Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
சதுரங்கத்தின் சில நுணுக்கங்கள்
சதுரங்கம் விளையாடும்போது பலருக்கு பயம்.
எதிராளி ராணியை முன்னிறுத்தி விட்டாரே நம்ம ஆட்டம் என்னாகுமோன்னு.
என்னைக்குமே ஒரு சில விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.
சதுரங்கத்தில் இரு ராணிகளும் நேருக்கு நேர் தான் இருப்பார்கள்.
அதனால் முதலிலேயே உங்கள் ராணியைக் கொண்டு எதிராளியின் ராணியை வீழ்த்துங்கள்.
ஒரே நேரத்தில் இருவரும் தமது பலத்தை இழப்பீர்.
அடுத்ததாக குதிரைகளை ஒவ்வொன்றாக வெளியேற்றுங்கள்.
எந்தவொரு சூழலிலும் குதிரையை மட்டும் பலியாக்கிவிடாதீர்கள்.
ஆட்சிக்கு வேண்டுமானால் ராணி அவசியம் ஆட்டத்துக்கு குதிரைதான் உண்மையான ராணி.
எப்போதும் ராஜாவுடன் ஒரு யானையாவது இருப்பதை உறுதி செய்யுங்கள்.
ராஜாவுக்கும் அருகில் உள்ள யானைக்கும் நடுவில் ஒரு இடமாற்றுக் கட்டம் இருக்கும்.
அதைக் கொண்டு இருகாய்களையும் இடம் மாற்றிக்கொள்ளுங்கள்.
முக்கியமாக ராஜாவுடன் இருக்கும் அந்த ஒரு யானையை மட்டும் எதற்காகவும் நகர்த்திவிடாதீர்கள்.
முடிந்தவரை பலமான காய்களையே முன்னிறுத்துங்கள்.
சிப்பாய்களை களமிறக்காதீர்கள். (சிறு துரும்புதான் பல் குத்த உதவும்).
சிப்பாய்களை காப்பாற்றுங்கள்.
இறுதியில் அவைதான் ராணியாகவும் குதிரைகளாகவும் மாறும்.
எப்போதும் எதிராளியின் காய்களுக்கு எதிரான பலமுள்ள காயை முன்னிறுத்துங்கள்.
உதாரணத்துக்கு எதிராளியின் யானையை வெட்டும்படி மந்திரி அல்லது குதிரையை நிறுத்துங்கள்.
யானைக்கு சமமான யானையை நிறுத்தினால் உங்கள் பலத்தை இழக்க நேரிடும்.
குதிரையை நன்கு பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.
ஒரு குதிரையைக் கொண்டு ஆட்டத்தையே மாற்றலாம். சுருக்கமாக கூறினால் இந்த 'ப்ளாக் மெயில் ' பன்றான்னு சொல்லுவோம் பாருங்க.
அந்த விசயத்துல நம்ம குதிரையை அடிச்சுக்க ஆளே இல்ல.
உங்கள் ஆட்டத்திலேயே கவனமாக இருக்காதீர்கள். எதிராளியின் அசைவைப் பொறுத்து உங்கள் வியூகங்களை மாற்றிக் கொண்டே இருங்கள்.
உங்கள் சிப்பாயை கொண்டு எதிராளியின் முனையை அடைந்தால் பெரும்பாலும் அனைவரும் ராணியை எடுப்பர்.
இவ்வளவு தூரம் யோசிக்கும் பலர் அவ்விடத்தில் கோட்டைவிடுவர்.
அவ்விடத்தில் உள்ள சூழலைப் பொறுத்து குதிரையை களமிறக்க முடியுமா என சிந்தியுங்கள்.
காரணம் ராணியைக்கூட மடக்கலாம். குதிரையை அடக்க முடியாது.
ஒருவேளை நீங்கள் தோல்வியை நோக்கி பயணிப்பதாக தோன்றினால் உங்களிடம் உள்ள காய்களில் ஏதேனும் வலிமையற்ற காய்கள் மூலம் எதிராளியின் வலிமையான காய்களை வீழ்த்த முடியுமா என்பதை கவனியுங்கள்.
எதிராளியின் ராணியின் நகர்வை கவனிப்போமே தவிர அவரது ராணியை வெட்டும் நிலையில் தயாராக உள்ள நம்ம சிப்பாயை கவனிக்கவே மாட்டோம்.
இறுதியாக, அடிக்கடி அனைத்து காய்களையும் கவனியுங்கள்.
நிச்சயம் ஏதேனும் ஒரு காய் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தயாராகவே இருக்கும்.
கருத்துகள்