Subbiahpatturajan
குடமுழுக்கை - கும்பாபிஷேகமாக்கி
அருள்மிகுவை - ஶ்ரீ ஆக்கி
கருவறையை - கர்ப்பகிரகமாக்கி
நீரை - ஜலமாக்கி
தண்ணீரைத் -தீர்த்தமாக்கி
குளியலை -ஸ்நானமாக்கி
அன்பளிப்பை - தட்சணையாக்கி
வணக்கத்தை - நமஸ்காரமாக்கி
ஐயாவை - ஜீயாக்கி
நிலத்தை - பூலோகமாக்கி
வேளாண்மையை - விவசாயமாக்கி
வேண்டுதலை - ஜெபமாக்கி
தீயை - அக்னியாக்கி
குண்டத்தை - யாகமாக்கி
காற்றை - வாயுவாக்கி
விண்ணை - ஆகாயமாக்கி
பூவை - புஷ்பமாக்கி
தொழுதலை - பூஜையாக்கி
முறைகளை - ஆச்சாரமாக்கி
படையலை - நைவய்தியமாக்கி
திருமணத்தை - விவாகமாக்கி
பிள்ளைப் பேறை - பிரசவமாக்கி
பிணத்தை - சவமாக்கி
மக்களை - ஜனங்களாக்கி
உணர்வற்றதை - சடமாக்கி
ஒன்பதாம் நாளை - நவமியாக்கி
பத்தாம் நாளை - தசமியாக்கி
பிறந்தநாளை - ஜெயந்தியாக்கி
பருவமடைதலை - ருதுவாக்கி -
அறிவைப் - புத்தியாக்கி
ஆசானைக் - குருவாக்கி
மாணவனை - சிஷ்யனாக்கி
அறிவியலை - விஞ்ஞானமாக்கி
படிப்பித்தலை - அப்பியாசமாக்கி
பள்ளிகளை - வித்யாலயமாக்கி
அவையை - சபையாக்கி
கலையை - சாஸ்திரமாக்கி
இசையை - சங்கீதமாக்கி
ஓவியத்தை - சித்திரமாக்கி
ஆடலை - நடனமாக்கி
ஆடையை - வஸ்திரமாக்கி
அழகை - சுந்தராக்கி
முகத்தை - வதனமாக்கி
முடியை - கேசமாக்கி
உறக்கத்தை - நித்திரையாக்கி
உண்மையை - சத்தியமாக்கி
நல்லதை - புண்ணியமாக்கி
கெட்டதை - பாவமாக்கி
கொடையை - தர்மமாக்கி
அமிழ்தை - அமிர்தமாக்கி
நஞ்சை - விஷமாக்கி
சான்றை - ஆதாரமாக்கி
பெரியதை - மஹாவாக்கி
செருப்பை - பாதரட்ஷையாக்கி
திருவிழாவை - உற்சவமாக்கி
பயணத்தை - யாத்திரையாக்கி
உலகத்தை - லோகமாக்கி
எப்படி எப்படி அழகு தமிழ்ச் சொற்கள் அழிந்து ள்ளன.
வெப்பம்+இல்லை
வேப்பிலை!
உடல் வெப்பத்தை
இல்லையென்றாக்கும்
வேப்பிலை!
கரு+வெப்பம்+இல்லை
கருவேப்பிலை!
கருப்பை வெப்பத்தை
இல்லையென்றாக்கும்
கருவேப்பிலை!
அகம்+தீ−அகத்தீ
உடலின் உள்ளே
அகத்தின் தீயைக் குறைக்கும்
அகத்தி!
சீர்+அகம்−சீரகம்
அகத்தின் சூட்டைச்
சீராக்கும்
சீரகம்!
காயமே இது பொய்யடா−வெறும்
காற்றடைத்த பையடா!
காயத்தின் காற்றை
வெளியேற்றும்
பெருங்காயம்!
வெம்மை+காயம்−வெங்காயம்
உடலின் வெம்மையைப்
போக்கும் வெங்காயம்!
பொன்+ஆம்+காண்+நீ
பொன்னாங்கண்ணி!
உண்டால்
உடல் பொன் ஆகும்
காண்நீ!
கரிசல்+ஆம்+காண்+நீ
கரிசலாங்கண்ணி
காய்ச்சிய எண்ணெய்
கூந்தலைக் கரிசலாக்கும்
காண் நீ!
சொற்களுக்குள்ளே
மருத்துவம் வைத்தான்!
நம் மகத்தான பாட்டன்!
தமிழ்ச் சொற்களை
மறந்தோம்!
நம் மருத்துவம்
மறந்தோம்!
சொன்ன பாட்டியை
மறந்தோம்!
பாட்டனை மறந்தோம்!
மனிதக் கிருமி மறந்த மருத்துவம்!
மனிதக் கிருமி மறுத்த மருத்துவம்!
மனிதக் கிருமி
அழித்த மருத்துவம்!
மனிதனை அழிக்கும்
கிருமியால் உயிர்த்தது.
இது இயற்கையின் வெற்றி!நம் தமிழ்
இனத்தின் வெற்றி!👍👍
படித்தேன். பகிர்ந்தேன்..💐💐
நன்றி🙏🙏
தமிழ் மொழியைப் பேணுவோம். முடிந்த வரை மேற்க ண்ட தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்துவோம் தமிழ் வாழ்க.
கருத்துகள்