முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த *சம்பந்தமும்* இல்லை.

Subbiahpatturajan   




*👊மனமே        பிரச்சினை👊*

தனியாக *வேட்டையாடுவதை விருப்பமாக கொண்ட அரசன் ஒருவன்* வழிதவறி காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான்.

*காட்டில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருப்பதை கண்டு* அன்று இரவுப்பொழுதை அங்கேயே கழிக்கலாம் என்று முனிவரிடம் தங்க அனுமதி கேட்டான்..

முனிவரும் தாராளமாக *தங்கி* கொள்ளுங்கள் என கூறினார்..

முனிவரும், அரசரும் அந்த சிறிய குடிலில் *தூங்க* ஆரம்பித்தனர். 

இரவு முழுவதும் *முப்பது அல்லது நாற்பது நாய்கள்* அந்த குடிலை சுற்றி *குரைத்துக்* கொண்டே இருந்தன. 

அரசரால் *தூங்கவே*
முடியவில்லை.

அவர், அன்று காலை முழுவதும் வேட்டையாடி *களைத்து* இருந்தார்..

மறுநாளும் அலைச்சல்
இருக்கிறது.

அதை நினைக்க நினைக்க *அரசருக்குக் கோபம் அதிகமானது*.

நாய்களோ *வெறித்தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக்* கெடுத்தன.

ஆனால், இத்தனைக்கும் மத்தியில் முனிவர் நிம்மதியாக *உறங்கிக்* கொண்டிருந்தார்.

அவரை எழுப்பிய அரசர், 

''என்ன மனிதர் நீங்கள்... 
இவ்வளவு *சத்தத்துக்கு* மத்தியில் உங்களால் எப்படி *உறங்க* முடிகிறது...???'' என்று புலம்பினார்.

முனிவரோ, தனது வழக்கமான *நிதானத்துடன்* கூறினார்: 

''அந்த நாய்கள், உங்களுக்கு *ஆதரவாகவோ அல்லது எதிராகவோ* இங்கு கூடவில்லை; 
கோஷமிடவில்லை
அந்த நாய்களுக்கு
இங்கு ஒரு *அரசர்* தங்கி இருப்பது *தெரியாது.*
அவைகள் படிப்பதில்லை.
அவற்றுக்கு *அறிவும்* கிடையாது. 

அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த *சம்பந்தமும்* இல்லை.

அவை, தங்களுக்கே உரிய *குரைக்கும் வேலையைப்* பார்க்கின்றன. 

நீங்கள், *தூங்குகிற வேலையைப்* பாருங்கள்...!!!'' என்றார்.

''நாய்கள் இப்படி ஓயாமல் *குரைத்தால்*, நான் எப்படி *தூங்க* முடியும்...???'' என்றார் அரசர்.

உடனே முனிவர், ''நீங்கள், அவை குரைப்பதை *எதிர்த்துப்* போராடுகிறீர்கள்.
அப்படிப் *போராடாதீர்கள்*
.
பிரச்னை *குரைப்பொலி* 
அல்ல, உங்கள் *எதிர்ப்பு* 
உணர்வு. 

நீங்கள், *சத்தத்துக்கு எதிராக* இருக்கிறீர்கள்; இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால் தான் தூங்க முடியும் என்று *ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள்*. நாய்கள் உங்களது நிபந்தனையைக் *கவனிக்கப் போவது* இல்லை. 

நீங்களும் உங்கள் நிபந்தனையை *விலக்கப் போவது* இல்லை. 

ஆனால், *நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும்.* நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான். 

நாய்களின் குரைப்பை *ஏற்றுக் கொள்ளுங்கள்*. இந்த இரவிலும் எவ்வளவு *சக்தியுடன்* அவை குரைக்கின்றன பார்த்தீர்களா....??? 

*ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால்,* குரைப்புச் சத்தமும் ஒருவகை *மந்திரம்தான்*...!!!'' என்றார் முனிவர்.

*'உதவாக்கரை யோசனை' என்று மனதுக்குள் பழித்தபடி தூங்க* போனார் அரசர்.

ஆனால் காலையில், மிகுந்த *மகிழ்ச்சியுடன்* எழுந்து முனிவரைச் சந்தித்தார் *அரசர்*...!!!

''ஆச்சரியம்தான்....!!! எனது *எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு*, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன்.

 ஆழ்ந்து *ரசிக்கவும்* தொடங்கினேன். அப்படியே *உறங்கிப்* போனேன்'' என்றார் அரசர்.

முனிவர் *நமக்குச்* சொல்கிறார்:

"இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். *உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால்*, உன் கவனத்தை *உள்முகமாகத்* திருப்பு.

 எரிச்சலுக்கான காரணம் *நீயாகத்தான்* இருப்பாய். 

உனது *எதிர்பார்ப்பு* அல்லது *ஆசை* வேறாக இருந்திருக்கும்; 

அல்லது ஏதோ ஒரு *நிபந்தனையை* உனக்குள் நீ விதித்திருப்பாய். 

அதுதான் உனது *எரிச்சலுக்குக்* காரணம்.. 

*உலகத்தை* நமக்கேற்ப *நிர்ப்பந்தப்படுத்த முடியாது..*
அதை எதிர்த்துப் *போராடும்போது* நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.

*யாரையும்  நம்மால் திருத்த முடியாது ஆனால் அவர்களோடு வாழ்வதற்கு நாம் மாற்றிக்கொண்டால் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் அழகுதான்.*
🤝🤝🤝🤝🤝🤝🤝
 *வாழ்க நிபந்தனையற்று*
🌹🌹🌹🌹🌹🌹🌹
*வளர்க எதிர்ப்பு உணர்வின்றி*
             *🙏🙏*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...