Subbiahpatturajan
.............................................
''மூடநம்பிக்கையின் முடைநாற்றம்''..
.............................................
இன்றைய காலகட்டத்தில் எய்ட்ஸை விட வேகமாகப் பரவி வரும் ஒரு கொடிய நோய் மூட நம்பிக்கை தான்.
இதற்குக் காரணம் குறுக்கு வழியில் பலன்களை அடைய நினைப்பது தான். மக்களின் இந்த மூடநம்பிக்கையே அவர்களது பலவீனமும் கூட.
மக்களின் இந்தப் பலவீனத்தையே மூலதனமாக்கித் தங்களது வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வதற்காக நமது சமுதாயத்தில், பார்த்தீனியம் செடி போல் மானவாரியாக முளைத்து வருபவர்கள் தான் இந்த போலிச்சாமியார்களும், சோதிடர்களும்.
.
திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் வன்முறையை வளர்ப்பதற்கு எப்படி வழி செய்கிறதோ, அதே போல் மூட நம்பிக்கையையும் உரம் போடாமல் மக்கள் மனதிலே வளர்த்து விடுகிறார்கள்.
மண்ணெல்லாம் அளந்து முடித்து விண்ணிற்கு உல்லாசப் பயணம் சென்று கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் நாம் மூடநம்பிக்கையில் சிக்கித் தவிக்கின்றோம்,
அவசியம் தானா?.சற்று யோசித்துப் பாருங்கள்...
இந்த மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பவர்கள்
இனிமேலாவது சிந்தித்துப் பார்ப்பார்களா?
இப்போது எல்லாம் இங்கு நான்கு தெருவுக்கு ஒரு சோதிடரும், நாலு ஊருக்கு ஒரு சாமியாரும் வந்து விட்டார்கள்.
சிலர் தும்மல் வந்தால் கூட மஞ்சள் பையில் சாதகத்தைத் திணித்துக் கொண்டு சோதிடர் வீட்டுக் காலிங் பெல்லை அழுத்தி விடுகிறார்கள்.
சிலர் காலையில் எழும்பும் போது மனைவி முகத்தில் விழிப்பதா? வேலைக்காரி முகத்தில் விழிப்பதா? என்று தனது ஆஸ்தான சோதிடரிம் ஆலோசனைக் கேட்டுத்தான் கண்ணை விழிக்கிறார்கள்.
எத்தனை திருமணங்கள், நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து,ஜோசியம் பார்த்து, பொருத்தம் பார்த்து செய்த திருமணங்கள்,இன்று விவாரத்து கேட்டு நீதிமன்றப் படிகளில் ஏறி,இறங்கி வருகின்றார்கள்.
உண்மையில் இவர்கள் இந்த,ஜோஷ்யம், வாஸ்து,நல்ல நேரம், கெட்ட நேரம், அஷ்டமி, நவமி போன்ற மூட நம்பிக்கையிலிருந்து எப்போது விழித்துக் கொள்ளப் போகிறார்களோ?
இப்போது எல்லாம், கற்பூரச் சாமியார், சாம்பிராணிச் சாமியார்,ஊதுவத்திச் சாமியார் என்று ஏகப்பட்ட சாமியார்கள் இருக்கிறார்கள்.
இப்பொழுது பீர் சாமியார், பிராந்திச் சாமியார்,சுருட்டுச் சாமியார் என்று மதுபானப் பெயர்களைக் கொண்டவர்கள் காவி கட்டி நெற்றி நிறைய நீறு பூசி ஏமாற்றத் துணிந்து விட்டார்கள்.
இந்தச் சின்னச் சின்ன சாமியார்கள் தவிர , தங்களையே கடவுளாகக் காட்டிக் கொள்ளும் மிகப் பெரிய கார்ப்பரேட் சாமியார்களும் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு சாமரம் வீசிப் பாத பூஜை செய்து, பல இலக்க பணத்தை அள்ளி வழங்கி பாதுகாப்பு அளிக்கும் சில பணக்காரர்களும், ஏன் பெரிய பதவியில் உள்ளவர்களும், அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்தக் கடவுளின் அவதாரங்களுக்கு, அவர்களுக்குள்ள மாபெரும் சக்தியால் நாட்டிற்கு வந்த பேரழிவுகளான சுனாமிகளையும் சூறாவளிகளையும் கண்டு முன் கூட்டியே சொல்ல முடியவில்லையே?. ஏன்..?இவர்களால் எதுவும் முடியாது. காரணம் சாமியார் என்ற முகமூடி அணிந்து சமுதாயத்தை ஏமாற்றும் இவர்களில் பலரும் சமூகவிரோதிகள் தானே,
தவிர சமூகப் பாதுகாவலர்கள் இல்லை. சமுதாய சனியன்கள்.செருப்புத் தேய நடையாய் நடந்து நம்மிடம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் அமரும் அரசியல்வாதிகள் கூட,
இது போன்ற போலிகளிடம் ஆசி பெற்று அரசியல் நடத்தும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.
இந்த அரசியல்வாதிகள் மக்களுக்குச் செய்யும் சேவைகளை விட,இது போன்ற சாமியார்களுக்குச் செய்யும் சேவைகள் தான் அதிகம்.
உழைத்துக் கிடைக்கும் பலனை விட குறுக்கு வழியில் கிடைக்கும் பலனையே அதிகம் எதிர்பார்க்கும் மனிதர்கள் அதிகமாகி வருவதால்,
மூட நம்பிக்கயான இந்த ஏமாற்று வேலைகளும் தங்கு தடையில்லாமல் எல்லா இடங்களிலும் பயணம் செய்து கொண்டு இருக்கிறது. மனிதனை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
ஆம்.,நண்பர்களே..,
மனிதர்களை மனிதர்களே ஏமாற்றும் இந்த அவலம் மாற வேண்டும்.
நாம் சொந்த அறிவைப் பயன்படுத்தி
உண்மை எது,?
போலி எது..?
என்று அறிவோம்.
மற்றவர்களுக்கும்
உண்மையை எடுத்து உரைப்போம்..🌸🙏🏻🌷
கருத்துகள்