ளியும் மாநில அரசு அமைத்துக் கொடுக்க வேண் டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தி யுள்ளது.
நம்நாடு சுதந்திரம் அடைந்த போது, 
8 % -க்கும் குறைவான பெண்கள்தான் கல்வி கற்றவர்களாக இருந்தனர். 2021-ஆம் ஆண் டின் கணக்கெடுப்பின்படி, 70 % பெண் கள் நம் நாட்டில் கல்வி கற்றவர்களாக உள்
 ளனர். ஆண்டுதோறும் கல்வி கற்கும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வருகிறது. சுதந்திர இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் பெண்களிடையே கணிசமாக 
அதிகரித்துள்ள படிப்பறிவால், குற்றச் செயல்களில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருக்க 
வேண்டும். ஆனால், கள நிலவரம் அப்படியில்லாமல், அதிர்ச்சியூட்டும் தகவலை வெளிப்படுத்துகிறது.

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்பு சட்டங்களின் கீழ் நம் நாட்டில் 2020-ஆம் ஆண்டில் 63,465 பெண்களும், 2021-ஆம் ஆண்டில் 83,645 பெண்களும் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக் கப்பட்டனர்.

ஓராண்டு காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண்க ளின் எண்ணிக்கை 32% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் நம் நாட்டில் 
குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் குற்றச் செயல்களில் ஈடு
 பட்டதற்காக 2018-ஆம் ஆண்டில் 4,158 பெண்களும், 2021-ஆம் ஆண்டில் 5,861 பெண்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மூன்று ஆண்டுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட் டதற்காக கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டபெண்களின் 
எண்ணிக்கை 41% அதிகரித்துள்ளது.
'இந்திய சிறை புள்ளிவிவரங்கள்-2021- இன் படி 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியன்று இந்தியாவிலுள்ள அனைத்து பெண்கள் சிறைகளிலும் 3,808 பெண் சிறைவாசிகள் தங்கியிருந்தனர். அவர்களில் 573 பேர், தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் சிறைகளில் தங்கியிருந்தனர்.
2021-ஆம் ஆண்டின் இறுதி நாளன்று அதிகமான பெண் சிறைவாசிகள் 'பெண் கள் சிறை’களில் தங்கியிருந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2021-ஆம் ஆண்டின் இறுதி நாளன்று நம் நாட்டிலுள்ள அனைத்து பெண்கள் சிறைகளில் தண்டனை சிறைவாசிகளாகவும், விசாரணை சிறைவாசிகளாகவும் தங்கியிருந்த பெண் சிறைவாசிகளில் 1,650 பேர், அவர்களின் 1,867 குழந்தைகளுடன் தங்கியிருந்தனர். நம் நாட்டில் ஆண்டு தோறும் ஆறு வயதுக்கும் குறைவான ஆயிரக்கணக்கான குழந்தைகள் அவர்களின் குழந்தைப் பருவத்தை சிறைகளில் கழித்து வருகின்றனர். இத்தகைய சூழல் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வழிவகுக்காது.
குடும்ப பொருளாதார சூழல் காரணமாக திருட்டு, சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல், சாலையோர பாலியல் குற்றம் போன்ற செயல்களில் கடந்த காலத்தில் நம் நாட்டில் ஈடுபட்டுவந்த பெண் சமூகத்தினர்,அக்குற்றச் செயல்களில் இருந்து பெருமளவில் மீண்டுவிட்டனர்.
பெண் கல்வி முக்கியத்துவம் 
பெற்றுவருகின்ற இன்றைய சூழலில், வர்த்தகம், திதி நிறுவனம், தொழில்துறை போன்றவற்றில் பெண்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். அவர்களில், நிதி மோசடிகளில் ஈடுபட்டு, குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் பெண் களின் எண்ணிக்கை அதிகரித்து வருவ தைக் காணமுடிகிறது.
கையூட்டு பெற்ற குற்றத்திற்காக கைது செய்யப்படும் பெண் அரசு அதிகாரிகளின் எண்ணிக்கையும் நம் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதைப்பொருள், தங்கம் கடத்தல், குழந்தை கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் பெண்கள் ஈடுபட்டு, சிறை செல்லும் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்கின்றன.
நம் நாட்டில் தொடர்ந்து நிகழும் 
வரதட்சணை மரணங்கள் தொடர்பான குற்ற வழக்குகளில் ஆண்டுதோறும் சுமார் மூவாயிரம் பெண்களும், கொவை குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஆண்டுதோறும் சுமார் நான்காயிரம் பெண்களும் கைது செய்யப் பட்டு, சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.
குற்றச் செயலில் நேரடியாக
 ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் பெண்கள் மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்கள் செய்த குற்றச் செயலுக்குத் துணைபோன காரணத்திற்காக கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் பெண்களும் உண்டு. 
ஒரு குற்றச் செயலை ஆண், பெண் இரு
பாலரில் யார் செய்தாலும், சட்டப்படி
தண்டனையின் அளவு இருபாலாருக்கும்
சமமாக உள்ளது.
ஆனால், ஒரு பெண்ணுக்கு வழங்க படும் சிறை தண்டனை அவரை மட்டும் பாதிப்பதில்லை. அத்தண்டனையின் தாக் கம் அவரது குழந்தைகளையும், அவரது பராமரிப்பில் உள்ள மூத்த குடும்ப உறுப் பினர்களையும் பெருமளவில் பாதிப்படை யச் செய்கிறது.நாட்டில் உள்ள பெண் கைதிகளின் உண்மையான எண்ணிக்கையை விட 3.39 மடங்கு குறைவாக உள்ளது , இது 22,918 பெண்கள், கைதிகள், 6,767 சிறைகளில் அடைக்கக்கூடிய சிறைகளின் திறனுடன் ஒப்பிடும்போது.
மொத்தம் 22,918 பெண் கைதிகளில் 3,808 (5 திருநங்கைகள் உட்பட) மட்டுமே தற்போது பல்வேறு பெண்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர், 
நாட்டில் திருநங்கைகளுக்கு தனி சிறை இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. 2021 என்சிஆர்பி தரவுகளின்படி, திருநங்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மொத்தம் 91 கைதிகள் சிறையில் உள்ளனர்.
இந்த திருநங்கைகள் பெண்கள் சிறைகள் உட்பட பல்வேறு மாநிலங்களின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 91 கைதிகளில் 54 பேர் மத்திய சிறைகளிலும், 20 பேர் மாவட்ட சிறைகளிலும், தலா 5 பேர் துணை சிறைகளிலும், பெண்கள் சிறைகளிலும், 7 பேர் நாடு முழுவதும் உள்ள சிறப்பு சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

பெண் கைதிகள்: போதிய இடமில்லாத இடத்திலோ அல்லது தனி இடம் இல்லாமலோ பெண் கைதிகள் விஷயத்தில் சற்றும் கவலைப்படாத மாநிலமாக உத்தரகாண்ட் தோன்றுகிறது. முரண்பாடாக, அதிக பெண்கள் தங்கும் விகிதம் (178.8%) உள்ள மாநிலத்தில் பெண்கள் சிறை இல்லை.

இந்தியாவில் எத்தனை பெண்களுக்கான சிறைச்சாலை வளாகம் உள்ளது அவற்றில் எத்தனை தமிழ்நாட்டில் உள்ளது
கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னேறிவரும் பெண் சமூகத்தை குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டும் வாய்ப் புகளும், சந்தர்ப்பங்களும் இன்றைய சமு தாயத்தில் அதிகரித்து வருகின்றன. இத்த கைய சூழல் சமுதாய வளர்ச்சியில் ஏற்படுத் தும் பின்னடைவு குறித்து விழிப்புடன் பரி சீலனை செய்ய வேண்டிய தருணம் இது.                                      
✍🏻கட்டுரையாளர்:
காவல்துறை உயர் அதிகாரி (ஓய்வு)🚨

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
ம் சூப்பர் தகவல்கள் வாழ்த்துக்கள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... "யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்... ஆதலின் மாட்சியின் பெயோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. "யாதும் ஊரே யாவரும் கேளிர்...." எல்லா ஊரும் எனது ஊர்.... எல

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் அங்கே நிலைக்

மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ளவர்கள் கவனத்திற்கு...

Subbiahpatturajan மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ள பயணிகள் கவனத்திற்கு... இப்போது வனத்துறையினர் சார்பில் மாஞ்சோலை சென்று வர அனுமதி அளித்துள்ளனர் . விருப்பமுள்ளவர்கள் சென்று வரலாம். Manjolai நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக் கட்டிற்கு மேலே உள்ள மாஞ்சோலை எனும் சொர்க்க பூமியான கோடை வாஸ்தலம். சிறப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது மாஞ்சோலை. எப்படி போகலாம்? திருநெல்வேலியிலிருந்து 3 மணி நேரப் பயணம். கல்லிடைக்குறிச்சி , மணிமுத்தாறு அணை, Manimutharu அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று, 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம்.  அதற்கு மேல் 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறாக் காடுகள

கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா?

Subbiahpatturajan உடல் நலம்.... கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் மிக மிக நல்லது. கடல் நீரில் அயோடின், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம் ஆகிய பயன்மிக்க பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளது. எனவே, கடல் நீரில் குளித்தால் பல நோய்கள் நீங்குகிறது. 1. நரம்பு மண்டலம் அமைதி அடைகிறது. 2. உடலில் வெப்ப நிலைக்கு சரியான வெப்பம் உள்ள கடல் நீரில் குளிப்பதால், கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. 3. உடல் தசைகள் உரிய அளவில்  சுருங்கி விரிகிறது. 4. அயோடின் நிறைந்த கடல் நீரில் குளிப்பதால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்குகிறது, மகப்பேறு கிடைக்கும், சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும். 5. பொட்டாசியம் சிறுநீரை நன்கு வெளியேற்றும். 6. மக்னீசியம் தோல்நோய் மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தாக செயல்படுகிறது. 7. புரோமின் நரம்பு மண்டலத்தின் தளர்ச்சியை நீக்கி நல்ல ஓய்வு கொடுக்கும். 8  கால்சியம் உடலில் அனைத்து  வீக்கத்தை சரி செய்கிறது. 9. கடல்நீர் அனைத்துவகை அலர்ஜிகளையும் சரிசெய்கிறது. 10. கடல்நீர் எதிர்மறை சிந்தனை ( Negative ) உள்ளவர்களை நேர்மறை ( Positive ) சிந்தனை உள்ளவ

Did you know ...கேள்விக்குள் பதில்

Subbiahpatturajan #Didyouknow #Didyouknow உங்களால் கீழே உள்ள  எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க முடிகிறது என சோதிக்கலாமா? ஒரு வினாவிற்கு  10 இமைப்பொழுதுகள் மட்டுமே. 1. நியூமேரோ யூனோ என்றால் என்ன? 2. ஒரு டூயட்டில் எத்தனை பாடகர்கள்? 3. டேபிள் ஸ்பூன் எத்தனை டீஸ்பூன் ? 4. இந்து புராணங்களில் எத்தனை வேதங்கள் உள்ளன? 6. இந்தியாவை விட எத்தனை நாடுகளில் பெரிய பரப்பளவு உள்ளது? 7. நீரின் Ph மதிப்பு என்ன? 8. சூரிய குடும்பத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளன? 10. எத்தனை மில்லிமீட்டர்கள் ஒரு சென்டிமீட்டரை உருவாக்குகின்றன? 11. ஒரு கால்பந்து அணியில் எத்தனை வீரர்கள் உள்ளனர்? 12. ஒரு அடி எத்தனை அங்குலங்கள்? 15. ஒரு முறை வாகன வரி எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்? 16. விண்கல சேவலில் எத்தனை இறகுகள் உள்ளன? 17. இந்திய நாணயத்தில் எத்தனை மொழிகள் அச்சிடப்படுகின்றன? 18. மகாபாரதத்தில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன? 19. 2010 இல் இந்தியாவில் எத்தனையாவது காமன்வெல்த் விளையாட்டு நடத்தப்பட்டது? 20. டி -20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எத்தனை ஓவர்கள் உள்ளன? 21. தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி எத்தனை ஆண்டுகள் கழித்தார்? 23. மனித உ

*குண்டக்க மண்டக்க : விளக்கம்*

Subbiahpatturajan *சூடு சொரனை* : இருந்தால்... விளக்கம்.... *🔷🔶இரட்டை சொற்களுக்கான விளக்கம்* .... *குண்டக்க மண்டக்க :* 🔸 *குண்டக்க* : இடுப்புப்பகுதி, 🔸 *மண்டக்க* : தலைப் பகுதி, சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது, வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது தான்... *அந்தி, சந்தி:* 🔸 *அந்தி* : . மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.. 🔸 *சந்தி* : . இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.. *அக்குவேர்,ஆணிவேர்:* 🔸 *அக்குவேர்* : செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்.. 🔸 *ஆணி வேர்:* செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் வேர்... *அரை குறை:* 🔸 *அரை* : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.. 🔸 *குறை* : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது... *அக்கம், பக்கம்:* 🔸 *அக்கம்* : தன் வீடும், தான் இருக்கும் இடமும்... 🔸 *பக்கம்* : பக்தத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்... *கார சாரம் :* 🔸 *காரம்* : உறைப்பு சுவையுள்ளது... 🔸 *சாரம்* : காரம் சார்ந்த சுவையுள்ளது... *இச

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!?

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!? அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம்...!! மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்.....!! எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய அனுபவ மருத்துவ குறிப்புகளை தொகுத்துள்ளேன்.. பயன்படுத்தி பலன் பெறுங்கள்...எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது. ■ தேனீ,குளவிகொட்டியதற்கு.. தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்... ■ பூரான்கடிக்கு... பூராண் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்....சுண்ணாம்பு மஞ்சள், உப்பு  3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்... ■ பூனை கடித்துவிட்டால்.. பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்...

⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூவின் நன்மைகள்* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️

Subbiahpatturajan ✍🏻‌  ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூவின் நன்மைகள்* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூ* *என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திர சோம்பு கறிகள், மற்றும் பிரியாணி வகைகளில் பார்த்திருப்போம். இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மசாலாப் பொருட்களில் இந்த அண்ணாச்சி பூவும் முக்கியமான ஒன்று. இதற்கு ‘அன்னாசி மொக்கு’, தக்கோலம், நட்சத்திர சோம்பு என்னும் வேறு சில பெயர்களும் உண்டு. இது வெறும் மணத்துக்காக மட்டுமல்லாமல் உணவை அழகுபடுத்துவதற்க்கும், மற்றும் மருந்தாகவும் பயன்படுகின்றது.* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூ பூர்வீகம்* *அண்ணாச்சி பூ சீனாவை பூர்வீகமாக கொண்டது. சீன ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த அண்ணாச்சி பூவை பயன்படுத்தி வந்தார்கள். இது படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் பரவி சென்று இந்தியாவில் தற்போது இது ஒரு தவிர்க்க முடியாத மசாலா பொருளாக மாறி உள்ளது.* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *நோய் எதிர்ப்பு சக்தி* *அதிகரிக்கும்* *அண்ணாச்சி பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.* *இதில் பாக்டீரியா வைரஸ், பூஞ்சை மற்றும் ஈஸ்ட் இனங்களைக் கொல்லும் பய ஆக்டிவ் பொருட்கள் உள்ளது. இந்த எதிர்ப்பு பண்பினால் நம் உடலில் எந்த ஒரு தொற்றுக்கள

அரசு ஊழியர்கள் மாணவ மாணவிகள் கவனத்திற்கு...

Subbiahpatturajan அரசு ஊழியர்கள் மாணவ மாணவிகள் கவனத்திற்கு... *important modified govt G.o. s* தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள் (1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278) (2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975 ) (3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்- 27.9.1974 ) (4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, ந