முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எல்லா சூழ்நிலைகளிலும் எதிர்மறையாக சிந்தித்தால் அவர்களை இறைவனாலும் கூட காப்பாற்ற முடியாது...

Subbiahpatturajan

எல்லா சூழ்நிலைகளிலும் எதிர்மறையாக
சிந்தித்தால் அவர்களை இறைவனாலும் கூட காப்பாற்ற முடியாது...

சிலருக்கு நினைத்தது எல்லாம் நடக்கிறது....
எல்லா சூழ்நிலைகளிலும் எதிர்மறையாக சிந்தித்தால் அவர்களை இறைவனாலும் கூட காப்பாற்ற முடியாது...

காரணம் என்ன?

எண்ணங்கள்.
நேர்மறையான சிந்தனைகள்... 
விடாமுயற்சி
நடக்கும் என்ற நம்பிக்கை...
இறைவன் அருள்
இவைகள் தான்..
உங்கள் ஆழ் மனம் நீங்கள் சொல்வதை அப்படியே கேட்கும்... முழுமையாக நம்பும்.. நடத்தியும் காட்டும்...
உண்மையில் சொல்லப்போனால் இந்த பிரபஞ்சத்தில் இவருக்கு
இது கிடைக்காது என்று எதுவும் இல்லை .
யாருடைய நிலை வேண்டுமானாலும் எந்த நொடியில் வேண்டுமானாலும் மாறலாம்.

தெளிவான எண்ணம்

ஒருவர் ஒரு குறிப்பிட்ட எண்ணத்தை ஆழமாக அழுத்தமாக நம்பும் பொழுது அது அவருக்கு உண்மையாக நடக்கும்.
முதலில் நம்புங்கள். நம்பிக்கை மட்டுமே உங்களை உங்கள் வாழ்வின் அடுத்தடுத்த நிலைக்கு இழுத்துச் செல்லும்...
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.
எந்த அளவுக்கு நீங்கள் நேர்மறையாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களைத் தேடி நேர்மறையான செய்திகள் மட்டுமே வரும்...
வெளி உலகில் நடக்கும் செயல்களையும் வெளி உலகில் உள்ள பொருட்களையும் வைத்து எதிர்மறையாக சிந்திக்காதீர்கள்... 
அவையெல்லாம் நிலையற்றவை..
உங்கள் மனம் அதில் வாழும் இறைவன் இவை நிரந்தரமானவை..  
மகிழ்ச்சியும் நிம்மதியும் இவற்றால் நிர்ணயிக்கப்பட்டால் நிலையானதாக இருக்கும். 

உங்கள் கைகளில் தான் உள்ளது

உங்கள் ஆழ்மனம் உங்கள் வாழ்வையே மாற்றக்கூடிய வல்லமை படைத்தது ...
அது எப்படி மாற்ற போகிறது என்பது உங்கள் கைகளில் தான் உள்ளது..
நேர்மறையாக சிந்திப்போம்.. நிச்சயமாக வாழ்க்கையும் நேர்மறையாக அமையும்....
உங்கள் எண்ணங்களால்
உங்கள் வாழ்க்கை அழகாகட்டும்.
அனைத்து உயிர்களும் இன்பங்களை அனுபவிப்பதற்காகவே
இறைவன் உலகைப் படைத்தார்.
ஆனால் மனிதர்களாகிய நாம் தேடித்தேடி கவலைகளை சுமக்கின்றோம்.
இந்த உலகில் கவலைகள் இல்லாதவர்கள் எவருமில்லை..
கவலைகள் எதுவும் நிரந்தரமும் இல்லை.... 
எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொண்டு
உங்களுக்கு நீங்களே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் மனநிலைக்கு வந்து விட்டால்
உங்களுக்கு வேறு யாருடைய ஆறுதலும் தேவையில்லை..
எப்பொழுதும்... எல்லா சூழ்நிலைகளிலும் நேர்மறையாக சிந்திக்க முடிந்தால்
உங்களை யாராலும் அசைக்க கூட முடியாது...

எதிர்மறையாக சிந்தித்தால்

எல்லா சூழ்நிலைகளிலும் எதிர்மறையாக சிந்தித்தால் அவர்களை இறைவனாலும் கூட காப்பாற்ற முடியாது...
உண்மையில் நேர்மறையாக சிந்திக்கும் நல்ல எண்ணங்கள் நிறைந்த மனதிலேயே இறைவன் குடி கொண்டுள்ளார்..
ஆகவே முடிந்தவரை எல்லா சூழ்நிலைகளிலும் எல்லாவற்றிற்கும் நேர்மறையாக சிந்திக்க முயற்சி செய்யுங்கள்...
அப்பொழுது உங்கள் வாழ்க்கை சிறப்பாக மாறுவதை உங்களால் கண்கூடாக பார்க்க முடியும்...

நேர்மறையாக சிந்தித்து பாருங்கள்

நேர்மறையான சிந்தனைகள் மற்றும் விடா முயற்சியால் உங்கள் வாழ்வில் நீங்கள் நினைத்ததை விட சிறப்பான மாற்றங்களை நிகழ்த்திக் காட்ட முடியும் 
முயற்சி செய்யுங்கள்... நிச்சயமாக மாற்றத்தை உணர்வீர்கள் 
இறைவனின் அருளால் தங்கள் இல்லத்தில் அனைவருக்கும் நேர்மறையாக சிந்திக்கும் மனம் மற்றும் நிம்மதியான
நிறைவான  வாழ்க்கை கிடைப்பதற்கு வாழ்த்துக்கள் 💐

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...