முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இப்போதே இப்படி என்றால் ஹிந்தி வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமாகும்.* *


Subbiahpatturajan

புதைக்கப்படும் தமிழரின்
தொன்மை வரலாறு...?!



*தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கான வாய்ப்பினை தட்டிப்பறிக்கும்  தமிழ்நாடு தொல்லியல்துறையின் செயல்பாட்டை கைவிட வேண்டும் .




தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்வெட்டுப் பயிற்சி நிறுவனத்தில், தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் முதுநிலைப் பட்டயப் பயிற்சி ஆண்டுதோறும் நடைபெற்று சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது . இதுவரை ஓராண்டாக இருந்துவந்த இந்தப் பட்டயப் பயிற்சி இப்போது இரண்டாண்டாக மாற்றப்பட்டுள்ளது;  2000 உரூபாயாக இருந்த மாத உதவித்தொகையினை 5000 உரூபாயாக மாற்றியதும், ஆண்டிற்கு 8 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த பயிற்சினை 20 மாணவர்களுக்கென உயர்த்தியுள்ளதும் வரவேற்கதக்கதே.

ஆனால், இப்பயிற்சியில் சேர்வதற்கு உரிய தகுதியாக இதுவரை முதுகலை தமிழ், வரலாறு, தொல்லியல் மற்றும் சமற்கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்ததை இந்த ஆண்டு முதல் முதுநிலை அறிவியல் மற்றும் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றவர்களும் சேரலாம் என்று அறிவிப்பு செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கதக்கது;  இதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இது  இந்தத் துறையில் தமிழ், வரலாறு, தொல்லியல் பட்டம் பெற்றவர்களை அப்புறப்படுத்தி  ஆங்கில வழியில் பயின்ற அறிவியல், பொறியியல் படித்தவர்களைப் படிப்படியாகப் புகுத்தும் திட்டமிட்ட சதிச் செயலாகும்.

பொறியியல் படித்தவர்களுக்குத் தமிழ் இலக்கியங்களில் போதிய பயிற்சி மற்றும் புலமை இருக்காது என்பதால், அவர்களால் தமிழகத் தொல்லியல் ஆய்வுகளைச் சரியாக மேற்கொள்ள முடியாது. எனவே அவர்களுக்காக இந்த ஆண்டுமுதல் ஆங்கிலத்திலும் பயிற்சி நடைபெறும் என அறிவித்து, ஆங்கிலத்தையும் பயிற்று மொழியாகத் திட்டமிட்டுத் திணித்திருக்கிறது தமிழக தொல்லியல்துறை. இதற்காகவே 1973 முதல் கல்வெட்டுப் பயிற்சி நிறுவனம் என்றிருந்ததை இந்த ஆண்டு வெளியிடப்பட்ட விளம்பர அறிவிப்பில் தொல்லியல் நிறுவனம் என்று பெயர் மாற்றிவிட்டனர்.

ஏற்கனவே தமிழகத் தொல்லியல் துறை வெளியீடுகளில் சில, தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்திருக்கின்றன. *தமிழ் மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் துறையில் தமிழைத் தவிர்த்து ஆங்கிலத்தில் வெளியிடுவதை எப்படி ஏற்க முடியும்? இப்போதே இப்படி என்றால் ஹிந்தி வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமாகும்.* *எப்படி அரசுப் பள்ளியில் ஆங்கில வழியும் உண்டு என்று கூறிய பின் பல பள்ளிகளில் முற்றிலுமாக தமிழ்வழி காணாமல் போய்விட்டதோ அதுபோலவே எதிர்காலத்தில் தமிழகத் தொல்லியதுறையினை விட்டே தமிழ் முற்றாகப் புறக்கணிக்கப்படுகிற நிலை உருவாகும்.*

தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் குறிப்பிட்ட சில சிறப்புத் துறைகளில் தமிழகத் தொல்லியல் துறையும் ஒன்று. தமிழில் முதுகலைப் பெற்றவர்கள் தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையின் முதுகலை பட்டயப் பயிற்சிப் வகுப்பில் சேர்ந்து பயிற்சிப்பெற்று வேலைவாய்ப்பினை பெற்றுவந்தனர். வரலாறு, தொல்லியல் துறையில் முதுகலை பெற்றவர்களும் சேரலாம் என்றபோதும் அதிலும் தமிழ்வழியில் படித்துப் பட்டம்பெற்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். 

மற்ற துறைகளைப் போலல்லாது தமிழகத் தொல்லியல் துறை என்பது தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கும், தமிழ் வழியில் படித்து வரலாறு, தொல்லியல் பட்டம் பெற்றவர்களுக்கும் மிக முதன்மையானத் துறையாகும்.
ஏனேனில் தொல்லியல் துறையின் பிரிவுகளாக உள்ள ஓலைச்சுவடிகள், 
கல்வெட்டுகள்



 செப்பேடுகள், நாணயங்கள், மெய்கீர்த்திகள் போன்றவற்றை ஆய்வு செய்வதற்கும், வரலாற்று ஆவணமாக உள்ள தொல்தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதற்கும் தமிழ்மொழியில் புலமை பெற்றிருப்பது என்பது மிக மிக அடிப்படையானதாகும்.
வரலாற்றுக்கான பல அடிப்படைச் சான்றுகளில் மொழி முதன்மையான சான்று. தமிழ் மொழி மட்டுமன்று, எந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறதோ அந்தப் பகுதி மொழியின் இலக்கியம், இலக்கணம்  மற்றும் உள்ளடக்கங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு என்பது  அடிப்படைத்
தேவையானது. அதுவும் தமிழில் கட்டாயத் தேவை என்பதைக் கடந்த கால ஆய்வுகள் மெய்ப்பித்துள்ளன. காரணம் தமிழ் நாட்டில் மட்டுமே தமிழ் இலக்கியம் சொல்கின்ற செய்திகள் "தொல்லியலில்" காணக் கிடைக்கின்றன. பிற உலக மொழி இலக்கியங்களின் பொருண்மைத் தொடக்கம் தொன்மத்தாலேயே அமைகின்றன. தமிழ் இலக்கியத்தின் தொடக்கம் மட்டுமே மக்கள் வாழ்வியலை விளக்குவதாக அமைகிறது. எனவே தமிழ் நாட்டின் தொல்லியல் ஆய்வில் தமிழ்மொழி "தனிப் பெரும்" இடத்தைப் பெறுகிறது.

மேலும் தொல்லியலுக்குள் புதை விடங்கள், மரபுச் சின்னங்கள், அகழாய்வு செய்யும் நிலையிலான வாழ்விடங்கள் போன்றவையும் அமைந்துள்ளன. உலகத்திலேயே ஆகப் பெரும்பான்மையான கல்வெட்டுக்கள் தமிழ் நாட்டில் மட்டுமே உள்ளன. அவற்றை அறிந்துகொள்வதற்குத் தமிழ் மொழி, இலக்கிய, மற்றும்  தமிழ்நாட்டு வரலாற்று அறிவென்பது முதன்மைத் தேவை. அது மட்டுமன்றித் தொல்லியல் துறையின் ஒரு பிரிவான சுவடிக்கு யாப்பிலக்கண அறிவுடன் கூடிய இலக்கியம் படித்தவர்கள் தேவை. இவை எல்லாம் அறிவியலிலோ, பொறியியலிலோ இடம் பெறாது. எனவே தமிழகத் தொல்லியல்துறையின் உயிர்நாடியாக விளங்குவது தமிழ்மொழியே.

மேலும் தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையில் சில பணி நிலைக்கான தேர்வில் இந்நிறுவனத்தில் பயின்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஏனென்றால் பிற நிறுவனங்களின் படிப்பில் தமிழ்நாட்டு தொல்லியல் குறித்த பகுதி மிகமிகக் குறைவே. எனவே தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள அந்தப்படிப்புகள் போதுமானதாக இராது. உலக அளவிலும் இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலேயே கல்வெட்டுக்கள் அதிக அளவில் உள்ளது என்பதால் தமிழ்நாட்டுத் தொல்லியல் துறை தனித்து இயங்க வேண்டிய நிலை இருக்கிறது, எனவே சிறப்புக் கருதி நல்ல நோக்கத்தில் அது கட்டாயமாக்கப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் வளர்ச்சி, நவீன தொழில்நுட்பம் , பன்முகத்தன்மை என்ற பெயரில் அறிவியல் மற்றும் பொறியியல் படித்தவர்களைத் தொல்லியல் துறையில் சேர்ப்பது மிகமிகத் தவறான முடிவாகும். *அறிவியல் தொழில் நுட்பம் தேவை என்றால், இதுவரை ஓராண்டாக இருந்த படிப்பை இரண்டாண்டாக ஆக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது களப்பணிகளைப் பயிற்சியில் இணைத்தது போல்,  தொழில்நுட்ப பயிற்சி மற்றும் அறிவியல் திறன்நுட்ப பயிற்சிகளையும் பாடத்திட்டமாக இணைப்பதே சரியானதாக இருக்கும்.* அதைவிடுத்து அறிவியல், பொறியியல் படித்தவர்களுக்கு இசைவளிப்பது பொறுத்தமானதன்று.

ஏற்கனவே தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்துவக் கல்லூரியில், தமிழ்ப் படித்தவர்களுக்கென இருந்துவந்த சிறப்பு வழியை முற்றிலுமாக ஒழித்து, அறிவியல் படித்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது போன்று, தொல்லியல் துறையிலும் பொறியியல், அறிவியல் படித்தவர்களை நுழைத்தால் தமிழ், வரலாறு, தொல்லியல் படித்தவர்கள் ஒரங்கட்டப்படுவார்கள். இந்த நிலை உருவானால் தமிழே படிக்காமல் ஆங்கில வழியில் படித்து விட்டு அறிவியல், பொறியியல் படித்தவர்கள் உள்ளே வந்து தமிழை இரண்டாம் நிலைக்குத்தள்ள வாய்ப்பு மிகஅதிகம்.

மேலும் பொறியியல் மற்றும் அறிவியல் படித்தவர்களுக்கென இயந்திரவியல், மின்னணுவியல், கட்டிடவியல், கணிணித்துறை, தொழிநுட்பத்துறை, வாகனவியல், வணிகத்துறை, விமானம், விண்வெளி  உள்ளிட்ட எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தொல்லியல் படித்தவர்களுக்கு இதைவிட்டால் வேறுதுறைகளில் பணிவாய்ப்பு இல்லை. *ஏற்கனவே தொல்லியல் படித்தவர்களை வரலாற்றுத் துறையில்கூடப் பணிநியமனம் செய்யத் தடை இருக்கிறது.* இந்த நிலையில் இந்த அறிவிப்பு தொல்லியல் பட்டம் பெற்றவர்களுக்குப் பேரிடியாய் அமையும். எனவே தொல்லியல் துறை இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

மருத்துவம், பொறியியல் படிப்புக்கு  பன்னிரெண்டாம் வகுப்பில் குறிப்பிட்ட சில பாடங்களைக் கட்டாயம் பயின்றிருக்க வேண்டும் என்ற நிலை இருப்பதுபோல் தொல்லியல் துறையிலும் அதைசார்ந்த படிப்புகளில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே பயிற்சி பெற வாய்ப்பளிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக இருந்த அந்த விதியினை எவ்வித மாற்றமும் செய்யாமல் இனியும் தொடர வேண்டும்.

தொல்லியல்துறை என்பது வரலாற்றை ஆய்வுசெய்து ஆவணப்படுத்தும் இடம். இதில் தவறு நடப்பது ஓர் இன அழிப்பிற்குச் சமமானதாகும். தொல்லியல் ஆய்விற்குத் தேவைப்படும் மிகச்சிறிய பகுதியான அறிவியல், பொறியியல் பாடங்களை இணைப்புப் பாடமாக வைத்துக் கொள்ளலாமே தவிர அவற்றைத் தகுதிக்கான முதன்மை பாடமாக வைத்தல் ஆய்வு முடிவுகளும், விளைவுகளும் தமிழுக்கும், தமிழக வரலாற்றுக்கும் எதிராகவே அமையவே வழிவகுக்கும்.

எனவே, தமிழகத் தொல்லியல் ஆய்விற்கு அடிப்படைத் தேவையான  தமிழ், வரலாறு, தொல்லியல் படித்தவர்களைத் தொல்லியல் துறையைவிட்டே  அப்புறப்படுத்தும் வஞ்சக நோக்கத்துடன் தமிழகத் தொல்லியத்துறையால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பினை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...