Subbiahpatturajan
வியாபாரியை வியாபாரத்தில் அடிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்த ஒரே ஆள் வஉசி மட்டும்தான்.
வெள்ளையன் முதலில் இங்கு வியாபாரியாய் நுழைந்தான்.
பிறகு வியாபாரத்தை பெருக்க ஒப்பந்தங்கள் போட்டான்.
ஒப்பந்தங்கள் மூலம் கடன்கள், சலுகைகள் கொடுப்பதாய் நம்ப வைத்தான்.
அதன் மூலம் அதிகார மையங்களை வசியப் படுத்தினான்.
பிறகு, கடனுக்கு பதிலாய் நிலப் பரப்புகளை வாங்கிக் கொண்டான்.
அங்கு வரி விதிக்கும் உரிமை பெற்றான்.
பிறகு அவனே இந்தியா முழுமைக்கும் ஆளும் சக்தியாய் உருவெடுத்தான்.
தமிழகமே சேர சோழ பாண்டியர் எனவும் சிற்றரசுகள் பலவாகவும் பிரிந்து கிடந்த காலம்.
இந்தியா எத்தனை துண்டுகள் இப்படி இருந்ததுவோ தெரியாது.
வெள்ளையன் வராமல் இருந்திருந்தால் இன்னும்
அப்படியே கூட இருந்திருப்போம்.
ஆனால், வெள்ளையனை எதிர்க்க, வெள்ளையன் ஆண்ட அத்தனை பகுதி மக்களும் ஒன்று சேர வேண்டி இருந்தது.
அப்படி எதிர்க்கையில் ஆளுக்கு ஒரு வழி இருந்தது.
காந்தி ஒரு வழி...
போஸ் ஒரு வழி...
பகத்சிங் ஒரு வழி...
பாரதி ஒரு வழி...
என்று ஆளாளுக்கு ஒரு வழி இருந்தது.
ஆனால், வியாபாரியை வியாபாரத்தில் அடிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்த ஒரே ஆள் வஉசி மட்டும்தான்.
அதனால் தான் அவர் அவனுக்கு எதிராக வியாபாரக் கப்பல் ஓட்டினார்.
மற்றவர்களுக்கும் அது புரியாமல் இல்லை. ஆனால் எல்லோரும் உள்ளூரில் மட்டுமே உன் துணியை வாங்க மாட்டோம், உப்புக்கு வரிகொடுக்க மாட்டோம் என்று முயன்று கொண்டிருந்தார்கள்.
ஆனால், இந்தத் தமிழன் அடித்த அடி வெள்ளையனுக்கு சரியான இடத்தில் விழுந்தது.
ஒன்றுக்கும் உதவாத இந்தியர்கள் என்று நினைத்த இடத்தின் தென் கோடியில் இருந்து கிளம்பி, தங்கள் வியாபாரத்தை வெளியிலும் ஒருவன் பாதிப்பான் என்று அவர்கள்எதிர்பார்க்கவில்லை.
மொத்த இந்தியரும் போராடியதை விட இந்த ஒற்றைத் தமிழன் போராட்டம் அவனுக்கு தனியாய் உறுத்தியது.
அதனால்தான், அவருக்கு கொடுத்த தண்டனை மட்டும் மரணத்தை விடவும் வலிப்பதாய் இருந்தது.
மொத்த சுதந்திர போராட்ட சரித்திரத்திலும் சிதம்பரம் போல கப்பல் ஓட்டியவன் ஒருவனும்
ல்லை. ஆனால், அவர் பிரபலம் இல்லை என்கிறார்கள்.
அவன் வடக்கே பிறந்தவனாய் இருந்திருந்தால், இன்னும் அவன் சரித்திரம் வியக்குமளவு இந்தியா முழுவதும் சொல்லப்பட்டிருக்கும்.
நீங்கள் இன்னும் பட்டேலை, திலகரை, சாஸ்திரியை, லாலா லஜபதியை என வடக்கில் பிறந்து சுதந்திரத்திற்காக போராடியவர்களைபாடங்களில் படித்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள். கொண்டாடி கொண்டுதான் இருக்கிறீர்கள்.
ஆனால், தெற்கில் பிறந்த எந்த சுதந்திர போராட்ட வீரரையாவது வடக்கே பெயராவது அறிந்திருக்கிறார்களா என்று கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா.?
காந்தி, சுபாஷ், போஸ், நேரு, இந்திரா, பகத்சிங் என்றெல்லாம்
இன்னும் இங்கே குழந்தைகளுக்கு நாம் பெயர் வைக்கிறோம்.
வடக்கே எங்கேயாவது சிதம்பரம், சுப்ரமண்யன், குமரன் என்று நமது தியாகிகள் பெயரில் ஒரு குழந்தையைக் காட்டி விடுங்கள் பார்ப்போம்.
சுதந்திரப் போராட்டத்தில் வஉசி, வேலுநாச்சியார், பாரதி போன்றவர்களை யாருக்கும் தெரியாது என்றால், தெரியவைக்கத்தான ஹைகோர்ட்டே இந்த அணிவகுப்பே என்று இந்த அறிவாளிகளுக்கு எப்படி புரிய வைப்பது.?சுதந்திர போராட்டத்தில் பெரிது சிறிது என்று எப்படிப் பிரிப்பது.? காந்திக்கும், கொடிகாத்த குமரனுக்கும் போராட்ட குணத்தில் எதாவது வித்தியாசம் சொல்ல முடியுமா யாராலாவது.?
"தழல் வீரத்திற்குஞ்சென்று மூப்பென்று முண்டோ?" என்ற பாரதிக்கே அங்கே அதே நிலை தான் எனும் போது... அவன் வரிகளைக் காட்டி எங்கே நியாயம் கேட்பது.?
தமிழ்நாட்டைச் சேர்ந்த வாகனமே அணிவகுப்பில் இடம்பெறாது என்று நிராகரித்துவிட்டு, பின்னால் அவர்களே வந்து தமிழனுக்கு தேச பக்தி குறைவு என்று
வகுப்பெடுக்கும்போது, நாம் எங்கே போய் முட்டிக் கொள்வது.?
போங்கடா நீங்களும், உங்க பாழாய்ப் போன அரசியலும்.!
நண்பரின் பதிவில் இருந்து.....
கருத்துகள்