முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம்மை நாமே பார்த்து பரிதாபப்பட்டுக்கொள்ளலாம்...🤔😔😭.

Subbiahpatturajan


நம்மை நாமே பார்த்து பரிதாபப்பட்டுக்கொள்ளலாம்.

Add caption


மத்திய அரசின் செயல்பாடுகள்....?!

நம் கவலையெல்லாம் தேவையற்றது..

டிமானிசேஷன்.. கருப்பு பணம் ஒழியும் என்றார்கள். 99 சதவீத நோட்டுக்கள் திரும்பிவந்துவிட்டன. ஏடிஎம், வங்கி வாசல்கள் முன்பு பலபேர் செத்தார்கள். லட்சோப லட்சம்பேரின் தொழில், வர்த்தகம் குளோஸ்..



ஜிஎஸ்டியால் பாலும் தேனும் ஓடும் என்றார்கள். வசூலிக்கப்பட்டதில் மாநில அரசுகளின் பங்குத் தொகையை கேட்டால் கையை விரிக்கிறார்கள். குழந்தைக்கு கிடைத்த உணவை தாய் பிடுங்கி சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்கு சமானம் இது..

காஷ்மீரில் சிறப்பு சட்டம் ஒழிப்பு..ஆனால் ஒன்றரை ஆண்டுகளாக அம்மாநிலம் குவாரண்டைனில்.. ரிசல்ட் இதுவரை தெரியவில்லை..அறுபதாண்டு பிரச்சினை ஓராண்டில் தீருமா என்பார்கள்

மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையே இன்னும் இரண்டு ஆண்டுகளில் புல்லட் ரயில் ஒடுமா என்று தெரியவில்லை. அதுபற்றிய செய்திகளையே காணோம்

உலகமே கொரோனாவால் கதறுகிறது. இந்த நிலையிலும் கூடஒரு நாட்டின் பிரதமர் செயதியாளர்களை சந்திக்க மறுக்கிறார். உலக வரலாற்றில் கொரோனா காலத்தில் இப்படி ஒரு தலைவர் அனேகமாக மோடி மட்டுமே இருக்கமுடியும்

ரேடியோவில் பேசும்போது அவர் வாயிலிருந்து வருவதெல்லாம் தேச பக்தி,  யோகா, பொம்மை தயாரிப்பது நாய் வளர்ப்பு.. எவனும் குறைசொல்ல முடியாத அவ்வையாரின் ஆத்திச்சூடி லெவல் இது.



நாட்டின் பொருளாதாரம் நாசம், மொத்த உள்நாட்டு உற்பத்தி படுபாதாளம் என்று விஷயமறிந்தவர்கள் சொன்னால், கொரோனா மட்டும் வராமலிருந்தால் என்று ஆரம்பிப்பார்கள்.

அகில இந்திய அளவில் ராமரை எடுக்கிறார்கள், மாநில அளவில் பிள்ளையார் முருகரை எடுக்கிறார்கள். இதைக்கேட்டால் மும்மொழி கொள்கை என்பார்கள், புதிய கல்விக்கொள்கை என்பார்கள். உடல் முழுக்க எண்ணெய் தடவிக்கொண்டு வரும் அவர்களை நாம் பிடிக்கவே முடியாது.. வழுக்கி வழுக்கி நாம்தான் கோட்டை விடுவோம்

நாடு வளர்ந்ததோ இல்லையோ நாட்டில் நாலைந்து பேர் மட்டும் நன்றாக வளர்ந்துகொண்டிருக் கிறார்கள்.


பிரிட்டிஷ்காரன்,  பிரெஞ்சுகாரன், போர்த்துகீசியன், டச்சுக்காரன் போன்றவர்கள் வியாபாரம் என நம் நாட்டிற்கு வந்து அரசியலை செய்து நாட்டை அடிமைப்படுத்தினார்கள். அவர்களால் கிடைத்த பலன், சிதறிக்கிடந்தவை ஒன்றாகி இந்தியா என்ற துணைக்கண்டம் கிடைத்தது.

அந்த துணைக்கண்டத்தை யார் ஆள்வது என்ற போட்டிதான் வியாபாரிகள் மத்தியில் இப்போது ஒடிக்கொண்டிருக்கிறது.

அந்த வரலாற்றின் வெர்ஷன் 2.0 தான் இப்போது போகிறது. இவர்களில் ஒருவரை ஒருவரை வீழ்த்தி விரட்டியடித்துவிட்டு  கடைசியாக எவன் பிரிட்டிஷ்காரன் போல நெம்பர் ஒன் ரவுடியாக வருவான் என்று இப்போதைக்கு சொல்லமுடியாது

நிறைய அம்புகளை மாறி மாறி சொருகக்கூடிய வில் திரைமறைவில் இருக்கும்போது, அற்ப ஆயுளை கொண்ட அம்புகளை பார்த்து அழுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

அவர்கள் உலகமே தனி.. அதையெல்லாம் பெரியதாக நினைத்து கவலைப்படுவதைவிட
நம்மை நாமே பார்த்து பரிதாபப்பட்டுக்கொள்ளலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...